கோவை தங்க முருகன் ரியல்எஸ்டேட் நிறுவனம் எனது நிறுவனத்துடன் இணைப்பு!!!
கோவை தங்க முருகன் ரியல்எஸ்டேட் நிறுவனம் எனது நிறுவனத்துடன் இணைப்பு!!! 2016 பத்திரபதிவு தடைக்கு பிறகு மாத தவணையில் மனைகள் விற்கும் நிறுவனங்கள் பெருத்த பாதிப்புகளை அடைந்தன.விற்பனைகள் குறைந்தது வாங்கிய வட்டிகடன் ஏறியது.கூட இருக்கும் நண்பர்கள் தண்ணீர் வற்றிய பிறகு குளத்தை மறந்து செல்லும் நாரைகள் ஆகிவிட்டனர் அரசியல்வாதிகள் பஞ்சாயத்துகள்,காவல் நிலைய பஞ்சாயத்துகள் வழக்கறிஞர் பஞ்சாயத்துகள்!என்று முகவர்களும் வாடிக்கையாளர்களும் ஒட்டு மொத்த நிறுவனத்திற்கும் அழுத்தங்களை கொடுத்தார்கள். ஏற்கனவே பொறாமையில் இருப்பவர்கள் ஆகா மாட்டிட்டான் பரஞ்சோதி என்று அகமகிழந்தனர்.தொடரந்து உழைக்க இயலாத முகவர்கள் தங்களால் தான் நிறுவனம் வளர்ந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டு கொண்டனர். அத்தனை தடைகளை தாண்டி எந்த வித எதிர்மறை எண்ணங்களையும் மனதிற்குள் புக விடாமல் நல்லெண்ணம் நல்நம்பிக்கை உணர்ச்சிகளை மட்டும் பிரபஞ்ச வெளியில் படரவிட்டு புதிய வாய்ப்புகளை கண்டுபிடித்து வியாபரத்நை மீண்டும் நிலை நிறுத்த வேண்டியதுதான் ஒரு தொழில் முனைவரின் கடமை.அதனை நான் மிக சிறப்பாகவே செய்து இருக்கிறேன். என்னுடைய வியாபரா சரிவுக்கு நான் தான் காரணம்...