Posts

இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!!

Image
  இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!! இராமநாதபுரத்தில் ஒரு களபணி நிலுவையில் இருந்தது அதனை முடித்துவிட இராமநாதபுரம் சென்றேன். காலை இராமநாதபுரம் அரண்மனையை பார்க்க விருப்பம் நமது நில வரலாறு புத்தகத்திற்கு தரவுகளுக்காக !அதனால் காலையில் ஒரு ஆட்டோவில் கிளம்பி அரண்மனை சென்றோம். ஆட்டோகாரரிடம் இராமநாதபுரம் என்ற சிறப்பு அண்ணே என்றேன். அரபுநாடுகளும் இஸ்லாமிய சகோதரர்களும் இல்லை என்றால் இராம்நாடு இல்லை என்று சொல்லி விட்டார். அரண்மனைக்கு கொண்டு வந்து விட்டார்! நானும் நண்பர் இரவீந்திரனும் இராம்நாடு அரணமனையை சுற்றி வந்து அங்கு இருக்கும் இராஜாவை சந்திக்க முடியுமா என்று அரண்மணை ஊழியர்களை கேட்டேன் நான் ஒரு எழுத்தாளர் நிலம் சம்மந்தமாக ஆய்பவன் யூடியுபர் என்று அறிமுகபடுத்தி கொண்டேன். அதன்பிறகு ஒரு அரண்மணை நிர்வாகி இராஜாவிடம் பேசினார்! உடனடியாக அனுமதி கிடைத்து விட்டது! நீங்கள் அவரை சந்திக்கலாம் என்று சொன்னார்கள்! நாங்கள் இருவரும் அரண்மனையில் இராஜா அமர்ந்து இருக்கும் முற்றத்திற்கு சென்றோம்.எங்களை ஆசனம் கொடுத்து அமர சொன்னார்! கேள்விகளை கேட்க சொன்னார் !நான் ஏற்கனவே பேராசிரியர் கமால் அவர்களின் புத்த...

வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!

Image
  வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!   கலந்துரையாடல் வரும் நில சிக்கல் வாடிக்கையாளர்களிடம் முன் கூட்டியே சொல்லி விடுவேன் அண்ணே வேலைக்கான சேவைகட்டணம் கூட முன்னே பின்னே பார்த்துக்காலம் ! நல்ல சோறு நல்ல தூக்கம் எனக்கு முக்கியம் கடும் அலைச்சலில் வருவேன் சோறும் ரூமும் கொடுத்திடுங்க என்று   இதெல்லாம் முதலில் சொல்லாமல் இருந்த பொழுது அன்பு வாடிக்கையாளர்கள் என்னை பஸ் ஸ்டாண்டில் படுக்க வைத்து விடுவார்கள்! சுகாதாரமற்ற உணவுகளில் விட்டு விடுவார்கள் சில நேரங்களில் சோறும் கிடையாது அப்படியே விட்டு விடுவார்கள்   ஆனால் இப்பொழுது எல்லா வாடிக்கையாளரிடமும் கள பணிக்கு வந்தால் நமக்கு சோறுதான் முக்கியம் என்று சொல்லிவிடுவேன்! அதிலும் ஹோட்டலில் வாங்கி கொடுப்பார்கள் அதனை நான் மதிக்கிறேன்! ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில் ஒரு சுகாதாரம் இருக்கிறது அது எப்பொழுதாவது கிடைக்கும்   இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டிய ஆள் ஒருவர் இருக்கிறார் திரு .ரமணன் -நாகர் கோவில் அவர் வீட்டில் வாழை இலை விரித்து சோறு போட்டார். அதேபோல் இராமநாதபுரம் அடுத்த திருப்பாலைகுடி...

வேம்பார் அருகில் மனை பிரிவு அமைப்பதற்கான களபணி!!!

Image
   வேம்பார் அருகில் மனை பிரிவு அமைப்பதற்கான களபணி!!! சொத்தை உயர் மதிப்பாக்குவது அதனை பாதுகாப்பது அதன் ஆவணங்களை பாதுகாப்பது எல்லாம் Creative ஆன வேலை! பலர் பிரச்சனை வந்தவுடன் அதனை சரி செய்வார்கள் (Survival mode) ஆனால் என் முன்னே இருக்கிற சகோதரர்கள் super creative ஆக இருப்பவர்கள்!இது போல் எல்லா நடுத்தர மக்களும் ஆக வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #issue #document #creatvie #survival #mode #field #solve #asset

சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!கள்ளக்குறிச்சி முகாம்

Image
 சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!கள்ளக்குறிச்சி முகாம் நிலம் உங்கள் எதிர் காலம் மக்கள் நல அறகட்டளை மாதந்தோறும் இரண்டாம் நகரங்களில் நில சிக்கல்களில் திக்கு தெரியாமல் நிற்பவர்களுக்கு வழி காட்டுதல் முகாமை குறைந்த கட்டணத்தில் நடத்துகிறது! கள்ளகுறிச்சி,சோளிங்கர் ஆகிய இரு இடங்களிலும் நடத்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நபர்கள் நிதிகொடை அளித்து ஊக்கபடுத்தி் இருக்கிறார்கள்!அவற்றின் வரவு செலவு கணக்குகளை நாங்கள் ஏற்கனவே நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை டெலிகிராம் குழுவிலும் www.paranjothipandian.in இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறோம். மேற்படி உறுதுணையாக நின்ற தோழர்களுக்கு நன்றி கடிதங்கள் அனுப்பவிருக்கிறோம்.அந்த கடிதங்களை ஆன்லைனிலும் வெளியிடுகிறோம் நீங்கள் கூட நிற்கிறீர்கள் என்ற ஆதரவு அதிகமாக உழைக்க தெம்பை தரும் நிலத்தின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடயை வேண்டும் என்ற இலட்சிய பயணத்தில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 / 9962265834

சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!

