Posts

Showing posts from October 10, 2019

#Meetoo தேவதைகள்

Image
          இணையதளம் முழுவதும் சமூக ஊடகங்கள் முழுவதும் இந்த #Meetooஇயக்கத்தை பற்றி பேசுகின்றனர். ஒரு பக்கம் சிலர் விமர்சிக்கின்றனர். ஒரு பக்கம் சிலர் ஆதரவு அளிக்கின்றனர். ஒரு சிலர் அமைதியாகவே இருக்கின்றனர். கடந்த இருபது நாட்களாக #Meetoo சமூக ஊடகங்ளில் பட்டைய கிளப்பிகொண்டு இருக்கின்றது. சரி நாமும் நம் அனுபவங்கள் வாயிலாக நமக்கு கிடைத்த புரிதல்களை எழுதலாம் என்று நினைத்து கொண்டே இருந்தேன். பெரும்பாலும் என் எழுத்துகள் ஒன்று என் செயல்கள் வேறொன்று இருந்தால் அதனை நானே அனுமதிப்பதும் இல்லை! ஏற்றுகொள்வதும் இல்லை.எழுதுவதும் செயல் படுவதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்னையில் இருப்பதனால் இந்த #Meetoo விஷயத்தில் பரஞ்சோதிபாண்டியன் என்பவனுக்குள் இருக்கின்ற கெட்ட பையன், நீ அமைதியாக வேடிக்கை மட்டும் பார்! இதில் நீ கருத்து சொல்ல சரியான ஆள் இல்லை. அதற்கு பெண்கள் பக்கம் நின்று ஆதரவு அளிக்க யோக்கியவனும் இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தான். இருந்தாலும் இப்பொழுது 37வயதாகி ஓரளவு ஊரெல்லாம் சுற்றி பலதரபட்ட மனிதர்களை சந்தித்து பழகி கெட்டு நொந்து கிழிந்து போய் நார்நாராகி பக்குவப்பட்டு இருக்கின்ற நீ…

கிரய பத்திரத்தில் மூலம் தெரியும் வரலாறு-வாட்ஸ்அப் தொடர் -3

Image
  காஞ்சிபுரம்,வந்தவாசி,சுங்குவார்சத்திரம் ஏன் கன்னியாகுமரியில் கூட சில பத்திரங்களில் பார்த்து இருக்கிறேன்.அந்த “நாரசசந்து”என்ற வார்த்தையை அப்படி என்றால் என்ன வென்று பலரிடம் விசாரித்தும் யாரும் தகவல்கள் சரியாசொல்லவில்லை.சந்து என்பது மட்டும் தெரிகிறது.பெரும்பாலும் சொத்துவிவரத்தில் நான்கு எல்லைகள் சொல்லும்போதும்,பாகபிரிவினைகளில் 4அடி நாரச சந்திற்கு விடப்படும் என்றும் சொல்லி இருந்ததை கவனித்தேன். வார்த்தைக்கான அர்த்தம் தேடி தேடி வந்தவாசியில் ஒரு பெரியவரிடம் கண்டுபிடித்தேன். அந்த காலத்தில் குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் சூரியன் வராத அதிகாலையில் அங்கு மலம் கழிப்பார்கள்(ஆண்கள் எல்லாம் ஏரி,குளம் பார்த்து கிளம்பிவிடுவார்கள்.)அதனை வெளிச்சம் வருவதற்கு முன்னே ஒடுக்கப்பட்ட மக்கள் அதனை தங்கள் கைகளால் ஒரு சட்டியில் அள்ளி தலையில் சுமந்து ஊருக்கு வெளியே போட வேண்டும்.இப்படி ஒரு நடைமுறை 1960வரை நடைமுறையில் இருந்தது. அந்த சந்தைதான் நாராசசந்து என்றும் அந்த மக்களை நாராபசங்க என்றும் விளித்தார்கள் என்று சொன்னார் அந்த பெரியவர் மேற்கண்ட நடைமுறைகள் இருந்ததற்கான ஆதாரமாகதான் இந்த பழைய பத்திரங்கள் இருக்

