கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!!

கிராமம்தோறும் இருக்கும் பூமிதான நிலங்களின் தகவல்கள் பெறும் முயற்சி!!



மக்களிடம் ஒப்படைக்கபடாத ஏழாயிரம் ஏக்கர் பூமிதான நிலங்களின் கிராமங்கள் அதன் சர்வே எண்கள் கேட்டு தகவல் பெறும் உரிமைசட்டத்தின் கீழ் அனைத்து மாவட்ட பூமிதான பிரிவிற்கும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை சார்பாக தகவல்கள கேட்டு அனுப்பி உள்ளேன்.

முழு தகவல்கள் வந்த பிறகு விவசாயம் செய்ய விரும்பும் ஆயிரம் நபர்களுக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் பூமி தானம் வேண்டி மொத்தமாக மனு செய்கிற முடிவில் இருக்கிறேன்.அரசிடம் இருக்கும் அனாதீனம் நிலங்களை கேட்பதை விட விவசாயத்திற்கு மட்டும் ஓதுக்கபட்டு இருக்கும் பூமிதான நிலங்களை பெற முயற்சிப்பது சீக்கிரம் பலித்துவிடும்.அந்த நிலங்களின் நோக்கமே நிலமற்றவர்களுக்கு பயிர் செய்ய நிலம் ஒப்படைப்பது ஆனால் அவை எங்கெங்கு இருக்கிறது என்ற தகவல்கள் தான் இல்லை அதற்கான முயற்சி தான் இந்த வேலை

இந்த வேலைகளுக்கு எல்லாம் ஆகும் தபால் செலவுகள் மனு செலவுகள் எல்லாம் ஏற்றுகொண்டு உள்ள புருனே வாழ் அண்ணன் திலக்ராஜ் முன்னாள் இராணுவ வீரர் திரு ஆகியவர்களுக்கு நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக நன்றி!!

நிலத்தின் பயன் அனைவருக்கும் போய் சேர அரசின் தகவல்கள் தான் மிகவும் முக்கியம் அதன் பிறகு நம்முடைய தொடர் உழைப்பு தொடர் முயற்சி தேவை. நிச்சயம் காரியம் சித்தியாகும்

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்/தொழில்முனைவர்

www.paranjothipandian

#பூமிதானம் #rti #நிலம் #அறக்கட்டளை #வினோபாவே #ஏக்கர் #நிலமற்றோர்

Comments

Popular posts from this blog

பதிவு – 8(2) நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) சம்பந்தமான கோரிக்கைத் தீர்மானங்கள்

5 ஆண்டுகளாக சாமானிய மக்களை அவதிக்கு உள்ளாக்கிய தி.மு.க ஆட்சியில் உள்ள வக்புபோர்டு உள்ள இப்லீஸ் மகான்கள்!