Posts

Showing posts from August, 2024

நடிகர் ஜீனியர் பாலையா அவர்களின் மகன் நடிகர் முரளி அவர்களை சந்தித்த இனிய தருணம்!

Image
மாபெரும் திரைப்பட நடிகர் T.S.பாலையா அவர்களின் பேரனும் ஜீனியர் பாலையா அவர்களின் மகன் நடிகர் முரளி அவர்களை சந்தித்த இனிய தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #actor #tspalaiah #grandson #actormurlai #murali

வழக்கறிஞர் சரவண அர்விந்த் அவர்களுடன் மகிழ்ச்சியான சந்திப்பு!

Image
குளோபல் லா பவுண்டேசன் வழக்கறிஞர் சரவண அர்விந்த் அவர்களுடன் மகிழ்ச்சியான சந்திப்பு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymeeting #globallawfondation #advocate #lawer #saravanaaravinth

நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாடு

Image
நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாட்டில் ரியல் எஸ்டேட் தேசிய தலைவர் ஆ.ஹென்றி அண்ணன் மற்றும் மாநில நிர்வாகிகளுடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9962265834 www.paranjothipandian.com #realestateconfrence #confrence #nellai #Nationalpresidentofrealestate #Henry #Stateexecutives

நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாடு

Image
 நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாட்டில் ரியல் எஸ்டேட் தேசிய தலைவர் ஆ.ஹென்றி அண்ணன் மற்றும் மாநில நிர்வாகிகளுடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9962265834 www.paranjothipandian.com #realestateconfrence #confrence #nellai #Nationalpresidentofrealestate #Henry #Stateexecutives

நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாடு

Image
நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாட்டில் ரியல் எஸ்டேட் தேசிய தலைவர் ஆ.ஹென்றி அண்ணன் மற்றும் மாநில நிர்வாகிகளுடன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9962265834 www.paranjothipandian.com #realestateconfrence #confrence #nellai #Nationalpresidentofrealestate #Henry #Stateexecutives

முஸ்லீம் மக்கள் வாழும் கிராமத்தின் முழு நத்தம் நிலத்தையும் விழுங்கும் திருபாம்புரம் சேஷபுரீஸ்வரர்!

Image
முஸ்லீம் மக்கள் வாழும் கிராமத்தின் முழு நத்தம் நிலத்தையும் விழுங்கும் திருபாம்புரம் சேஷபுரீஸ்வரர்! HRNCE நிலசிக்கல் சம்மந்தமாக குடவாசல் தாலுக்காவில் கம்பூர் கிராமத்தில் நேரடி கள ஆய்வு செய்த பொறுப்பான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com Tirupampuram #Seshaburiswarar #HRNCE #devours #land #landofvillage #muslim #muslimpeople #field #survey #fieldsurvey #Kampur #Kampurvillage #Gudavasal #taluk #Gudavasaltaluk #landissue

தமிழியக்கம் ஒன்றுகூடலில் ஓசூர் மணிவாசகம் அவர்ளுடன்

Image
வேலுர் விஐடி பல்கலைக்கழகத்தில் வேந்தர் விசுவநாதன் அவர்கள் தலைமையிலான தமிழியக்கம் ஒன்றுகூடலில் ஓசூர் மணிவாசகம் அவர்ளுடன் மகிழ்ச்சியான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #Vellore #VIT #University #vituniversity #vendar #Viswanathan #Tamiliyakkam #gathering #Hosoor #Manivasakam

கடையநல்லூர் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர் தியாகராஜன் அவர்களுடன்

Image
கடையநல்லூர் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர் தியாகராஜன் அவர்களுடன் நானும் பிராப்தம் ரியல்டர்ஸ் இயக்குநர் ரவீந்திரன் அவர்களும் குற்றாலத்தில் நெல்லை மண்டல ரியல் எஸ்டேட் மாநாட்டில். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Courtalam #Conference #realestateentrepreneur #kadayanallur #thiyagarajan

நெல்லை மண்டல மாநாட்டில் பாராட்டி வாழ்த்து தெரிவித்த தருணம்.

Image
திரு.சாலமன் -சங்கரன் கோவில் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர் குற்றாலத்தில் நடந்த நெல்லை மண்டல மாநாட்டில் பாராட்டி வாழ்த்து தெரிவித்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Courtalam #Conference #realestateentrepreneur #sankarankovil #Solomon

அய்யா ராமதாசு அவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சார்பாக எனது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

Image
பதிவுத்துறையில் ஆவண எழுத்தர் தேர்வுக்கு வயது வரம்பு கூடாது என்று தற்பொழுது தொழில் செய்து கொண்டு இருக்கும் ஆவண எழுத்து தொழில் செய்பவர்களுக்கு ஆதரவாக மருத்துவர் அய்யா ராமதாசு அறிக்கை வெளியிட்டதற்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சார்பாக எனது பணிவான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #documentwriter #noagelimit #agelimit #Ramadoss #drramadoss #drramadossayya #Founder #Pattalimakkalkatchi #pmk #PMK  #support #myhumblethanks #thanks

ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 3

Image
ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 3 விவசாயிகளுக்கு நிலத்தின் சட்டங்கள் தெரிவித்தால் எஸ்டேட்டுகளில் சர்வே நடத்தி செட்டில்மெண்ட் ஏற்படும் நிலங்களில் செட்டில்மெண்ட் அதிகாரிகள் விவசாயிகளை கலந்து ஆலோசிப்பது இல்லை அதிகாரிகள் துணையுடன் சாத்தியமான அளவு அதிக பட்ச நிலங்களை சொந்த நிலமென எஸ்டேட்காரர்கள் தங்கள் கணக்கில் பதிவு செய்து கொண்டார்கள். இது போன்ற நிகழ்வுகளில் கீழ்வார உரிமையில் உள்ள விவசாயிகள் அல்லது குத்தகையில்  இருப்பவர்களை எஸ்டேட்காரர்களின் சொந்த நிலங்களிலிருந்து குத்தகை விவசாயிகள் வெளியேறுவதை தடுக்க ஜமீன் எஸ்டேட் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சட்டம் 1949 இல் நிறைவேற்றப்பட்டு குத்தகை விவசாயிகளுக்கு பாதுகாப்பு கொடுத்தது மேலும் பழைய குத்தகை பாக்கி, பிக்கிரி பாக்கிக்காக குத்தகைதாரரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை எஸ்டேட்தாரர்கள் ஏலத்தில் விடுவதை தடை செய்தது. இந்த சட்ட நடைமுறைகள் தெரியாததால் பல எஸ்டேட் கிராமங்களில் கீழ்வார உரிமையும் குத்தகை உரிமையும் இழந்து கிராமத்தை விட்டு வெளியேறிய ராயத்துக்களில் கதையை இன்றைய தலைமுறையினர் தங்கள் வீட்டில் இருந்த பழைய ஆவணங்களை கொண்டு வரும்பொழுது

ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 2

Image
 ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 2 அதே போல் கீழ்வாரம் உரிமையை விற்கும் உரிமையும் ராயத்துகளுக்கு இந்த சட்டம் மூலமே கிடைத்தது இருந்தாலும் ஜமீன்கள் நம் தம் எஸ்டேட்டுகளின் ராஜாக்களாகவே ஜமீன்தார்கள் திகழ்ந்தனர் தங்களது நிலபிரபுவத்துவ சுரண்டலைத் தங்கு தடையின்றி நடத்த அவர்களுக்கு அதிகாரமும் செல்வாக்கும் இருந்தன. இந்த நிலையில் ரயத்துக்கள் மத்தியில் நஷ்டஈடின்றி ஜமீன் எஸ்டேட் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது 1930 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் 1936ம் ஆண்டு தோன்றிய அகில இந்திய கிசான் சபையும் காலம் காலமாக மரபு வழியாக இருக்கும் ஜமீன் உரிமையை ஒழிக்க கோஷம் போட்டது.  1937–ம் ஆண்டு சென்னை மரகானத்தில் ஜமீன் முறையை ஒழிக்க பிரகாசம் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அந்த குழுவாரியாக விசாரணை நடத்தி ஒரு அறிக்கை தயாரித்து அரசாங்கத்திடம் சமர்பித்தது 1942 ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1908 ம் ஆண்டின் எஸ்டேட் சட்டபடி எவையெல்லாம் எஸ்டேட்டுகள் என நிர்ணயிக்கப்பட்டதோ அவையெல்லாம், 1948 எஸ்டேட் ஒழிப்பு (ரயத்துவாரி முறைக்கு மாற்றம்) சட்டம் கொண்டு வரப்பட்டு ஜமீன் முறை ஒழிக்கப்பட்

நாரா சந்து, நாராசம்

Image
 அந்தகாலத்தில் வீட்டிற்கு பின்புறம் நார சந்து விடுவார்கள் அதில் பெண்கள் முதியோர்கள் அதிகாலையில் மலம் கழிப்பார்கள். அந்த சந்து நாரா சந்து, நாராசம் என்பார்கள் அது தனிபட்ட நபரின் சொத்து ஆனால் நத்தம் நிலவரிதிட்டத்தில் பொதுப்பாதை என பதிவிட்டுவிட்டு விடுவார்கள். அதுபோல் ஒரு சிக்கலை திருநெல்வேலி சேரன்மகாதேவி கிராமத்தில் இருந்தது அதனை நேரடியாக வந்து களஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tirunelveli #Cheranmahadevi #village #visited #conducted #field #survey #fieldsurvey

நெல்லையில் இனிய சந்திப்பு

Image
 திருநெல்வேலி கோகுல் நரேந்திரன் அண்ணனுடன் நெல்லையில் இனிய சந்திப்பு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #nicemeeting #tirunelveli #nellai #திருநெல்வேலி #நெல்லை #gokulnarentran

படம் பார்த்து திமுக கதை சொல்!

Image
 படம் பார்த்து திமுக கதை சொல்! சேரன்மகாதேவி அருகில் நத்தம் சிக்கலுக்காக கள ஆய்வுக்கு சென்ற பொழுது இந்த படம் சட்டகம் போட்டு மாட்டி வைத்து இருந்தார்கள். திராவிடர் முன்னேற்ற கழக ஆரம்பகாலகட்ட தலைவர்களை ஒரு சேர அந்ந காலத்து பிரிண்டிங்  மிஷினில் அச்சடித்து மாட்டி இருந்தார்கள். இது யார் மாட்டினார்கள் என்று கேட்டேன். எனது அப்பா அந்த காலத்து திமுக என்றார்.அவசரத்தில் போட்டோ எடுத்ததால் கீழே உள்ள எ.ஜி.ஆர் படம் சரியாக விழவில்லை. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #cheranmadevi #naththam #issue #naththamissue #dmk #dmkstory #picture #framed #dravidarmunnetrakazham #mgr #MGR