மதுரை-திருப்பரங்குன்றத்தில் ரத்து ஆகும் அனுபந்த பட்டாக்கள்

Image
       மதுரைதிருப்பரங்குன்றத்தில் 25 வருடத்துக்கு முன்பு 4.50 ஹெக்டேர் நிலத்தை நத்தமாக வகைபடுத்தி 500 க்கும் மேற்பட்ட வீட்டுமனைகளாக பிரித்து கூலிதொழிலாளர்களுக்கு (அனைத்து சாதியினருக்கும்) ஒப்படை பட்டா (அனுபந்த பட்டாகொடுத்து இருக்கின்றனர்)அதில் 150 பேர்கள் மட்டும் வீடு கட்டி அதில் வாழ்ந்து வருகின்றனர். 350 பேர் பெயர் கிராம கணக்கில் இருக்கிறது.ஆனால் அவர்களின் ஆளோ முகவரியொ தெரியாமல் கொஞ்சம் பேரும், கொஞ்சம் பேர் அதை பிறத்தியாருக்கு கிரயமும் செய்துவிட்டனர்.அப்படி கிரயம் வாங்கியவர்கள் சிலர் வீடு கட்டி இருக்கின்றனர்.சிலர் அப்படியே காலி நிலமாக போட்டு இருக்கின்றனர். ஒருசிலர் உண்மையான பயனாளிகள் வராததை கண்டு போலி ஆவணங்கள் உருவாக்கி இடங்களை விற்று கொண்டும் இருந்தனர்.இதனை எல்லாம் கவனித்த வருவாய்துறை களவிசாரணை மேற்கொண்டு உண்மையான பயனாளிகள் யார் வீடு கட்டி இருக்கிறார்களோ அவர்களை தவிர்த்து அனைத்து பட்டாக்களையும் இரத்து செய்கின்ற வேலையை செய்கின்றது. அவ அவன் 2செண்டு இடத்துக்காக தூங்காம கொள்ளாமா என்னென்ன பாடா படுறான். இந்த தூங்கா நகர மக்கள் மேற்படி இடத்தை அக்கறையின்மையால் விட்டு இருக்கின்றனர்.

கிரய பத்திரத்தில் மூலம் தெரியும் வரலாறு-2

Image
மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பு எந்ந எந்த பகுதிகள் எந்த எந்த மாவட்டத்திற்குள் வந்தன.அந்த மாவட்டங்கள் எல்லாம் இப்போ எந்த மாநிலத்தில் இருக்கிறது. என்பதனை என்பதை தெரிந்து கொள்ள பழைய கால கிரய பத்திரங்களில் கால கண்ணாடியாக இருக்கிறது.இதோ அதில் ஒரு கண்ணாடி இந்த பத்திரம். இப்பத்திரம் தற்போதைய தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டம்,பள்ளிபட்டு வட்டத்தில் அடங்கியது.ஆனால் கிரய பத்திரம் பதிவு செய்த 1939 ம் ஆண்டு சித்தூர் மாவட்டம் கடப்பா பதிவு மாவட்டத்தில் பள்ளிபட்டு இருக்கிறது.பத்திரம் முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் இருக்கிறது. எப்படியோ சண்டை போட்டு நம்மாளுங்க இந்த பகுதிய தழிழ்நாட்டோடு இணைச்சிருக்காங்க! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www

நீங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கிறீர்களா ? தெரிந்து கொள்ள வேண்டிய 19 விஷயங்கள்!

Image
1. அரசு புறம்போக்கில் வீடு கட்டி குடி இருக்கிறீர்களா ? அரசு நிலத்தை உங்கள் பட்டா இடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்து இருக்கீர்களா? அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்து கடை, தொழில் நிறுவனங்கள் , கால்நடை பண்ணைகள் கட்டி இருக்கீர்களா ? அல்லது அரசு நிலத்தை பயிர் செய்து கொண்டு இருக்கீர்களா ? அப்படி இருப்பவரகள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை . 2. சென்னை புறநகர் பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிக்கபட்டு பல வருடங்களாக மக்கள் வசித்து வந்த பிறகு அதனை வேறு நபருக்கு விற்று விடுகின்றனர் . அவர்களும் வெறும் ரூ.100 அல்லது அதற்கும் குறைவான முத்திரைகளில் சார்பதிவகத்தில் பதிவு கிரயம் எழுதி கொடுகின்றனர். 3. அப்படி வாங்கியவர்களை கேட்டால் புறம்போக்கு இடம் வாங்கி இருக்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால் அரசின் பார்வையில் அது .வாங்குதல்(Purchasing)… இல்லை ஆக்ரமணம் தான் (Enchrochment). 4. ஆக்கிரமிப்புகள் தற்காலிகமானதாகவும் அல்லது நிலையானதாகவும் இருந்தாலும் அரசு அதற்கு ஆட்சேபனை அற்றவை என்று வகைபடுத்தி வைத்து இருந்தால் அதற்கு பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம் . வீடுகள் இல்லாத மக்கள் , விவசாய

