Posts

Showing posts from December, 2024

UDR நில சிக்கல் சம்மந்தமாக ஒரு பகுதி கிராமத்தினரே அவதி!

Image
   வந்தவாசி அருகில் ஒரு கிராமத்தில் UDR நில சிக்கல் சம்மந்தமாக ஒரு பகுதி கிராமத்தினரே அவதி! அது சம்மந்தமான ஆலோசனை நிழந்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com # Vandavasi #facing #UDR #land #dispute #villagers #suffering #consultation

சென்னை பூமிதான போர்டில் RTI -2J

Image
   சென்னை பூமிதான போர்டில் RTI -2J நாம் தொடர்ந்து பூமிதான போர்டில் RTI யில் 2J போட்டு கள ஆய்வு செய்வதாலும் அதனை பார்த்து நிறைய நபர்கள் பூமிதான போர்டுக்கு கள ஆய்வுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். சாமானியர்கள் பூமிதான சட்டம் பேசுகிறார்கள். முக்கியமான ஆவணங்களை பெற்று செல்கிறார்கள். வருபவர்கள் உங்கள் பெயரை சொல்லி அண்ணன் என்கிறார்கள் என்று சொல்லும் பொழுது உள்ளபடியே மகிழ்சியும் பெருமிதமும் அடைந்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chennai #Bhumidhanboard #RTI #2J #field #inspections

திருவெற்றியூர் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில் !!

Image
  திருவெற்றியூர் நகர நிலவரி திட்ட அலுவலகத்தில்  தமிழ்நாடு முழுக்க அங்கே அங்க சில இடங்களில் நிலவரி திட்டம் நடக்காமல் சர்க்கார் நஞ்சை சர்க்கார் புஞ்சை என்று வகைப்படுத்தப்பட்டு சில கிராமங்கள் இருக்கிறது. அதில் ஒன்றுதான் சென்னையில் உள்ள திருவெற்றியூர். அந்த நிலவரி திட்ட பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் முடியப்போகிறது. அதனால் இங்கு சொத்து வைத்து இருப்பவர்கள் கொஞ்சம் விழிப்பாக இருந்து உங்கள் பெயர் பரப்பு ஆகியவை சரியாக கணக்கில் ஏற்றி இருக்கிறீர்களா என்று சரிபார்த்து கொண்டு நில சிக்கல் வருமுன் காத்துக்கொள்ள வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #thiruvettiyur #City #landtaxprojectofficer #villages #tamilnadu #notimplemented #classified #Sarkarnanjai #Sarkarpunjai #Chennai

AGM meeting க்கு செல்வது சம்மந்தமாக முடிவுகள் எடுக்கப்பட்டது!!

Image
   FAIRA  ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாலை 6:30 மணி அளவில் பாண்டிசேரி அரியாங்குப்பத்தில் அன்பு ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் நடந்தது. அதில் திருவண்ணாமலையில் நடக்கும் AGM meeting க்கு செல்வது சம்மந்தமாக முடிவுகள் எடுக்கப்பட்டது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #FAIRA #realestate #Federation #Advisory #Meeting #Saturday #Anburealestate #office #Aryankuppam, #Pondicherry #AGM #meeting #Thiruvannamalai

அண்ணன் புகழேந்தி அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ந்த தருணம்!

Image
 சென்னையில் கூடுவாஞ்சேரி அண்ணன் புகழேந்தி அவர்களுடன் நில சிக்கல் சம்மதம்மாக கலந்துரையாடல் நிகழ்ந்த தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Chennai #Madras #Guduvancheri  #landissue #discussed

வாழ்க்கை எவ்வளவு பாடங்களை கற்று கொடுக்கிறது!

Image
   நில சிக்கல் சம்மந்தமாக தமிழகம் முழுவதும் சாமானியர்களை நோக்கி பயண பட பயண பட வாழ்க்கை எவ்வளவு பாடங்களை கற்று கொடுக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனையை மண்டையில் போட்டு கொண்டு அல்லாடுகிறார்கள். பிரச்சனையை மண்டையில் இருந்து வெளியே எடுத்தால் தான் பிரச்சனை தீரும் என்று நான் சொல்கிறேன். ஆனால் பிரச்னை தீர்ந்தால்தான் மண்டையில் இருந்து வெளியே போகும் என்று அந்த சாமானியன் சொல்கிறார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #landissue #landproblem #struggling

திருநெல்வேலியில் ACTIV பயிற்சி வகுப்பில்!

