5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!
5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!
1. சாமானிய மக்கள் இனாம் நிலங்களில் வாழ்ந்து கொண்டு இனாம் நிலமாக இது ஒரு காலத்தில் இருந்தது என்று தெரியாமலேயே இப்பொழுது வரை வாழ்ந்து வருகிறார்கள். இதற்கு அரசும் ஒரு வகையில் காரணம் 1985-ஆம் ஆண்டு யூடிஆர்-க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் ஒரே வகையான ரயத்துவாரி நில நிர்வாக முறை தான் இருக்கிறது. இன்றைய கிராம கணக்கிலும் ரயத்துவாரி கணக்கே அமலில் இருந்து வருகிறது.
2. அதன்படி சாமானியர்கள் அனைவரும் தங்களது பெயர் யூடிஆர், அ-பதிவேட்டில் பெயர் தாக்கல் ஆகி அதன் பிறகு பட்டா மாற்றி, பத்திரங்கள் பதிந்து, அங்கீகாரம் வாங்கி, சர்வ சுகந்திரமாக ஆண்டு அனுபவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வக்புபோர்டு ஒழிக்கப்பட்டு விட்ட இனாம் நில நிர்வாக முறையை மேற்படி எங்கள் ஆளுகையில் இருந்தது என்றும் அதனுடைய டைட்டில் உரிமை வக்பு உடையது என்று கூறுகிறது.
3. இதனைத்தான் இந்து சமய அறநிலையத் துறையும் செய்யும் ஆனால் waqfboard போல மொத்தமாக தடை சொல்லாது. அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற செயல் அலுவலர்கள் உதவி ஆணையர்கள் மூலம் பத்திர பதிவு தடை ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளை செய்வார்கள். நான் waqfboard மட்டும் சென்னையில் ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தை வைத்துக்கொண்டு அதற்கு தனியாக ஒரு சிஇஓ நியமித்து தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற 586 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கிறோம் என்று ஒரே மொத்தமாக அனுப்பி வைப்பார்கள்.
4. அந்த கடிதத்தில் தற்போதைய சர்வே நம்பர் இருக்கும் பழைய சர்வே நம்பருக்கும் கோ-ரிலேஷன் இருக்காது. Waqfboard எந்த ஆவணத்தின் அடிப்படையில் உரிமை கொண்டாடுகின்றோம் என்ற விவரம் இருக்காது. சாமானியர்களை அழைத்து அவர்களுக்கு காரணம் காட்டும் show cause நோட்டீஸ் கொடுத்து சாமானியர்கள் தரப்பு ஆவணங்களை பரிசீலித்து சம வாய்ப்பளித்து அதன் பிறகு இது வக்புநிலம் பதிவு செய்ய தடை என்று முடிவு எடுக்காது.
5. பதிவுத்துறையில் உள்ள 586 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் waqfboard சிஇஓ நேரடியாக ஆட்சேபனை மனு கொடுப்பது என்பது மிகவும் தவறான சட்ட நடைமுறை ஆகும். பதிவுத்துறை ஒரு சட்ட அதிகார அமைப்பு waqfboard ஒரு சட்ட அதிகார அமைப்ப ஒரு சட்டஅதிகார அமைப்பு இன்னொரு சட்ட அதிகார அமைப்பான பதிவு துறைக்கு தடை மனு கொடுக்க வேண்டும் என்றால் முதலில் பதிவுத்துறை தலைவர் அவர்களுக்குத்தான் ஆட்சேபனை மனு தகவல்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதன் பிறகு பதிவுத்துறை தலைவர் தான் 586 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அல்லது கார்ப்பரேட் அலுவலகத்தில் மொத்தமாக தயாரித்து விட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள waqf இன்ஸ்பெக்டர்களுக்கு விவரங்களை அனுப்பி அவர்கள் சம்மன் வைத்து சாமானியர்களின் ஆவணங்களை பரிசீலித்து விட்டு அதன் பிறகு தடை மனு கொடுப்பது என்ற நடைமுறையை பின்பற்றி இருக்க வேண்டும்.
6. ஆனால் அப்படி செய்யாமல் பதிவு துறை தலைவரை மதிக்காமல் நேரடியாக பதிவுத்துறை தலைவருக்கு கீழே இருக்கின்ற அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் waqf CEO கடிதம் அனுப்பிவிட்டார். அதாவது தனது நண்பர் தனது வீட்டில் தன்னுடைய மனைவி மக்களுக்கு உத்தரவுகளை போடலாம். ஆனால் பக்கத்து வீட்டு மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உத்தரவுகளை போட வேண்டும் என்றால் பக்கத்து வீட்டு குடும்ப தலைவரிடம் தகவல்களை சொல்லி அதன் பிறகு தான் போட வேண்டும். அந்த சட்ட நடைமுறை எதுவும் கடந்த ஐந்து ஆண்டுகால வக்போடு சி.இ.ஓ ஒரே நேரத்தில் தமிழகம் முழுக்க உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் தடை மனுவை அனுப்பியவுடன் அதனை வாங்கிய சார்பதிவாளர் இதுவரை நமக்கு உத்தரவு தெளிவுரை அனைத்தும் மாவட்ட பதிவாளர் மாநில பதிவு துறைத்தலைவர் பதிவுத்துறைத்தலைவர் அவர்கள் தான் கொடுப்பார்கள் தற்பொழுது சிஇஓ கொடுத்திருக்கிறார். இதற்கு என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பதிய வருகின்ற பத்திரப் பதிவுகளை எல்லாம் தள்ளிப் போட்டுவிட்டார்.
