பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

 


அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15 வது தேசிய மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 09.01.2026 தேதியில் தேசிய ஆ.ஹென்றி அவர்களின் தலைமையில். நடந்தது அதில் மாநாட்டு தீர்மான குழு ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து 116 பக்கத்திற்கு தீர்மானங்களை வெளியிட்டு இருந்தோம். அதில் உள்ள தீர்மானங்கள் முதலில் நன்றி தெரிவித்தும் அதன் பிறகு கோரிக்கை தீர்மானங்களையும் நிறைவேற்றினோம். மேற்படி தீர்மானங்கள் DTCP, CMDA, TNRERA, REVENUE, REGISTRATION பட பல்வேறு துறைகளில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.
அதனை தலைவர் ஹென்றி அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக ஊடகங்களில் பதிவிடுகின்றேன். இதன் மூலம் பொதுமக்களுக்கும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவர்களுக்கு விழிப்புணர்வும் கிடைக்கும். மற்றும் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகளின் கொள்கை முடிவுகளுக்கு தயாரிக்கப்படும் தேர்தல் அறிக்கைக்கு பயன்படும் என்று நம்புகிறேன். அதனால் ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் பதிவிடுகிறேன்.
பதிவு – 8(2)
நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்!
16. திட்டமிடல் மற்றும் நகர அபிவிருத்தித் துறையின் கீழ் செயல்படும் DTCP/ LPA/ CMDA/ CORPORATION/ MUNICIPALITY/ TOWN PANCHAYAT அங்கீகார அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 38 அதிகாரிகள், விண்ணப்பக் கோப்புகளை பரிசீலிக்கும் போது, விதிகள்-துறையினரின் விருப்பப்படி INTERPRETATION செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரே சட்ட விதி வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறையில் விளக்கப்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் குழப்பம், பிளானர்கள்/ பொறியாளர்கள் மீது தேவையற்ற அழுத்தம், கோப்புகள் பரிசீலனையில் தேவையற்ற தாமதம், தொழில்சீரழிவு மற்றும் முதலீட்டு தடங்கல் ஆகியவை உருவாகின்றன. எனவே, விதிகள் தெளிவாக, ஒரே மாதிரியாக, அறிகின்ற, அமல்படுத்துகின்ற வகையில் STANDARD OPERATING GUIDELINE (SOG) வடிவில் வெளியிடப்பட வேண்டும். குறிப்பாக ACCESS ROAD WIDTH, APPROACH ROAD OWNERSHIP, REVENUE APPROACH VS LAYOUT INTERNAL ROADS, NATHAM / GRAMA NATHAM / PATTA ROADS, PRIVATE LAYOUT ROAD USAGE போன்ற முக்கிய அம்சங்களில், அனைத்து அதிகாரிகளும் ஒரே விளக்கக் கையேட்டின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். அதிகாரியின் தனிப்பட்ட கருத்து/ விருப்ப நடைமுறையை நிறுத்துவதற்கு வழிவகை செய்ய FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகின்றோம்.
17. ADVOCATE LEGAL OPINION-ஐ DTCP அதிகாரிகள் மறுஆய்வு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். தற்போது,விண்ணப்பதாரர்கள் SENIOR ADVOCATE, GOVERNMENT PLEADER, PANEL LAWYERS மூலம் பெறும் LEGAL OPINION-ஐ DTCP அதிகாரிகள் மீண்டும் மறுஆய்வு செய்து சட்டப் பிரிவுகளை கேள்வி கேட்டு கோப்புகளை நிலுவையில் வைப்பதற்பகாகவே காரணம் தேடுகின்றனர். இந்த நடைமுறை,தொழில் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. தொழில்நுட்பஅதிகாரியின் தலையீடு ஏற்படுத்துகிறது. அங்கீகார செயல்முறையை தேவையற்ற முறையில் சிக்கலாக்குகிறது. எனவே, LEGAL OPINION வழங்குவது – சட்ட வல்லுநர்களின் கடமை அதனை மதித்து செயல்முறை முன்னேற்றம் செய்ய வேண்டும். இது போன்ற நேர்வுகளில் DTCP/ CMDA அதிகாரிகள் சட்ட விளக்க மறுஆய்வு செய்யக் கூடாது. சந்தேகத்திற்குரிய வழக்குகளில் —தனி சட்ட ரெஃபரன்ஸ் கோர வேண்டும். இவ்வாறான வழக்குகளில், சட்டப் பிரச்சினை எழுந்தால் கோப்பை LAW DEPARTMENT/ GOVERNMENT LEGAL CELL/ HR&CE/ REGISTRATION/ REVENUE LEGAL CELL க்கு அனுப்ப வேண்டும். அங்கீகார அதிகாரி தனிச்சையாக சட்ட விளக்கம் அளிக்கக் கூடாது. சொத்தில் வழக்கறிஞர் கருத்துரை கொடுத்ததும் வில்லங்கம் இருக்கிறது என்று உணர்ந்ததால் தகுதி வாய்ந்த சட்ட அதிகாரிகளிடம் முன் அனுப்ப வேண்டும். ADVOCATE OPINION-ஐ 39 மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள் எதிர்த்து முடிவு எடுக்கக் கூடாது என்பதற்கு ஒரு வழி வகையினை உருவாக்க FAIRA கூட்டமைப்பின் சார்பாக வேண்டுகிறோம்.