Image
   Constitution is not a mere lawyers document, it is a vehicle of Life, and its spirit is always the spirit of Age.” என்று அரசியலமைப்பு பற்றிய புரிதல் அவருக்கு வாழ்வியல் ஆகவே இருந்து இருக்கிறது. அதே “If I find the constitution being misused, I shall be the first to burn it.” என்று சொல்லும் பொழுது அதன் எதிர்கால நிலையும் உணர்ந்தவராய் இருக்கிறார். திருநெல்வேலியில் ACTIV பயிற்சி வகுப்பில். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tirunelveli #ACTIV #Businessoorganisation #training

நன்றி ACTIV தொழில் அமைப்பு!

Image
   நன்றி ACTIV தொழில் அமைப்பு!  ஒடுக்கப்பட்ட மக்களை வெற்றிகரமான தொழில் முனைவர் ஆக்குவதற்கு பண்படுத்த ஒரு அருமையான மேடை ACTIV அதனுடைய பயிற்சி வகுப்பு திருநெல்வேலியில் 20.12.2024 தேதியில் நடந்தது, அதில் நிலத்தை அரசிடம் இருந்து எப்படி பெறுவது? என்ற தலைப்பில் பயிற்சி எடுத்தேன். 2025 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பகுதிகளிலும் பயிற்சி எடுக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். ACTIV நிர்வாக முன்னணியினர் அனைவருக்கும் நன்றி! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #thankyou #Tirunelveli #ACTIV #Businessoorganisation #wonderfulplatform #training

பூமிதான நில சிக்கலில் சாமானியர்கள்!

Image
   பூமிதான நில சிக்கலில் சாமானியர்கள்!  அரசின் பூமிதான நிலங்கள் 27 ஆயிரம் ஏக்கர் வரை மக்களுக்கும் வழங்காமல் பூமிதான பதிவேட்டில் குழப்பமான பதிவுகளை பூதான் போர்டு உருவாக்கி சாமானியர்களை அல்லல் பட வைக்கிறது. அப்படி திருநெல்வேலியில் பாதிக்கப்பட்ட ஒரு ஊரை சேர்ந்தவர்களை சந்தித்த தருணம்! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Tirunelveli #bjoomidhanaland #land #governmentland #பூமிதானநிலங்கள் #confusing

அரசிடம் இருந்து நிலங்களை எப்படி பெறுவது? - ஆழமான பயிற்சி

Image
   அரசிடம் இருந்து நிலங்களை எப்படி பெறுவது? என்ற தலைப்பில் RSO15,RSO 21, 37A, 37B மூலமாக எப்படி நிலத்தை அரசிடம் இருந்து பெற வேண்டும், நிலகுத்தகை RSO 24A இன் கீழ் எப்படி பெற வேண்டும் பூமிதான நிலம் பஞ்சம நிலம் போன்றவற்றை எப்படி அணுகுவது என்று இன்று (20.12.2024) ACTIV என்ற SC/ST தொழில் முனைவோர் அமைப்பில் ஆழமான பயிற்சி கொடுத்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #training #sc #st #Entrepreneurship #Organization #ACTIV #topic #RSO15 #RSO21 #37A #37B #RSO24A #land #grants #Panchamaland #paranjothipanidan #trainer

ஒட்டன் சத்திரம் அருகில் சாமனியர்களை வெளியேற்றி பிளாண்டஷன் செய்த நிலத்தை ஆய்வு செய்த தருணம்!!