வழக்கறிஞர் தானேஷ் பாலமுருகன் அவர்கள் இல்ல திறப்பு விழா

Image
திருநெல்வேலியில் வழக்கறிஞர் தானேஷ் பாலமுருகன் அவர்கள் இல்ல திறப்பு விழாவிற்கு என்னுடைய அன்பு பரிசு அளித்த மகிழ்ச்சியான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #happymoment #tirunelveli #lawyer #advocate #Tanesh #housewarming #cermoney #gift

2J ஆய்வு - கடையநல்லூர் தாலுக்கா

Image
 திரு.கந்தசாமி --தலைவன்கோட்டை கிராமத்தில் குளம் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு போராடி வரும் சமூக ஆர்வலருக்கு  தகவல்பெறும் உரிமை சட்டம்  பிரிவு 2J யின் யுடிஆருக்கு முந்தைய புலப்படங்களை கடையநல்லூர் தாலுக்காவில் நேரடியாக ஆய்வு செய்துவிட்டு வந்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #tenkasi #tenkasidistrict #kandayanallur #taluk #2j #rti #RTI #preudr #UDR #Thalaivankottai #village #socialactivisit #Kandaswamy

ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 1

Image
 ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 1      ஜமீன் என்பதற்கு நிலம் என்றும் தார் என்பதற்கு “உடைமையில் கொண்டுள்ளார்” என்று பொருள்படும் எனவே தான் ஜமீன் எஸ்டேட் என்பது ஒரு ஜமீன்தார் உடைமையில் கொண்டுள்ளார் ஒரு எஸ்டேட் ஆகும். இவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதாவது 1802 ம் ஆண்டுக்கு முன்பு இருந்தே பன்நெருங்காலமாக, காலம் காலமாக இந்த ஜமீன் எஸ்டேட் நடைமுறை இருந்தது.      மேற்படி ஜமீன் நில நிர்வாக முறையில் மேல்வாரம், குடிவாரம், இருவாரம் போன்ற வரி கொடுக்கும் முறை இருந்தன அவை மேல்வாரம் என்பது சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் விளைச்சலில் ஒரு பங்கை வரியாக ஜமீன் வசூலிக்கும் முறையாகும். அதேபோல் கீழ்வாரம் என்பது நிலத்தை கைப்பற்றில் வைத்து சாகுபடி செய்பவருக்கு நிலத்தை ஆண்டு அனுபவிக்கும் உரிமையும் விளைச்சலில் 1 பங்கை வரியாக செலுத்தியது போக எஞ்சிய பங்கை ஆண்டு அனுபவிக்கும் உரிமை ஆகும் அதே போல் இருவாரம் என்பது சாகுபடி நிலத்தின் விளைச்சலில் முழுமையும் ஆண்டு அனுபவ உரிமையாகும்.      இதில் மனுதாரர்களில் பாட்டனார்கள் தாவா சொத்தில் குடிவார உரிமை உடையார்களாக இருந்தார்கள் கீழ்வார உரிமையை கிரய பத்த

T.இராமநாதன் அவர்களுடன் இனிய சந்திப்பு!

Image
மதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் T.இராமநாதன் அவர்களுடன் இனிய சந்திப்பு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #madurai #nicemeeting #lawyer #advocate #ramanathan #maduraicourt #மதுரை #வழக்கறிஞர்

பேரையூர் ஜமீன் வீடு

Image
 பேரையூர் ஜமீன் வீடு இந்தியாவில் மொத்தம் 562 சமஸ்தானங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். காஷ்மீர் சமஸ்தானம் இருப்பதிலேயே பெரிய சமஸ்தானம் ( 85 ஆயிரம் சதுர மைல்). அதே போல் ஒரு சதுர மைலில் ஆரம்பித்து பல சதுர மைல்களில் இந்தியா முழுதும் விதவிதமான பரப்பளவில் எஸ்டேட்டுகள் உள்ளன. பெரிய சமஸ்தானங்ள் 109 நடுத்தர சமஸ்தானங்கள் 126,குட்டி குட்டி எஸ்டேட்டுகள் 327 ஆக பழைய நில நிர்வாக முறை நடந்துள்ளது. அதில் ஒன்று தான் தற்பொழுது நான் நிற்கும் பேரையுர் ஜமீன் வீடு, அது சினிமா தியேட்டர் ஆகி அதுவும் ஓடாமல் நிற்கிறது. ஜமீன் வீடும் சொத்தும் தெருவும்  உயிரோட்டம் இல்லாமல் இயங்குகின்றன. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #peraiyur #jamin #house #jaminhouse #jameen #princely #Kashmir #largestprincely #cinema #theater #cinematheater #property #street

இனாம் நில விவசாய சங்க நண்பர் தேவேந்திரன் என்னை சந்தித்த மகிழ்வான தருணம்.

