Posts

Showing posts from August 23, 2024

ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 2

Image
 ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 2 அதே போல் கீழ்வாரம் உரிமையை விற்கும் உரிமையும் ராயத்துகளுக்கு இந்த சட்டம் மூலமே கிடைத்தது இருந்தாலும் ஜமீன்கள் நம் தம் எஸ்டேட்டுகளின் ராஜாக்களாகவே ஜமீன்தார்கள் திகழ்ந்தனர் தங்களது நிலபிரபுவத்துவ சுரண்டலைத் தங்கு தடையின்றி நடத்த அவர்களுக்கு அதிகாரமும் செல்வாக்கும் இருந்தன. இந்த நிலையில் ரயத்துக்கள் மத்தியில் நஷ்டஈடின்றி ஜமீன் எஸ்டேட் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது 1930 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் 1936ம் ஆண்டு தோன்றிய அகில இந்திய கிசான் சபையும் காலம் காலமாக மரபு வழியாக இருக்கும் ஜமீன் உரிமையை ஒழிக்க கோஷம் போட்டது.  1937–ம் ஆண்டு சென்னை மரகானத்தில் ஜமீன் முறையை ஒழிக்க பிரகாசம் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அந்த குழுவாரியாக விசாரணை நடத்தி ஒரு அறிக்கை தயாரித்து அரசாங்கத்திடம் சமர்பித்தது 1942 ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1908 ம் ஆண்டின் எஸ்டேட் சட்டபடி எவையெல்லாம் எஸ்டேட்டுகள் என நிர்ணயிக்கப்பட்டதோ அவையெல்லாம், 1948 எஸ்டேட் ஒழிப்பு (ரயத்துவாரி முறைக்கு மாற்றம்) சட்டம் கொண்டு வரப்பட்டு ஜமீன் முறை ஒழிக்கப்பட்

நாரா சந்து, நாராசம்

Image
 அந்தகாலத்தில் வீட்டிற்கு பின்புறம் நார சந்து விடுவார்கள் அதில் பெண்கள் முதியோர்கள் அதிகாலையில் மலம் கழிப்பார்கள். அந்த சந்து நாரா சந்து, நாராசம் என்பார்கள் அது தனிபட்ட நபரின் சொத்து ஆனால் நத்தம் நிலவரிதிட்டத்தில் பொதுப்பாதை என பதிவிட்டுவிட்டு விடுவார்கள். அதுபோல் ஒரு சிக்கலை திருநெல்வேலி சேரன்மகாதேவி கிராமத்தில் இருந்தது அதனை நேரடியாக வந்து களஆய்வு செய்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tirunelveli #Cheranmahadevi #village #visited #conducted #field #survey #fieldsurvey

நெல்லையில் இனிய சந்திப்பு

Image
 திருநெல்வேலி கோகுல் நரேந்திரன் அண்ணனுடன் நெல்லையில் இனிய சந்திப்பு! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #nicemeeting #tirunelveli #nellai #திருநெல்வேலி #நெல்லை #gokulnarentran

படம் பார்த்து திமுக கதை சொல்!

Image
 படம் பார்த்து திமுக கதை சொல்! சேரன்மகாதேவி அருகில் நத்தம் சிக்கலுக்காக கள ஆய்வுக்கு சென்ற பொழுது இந்த படம் சட்டகம் போட்டு மாட்டி வைத்து இருந்தார்கள். திராவிடர் முன்னேற்ற கழக ஆரம்பகாலகட்ட தலைவர்களை ஒரு சேர அந்ந காலத்து பிரிண்டிங்  மிஷினில் அச்சடித்து மாட்டி இருந்தார்கள். இது யார் மாட்டினார்கள் என்று கேட்டேன். எனது அப்பா அந்த காலத்து திமுக என்றார்.அவசரத்தில் போட்டோ எடுத்ததால் கீழே உள்ள எ.ஜி.ஆர் படம் சரியாக விழவில்லை. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #cheranmadevi #naththam #issue #naththamissue #dmk #dmkstory #picture #framed #dravidarmunnetrakazham #mgr #MGR