ஒரு மனைபிரிவிற்கு DTCP அங்கீகாரம் பெறுவது எப்படி? புதிய ரியல் எஸ்டேட்காரர்களுக்கு தெரிய வேண்டிய முக்கிய 36 செய்திகள்.

Image
1.மனைபிரிவு அமைவிடத்தை பற்றிய விவரங்களை எடுத்துகொண்டு DTCP அலுவலகம் சென்று டீடிசிபி அங்கீகாரம் மேற்படி இடத்திற்கு கிடைக்குமா கிடைக்காதா என்று DTCP ஆபிஸ் இடம் தோராய கருத்துரை வாங்க வேண்டும். 2.அதாவது மேற்படி இடம் DTCP அங்கீகாரம் தடை செய்யப்பட்ட பகுதியில் வருகிறதா?டிடிசிபியின் LPA லிமிட்டுகுள் வருகிறதா?அல்லது Regional லிமிட்டுக்குள் வருகிறதா? போன்ற கருத்துரை வாங்க வேண்டும். 3.தடை செய்யபட்ட பகுதிகள் என்பது மயானத்திற்கு மிக அருகில்,நீர்நிலைக்கு மிக அருகில் மலைபகுதிகள்,குவாரிகள்,விமான நிலையங்கள்,இரயில்நிலையங்கள் அருகில்,பறவைகள் சரணாலயம்,ரிசர்வ் காடுகள் போன்று ஒவ்வொரு டிடிசிபி மண்டலத்திலும் ஒவ்வொரு விதமாக தடைசெய்யபட்ட பகுதிகள் பதியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 4.அடுத்ததாக மனைபிரிவுக்கான இடம் பஞ்சாயத்து, வட்டார,மாவட்ட, மாநில,தேசிய சாலைகளுடன் ஒட்டி வருகிறதா என்று பார்க்க வேண்டும்.அவ்வாறு வந்தால் சிறப்பு,அவ்வாறு வரவில்லை எனில் அரசுசாலைக்கும் உருவாக்கவிருக்கும் மனைபிரிவிற்கும் இடைப்பட்ட தூரத்திற்கு 30அடி சாலை நாமே உருவாக்க வேண்டும். 5. ஏற்கனவே அரசு சாலை இருந்தால் அது வருவாய்துறை FMB

பஞ்சாயத்து அங்கீகாரம் பெற்ற மனைகளை வரன்முறை திட்டத்தின் கீழ் டி.டி.சி.பி அங்கீகாரம் பெறுவது எப்படி?

1.கடந்த 30ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு இருந்த பஞ்சாயத்து அங்கீகார மனைகள்,NOC மனைகள்,அன்அப்ரூவ்டு மனைகள் ஆகியவற்றை சென்னை உயர்நீதிமன்றம் 2016அக்டோபரில் தடைசெய்தது. 2.அதன்பிறகு 2017 வரை மேற்படி மனைபிரிவுகள் வாங்கவோவிற்கவோ முடியாமல் பத்திரபதிவு அலுவலகங்களில் பதிவும் செயயமுடியாமல் அப்படியே நிலுவையில் இருந்தது. 3.2017 இறுதியில் அரசு ரியல் எஸ்டேட் தொழில்செய்பவர்கள்,மேற்படி இடங்ளில் மனை வாங்கியவர்கள் தொடர் கோரிக்கைகளை ஏற்று வரன்முறை படுத்துதல் அரசு உத்தரவை (அரசாணை எண்.78) போட்டது. 4.மேலும் அந்த அரசாணை சில முடிவுகள் களநிலவரத்தோடு ஒத்துபோகவில்லை வரன்முறைபடுத்துதல் கட்டணமும் அதிகமாக இருந்தது.அதனையும் மக்கள்,ரியல் எஸ்டேட் தொழில்செய்பவர்கள் தொடர் கோரிக்கைகள் ஏற்று 78 அரசாணையில் திருத்தங்களை கொண்டுவந்தது. 5.வரன்முறைபடுத்துதலுக்கான தேதியை DTCP அலுவலகம் இதுவரை மூன்று முறைகெடு வைத்து மக்களின் மனுக்களை பரிசீலிக்கிறது.தமிழகம் முழுதும் இன்னும் அதிக மனைபிரிவுகள் இருப்பதால் அவற்றை எல்லாம் வரன்முறைபடுத்த இன்னும் கால அவகாசம் டிடிசிபி அலுவலகம் கொடுக்க வேண்டும். 6) உங்களிடம் இருக்கும் மனைகள்

