Posts

Showing posts from October, 2019

நீங்கள் வாங்கும் நிலத்திற்கு Title Deed எளிமையாக எப்படி பாரக்க வேண்டும்!!!

Image
  நீங்கள் சொத்து  வாங்கும் போது அந்த சொத்து ஆதியில் அதாவது முதன்முதலில் யாருக்கு பதியப்பட்டது அல்லது உரிமையானது என்பதை அறிந்து கொள்வதுதான் நிலத்தின் நதிமூலம் ரிஷிமூலம் பார்ப்பது ஆகும். நதிமூலம் ரிஷிமூலம் எப்படி பார்ப்பது என்றால் அந்த சொத்தினுடைய ஆவணங்கள் மூலம் அதனுடைய தாய் பத்திரங்கள் மூல பத்திரங்கள் மூலம் அந்த சொத்தின் மூல உரிமை யாருக்கு இருந்தது என்று சொல்வார்கள் . எல்லா சொத்தையும் ஒரு புரிதலுக்காக இரண்டு வகையாக நாம் பிரித்து கொள்ளலாம் 1)ஆதியில் அரசுக்கு சொந்தமானவை 2)ஆதியில் தனிப்பட்ட ஒரு மனிதருக்கு சொந்தமானவை ஆதியில் அரசுக்கு சொந்தமானவை என்று தெரிந்தால் அரசிடம் இருந்து அந்த தனிநபருக்கு எப்படி சொத்து வந்து இருக்கும் என்பதை நான் புரிந்து கொண்டபடி சொல்வதென்றால் அரசு நிலத்தை அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அரசு அனாதீனம் நிலம் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அது என்ன அரசு புறம்போக்கு நிலம் அரசு அனாதீன நிலம் என்று கேட்கிறீர்களா? புறம்போக்கு நிலம் என்றால்  அது ஆரம்பத்தில் இருந்தே அரசின் கையிருப்பு நிலம் அதாவது அரசினுடைய சொத்து .அனாதினம் என்றால் தனியார் நில உடைமையாளர்க

பதிவு செய்யபடாத உயிலை கையில் வைத்து இருக்கிறீர்களா?

Image
பதிவு செய்யாத ஒரு உயிலை உயில் எழுதியவர் இறந்த உடன் அதனை நடைமுறைக்கு கொண்டு வர பாடாய் பட வேண்டி இருக்கிறது. உயில் எழுதியவர் இறந்த உடன் உயிலை எடுத்து கொண்டு கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து   பட்டா மாற்ற சென்றுவிடுவார்கள் . வி ஏ ஒ அதனை பார்த்துவிட்டு உயில்   பதிவு செய்யவில்லை இந்த உயில் செல்லாது என்று அவருக்கு தெரிந்ததை சொல்லி உயிலின் பயனாளியை பயமுறுத்தி விட்டுவிடுவார்கள். உயில் எழுதுபவர் உயிரோடு இருக்கும் போதே சார்பதிவகத்தில் தோன்றி எழுதி கொடுக்கிற உயில்தான் சட்ட அந்தஸ்து பெற்றது . பதிவு செய்யாத உயிலை நம்பகதன்மை அற்றது என்று நம்பிக்கை வருவாய்துறை மற்றும் சார்பதிவக அதிகாரிகளிடம் நிலவுகிறது . ஆனால்எனக்கு தெரிந்து பல பதிவு செய்யபட்ட உயில்களே போலியாக தான் இருக்கிறது . மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் உயில் பத்திரத்தில் சொத்து வைத்து இருக்கும் நபரின் கையெழுத்தை வாங்கி விடுகின்றனர் . பிறகு பதிவு அலுவலகத்தில் வேறு ஒரு நபரை வைத்து அவரின் கைரேகை வைத்து பதிந்து விடு