Image
இனாம் நில விவசாய சங்க நண்பர் பழனியை சேர்ந்த தேவேந்திரன் அவர்கள் பஞ்சாமிர்தத்துடன் மதுரையில் என்னை சந்தித்த மகிழ்வான தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com மதுரை #madurai #palani #பழனி #happymoment #Devendran #friend #inamland #agriculture #accociation #panjamirtham

மனைப்பிரிவு அமைப்பதற்கு நேரடி கள ஆய்வு -பேரையூர்

Image
பேரையூர் அருகே வாடிக்கையாளர் ஒருவர் மனைப்பிரிவு அமைப்பதற்கு வழிகாட்டுதல் வழங்க நேரடி கள ஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #Peraiyur #field #survey #fieldsurvey #land #subdivision #landsubdivision #களஆய்வு #பேரையூர் #மதுரை #மனைப்பிரிவு

மனைப்பிரிவு அமைப்பதற்கு நேரடி கள ஆய்வு -பேரையூர்

Image
பேரையூர் அருகே வாடிக்கையாளர் ஒருவர் மனைப்பிரிவு அமைப்பதற்கு வழிகாட்டுதல் வழங்க நேரடி கள ஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Madurai #Peraiyur #field #survey #fieldsurvey #land #subdivision #landsubdivision #களஆய்வு #பேரையூர் #மதுரை #மனைப்பிரிவு

சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 4

Image
சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 4 அதில் தெரிந்து விடும், அதனை வைத்து அந்த பத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.         மேலும் DIG உத்தரவு போட்டு அந்த MVG உயர்ந்து இருந்தால் அந்த உத்தரவை த.பெ.உ.ச – 2005 ன் மூலம் கேட்டுக்கொள்ள வேண்டும்.          அதன் பிறகு நில எடுப்பு தாசில்தாரருக்கு! பதிவுத்துறை தலைவர், பதிவுத்துறை துணை  தலைவர், மாவட்ட பதிவாளார், சார்பதிவாளர் ஆகியோருக்கு நிலம் இழக்க போகும் சாமானியர்கள் நஷ்ட ஈட்டுக்கு தொகை நிர்ணயிக்கும் பொழுது பதிவு நடவடிக்கையில் மாற்றப்பட்ட உயர் மதிப்பைதான் எடுத்துகொள்ள வேண்டும் என்று மனு செய்ய வேண்டும்.           பென்சிலில் MVG இருப்பது சொல்லமாட்டோம்! அச்சில் இருப்பதுதான் சொல்வோம் என்று சார்பதிவாளர் மறுத்தால் பென்சிலில் இருக்கின்ற மதிப்பை வைத்து பதியப்பட்ட பத்திரத்தின் நகலை வைத்து அனைவருக்கும் மனு செய்ய வேண்டும். இப்படி செய்வதின் மூலம் பதிவுத்துறைக்கு தர்மசங்கடமான நெருக்கடி வரும்! சாமானியனுக்கு நியாயமாக வரவேண்டிய நஷ்ட ஈ

சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 3

Image
சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 3 அதுதானே நியாயம், ஆனால் பதிவுத்துறை அப்படி செய்வது இல்லை.           அச்சடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு உள்ள சார் பதிவேட்டில் உள்ள மதிப்பைதான் குறித்து கொடுக்கும், அப்படி தான் குறித்து கொடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். (சுற்றறிக்கை எண் 45351/L1/ 2012- நாள் - 24-01-2013) இதன்படி உள்ளாட்சி அமைப்புகள் இயக்குநர் – நகர்புற திட்டமிடல், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற அலுவலகங்களில் இருந்து வழிகாட்டி மதிப்பு விவரம் கேட்கப்படும் நிகழ்வுகளில் மாவட்ட வழிகாட்டி மதிப்பீட்டு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்புகளை வழங்கினால் போதுமானது எனவும் ஆவண பதிவுகளில் ஏற்பட்டுள்ள உயர் மதிப்புகளை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவுறுத்தப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்.            இதிலிருந்து என்ன தெரிகிறது, சாமானியன் பத்திர பதிவு செய்ய போனால் ஆவண பதிவுக

சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 2

Image
சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 2 ....அல்லது பேனாவினால் ஒரு மதிப்பை எழுதி அதன் அருகில் பதிவுத்துறை துணைதலைவர் கையெழுத்து இருக்கும்! இப்படி பென்சிலில் எழுதிய குறிப்பையும் அல்லது DIG உத்தரவுடன் இருக்கும் குறிப்பையும் சார்பதிவாளர் பார்த்து வழிகாட்டி மதிப்பு என்னவென்று சொல்வார்கள்.இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் MVG பதிவேட்டில் “மதிப்பு “ சதுரடி 1000 என்று இருந்தால் அதன் பக்கத்தில் பேனாவில் பதிவுத்துறை தலைவர் உத்தரவின் பேரில் 3000 சதுரடி என்று எழுதி இருந்தாலே 3000 மதிப்பைதான் சார்பதிவாளர் குறித்து கொடுக்க வேண்டும். அதேபோல் எந்தவித உத்தரவு இல்லாமல் பென்சிலில் 2000 சதுரடி என்று எழுதியிருந்தால் அதனை குறிக்காமல் உண்மையாக அச்சடிக்கப்பட்ட மதிப்பு ரூபாய் 1000த்தைத்தான் சார்பதிவாளர் குறித்து கொடுக்க வேண்டும்!என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்! தமிழகத்தில் சாமானியன் யாராவது பத்திரம் பதியபோனால் அச்சடிக்கப்பட்ட 1000 ரூபாய் மதிப்பை சார்பதிவாளர் சொல்லாமல் பக்கத்தில் பென்சிலில் எழு

சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை!