கற்கள் சொல்லும் கதைகள் !

Image
ஒவ்வொரு நிலத்தையும் புல எண் வாரியாக பிரிப்பதற்கு ஒவ்வொரு புல எண்களின் எல்லையின் நான்கு மூலைகளிலும் அடையாளத்திற்காக நடப்பட்டு இருக்கும் கருகற்களே சர்வே கற்கள் ஆகும். இது ஒவ்வொரு புல எண்ணுக்கும் இருக்கும். ஒவ்வொரு நிலவகை ஆரம்பிக்கும் போது அதனை சர்வே கற்களை வைத்து அடையாளபடுத்தி இருப்பார். இரண்டு கிராம எல்லை , மூன்று கிராம எல்லை , நான்கு கிராம எல்லைகள் என அனைத்தையும் இந்த சர்வே கற்கள் வைத்து பிரித்து இருப்பார்கள். எப்பொழுதும் ஒரு இடத்தை பார்க்க போகிறீர்கள் என்றால் அந்த இடத்தை சுற்றி கால் கி.மீ சுற்றளவுக்கு நடந்து சென்று எப்பொழுதும் கள ஆய்வு செய்ய வேண்டும். ஒரே புல எண்ணில் இருக்கும். ஒரு இடத்திற்கும். மற்றொரு இடத்திற்கும், எல்லைகளாக பனைகுட்டிகள் , பனைமரங்கள், பாலை மரங்கள், வேப்ப மரங்கள், புங்க மரங்கள் போன்ற மரங்களை நட்டு வைத்து மேற்படி இரண்டு இடங்களை பிரித்து காட்டுவதற்கு எல்லைகளாக பிரித்து இருப்பார். சிலர் கருங்கற்களை காணி கல்லாக புதைத்து வைத்து இருப்பார். இவை அரசினுடைய சர்வே அல்ல ! அதை கள ஆய்வு செய்யும் போதே தெரிந்து கொள்ளலாம். இரு வேறு புல எண்கள் பிரியும் இடத்தில நட்டு வைத்

சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள்/உணர்ச்சிகள் இல்லா மரகட்டையாய் மாறிவிடுங்கள்!

Image
சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள்/உணர்ச்சிகள் இல்லா மரகட்டையாய் மாறிவிடுங்கள்! ஒரு சொத்து வாங்கும் போதோ , விற்கும் போதோ, கணிசமான அளவில் பணங்கள் ரொக்கமாகவும் , வங்கி மூலமாகவும், காசோலையாகவும், பரிமாற்றம் நடைபெறுகிறது. அந்த பணபரிமாற்ற நேரங்களில் தான் தங்களின் அதிகபட்ச உணர்சிகளை மக்கள்வெளிபடுத்துகின்றனர். அவற்றில் முக்கிய உணர்ச்சிகளான நன்றியுணர்ச்சி , விசுவாசம், சகோதர, சகோதரி பாசம், நட்புணர்வு, ஒரே ஊர் பாசம், சாதி பாசம், மதநம்பிக்கை , கொள்கை, போன்ற அந்நியோனியம் பார்த்து சொத்துக்கள் வாங்க , விற்க அது சம்பந்தமாக பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது பெரிய அளவிலான பொருளாதார நஷ்டத்தையே கொடுக்கும். இதேபோல் நான் என் தொழில் ஆரம்பித்த புதிதில் தொழிலையும் , உடன் இருப்பவர்களின் உணர்வுகளையும் போட்டு குழப்பி கொண்டதால் என்னை திரிசங்கு நிலையில் கொஞ்சம் நாள் சுற்ற விட்டுவிட்டனர் என் நண்பர்கள். எனக்கான சிக்கல் என்னவென்றால், என்னிடம் இருப்பது மற்றவர்கள் பணம், எனக்கு தனிப்பட்ட முறையில் பண இழப்பு இல்லை, ஆனால் அதனை ஈடுகட்ட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டி இருந்தது . அதிக அளவு உழைப்பை கொட்ட வேண