18. நகர்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சிகளுக்கு மனைப்பிரிவு மற்றும் கட்டிடத்திட்ட அனுமதி வழங்கும் அதிகார வரம்பை உயர்த்தி வழங்குவதற்கு செயல்முறை உத்தரவுகளை (தற்பொழுது சென்னை மாநகராட்சிக்கு 5ஏக்கர் வரை வீட்டுமனைப்பிரிவு வழங்கும் அதிகாரம் உள்ளது. இதனை போன்று நகராட்சிக்கு 2.5 ஏக்கர் வரைக்கும், பேரூராட்சிக்கு 1.5 ஏக்கர் வரைக்கும், ஊராட்சிக்கு 1-ஏக்கர் வரைக்கும் மனைப்பிரிவு அனுமதி வழங்கும் அதிகாரத்தையும், இதில் அனுமதிக்கப்படும் தளப்பரப்பு குறியீட்டின் அடிப்படையில் கட்டிடத்திட்ட அனுமதியை வழங்கும் அதிகார வரம்பையும்) மாற்றி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்.
19. மனைப்பிரிவு அனுமதி, கட்டடத்திட்ட அனுமதி, நிலவகைப்பாடு மாற்றம் மற்றும் உட்பிரிவு அனுமதி பெற விண்ணப்பிக்கும், விண்ணப்பத்தின் மீது ஒவ்வொரு முறையும் இரண்டு மூன்று நிலைகளை கடந்து, அதாவது உதவித் திட்டமிடுபவர், துணைத் திட்டமிடுபவர், மூத்தத் திட்டமிடுபவர், தலைமைத் திட்டமிடுபவர், தலைமை நிர்வாக அதிகாரி, உறுப்பினர் செயலர் என்று மூன்று நான்கு முறை மேற்கண்ட அதிகாரிகளின் நிலையை கடந்து சென்று அவர்களிடம் அனுமதி பெற்று திட்டம் தயாரிக்க வேண்டிய சூழல் தற்பொழுது நடைமுறையில் இருக்கிறது. இதனால் காலதாமதம் நேரம் காலம் உள்ளிட்ட வீண் விரயம் அதிகம் ஏற்படுகிறது. இதனை மாற்றி அமைத்து ஒரே ஒரு முறை மாத்திரம் அனுமதி பெற்று திட்டம் தயாரித்து அனுமதி வழங்கும் வகையில், வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டுகிறோம்.
20. மனைப்பிரிவு, கட்டிடத்திட்ட அனுமதி நிலவகைப்பாடு மாற்றம் உட்பிரிவு போன்ற அனுமதி பெறும் இடங்களில், டி.டி.சி.பி மற்றும் சி.எம்.டி.ஏ-வால் கொள்கை ஓப்புதல், திட்ட அனுமதி, தொழில்நுட்ப அனுமதி ஆகியவை மட்டுமே வழங்கப்படுகிறது. இறுதி ஒப்புதல் வழங்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.மேற்கண்ட பிரதிநிதிகள் யாரும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் இல்லை. மேலும், எண்ணற்ற பிரதிநிதிகள் போதிய, சட்டதிட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்களும் இல்லை. மேற்கண்ட உள்ளாட்சிக்குச் செலுத்த வேண்டிய அனுமதிக் கட்டணங்களை முறையாக அரசு கஜானாவில் அவர்கள் சேர்ப்பதும் இல்லை. குறிப்பாக படப்பை, சிட்லபாக்கம் உட்பட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு 40 சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான உள்ளாட்சி அலுவலகங்கள் மேற்கண்ட கட்டணங்களை பெருமளவில் அரசு கஜானாவில் சேர்க்காமல், போலி இரசீது மூலம் அரசினை ஏமாற்றி வருகின்றனர். ஆகவே, உள்ளாட்சிக்குச் செலுத்தவேண்டிய கட்டணங்களை ஒற்றை சாளரமுறையில் இணையதளம் வாயிலாகவே செலுத்தும் வகையில் வழிவகை செய்யவேண்டும். மேலும், நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் இறுதி ஒப்புதலையும் ஒற்றைச் சாளர முறையிலேயே இணையதளம் வாயிலாகவே விண்ணப்பித்து, ஒரு வார காலத்திற்குள் அனுமதி பெறும் வகையில் வழிவகை செய்யவும் வேண்டுகிறோம்.