Image
சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை!  அரசு பல்வேறு பொதுதேவைக்காக சாமானியர்களின் நிலங்களை கையகபடுத்தி நல்ல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. சிப்காட்,சிட்கோ,சிறப்பு பொருளாதார மண்டலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்புற வாழ்விட வாரியம்” பொதுப்பணித்துறை மற்றும் CMDA போன்ற அரசு துறைகள் சாமானியர்களின் நிலங்களை கையப்படுத்துகிறது.அப்படி கையப்படுத்தும் பொழுது அரசு நில ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கு ஈடாக சாமானியருக்கு நட்ட ஈட்டை கொடுக்கும்.மேற்படி நஷ்ட ஈடு அரசு நிலத்தை எடுக்கும் நேரத்தில் இருக்கும் சந்தை மதிப்பு வழிகாட்டியை பார்த்துதான் சாமானியன் நிலத்திற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிப்பார்கள்.அந்த நேரத்தில் வழிகாட்டி மதிப்பு குறைவாக இருந்தால் நிலத்தை இழக்கின்ற சாமானியர்களுக்கு நஷ்டஈடு குறைவாக கிடைக்கும்,அதுவே நிலம் கையகபடுத்துகின்ற நேரம் சந்தை மதிப்பு வழிகாட்டி நியாயமாக இருந்தால் நிலத்தை இழக்கும் சாமானியனுக்கு நஷ்டஈடு நியாயமாக கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? -பாகம்-2

Image
விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? -பாகம்-2  அதன்பிறகு சாமானியன் கிரய பத்திரம் தயாரித்து அதனுடன் உட்பிரிவு அறிக்கை சாகுபடி அடங்கல் வைத்து ஒரு கடிதம் சார்பதிவாளருக்கு அய்யா என்னுடைய நிலம் சந்தை மதிப்பு வழிகாட்டி மனை மதிப்பாக இருக்கிறது. ஆனால் உண்மையில் எனது நிலம் விளை நிலம் ஆகும். அதற்கான உட்பிரிவு அறிக்கையும், சாகுபடி அடங்கலும் வைத்துள்ளேன். மேலும் மாநில பதிவுத்துறை தலைவர் ந.க.எண் 20458/எல்1/2013 நாள் 27-04-2013 என்ற சுற்றறிக்கையும் இதுபோன்ற நேர்வுகளில் அதாவது விளை நிலத்தை மனை மதிப்பாக முரண்பாடாக போட்டுவிட்டார்கள் என்றால் எப்படி நடந்துகொள்ள வேண்டும். என்று சொல்லி இருக்கிறார்கள், அதனையும் இணைத்து சார்பதிவாளர் அவர்களிடம் சமர்பிக்க வேண்டும்.                  இதனை எல்லாம் கொடுத்தவுடன் சார்பதிவாளர் கண்டிப்பாக பதிந்துவிடுவார், அதன்பிறகு பதிவுசெய்யப்பட்ட சாமானியனின் விளை நிலத்தை நேரடியாக வந்து ஆய்வு செய்வார்கள். அதன்பிறகுதான் பத்திரம் திரும்ப அளிக்கப்படும். சில சார்பதிவாளர்கள் கண்டிப்பாக நான் மனை மதிப்பில்தான் பதிவேன் விளை நிலமாக

விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? பாகம்-1

Image
 விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? பாகம்-1 இதுவரை நாம் பார்த்தது சந்தை மதிப்பு வழிகாட்டியை (MVG) யை சீராய்வு செய்து (Revision) வரைவு (Draft) தயாரித்து குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் அமுல்படுத்துவதை பார்த்தோம்!இனி இந்த MVG யில் எப்படி எல்லாம் சாமானியன் அல்லல் படுகிறான் அதிலிருந்து மனு போராட்டம் செய்து எப்படி மீளுவது என்பதை பற்றி கீழ்காணும் கட்டுரைகளில் காண்போம். சாமானியனின் நிலம் உண்மையில் விளைநிலமாக இருக்கிறது ஆனால் பக்கத்து புலம் மனையாக இருக்கிறது. இந்த நிலையில் சாமானியனின் நிலமும் மனை மதிப்பில் “சந்தை மதிப்பு வழிகாட்டி” நிர்ணயித்துவிட்டார்கள். இப்பொழுது விளைநிலத்தை சாமானியன்“பாரதீனம்” செய்ய போகும் பொழுது மதிப்பில் “சந்தை மதிப்பு வழிகாட்டி”ன்படி முத்திரை கட்டணம் அதிக அளவில் கட்ட வேண்டி இருக்கும். இதுபோன்ற நேரத்தில் சாமானியன் தன்னுடைய நிலத்தை மனைப்பிரிவோடு  ஒட்டி இருந்தாலும், பூமியின் வரப்பு பிரித்து தனியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் வருவாய்த்துறை புலப்படத்திலும் சாமானியனின் விளை நிலத்தையும் பக

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 26-வது பாகம்) ஆனால் உயர்நீதி மன்றம் சென்ற பலர் இந்த 33% சதவீத உயர்வை ரத்து செய்ய வேண்டும் இது 47AA, 13 சட்ட பிரிவுகள் கீழ் உள்ள 7 விதி முறைகள் படி நடக்கவில்லை என்று வாதிட்டு 33% சதவீத உயர்வினை ரத்து செய்தது. (W.P.NO: 12649 OF 2023) அதனை எதிர்த்து பதிவுதுறை மேல்முறையீடு செய்து அங்கும் உயர்நீதிமன்றம் பதிவு துறைக்கு எதிராக தீர்ப்பு கொடுத்து, 2017 ஆம் ஆண்டு 33% குறைந்த MVG யை தான் நடைமுறைபடுத்த வேண்டும் அப்படி உயர்த்த வேண்டும் என்று நினைத்தால் 47AA, 3 சட்ட பிரிவுகள் 7 விதி முறைகள் படி புதியதாக MVG யை நிர்ணயித்து நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டது அதன் பிறகு தான் பதிவு துறை மீண்டும் 47AA, சட்டத்தின் படியும் அதன் விதி முறைகள் படியும் சந்தை மதிப்பு வழிகாட்டியை நிர்ணயிக்க 26.04.2024 ல் பதிவு துறை தலைவர் மதிப்பீட்டு குழுவை உருவாக்கி, மாவட்ட குழுக்களுக்கு பரிந்துரைகள் கொடுத்துவிட்டார், அதன் படி புதிய MVG மதிப்புகள் இனி நடைமுறையில் இருக்கப் போகின்றன.       ஒவ்வொரு சாமானியனும் MVG யை கவன