நிலம் உங்கள் எதிர்காலம்!-தெரிய வேண்டிய சூட்சுமங்கள்! ! பயிற்சி-1(07.10.2018) பற்றிய சிறு காணொளி

Image
கடந்த 07.10.2018 அன்று நடந்த ரியல் எஸ்டேட் பயிற்சி பற்றிய காணொளி! அடுத்த பயிற்சி சென்னை-அண்ணாசாலையில் வளர்தொழில் அரங்கத்தில் வருகின்ற 11.11.2018 இல் நடக்கவிருக்கிறது. சொத்து வைத்து இருப்போர்!சொத்து வாங்குவோர்!ரியல் எஸ்டேட் முகவர்கள்,ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றுவோர் என அனைவருக்கும் தேவையான பயிற்சி . குறிப்பு: இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

வளர்தொழில் இதழில் பூமிதானம் பற்றிய கட்டுரை!

Image
இந்த மாத வளர்தொழில் இதழில் பூமிதான நிலங்கள் பற்றி என்னுடைய கட்டுரை வெளிவந்து இருக்கிறது. நண்பர்கள் படித்து பயனுரவும்! குறிப்பு: இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #valrthozil #பூமிதானம் #கட்டுரை #artical #சொத்துக்கள் #சேரட்டும்!! #ஐஸ்வர்யம் #பெருகட்டும்!!

கிரய ஆவணம் எழுதி பதியும் போது மாதிரிகளை (TEMPLATE) பயன்படுத்துவதால் வரும் பிரச்சினைகள் !

Image
1. பல லட்சம் அல்லது பல கோடி செலவு செய்து தேடி பிடித்து சொத்துக்களை வாங்குவார்கள், அப்படி வாங்கும் சொத்துக்களை பத்திரம் எழுதும் போது ஆவண எழுத்தர்கள் மூலம் மாதிரிகளை வைத்து பத்திரங்களை எழுதுகின்றனர் ,மாதிரிகள் என்றால் ஏற்கனவே வேறு ஒரு நபருக்கு பத்திரம் செய்தபோது டைப் செய்ததை ஒரு Formate ஆக வைத்து அதிலேயே புதிய ஆவணத்தை உருவாக்குவது ஆகும். 2.இந்த நடைமுறை மிகவும் தவறானது,கொஞ்சம் கூட செலவானாலும் சரி நல்ல வழக்கறிஞர் அல்லது நல்ல ஆவண எழுத்தரை வைத்து மாதிரி இல்லாமல் உங்களுக்கு என்று பிரத்தியோகமாக ஆவணம் தயார் செய்வதே நல்லது.மேலும் முன்கூட்டியே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே அதிக நேரம் கொடுத்து வழக்கறிஞர்/ஆவண எழுத்தர் களுக்கு கொடுத்து டிராப்ட் போட்டு கொடுக்க சொல்ல வேண்டும். 3. பெரும்பாலும் சொத்து வாங்குபவர்கள் நல்ல நேரம் முடிய போகுது ,நல்ல நாள் முடிய போகுது என்று தங்களுக்கு உள்ளேயே ஒரு Beliefs System த்தை உருவாக்கி கொண்டு பதட்டபட்டு கொண்டு இருப்பார்கள்.அல்லது அவர்களுடைய உறவினர்கள்,ரியல் எஸ்டேட் ஏஜேண்டுகள்,இடத்தை விற்பவர்கள் இந்த நல்ல நேரம் நம்பிக்கையை பத்திரபதிவு அன்று சொல்லி அவசரபடுத்தி

பஞ்சமி நிலம் புரிந்து கொள்ளப்பட வேண்டிய … விஷயங்கள் !