21. EWS-மனைகளில் ஆழ்குழாய் கிணறு மற்றும் கழிவுநீர் தொட்டிக்கு இடையே உள்ள தூரம் தேசிய கட்டிட குறியீடு 2016-க்கு உட்பட்டு அமைய முடியாது. குறைந்த இடைவெளியில் இவற்றை ஒவ்வொரு வீட்டிற்கு அமைக்கும் போது சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் EWS மனைகளுக்கு மட்டும் பொது உபயோக பகுதியில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளாட்சியின் செலவிலோ அல்லது அபிவிருத்தியாளரின் செலவிலோ அமைக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
.
22. மனை மற்றும் கட்டிடத் திட்ட அனுமதி பெறும்போது திறந்த வெளி நிலம் 10% கொடுத்த பிறகும் மின்துறைக்கும் உள்ளூர் பஞ்சாயத்து வளர்ச்சிக்கும் மேலும் ஒரு சதவீதம் நிலம் கூடுதலாக கொடுக்க வேண்டி உள்ளது (இந்த ஒரு சதவீதத்தை திறந்தவெளி நிலம் 10-இல் இருந்து எடுத்துக் கொள்ளும் வகையில்) இதனை ரத்து செய்ய வேண்டுகிறோம்.
23. 3. 20’(6.10m), 30’(9.14m), 40’(12.19), 50’(15.24), 60’(18.30), 80’(24.38),100 (30.50) என்ற பிரிட்டிஷ் அளவுகளுக்கு இணையான மெட்ரிக் அளவுகளை Building and Road width approval -களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும்.
24. 20’ அடிகள் அகலம் மற்றும் 16’( அடிகள் ) அகலம் கொண்ட Public Roadகளில் இருந்தும் இணைப்பு ஆகும். மனைப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கிட வேண்டியதக்க ஆணை பிறப்பிக்க வேண்டுகிறோம்.
25. முதல் 3000 சதுர மீட்டருக்கு OSR இல்லை (CMDA வுக்கு 5.8.1975), பிறகு 3000 சமீ-லிருந்து 10,000 சதுர மீட்டருக்கு RATIO படி OSR போடும் CMDA நடைமுறையை அனைத்து லோக்கல்பாடிகளிலும் ( உள்ளூர் அமைப்புகளில்) நடைமுறைப்படுத்தவேண்டுகிறோம். 41மாநாட்டில் – நிறைவேற்றபட்ட கோரிக்கை மற்றும் தீர்மானங்கள்.
26. பஞ்சாயத்து யூனியங்களில் அனுமதி வழங்கப்படும் கட்டிடத்தின் கடைசியில் கிராம பஞ்சாயத்துத் தலைவர்களிடம் சென்று வாங்கிட வேண்டிய நடைமுறையை மாற்றி அமைத்து ஆன்லைன் மூலமே நகர்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சியில் இறுதி ஒப்புதலை நடைமுறைப்படுத்த வேண்டும்.
27. மனை வரன்முறை சட்டத்தின் கீழ் தனிமனைக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் வீண் விரயத்தை தவிர்த்து எளிய வகையில் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
28. சென்னை மாநகராட்சியைப் போன்று பிற நகர்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஒரு ஏக்கர் வரைக்கும் உள்ள இடங்களை 30 அலகுகள் வரை உட்பிரிவு அங்கீகாரம் பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
29. ஒரு ஹெக்டேர்க்குள் அமைக்கும் புதிய வீட்டுமனை பிரிவுகளுக்கு திறந்தவெளி நிலம் சம்பந்தமாக சலுகை பெறும் வகையில், ஒரே விண்ணப்பதாரர், தமது பெயரில் தொடர்ந்து மீண்டும் விண்ணப்பிக்க நேரிடும் இடங்களில், இரண்டு ஆண்டு காலத்திற்குப் பிறகு விண்ணப்பிக்கலாம் என்கிற கால அவகாசத்தை நிர்ணயம் செய்ய வேண்டுகிறோம்.