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 25-வது பாகம்) அப்படி நிர்ணயிக்கும்பொழுது தமிழகம் முழுவதும் அதுவரை இருந்த உயர் மதிப்புகளை விட பன்மடங்கு அதிகரித்து விட்டார்கள். இப்பொழுது சமூக ஊடகங்கள் அதிக அளவில் இருக்கிறது அப்பொழுது அப்படி இல்லை. பொது மக்கள் கருத்து கேட்டு அப்போது அவசர அவசரமாக நடந்தது. பதிவுத்துறை பொறுத்த வரை யாராலும் ஓன்று செய்ய முடியாது என்ற எண்ணத்தில் சதுரடி 10 ரூபாய் இருந்த இடங்களை எல்லாம் 50 மடங்கு 100 மடங்கு உயர்த்தி விட்டார்கள்.     இப்படி பட்ட சொத்திற்கும் அங்கு நிலவும் சந்தை மதிப்பிற்கும் சம்மந்தமில்லாமல் நிறைய MVG உருவானதால் மக்கள் கோபமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். எப்பொழுதும் சட்டத்திற்கு விரோதமாக இருக்கும் நிர்வாக உத்தரவுகளை நீதி மன்றத்தில் உடைத்து விடலாம் சட்டத்திற்கு உட்பட்டு மக்கள் விரோதமாக செயல்படுத்தப்பட்ட நிர்வாக உத்தரவுகளை மக்கள் மன்றத்தில் உடைத்து விடலாம் அது போல 2016 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அன்று ஆட்சியில் இருந்த ஜெயலலிதா அம்மையார் அவர்கள் படுதோல்வி அடைந்தார். அந்த தோல்விக்கு இந

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 24-வது பாகம்)      இந்த சந்தை மதிப்பு வழிகாட்டிக்கு தான் முறையான சட்ட அந்தஸ்து இருக்கிறது இனி மதிப்பின் அடிப்படையில் பதிவுத்துறையில் பதிவு கட்டணம், முத்திரை கட்டணம், நீதி மன்றத்தில் வழக்கு கட்டணம், நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது, மற்றும் பல்வேறு நில நிர்வாக நடைமுறைக்கு நிலத்தின் மதிப்பு என்றால் இதனையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மதிப்பு தான் இனி சட்ட படி செல்லும் என்று வந்து விட்டது. நீதி மன்றங்கள் மூலமும், இந்த மதிப்பை நடைமுறைப்படுத்த சொல்ல முடியும் என்ற அளவுக்கு இந்த மதிப்பிற்கு சட்ட அந்தஸ்து உள்ளது.      மேலும் இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியை நிர்ணயிக்கும் பொழுது அப்படி 2005 ஆம் ஆண்டு மாநில கமிட்டி, மாவட்ட கமிட்டி எல்லாம் போட்டு நிர்ணயித்தார்களோ அதே போல் இந்த 47AA சட்டபடி உள்ள MVGயை மாநில கமிட்டி மற்றும் மாவட்ட கமிட்டி போட்டு நிர்ணயிக்க வேண்டும் என்று சட்டமும், விதிகளையும் பதிவுத்துறை உருவாக்கியது.  அந்த சட்டம் இந்திய முத்திரை சட்டம் 1899 பதி

தொழிலும் ஆச்சு! உறவும் ஆச்சு!

Image
 தேனியில் நமக்கு ஒரு பாச வழக்கறிஞர் குடும்பம்!நமக்குதான் தொழிலும் ஆச்சு!உறவும் ஆச்சு அப்படி தொழில் அமைந்து  இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Theni #family #lovingfamily #lawyers #business #relationship

RSO 26A யின் கிழ் களப்பணி செய்ய நேரடி கள ஆய்வு!

Image
சீப்பாலகோட்டை-சின்னமனூர் அருகே RSO 26A யின் கிழ் களப்பணி செய்ய நேரடி கள ஆய்வு செய்த தருணம்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Seeppalakottai #Chinnamanur #field #survey #fieldsurvey #RSO #26A

நிலத்தை உரிமையாக்க சாமானியனா? சமய நிறுவனமா?

Image
வக்ப் நில சிக்கலுக்காக நேரில் வந்து சந்தித்த ஊத்துகுளி வாழ் குடியிருப்பாளர்கள். நிலத்தை உரிமையாக்க சாமானியனா? சமய நிறுவனமா? ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்று கிளம்புகிறார்கள்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Oothukuli #Waqf #landissue #issues #consulting #waqfissue

நிறைய தகவல்களை பரிமாறிக்கொண்டோம்..!