7. சாமானியர்களின் சொத்து வாங்குதல் சொத்து விற்றல், புதிய வீடு குடி போகுதல், மகள் திருமணம், மகள், மகன் உயர்கல்வி என்று அனைத்திலும் தேக்கத்தை இந்த waqfboard கொண்டு வந்தது. ஏன் வக்புபோர்டை மட்டும் சொல்கிறீர்கள் இந்து சமய அறநிலையத்துறை இப்படி செய்யவில்லையா என்றால் அதுவும் செய்தது ஆனால் அது தனித்தனியாக விசாரணை நடத்தி செய்ததால் சாமானியர்கள் அந்த விசாரணை நடக்கும் பொழுது தங்களுடைய மகள் திருமணம், வீடு குடிபோகுதல், உயர்கல்வி போன்ற தேவைகளுக்கு மனரீதியாக வேறு வேறு ஏற்பாடுகளை செய்ய தயாராகி இருப்பார்கள். ஆனால் மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் ஒரே நேரத்தில் எந்தவித show cause நோட்டீஸும் சாமானியர்களுக்கு கொடுக்காமல் பதிவுத்துறை தலைவருக்கு அறிவிக்காமல் நேரடியாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி திடீரென்று பத்திரப்பதிவை நிறுத்தியது இந்த வக்புபோர்டு இப்லீஸ் மகான்கள்.
8. வக்புபோர்டு நிர்வாகம் வக்பு சட்டம் 1995 என்ற சட்டத்தையும் பத்திரப்பதிவு சட்டம் 1908 பிரிவு 22A எந்த சட்டத்தையும் பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டம் 1971) என்ற மூன்று சட்டங்களை பயன்படுத்தி சாமானியர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. எந்த விசாரணை என்றாலும் சென்னைக்கு தான் அழைக்கிறார்கள். அந்தந்த மாவட்டங்களில் விசாரணை வைத்தாலாவது சாமானியன் நேரம் பயண அலுப்பு மற்றும் பயண செலவு மிச்சப்படும். தஞ்சையில் அதிராம்பட்டினத்தில் இருக்கும் கறிவடை விற்கிற, தட்டுக்கடை பாய்க்கும், செருப்பு கடை நடத்தும் கடையநல்லூர் பாய்க்கும் நீ ஆக்கிரமித்து கடை நடத்துகிறாய் என்று நோட்டீஸ் அனுப்பி சென்னையில் வந்து ஆஜராக சொல்லி பயணக்களைப்பும், போக்குவரத்து செலவும் செய்து வரவழைத்து இன்று விசாரணை அலுவலர் இல்லை அதனால் எதுவுமே விசாரிக்காமல் அடுத்த வாய்தா வைக்க சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்ற திமிர் வக்புபோர்டு மகான்களுக்குதான் இருக்கின்றது.
9. Waqf சொத்துக்கள் நேரடியாக மசூதி பெயருக்கு இருப்பது ஒரு வகை, அல்லது மசூதி மற்றும் மத சேவை செய்வதற்கு சேவை கண்டிஷனரிடம் கொடுக்கப்பட்ட இனாம் நிலங்கள் ஒரு வகை, மூன்றாவது தனிப்பட்ட இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப்பட்ட தனிநபர் இனாம்கள் மூன்றாவது வகை இந்த தனி நபர் இனாம்கள் ரயத்துவாரியாக மாறி தூய பட்டாவாக அடுத்தடுத்து சாமானியர்களுக்கு தானாதி வினிமய விக்கிரையங்கள் மூலம் மாறி விட்டது. அப்படிப்பட்ட நிலங்களுக்கு எல்லாம் நோட்டீஸ் கொடுத்துவிட்டு என்.ஓ.சி (NOC)- ஐ விற்பனை செய்து கொண்டு இருக்கின்றார்கள். நீங்களே தடைகளை கொடுப்பது அதற்கு சாமானியர்கள் என்ஓசி (NOC)- கொடுக்க வேண்டும் என்று உங்களிடம் வருவது அதற்கு நீங்கள் சட்டவிரோத ஆதாயம் பெற்றுக் கொண்டு என்ஓசி(NOC)- கொடுப்பது என்று இடைத்தரகர்கள் மூலம் NOC வணிகம் செய்து கொண்டு இருக்கின்றார்கள் இந்த இப்லீஸ் மகான்கள்.
10. அல்லா எப்பொழுதும் சாமானியன் இருதயத்திற்கு அருகில்தான் இருக்கிறார். சொத்துக்கள் நிலபுலன்கள் உடைய ஸ்தாபனத்தின் பக்கம் இருப்பதில்லை. வருகின்ற தேர்தலில் இந்த வக்புபோர்டு தங்களுடைய நிலங்களை மீட்கும் பொழுது சாமானியனுக்கு சமவாய்ப்பு கொடுத்து, விசாரணை நடத்தி முறையான தீர்ப்பு கொடுத்து, அதற்கு மேல்முறையீடு வாய்ப்பு கொடுத்து அதன் பிறகு waqf சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஸ்டாண்டர்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் SOP உருவாக்குவதற்கு கோரிக்கை வைக்க அந்தந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு
சா. மு. பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
தொடர்புக்கு+91 86100 63410

Comments
Post a Comment