Image
இந்தியாவில் சாதிய படிநிலை அடக்குமுறை காலம் காலமாக இருந்து வருவதை அறிந்ததே ! ஆயிரம் உண்டு இங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி ! என்று நாங்கள் எங்களுக்கு கீழே அடிமைகளை வைத்து இருப்போம்.அதெல்லாம் கேட்க கூடாது , ஆனால் சாதி இந்துக்களை வெள்ளைக்காரன ஆன நீ எப்படி அடிமைபடுத்தலாம் என்று கேட்ட ஞானவான்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டு இருக்கிற நாடு இந்த நாடு. விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களுக்கு கல்வி கற்க தடை , பொருளாதார தடை, சொத்து வைத்து இருக்க தடை மேற்படி தடைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ, செயல்படுத்துவதன் மூலம் அவர்களை பண்ணை அடிமைகளாக , அடிமை கூலிகளாக ஆண்டாண்டுகாலம் வைத்து இருக்கலாம் என்ற ஆண்டை கண்ணோட்டத்துடன் தான் சுதந்திர இந்தியாவின் அன்றைய தலைவர்கள் முதல் இன்றைய தலைவர்கள் வரை DC land ஐ பொறுத்தவரை இருகிறார்கள். ஓலை குடிசை வீட்டில் குடித்தனம் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுடைய சமையல் பாத்திரங்கள் கழுவி ஊற்றும் இடத்தில் தானாக முளைத்த மிளகாய் செடிகளில் மிளகாயை பறித்து உண்ண கூட அவர்களுக்கு உரிமை இல்லை! அதனை ஆண்டைகளிடம் கொடுத்து விட வேண்டும் . அவர்களை கேட்காமல் அந்த இடத்தில ம

நிலம் சம்மந்தமான விழிப்புணர்வு சேவை

உங்கள் பகுதியில் நற்பணி மன்றங்கள், இளைஞர் சங்கங்கள், மகளிர் அமைப்புகளில் தமிழக நிலங்கள், சொத்துக்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்து சொற்பொழிவுகள் கொடுக்க தொடர்புக்கு: 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #service #land #asset # Awareness

One To One Real Entrepreneur Training

Image
தொடர் முதலீட்டாளராக ரியல் எஸ்டேட்டில் வெற்றி பெற 1. முதலீட்டாளருக்கான என்ன மனநிலையில் இருக்க வேண்டும்? 2. எந்த இடத்தில் முதலீடு செய்ய வேண்டும்?எப்படி செய்யவேண்டும்? 3. எப்பொழுது முதலீடு செய்யவேண்டும்? எப்பொழுது முதலீட்டில் இருந்து வெளியேற வேண்டும்? 4. Risk 2% குறைவாகவும் Profit 100% to 1000% வளர வாய்ப்புள்ள ரியல் எஸ்டேட் முதலீடுகள் அடையாளம் காட்டபடும். 5. உங்கள் முதலீடு,உங்கள் உரிமை!எந்தவித கட்டுபாடுகளும் இருக்காது.உங்கள் காரை நீங்கள் ஓட்டுவது போல் உங்கள் முதலீட்டை நீங்களே ஆளுகை செய்யலாம். 6. முழுவதும் மந்திரி ஆலோசனை மட்டுமே!அரசனாக முடிவெடுப்பது நீங்களே!! தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3  #Real #Entrepreneur #Training

அரசு புறம்போக்கில் ஒரு DTCP மனைபிரிவு?

Image
பெரும்பாலும் DTCP மனை அங்கீகாரம் வாங்கும் போதே வட்டாட்சியரிடம் இது அரசு புறம்போக்கு நிலம் அல்ல என்ற சான்று ட்ட்ச்ப் அலுவலகம் கேட்கும் . அதனால் பெரும்பாலும் DTCP அங்கீகார மனை பிரிவுகளில் பெரும்பாலும் புறம்போக்கு நிலங்கள் இருக்க வாய்ப்பு இருக்காது. ஆனால் என்னுடைய கள பணி அனுபவத்தில் DTCP அங்கீகார மனை அரசு புறம்போக்கில் இருப்பதை கண்டு வியப்படைந்தேன். இதனை இக்கட்டுரையில் பகிர்வதன் மூலம் நிறைய பேருக்கு விழிப்புணர்வு கூடும் என்று நம்புகிறேன். என்னுடைய நம்பதகமான வாடிக்கையாளர் ஒருவர் மும்பையில் இருக்கிறார். அவர் அறிமுகப்படுத்தி சென்னையில் இருக்கும் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு எனக்கு திருவள்ளூர் மாவட்டம், திருவளங்காடு அருகில் ஒரு DTCP மனை இருக்கிறது என்று கூட தெரியவில்லை. வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. நான் சென்று பார்த்த பொழுது அடையாளம் தெரியவில்லை என்று எனக்கு பத்திரத்தின் நகலை வாட்சப்பில் அனுப்பினார்கள் . அதே போல் இன்னும் இரண்டு மூன்று ஆவணங்கள் திருவள்ளூர், திருவலங்காடு, பகுதியில் இருந்து ஏற்கனவே என்னிடம் வந்து இருந்ததால் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு அந்த பகுதியில் கள ஆய்வு