30. நகர் ஊரமைப்பு இயக்குனரகத்தின் அபிவிருத்தி மற்றும் கட்டுப்பாடு விதிகளின்படி தமிழக முழுவதும் DTCP அனுமதி பெற்றுள்ள வீட்டுமனை பிரிவில் உள்ள சமுதாயக்கூடம், பள்ளி, மருத்துவமனை, சுகாதார நிலையம் உள்ளிட்ட ஒதுக்கீடுகளை அப்பாவி பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர் இதனை குடியிருப்பு மனையாக தற்போது மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் போது DTCP புதிய விதிகளின்படி திறந்தவெளி நிலம் ஒதுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். அப்படி திறந்தவெளி நிலம் ஒதுக்கவில்லை எனில் அப்பாவி பொதுமக்களின் மனுவினை நிராகரிக்கின்றனர் அரசு இதனை கவனத்தில் கொண்டு பழைய விதிகளின்படி அனுமதி பெற்ற மேற்படி ஒதுக்கீடுகளை, புதிய விதிகளின்படி திறந்தவெளியில் நிலத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தாமல் நிலப் பயன்பாட்டினை மட்டும் மாற்றம் செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்.
31.அஞ்சு சென்ட் பத்து சென்ட் பட்டா நிலங்களாகவும் வாங்கிவிட்டு மனையாகவும் வாங்கிவிட்டு அதனை அங்கீகாரம் வாங்க முடியாமல் பத்திர பதிவு செய்ய முடியாமல், வீடு கட்ட முடியாமல் எந்தவித அபிவிருத்தியும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இடம் மனைகளின் அங்கீகாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம். அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் 15வது மாநாடு.
32. விரிவாக்கப்பட்ட மாநகராட்சியில் நிறைய கிராமங்கள் நகரத்தோடு இணைக்கப்பட்டு இருக்கும். அந்த பகுதிகளில் திட்ட அனுமதிக்குச் செல்லும் பொழுது உள்ளாட்சி நிர்வாகம் எப்பொழுது மாநகராட்சி ஆனதோ அதில் இருந்து நிலவரி கேட்காமல் பின்னோக்கி 15 ஆண்டுகளுக்கு எப்பொழுது நகரம் உருவாக்கப்பட்டதோ அதில் இருந்து நகர்புற வரி கட்ட வேண்டும் என்று வலியுறு த்துவது தவறான ஒன்றாகும். மேற்படி திட்டப் பகுதி கிராமமாக இருந்த பொழுது அப்போதைய வரிகளை முழுமையாக கட்டி விட்ட பிறகும் நகர்புறத்தில் இணைத்து விட்டதால் பின்னோக்கிய காலத்துக்கு நகர்புற வரி கட்டச் சொல்லக் கூடாது என்று தெரிவித்து கொள்கிறோம்.
33. இன்றைய சூழ்நிலையில் சாதாரண சாமானிய மக்களும், தங்களின் இல்ல கனவுகளை நினைவாக்கிக் கொள்ளும் வகையில், சிறிய அளவிலான வீட்டு மனைகள் வீட்டு வசதித் துறையில் உள்ளது போன்று, பொருளாதார நலிந்த பிரிவினர் (Economically Weaker Section) 440 சதுர அடி, 600 சதுர அடி,, 800 சதுர அடி என்ற அளவில் வீட்டுமனைப் பிரிவை டிடிசிபி அதிகாரக் குழுவின் ஒப்புதல் இன்றி, துணை அதிகார குழுக்களுக்கு உள்ள அதிகாரத்தின் படி 100% முழுவதுமாக ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
34. பெரிய மனைப்பிரிவுகளில் பூங்கா அமைப்பதற்கான குறைந்தபட்ச அகலம் 10 மீட்டர் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் மேலும் பூங்காவை சுற்றி அனைத்து பக்கங்களிலும் ரோடு அமையும் பட்சத்தில் மேலும் பூங்கா முக்கோணமாக அனுமதிக்க வேண்டுகிறோம்.
35. OSR நிலம் விளையாட்டு இடமாக அல்லது பூங்காவாக பயன்படுத்தப்படும் பொழுது அதில் ஓரத்தில் சிறிய மேடை அமைக்க அனுமதிக்கலாம் அதற்கு மின் இணைப்பு பெறவும் அனுமதிக்க வழிவகை செய்ய வேண்டுகிறோம்.
அடுத்த பதிவில் தொடரும்.....................

Comments