Image
சர்வேயர் சிரஞ்சீவி அண்ணண் பெருந்துறையில் சந்தித்ததில் மன நிறைவு. RSR மெகா சர்வே கொங்குபதியில் நடந்த பொழுது களபணி ஆற்றிய அனுபவம் பெற்று இருக்கிறார். நிறைய தகவல்களை பரிமாறிக்கொண்டோம்.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Perundurai #Surveyor #Chiranjeevi #satisfied #satisfiedwithmet #RSR #Megasu

நம்ம மேல அன்பு கொஞ்சம் ஜாஸ்தி!

Image
சிங்கப்பூர் ரஹ்மான் பாய் நம்ம மேல அன்பு கொஞ்சம் ஜாஸ்தி திருச்சியில் ஒரு விடுதியில் சந்தித்த தருணம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Trichy #hotel #Singapore #Rahman #Rahmanbhai #love #lotoflove #அன்பு

ULC கோப்புகளை நேரடியாக ஆய்வு செய்த போது - ஆதம்பாக்கம்

Image
 07.08.2024 அன்று சென்னை ஆதம்பாக்கம் நகர்புற நில உச்சவரம்பு அலுவலகத்தில் ULC கோப்புகளை நேரடியாக ஆய்வு செய்து தகவல்களை எடுத்துகொண்டேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 / 9962265834 www.paranjothipandian.com #Chennai #Adambakkam #Urban_Land_Ceiling #office #ULC #files #inspected #directly #landceilling

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 23-வது பாகம்) அதனால் இந்த வழிகாட்டி மதிப்பை ஒரு  “EXECUTIVE ORDER” அதாவது ஒரு நிர்வாக ஆணையாக நிர்வாக ஊழியர்கள் கீழ்படியலாம் சாதாரண பொது மக்கள் சட்ட அந்தஸ்து இல்லாத ஒன்றுக்கு கீழ்படிய அவசியம் இல்லை அதனால் பதிவு துறை நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு தவறு என்று உணரும் பட்சத்தில் பொதுமக்கள் குறைவான முத்திரை தீர்வுடன் 47A யில் தாக்கல் செய்து விட்டு, நீதிமன்றம் போய் இது தான் மார்கெட் மதிப்பு என்று ஒரு மதிப்பை சொல்லி அதற்கான இசைவான ஆதாரங்களை சமர்பித்து வழிகாட்டி மதிப்பிற்கு முத்திரை சட்டப்படி செல்லாது சட்ட விரோதம் என்று சட்டத்தின் மார்க்கெட் மதிப்பு தான் இருக்கிறது வழிகாட்டி மதிப்பு என்பது இல்லை! அது நிர்வாக ரீதியான உத்தரவு என்று நீதிமன்றத்தில் வாதாடி  நீதிப்பேராணை பெற்று 47A யின் கீழ் உள்ள பத்திரங்களை திரும்ப பெற்று சென்றனர்      இதனால் பதிவுதுறைக்கு நிறைய இழப்புகள் என்று நினைத்து வழிகாட்டி மதிப்பை சட்ட அந்தஸ்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்து ஏற்கனவே 1972 முதல் 1978 வரை சந்தை மதிப்பு என்ற வ

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 22-வது பாகம்) இதில் மைய மதிப்பீட்டுக் குழு பதிவுத்துறை தலைவர் தலைமையிலும் வருவாய்த்துறை, பதிவுத்துறை, உள்ளாட்சி அமைப்புகளை வைத்து மாவட்ட குழு, வட்டாரக்குழு எல்லாம் போட்டு வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்தார்கள். 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் எல்லாம் வழிகாட்டி மதிப்பு என்பது கிராமங்களில் சர்வே எண் வாரியாகவும் நகரங்களில் தெரு வாரியாகவும் தரம் பிரித்து வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து இருந்தார்கள். 2005 ஆம் ஆண்டு தான் தெரு சர்வே எண் ஆகிய இரண்டு தரம் தாண்டி வகைபாடுகள் என்ற புதிய பிரிவுகளை ஏற்படுத்தி அதன் படி வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தார்கள் அதன் படி  பாசன ஆதாரங்களை பொறுத்து 13 வகை பாடாகவும், மனையிடங்களை குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை அடிப்படையில் 12 வகைபாடுகளையும் உருவாக்கி அதன் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்தார்கள்.      இது மட்டும் இல்லாமல் 2005 ஆம் ஆண்டு தான் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிப்பதற்காக பொது மக்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டது ஆக 2005 ஆம் ஆண்டு தான் “வழிகாட்டி மதிப்

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 21-வது பாகம்) இந்திய முத்திரை சட்டத்தில் சந்தை மதிப்பு என்பது அரசியல் அமைப்புக்கு எதிரானது சொத்து பரிமாற்ற சட்ட புரிதல் உள்ள  கிரைய மதிப்பு மாறாக உள்ளது என்றனர். அதனை தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டில் சட்ட போராட்டம் செய்து அப்படி இல்லை என்று 47A பிரிவில் உள்ள சந்தை மதிப்பை காப்பாற்றியது. (W.P.No.2563/1997, 529/1971, 1383/1971, W.A.No.47, 48 & 49/1979 ) இப்படி “சந்தை மதிப்பு“ என்கிற சொல்லாடலுக்கு வந்த சோதனையை பதிவுத்துறை சிரமப்பட்டு காப்பாற்றியது. அதேபோல் “வழிகாட்டி மதிப்பு “ என்று ஆண்டுதோறும் உயர்த்தி வருவது அந்த காலகட்டத்தில் பத்திரிக்கையில் பள்ளிகூட மாணவர்களுக்கு ரிசல்ட் வருவது போல GUIDELINE VALUE வந்து கொண்டிருந்தது. ஆனால் இந்த வழிகாட்டி மதிப்பு “Guide Line Value”  என்கிற சொல்லாடல் பதிவு சட்டம் முத்திரைச் சட்டம் உட்பட எந்த சட்டத்திலும் இல்லை அது முத்திரை சட்ட விதிகளில் “Tamil Nadu Stamp Prevention of undervalue of instrument Rule 1968” என்கிற விதிகளின்படி “வழிகாட்டி மதிப்பு ப