Image
   ஒட்டன் சத்திரம் அருகில் சாமனியர்களை வெளியேற்றி பிளாண்டஷன் செய்த நிலத்தை ஆய்வு செய்த தருணம்!! HRNCE சம்மந்தப்பட்ட நிலங்களில் சாமானியர்கள் கோயிலின் டைட்டிலை கேட்கவில்லை! IFR படி SR படி உள்ள அனுபோக உரிமையை கேட்கிறார்கள் ஆனால் குத்தகைதார பாதுகாப்புக்கு விரோதமாக தரிசு என்று சட்டவிரோத ஆவணம் உருவாக்கி சாமானியர்களை அனுபோகத்தில் இருந்து வெளியேற்றி நம்பர் ஒன் அக்ரோ & ரியல் எஸ்டேட் நிறுவனமாக இந்து அறநிலையத்துறை மாறி கொண்டு இருக்கிறது.  இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipanadian.com #ottanchatram #inspected #plantation #HRNCE #IFR #SR #Hindu #charitable #Trust #agro #realestate #company #illegal #document #barren #security #tenure #evicting

நில சிக்கலுக்கான கள ஆய்வு - கோவை

Image
   கோவை கருமத்தம்பட்டி அருகில் நில சிக்கலுக்கான கள ஆய்வு செய்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #kovai #covai #karumaththampatti #landissue #fieldwork #fieldsurvey #coimbatore

ஈரோடு கோட்டாட்ச்சியர் அலுவலகத்தில் ஆவணங்களை நேரடி கள ஆய்வு செய்த தருணம்!

Image
   தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 பிரிவு 2J யின் கீழ் ஈரோடு கோட்டாட்ச்சியர் அலுவலகத்தில் இன்று நில சீர்திருத்த துறை ஆவணங்களை நேரடி கள ஆய்வு செய்து வாடிக்கையாளரின் நிலசிக்கல் தீர உதவினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #erode #rti #2j #field #inspection #fieldinspection #landreforms #document #landisses #revenuedivisionaloffice #ஈரோடு #களஆய்வு
Image
   பயிரிடும் குத்தகைதாரர் என்ற உரிமை பற்றி அந்த சம்சாரிக்கு தெரியாது மைனர் இனாம் நிலம் பற்றி தெரியாது UDR என்றால் தெரியாது. நத்தம் என்றாலும் தெரியாது எதுவுமே தெரியாது ஆனால் கோவில் நிலத்தில் எந்த சிரத்தையும் எடுக்காமல் வசிப்பேன் என்று போன மாதம் சொல்லி விட்டு போனார் என்னிடம்! இன்று அவர் ஊரான திருப்பாம்புறம் கிராமத்தில் HRNCE அதிகாரிகள் police படை சூழ தீயணைப்பு படை வீரர்கள் அணி சூழ காலி செய்யுறியா? அல்லது பயன்பாட்டு தொகை (use and occupation amonut) ஒன்னரைலட்சம் கட்ட சொல்லி இருக்கிறார்கள்!அந்த பகுதி சட்ட மன்ற உறுப்பினர் போன் செய்து பேசியதால் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று அந்த சம்சாரி தெளிஞ்சு இருக்கிறார்.இன்று தப்பிச்சாச்சு!ஆனால் தலைக்கு மேல் hrnce சட்ட கத்தி தொங்குது ன்னு உணர ஆரம்பிச்சுட்டாரு!இப்பொழுது எனக்கு போன் அடித்து ஒழுங்கா நிலம் பற்றிய அறிவை கற்று கொள்கிறேன் அண்ணா!கூடவே இருந்து கற்று கொடுங்கள் என்று கேட்டு இருக்கிறார். பட்டால் தான் சுறுசுறுப்பு வருகிறது. அந்த சம்சாரிக்கு! நிலம் பற்றிய அறிவே சாமானியரகளை காக்கும்!அறிவே அரண் சகோதரா!

கவுல் என்றால் என்ன?

Image
  வருவாய்துறையில் “கவுல்” என்ற வார்த்தை உண்டு, பழைய ரெவன்யூ கணக்குகளில் கடைசி நெடுவரிசை, கிடை வரிசை பட்டியலில் கவுல் என்ற வார்த்தை எழுதப்பட்டு இருக்கும் அல்லது B.S. No 29, என்று எழுதப்பட்டு இருக்கும். பழைய SLR, RSLR கணக்குகளில் பல இடங்களில் நான் இதனை பார்த்து இருக்கிறேன் பென்சிலில் கூட எழுதி வைத்திருப்பார்கள். மேற்படி நிலங்களுக்கு அதிகமான தீர்வை விதிக்காமல் மிதமான தீர்வை விதித்து சிறு காடு போன்ற நிலங்களையும் கோரை புல் விளைந்து நிற்கின்ற நிலங்களையும், சேற்று நிலங்களையும் கழி வேலி நிலங்களையும் சீர்திருத்தி சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த கவுல் முறை ரெவென்யூவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சில பகுதிகளில் நிறைய நாகதாளி, காடுகள் இருக்கும் அதனை சீர்திருத்த 20 வருடம் வரை கவுல் கொடுத்த ஆவணத்தை பார்த்து இருக்கிறேன் இந்த கவுல் 5 வருடம், 10 வருடம், 20 வருடம் என்று கொடுப்பார்கள் சென்னையில் பொழிச்லூருக்கு அருகில் இன்றும் கவுல் பஜார் என்று பெயர் இருப்பதை கவனிக்கலாம் கவுல் பிராமணர்கள் என்று காஷ்மீரில் பண்டிட் பிராமணர்களின் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் அந்த கவுல் சமஸ்கிருதம் நான் சொல்கிற சொல...