Image
 சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல! நிலம் உங்கள் எதிர் காலம் மக்கள் நல அறகட்டளை மாதந்தோறும் இரண்டாம் நகரங்களில் நில சிக்கல்களில் திக்கு தெரியாமல் நிற்பவர்களுக்கு வழி காட்டுதல் முகாமை குறைந்த கட்டணத்தில் நடத்துகிறது!   கள்ளகுறிச்சி,சோளிங்கர் ஆகிய இரு இடங்களிலும் நடத்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நபர்கள் நிதிகொடை அளித்து ஊக்கபடுத்தி் இருக்கிறார்கள்!அவற்றின் வரவு செலவு கணக்குகளை நாங்கள் ஏற்கனவே நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை டெலிகிராம் குழுவிலும் www.paranjothipandian.in இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறோம்.     மேற்படி உறுதுணையாக நின்ற தோழர்களுக்கு நன்றி கடிதங்கள் அனுப்பவிருக்கிறோம்.அந்த கடிதங்களை ஆன்லைனிலும் வெளியிடுகிறோம் நீங்கள் கூட நிற்கிறீர்கள் என்ற ஆதரவு அதிகமாக உழைக்க தெம்பை தரும் நிலத்தின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடயை வேண்டும் என்ற இலட்சிய பயணத்தில்     நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 / 9962265834  

சோளிங்கர் முகாம் மறுநாளும் தொடர்ந்த கதை!

Image
  சோளிங்கர் முகாம் மறுநாளும் தொடர்ந்த கதை! நிலம் சம்மந்தபட்ட சந்தேகங்கள் சிக்கல்கள் வழிகாட்டுதல் முகாம் ஒரு நூலாசிரியராக பல்வேறு களபணிகள் பார்த்த அனுபவத்தில் வழிகாட்டுதல்களை முகாம் போட்டு சொல்லி கொடுத்து வருகிறோம். சோளிங்கர் முகாமில் வழிகாட்டுதல் முடிக்க முடியாதவர்கள் மறுநாள் தங்கும் அறைக்கு வாருங்கள் என்று சொல்லி இருந்தேன்!அதிகாலை ஆகும்பொழுதே உங்களை காண நிறைய பேர் காத்து இருக்கிறார்கள் என்று விடுதி வரவேற்பாளர் இன்டர் காமில் சொன்னார் ! அப்படியே பல்விளக்காமல் வேலையில் உட்கார்ந்தது தான் மாலை 4 மணிவரை 8 பேர் வரை ஆலோசனை வழிகாட்டுதல் வழங்கினேன்! அண்ணன் பாட்டாளி மக்கள் கட்சி வேலுர் மாவட்ட இளைஞரணி திரு எம் ஆர் கே இராமகிருஷ்ணன் அவர்கள் என்ன மண்டைண்ணா இது சும்மா பேப்பர பார்த்துட்டு ரெஸ்ட் கொடுங்க என்று அன்பாக பிரியாணி உணவு கொண்டு வந்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் அட ஒரு மனுசன் பசியால் கஷ்டபடுவதை ஒரு நபராவது புரிந்து கொள்கிறாரே என்று மகிழ்சசி பிறகு புத்துணர்ச்சியாகி உணவருந்து ஒய்வெடுத்து மாலை கள பணிக்காக சுற்றுவட்டாரம் சுற்றி வந்து சேர்ந்தோம் அதன்பிறகு இருந்த ஆலோசனைகளை விடிய விடிய வாசித்து ...

சொகுசு குடியிருப்புகளுக்கு கண் திருஷ்டி பிராண்ட் ஆயிட்டியே அங்குலி மாலா குருவே!

Image
  சொகுசு குடியிருப்புகளுக்கு கண் திருஷ்டி பிராண்ட் ஆயிட்டியே அங்குலி மாலா குருவே! நம்ம ரியல் எஸடேட் காரர்கள் பலர் புத்தரை அவரின் போதனைகளை மெதுவாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஆரம்பித்து விட்டனர்! நெல்லையில் மயன் பிலட்ர்ஸ் புத்தரை தன் கட்டுமானங்களில் வைக்கிறார்! ஜென் கார்டன்கள் என்று பல பேர் வைத்துகொண்டும் விற்று கொண்டும் இருக்கிறார்கள்! அதிக கட்டணம் வாங்கும் சலூன்களில் புத்தர் சிரிக்க ஆரம்பித்து விட்டார் இந்த படம் கோவையில் ஒரு அடுக்கு மனையின் முன் புத்தர் திரிஷ்டி கழிக்க வைத்து இருக்கிறார்கள்! என்னை பார் நான் தியானித்து கொண்டு இருக்கிறேன் நீயும் தியானி!அட்ட தீப பவ உனக்குள் நீ ஓளியாவாய் என்று தான் சொல்லி கொடுத்து இருக்கிறார்! புத்தருக்கு தியானமண்டபம் நன்று! பில்டர்கள் மக்கள் பயனபாட்டுக்கு சிறிய தியான மண்டபமும் உருவாக்கி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் !விபாசான மிஞ்சிய தியானம் எங்கும் இல்லை அதனைதான் வேறு வேறு மாதிரி உருட்டி விற்று கொண்டு இருக்கிறார்கள் சுவாமிஜிக்கள்! சாரி புத்தருக்கும் நீ குரு! அங்குலி மாலாவுக்கும் நீ குரு! எது எப்படியோ ரியல் எஸ்டேட் காரர்களுக்கு உன் பிம்பம் வைக்க வேண்டும்...