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 20-வது பாகம்) இதுபோன்ற நேர்வுகளில் சம்பந்தப்பட்ட பொது மக்களின் பத்திரம் உடனடியாக திரும்ப பெற வாய்ப்பிலாமல் தாமதம் ஏற்படுகிறது. இப்படி அடிக்கடி பொதுமக்களுக்கும் அரசுக்கும் சந்தை மதிப்பு அதிகம், குறைவு என முரண்பாடுகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்ததால் அரசாணை 589/வருவாய்/23.02.1971 யின் படி நேர்மையான முறையில் தமிழ்நாடு முழுவதும் “ Guide Line “ Value  (வழிகாட்டி மதிப்பு) என்ற சொல்லாடல் நுழைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வழிகாட்டி பதிவேடு உருவாக்கும் பணி முடிக்கப்பட்டது. அதன் பிறகு தகுந்த கால இடைவெளிகளில் பதிவுத்துறை தனியார் வழிகாட்டி மதிப்பை மறுப்பார்வை ( Review ) செய்ய வேண்டும் என்று முதல் ரிவிசன் 1971இல் ஆரம்பிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைபடுத்தி தமிழ்நாடு முழுவதும் 01.09.1981 தேதி ( 132 CT & RE 12.02.1980 ) நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு அடுத்த 5 ஆண்டு இடைவெளியில் G.O.M.S 161 CTERE ) 13.02.1986 யில் ரிவிசன் செய்யப்பட்டு அடுத்து 3வது ரிவியூ 2வது ஆண்டுகளுக்கு இடைவெளியில் 387 CT

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 19-வது பாகம்) சந்தை மதிப்பு(MARKET VALUE), வழிகாட்டி மதிப்பு (GUIDE LINE VALUE )சந்தை மதிப்பு வழிகாட்டி (MARKET VALUE GUIDE LINE) யின் பரிணாம வளர்ச்சி வரலாறு பதிவுத்துறையில் பொது மக்கள் பத்திரங்கள் பதியும் பொழுது அரசு நிர்ணயத்துள்ள வழிகாட்டி மதிப்பின்படி தான் முத்திரைத்தாள் வாங்கி சொத்துக்களை பதிவார்கள். அதற்கு ஏற்றவாறு பதிவு கட்டணங்களையும் செலுத்துவார்கள். இந்த வழிகாட்டி மதிப்பு குறித்து காலம் காலமாக பொதுமக்களுக்கும், பதிவு துறைக்கும் முரண்பாடுகளும், சிக்கல்களும் இருந்து கொண்டே வருகிறது. மேலும் “ வழிகாட்டி மதிப்பு “ என்ற சொல்லும், “ சந்தை மதிப்பு “ என்ற சொல்லாடலும் சந்தை மதிப்பு வழிகாட்டி என்ற எந்த சொல்லும் இன்று வரை சாமானியர்கள் காதில் விழுந்து கொண்டு இருக்கிறது. ஆனால் அவற்றைப் பற்றிய விபரங்கள் புரியாமல் தள்ளி நின்றே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் சாமானிய பொது மக்கள்! அவர்களுக்கு இதனை பற்றி பாமரத்தனமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று இதனை எழுதுகிறேன். உண்மையில்

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!  (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 18-வது பாகம்) அடித்தட்டு நடுத்தரமக்கள் சொத்துக்களை வைத்து ஐஸ்வர்யமாக வாழவேண்டும் என்று நினைக்கிற இளைஞர்கள், இளைஞிகள் அனைவரும் இந்த வழிகாட்டி மதிப்பு வரைவினை சரிபார்க்கும் வேலையை செய்ய வேண்டும். இல்லையென்றால் இதில் முரண்பாடுகள் இருந்தாலும் இது சட்டப்படியான மதிப்பாக மாறிவிடும் இதனால் கிராமத்திற்கு 10 சாமானியர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள்! அந்த முரண்பாடான MVG யை மாற்ற முடியாமல் சுணங்கி போவார்கள். அன்று தங்களுடைய கையிருப்பு பணத்தை எல்லாம் இழந்து அதிக முத்திரைக் கட்டணம் பதிவு கட்டண சுமையால் பாதிக்கப்படுவார்கள். அதனால் இப்பொழுதே உங்கள் நேரத்தை செலவழித்து ஒருகள ஆய்வு செய்து விட்டால் உங்களுடைய உழைப்பு யாரோ ஒரு சாமானியனுக்கு பயன்பட்டுப் போகும். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம். சந்தை மதிப்பு வழிகாட்டி என்பது நிலம் வைத்திருப்பவர்களுக்கோ ரியல் எஸ்டேட் வணிகர்களுக்கோ சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல அது ஒவ்வொரு சாமானியனின் வாழ்க்கைக்கும் சம்மந்தப்பட்ட