தஞ்சாவூர் பள்ளத்தாக்கில் நில உச்சவரம்பு சட்டம் ஆரம்ப கால நிலை

Image
  தஞ்சாவூர் பள்ளத்தாக்கில் நில உச்சவரம்பு சட்டம் ஆரம்ப கால நிலை “கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை” என்று சான்றோர்களால் புகழ்ந்து பாடப்பட்ட ஆறு. “காவிரி ஆறு” அந்த ஆற்றின் புனலும் அதில் இருந்து இணைந்து செல்லும் வாய்க்கால்கள், சிறு சிறு குளங்கள் அதற்கிடையே பச்சை பசேல் நெற்பயிர்கள், பூத்து குலுங்கும் பலவகை மலர்கள், செடிகள் என்று கண்ணிற்கினிய எண்ணற்ற காட்சிகளை காணலாம். மேலும் தஞ்சை என்று இப்பொழுதுதான் பொதுவாக சொல்வது தற்போதைய தஞ்சை மாவட்டம், திருவாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், இன்னும் பிரிய போகும் கும்பகோணம் மாவட்டம் என அனைத்து ஒருங்கிணைந்த “தஞ்சை பள்ளத்தாக்கு” என்று சொல்கிறேன். இந்த பகுதியில்தான் அதிக அளவில் நிலங்களை கைப்பற்றிகொண்டு இருந்த மிராசுகளும், மிட்தாக்களும், சுரோத்திரியர்கள், ஜமீன்களும், நில சுவான்தார்களும் அதிகம். அந்த பகுதியில் நில சீர்திருத்தம் சட்டம் இயற்றி நிலங்கள் சாமானியர்களுக்கு நிலத்தை பகிர்கின்ற முயற்சி 1960ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டு நிலசுவான்தார்களிலேயே தஞ்சையில்தான் பொது அறக்கட்டளை...

வருவாய்துறையில் Antisocial personality disorder, Kleptomania, Narcissistic personality disorder போன்ற ஆளுமை கோளாறு உள்ள அதிகாரிகள்!!

Image
  வருவாய்துறையில் Antisocial personality disorder, Kleptomania, Narcissistic personality disorder போன்ற ஆளுமை கோளாறு உள்ள அதிகாரிகள்… யார் சட்டவிரோதமாக பணம் கொடுத்தாலும் மத்தவங்க சொத்தில் சம்மந்தம் இல்லாத நபர்களின் பெயரை இணையதளத்தில் மட்டும் ஏற்றிவிடுகின்றனர். அந்த பெயர் ஏற்றபட்டதற்கான எந்தவிதமான உத்தரவுகளோ Backend கோப்புகளோ இல்லை!கோப்புகளை தேடினால், நோண்டி நொங்கெடுத்து கேள்வி கேட்டால் Office procedure இல் சிக்க வைத்து காலம் தாழ்த்துகிறார்கள். இவர்ளே பிரச்சினையை உருவாக்கி சாமானியனுக்கு வலி ஏற்படுத்தி பிறகு அதையே சரிசெய்து கொடுக்கிறேன் என்று அதிலும் சம்பாத்தியம் செய்யும் திறமை ஆளுமை கோளாறு உள்ள இந்த வருவாய்துறையினருக்கு தான் இருக்கிறது. அரபு நாட்டு சட்டங்களில் இரண்டு கையை வெட்டிவிடும் தண்டனை இருக்கிறது. அதுபோல் ஒரு தண்டணையை உட்சபச்சமாக வைத்தால் இந்த கோளாறு உள்ள அதிகாரிகளை தண்டிக்க பரிகாரம் கோரலாம். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #revenuedepartment   #talukoffice   #Antisocial   #personalitydisorder ...

