Posts

Showing posts from October 17, 2020
Image
என்னை அரசர்கள் வரலாறுகளில் இருந்து அடிமைகள் வரலாற்றை பார்க்க வைத்த சீகன் பால்கு !! 1830 ற்கு முன்பு தமிழகத்தில் நடைமுறையில் இருந்த சாதிய விவசாய பண்ணைய தோட்ட தொ ழிலாள அடிமைமுறையின் தமிழக அடிமைகளை பற்றி ஒரு கட்டுரையை தமிழநாடு பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்று நான் எழுதி கொண்டு இருக்கும் புத்தகத்தில் சேர்க்க விருக்கிறேன்.வெளிநாடுகளான கரீபியன் தீவு பிஜி தீவு, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் கரும்பு தோட்டங்கள்,கஞ்சா தோட்டங்களில் கொத்தடிமைகாளக வேலை பார்க்க தமிழகத்தின் கடைநிலை மக்கள் பலர் அடிமைகளாக டச்சு போர்ச்சுகீயர்,டேனிஷ் கார்ர்களால் விற்கபட்டு கப்பலில் பண்டங்கள் போல ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தார்கள்.அந்த அடிமை வியாபாரத்தை பற்றி பற்றி இந்தியாவிற்கு வந்த முதல் புராட்டஸ்டாண்டு சாமியார் பார்த்தலோமியு சீகன்பால்கு தன் கப்பல் பயணத்தில் பார்த்த அடிமை வியாபரத்தையும் அடிமைகள் கொல்லபடுதலையும் பற்றி அகடமி ஆஃப் டெத் என்று ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார் .அந்த புத்தகத்தை மூன்று வருடங்களுக்கு முன்பு ஏதேட்சையாக வாசித்தேன் .அதன்பிறகு தமிழகத்தின் அடிமை முறை ,கூலி முறை ,படியாள் முறை, கொத்தடிமை
Image
  உளமாற நன்றி IOV புதுச்சேரி !! அக்டோபர் 2 -சொத்து மதிப்பீட்டாளர்கள் தினத்தில் இன்ஸ்டியூசன் ஆப் வாலயுவர்ஸ்(IOV) -புதுச்சேரி உறுப்பினர்களிளிடையே zoom மூலமாக நடந்த விழாவில் சிறப்பு பேச்சாளாராக நிலம் சம்மந்தபட்ட தலைப்பில் நீண்ட உரையாற்றினேன்.பங்கேற்பாளர்கள் அனைவரும் தொழில்முறையில் அனுபவமும் பக்குவமும் உடையவர்கள்.அறிவுஜீவிகள் சிந்தனையாளர்கள் அவரகள் மத்தியில் பேசியது எனக்கான அங்கீகாரமாகவே நான் நினைக்கிறேன்.மறுநாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அண்ணன் அன்பழகன் அவர்கள் பங்கேற்பாளர்கள் அனைவ ரும் நல்ல feedback கொடுத்தார்கள் என்று என்னை மீண்டும் ஊக்கபடுத்தினார் இன்று IOV பாண்டிசேரியில் இருந்து இளமுருகன் அண்ணன் பரிசுகேடயமும் என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வாங்கி கொள்வதற்காகவும் சிறு தோகை காசோலையும் அனுப்பி வைக்கிறோம் என்று சொன்னார்.(அடடா அங்கீகாரமும் பாராட்டும் எவ்வளவு உள்ள ஊக்கத்தை தருகிறது)அதற்கு நான் அனுப்பி வைக்க வேண்டாம் என் குழுவினரை பாண்டிசேரியல் வந்து வாங்கி கொள்கிறேன் என்று சொல்லி என் நண்பர் பாரதிதாசன் அவர்களை அனுப்பி பரிசு கேடயம் மற்றும் காசோலையை பெற்று கொண்டேன். இப்படி ஒரு வாய்
Image
  அதிராம்பட்டினத்தின் நெய்தல் அழகு!! வாடிக்கையாளரின் மிகவும் சிக்கலான நில சிக்கலை புரிந்து கொள்வதற்காக தஞ்சை பள்ளதாக்கின் வங்க கடலோரம் இருக்கின்ற அதிராம்பட்டினத்திற்கு மதுராந்தகத்தில் இருந்து பைக்கிலேயே இருந்தேன். வாடிக்கையாளர் மீன்பிடிதொழிலாளர் என்பதால் அவரின் நில சிக்கலுக்கான ஆய்வெல்லாம் முடித்துவிட்டு படகில் கடலுக்கு கொண்டு செல்லுங்கள் என்று கேட்டு கொண்டேன்.மிக மகிழச்சியாக ஒத்து கொண்டு வாடிக்கையாளர் தன்னுடைய ஃபைபர் படகில் ஏற்றி கொண்டார். மீனவர் குப்பத்திற்கும் கடலுக்கும் இரண்டு கிமீட்டர் தூரம் இருக்கிறது கடலில் இருந்து குப்பத்திற்கு வாய்க்கால் வெட்டி அந்த வாய்க்காலில் இருந்து கடலுக்கு செல்கிறார்கள்.கடலில் அதன் கடற்கரை மண்ணாகதான் இருக்கும் அதாவது சென்னை மெரினா அல்லது பிற கடற்கனர போல மணற்பாங்காக இருக்கும் என்று நினைத்தால் நிச்சயம் அது தவறு. இந்த கடற்கரை டிசைனே வேறு இங்கு பீச்சோ வெள்ளை மணலோ கிடையாது முழுதும் களி சேறுதான்.கடலை ஒட்டி பூரா இடமும் மாங்குரோவ் காடுகள்தான்.அதன் இடையில் வாய்கால் வெட்டி அந்த நீரில் இரண்டு கிமீ பயணம் அதன் பிறகு தான் வங்காள கடல் !மாங்குரோவ் காடுகள் பற்றி நாம் நிற