ஒட்டுமொத்த இந்தியாவை அளந்த மும்மூர்த்திகள் !

Image
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒட்டுமொத்த இந்தியாவையும் அளந்து சர்வே செய்து வரைபடம் தயாரித்து துல்லியமான பிழையில்லாத அளவுகளை குறிதத்து பிரிட்டிஷ் அரசாங்கத்தினர்கள் தான். அதற்கு முந்தைய அரசுகள் எல்லாம் அந்த அந்த பகுதிகளில் சிறிய சிறிய பரப்புகளில் ஒரு வரைபடம் தயாரித்து வைத்து பயன்படுத்தி இருந்தனர்.அந்த வரைபடம் அட்சதீர்க்க ரேகைககளை பயன்படுத்தி வரையபடவில்லை. புராணங்களில் தான் 3 காலடியில் உலகத்தை அளந்த ஆண்டவர் கதைகள் இருக்கிறது. ஆனால் உண்மையயில் களத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் நீளம் அகலம் உயரத்தை அளந்தவர்கள் இந்த வெள்ளைகாரர்கள் தான். வெள்ளைகாரர்கள் இந்த இந்தியாவை 60 ஆண்டுகளாக அளந்து சர்வே செய்து கொடுத்து சென்ற FRAME WORK இல் தான் இன்று இந்தியாவின் வருவாய்துறையின் நிலசர்வே மற்றும் நில அளவைகள் நடந்து கொண்டு இருக்கிறது. வெள்ளையர்கள் இந்த பணியை செய்யவில்லை என்றால் இன்று வரை இந்தியாவை அளப்பதிலேயே நேரத்தை செலவு செய்து கொண்டு இருந்திருப்போம்.சாதிசண்டை மத சண்டை போடுவதற்கு டைம் இல்லாமல் இருந்திருப்போம். சுதந்திர இந்தியாவை ஒன்றுபட்ட தேசமாக மாற்றுவதற்கு இந்த நீண்ட நெடிய சர்வே உதவி இருக்கிறது. இ

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

Image
1.காந்தி்ஜியின் சீடரும் மிகச்சிறந்த காந்திய தலைவரும் ஆன திரு.ஆச்சார்ய வினோபாவே என்ற உயர்ந்த மனிதனின் சிந்தனையில் அனைவருக்கும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் நோக்கத்தில் தோன்றிய இயக்கம்தான் பூமிதான இயக்கம்.. 2.நிலமற்றவர்களுக்கு நிலமுள்ள பண்ணையார்கள்,ஜமீன்கள்,நிலகிழார்கள் நிலத்தை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள்.அல்லது பூமிதான இயக்கத்தினர் கேட்டு பெறுவார்கள். 3.அந்த நிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் &கூலிகளுக்கு பிரித்து கொடுப்பார்கள் பூமி தான இயக்கத்தினர். 4.அதன்படி தமிழகத்தில் திரு.வினோபாவே அவர்கள் 1956 களில் ஓராண்டுக்கு தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து பூமி தானங்களை நிலகிழார்களிடம் இருந்து பெற்றார். அப்படி பெற்ற நிலங்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிர கணக்கான ஏக்கர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டு இருக்கிறது. 5.கொஞ்ச நிலங்கள் பகிர்தளிக்க படாமல் பூமி தான போர்டு கிட்டயே உள்ளது.கொஞ்ச நிலங்கள் அந்தந்த பகுதியில் சட்ட சிக்கல்கள் சட்ட குழப்பங்களால் பூமி தான இயக்கத்தாலேயே இன்னும் கையகப்படுத்த படாமல் இருக்கிறது. 6.பூமி தான நிலங்களை அந்த அந்த பகுதிகளில் தீர