வழக்கையும் வழக்குரைஞரையும் நகர்த்துகின்ற வழக்காடிகளுடன்

Image
   வழக்கையும் வழக்குரைஞரையும் நகர்த்துகின்ற வழக்காடிகளுடன் சேலம் நீதிமன்றத்தில்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #salem   #court   #lawer   #case

சேலம் வழக்கறிஞர் செல்லத்துரை

Image
   சேலம் நீதிமன்ற வளாகத்தில் சேலம் வழக்கறிஞர் செல்லத்துரை அவர்களிடம் வருவாய்துறை மானிய கோரிக்கை புத்தகத்தை வழங்கிய தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர், தொழில் முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Salem #court #lawyer #advocate #presented #book #tamilbook #varuvaaituraimaniyakkorikkai #revenuedepartment

மரக்கால்! குறுக்கம்! கோட்டை!!நில அளவுகள் தெரியுமா?

Image
  மரக்கால்! குறுக்கம்! கோட்டை!!நில அளவுகள் தெரியுமா? திருநெல்வேலியில் தானிய விளைச்சலை வைத்துதான் நில அளவை அந்த காலத்தில் கணக்கிடபட்டன! “ஒரு கோட்டை” நெல் விளையும் இடத்தின் பரப்பளவு 163 செண்டு இருக்கும்! நிறைய நெல் வினையும் பூமியின் பரப்பும் அதன் வரப்பும் ஒரு கோட்டை நெல் விளைந்ததாததத்தான் இருந்தது. இன்றும் ஆதியில் இருந்து பிரித்து விற்காமல் வைத்திருக்கின்ற குடியானவர்களின் நிலங்கள் சுமார் 163 செண்டாக இருக்கிறது, முன்பின் ஒரு செண்டு இரண்டு செண்டு கூடுதல் குறைவாக இருப்பதை இன்றும் சர்வே செய்யும் பொழுது கண்கூடாக பார்க்கிறேன். மேலும் 8 செண்டு அல்லது 8 சீர்படி என்று சொல்லுவதை 1மரக்கால் என்று இன்றளவும் பேச்சுவழக்கில் இருக்கிறது. அதேபோல் குறுக்கம் என்றும் சொல்கிறார்கள். குறுக்கமும் 8 செண்டு என்றே பலர் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் குறுக்கம் புன்செய் நிலத்திற்கு தான் சொல்ல வேண்டும் நன்செய் நிலத்துக்கு மரக்கால் என்று சொல்லவேண்டும். மேலும் குறுக்கத்தை 8 செண்டு என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அது சுமார் 5.5 செண்டுதான் வரும்.புன்செய் நிலத்தில் இரண்டு மாடு கட்டி ஒரு நாள் முழுத...

தம்பி சிதம்பரம் சார்லஸ் – குளித்தலை நீதிமன்றம்

Image
   தம்பி சிதம்பரம் சார்லஸ் அன்பை பகிர்ந்து கொள்ள குளித்தலை நீதிமன்றம் வந்து சந்தித்த தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Kulithalaicourt   #court   #chidambaramcharles   #sharehislove   #குளித்தலைநீதிமன்றம்

ஓசூர் கார்த்திக் அவர்களுடன் – திருச்சி மாவீரர் நாள்

Image
   ஓசூர் கார்த்திக் அவர்களுடன் திருச்சி மாவீரர் நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தருணம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Maaveerarnaal   #Maaveerar   #remembranceday   #tirchi   #திருச்சி   #மாவீரர்நாள்   #hosur Related Posts

மாவீரர் நாள் -2024 – திருச்சியில் நினைவேந்தல்

Image
   மாவீரர் நாள் -2024 – திருச்சியில் நினைவேந்தல். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர், தொழில்முனைவர் 9841665836 www.paranjothipandian.com #Maaveerarnaal   #Maaveerar   #remembranceday   #tirchi   #திருச்சி   #மாவீரர்நாள்