கிரயபத்திரத்தில் சமூக நீதி வரலாறு வாட்ஸ்அப்தொடர் :1

Image
கிரயபத்திரத்தில் சமூக நீதி வரலாறு வாட்ஸ்அப்தொடர் :1 கள்ள தொடர்பு தவறு இல்லை என்பது இன்றைய நீதிமன்ற தீர்ப்பை தமிழ் மற்றும் இந்திய கலாச்சார பாதுகாவலர்கள் எதிர்த்துகொண்டுஇருக்கிறார்கள் ஆனால் இதே கலாச்சார பாதுகாவலர்கள் 80ஆண்டுகளுக்கு முன் ஆன்மீகம்,பக்தி,கோயில் என்ற கட்டமைப்பில் விபச்சாரத்தை ஒரு தெய்வீக தொழிலாக அங்கீகரித்து பெண்ணடிமை தனத்தை பாராட்டி வந்து இருக்கின்றனர். 1931 களில் பெண்களுக்கு சொத்துக்கள் வைத்து கொள்ள சுத்தமாக உரிமையில்லை. அந்த காலத்தில் கோவிலில் தாசி தொழில் செய்யும் ஒருவளுக்கு ஒரு வீட்டை எழுதி வைக்க ஒரு செல்வசீமான் விரும்புகிறார். அதற்கு அவளின் மைனர் ஆண் குழந்தைக்கு சொத்தை தானம் எழுதி கொடுக்கிறார்.(மேஜர் பெண்களை விட மைனர் ஆண்குழந்தைகள் சொத்து வைத்துகொள்ள தகுதிபடைத்தவர்கள் என்று சொல்கிறது அன்றைய இந்து சிவில் சட்டம்)மேலும் சட்டத்தில்நேச்சுரல் கார்டியன் என்பது முதலில் தந்தை ந்தை இல்லாத பொழுதும் வெளியூரில் இருக்கும் பொழுதும் நேச்சுரல் கார்டியன் தாயார் ஆகும். முறையற்று பிறக்கும் குழந்தைக்கு தாய்தான் நேச்சுரல் கார்டியன் என்று இன்றைய சட்டம் சொல்கிறது. ஆனால் அந்த காலத்தில்

ஒரு ஏக்கர் பூமிதான நிலம் மீட்டு கொடுத்த பிராப்தம் ரியல்டர்ஸ்!!

Image
  வளர்தொழில் இதழில் வெளிவருகின்ற எனது கட்டுரைகளை பார்த்து விட்டு கோயம்புத்தூர் உடுமலைபேட்டை அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஒருவர் நமது அலுவலகத்தை தொடர்பு கொண்டு பூமிதான நிலம் சம்மந்தமான சிக்கல்கள் சம்மந்தமாக என்னிடம் பேசினார். அவருடைய தந்தைக்கு யார் பூமிதானம் கொடுத்தார்களோ அவர்களின் வாரிசுகளே மேற்படி நிலங்களை அனுபவிப்பதாகவும் மேலும் பூமிதான ஆவணங்களில் தந்தைக்கு அடுத்து என் பெயர் மாற்றமுடியாமல் தவிக்கிறேன் எனறு சொன்னார். நானும் கோவை டூ சென்னை பைக் பயணத்தின்போது உடுமலைபேட்டை சென்று கள நிலவரத்தை ஆராய்ந்து நாங்கள் எங்களின் இலவச சம்ருதி சேவை மூலம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்து கொடுத்தோம் அதன்பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறி விட்டனர். ஆனாலும் தற்போதைய பயனாளியின் பெயரைஉடுமலைபேட்டையில் மாற்ற முடியாத அளவுக்கு முட்டுகட்டைகள் இருந்ததால் சென்னை வர சொல்லி இருந்தேன். அர்களும் முன்னறிவிப்பு இல்லாமல் மேற்படி நபர் நேற்று(28.09.2018) அதிகாலை 6 மணிக்கு சென்னை மவுண்ட் ரோடு அலுவலகத்திற்கு வந்து வாசலிலேயே அமர்ந்து இருந்தனர். அவர்களோடு தொடர்பில் இருந்த என் சகோதரி மங்கலட்சுமி இத