கோவில்பட்டி சங்கரன்கோவில் வியாபாரிகள் அதானி அம்பானிய விட மோசமானவர்கள்!!!

கோவில்பட்டி சங்கரன்கோவில் வியாபாரிகள் அதானி அம்பானிய விட மோசமானவர்கள்!!! கோவில்பட்டி சங்கரன் கோவில் இந்த இரண்டு நகரத்திற்கும் அடிக்கடி பயணபடுவேன் அப்பொழுதெல்லாம் புதிதாக உருவாக்கபட்ட பஸ் ஸ்டாண்டுகளை பார்க்கும்போது மனது உறுத்தலாக இருக்கும்! பலகோடி ரூபாய்கள் மக்கள் வரிபணத்தை வாங்கி அதில் ஊருக்கு வெளியே ஊர் ஜனநெருக்கடியாக இருக்கிறது புதிய பஸ் ஸ்டாண்டுகளை கட்டுகின்றனர் வியாபாரிகளுக்கு தற்சமயம் வியாபாரம் போய் விடும் என்று பஸ் ஸ்டாண்டுகளை மாற்ற விடாமல் அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஒத்துழைப்போடு தொலை நோக்கோடு உருவாக்கபட்ட புதிய பேருந்து நிறுத்தங்களை வீணடித்து கொண்டு இருக்கின்றனர்.பொதுபணத்தை அநியாயத்திற்கு வீணடிக்கின்றனர் தங்களுடைய வியாபரத்திற்கு நாட்டு பணத்தை நஷ்டம் ஆக்குகிறார்கள். இந்த இரண்டு நகரங்களிலிலும் கம்யூனிஸ்டுகள் வேறு தங்கள் கம்பெனியை மக்களிடையே நடத்தி கொண்டு இருக்கின்றர். வெள்ளையன் அண்ணன் விக்கிரமராஜா அண்ணன் போன்றோர் தமிழ்நாட்டு வியாபாரிகள் உலக நிறுவனங்களால் பாதிக்கபடுகிறார்கள் என்று ஒப்பாரி வைக்கிறார்கள்!! கோவில்பட்டி சங்கரன் கோவில வியாபாரிகளே அரசு எந்திரத்தை வளைக்கிறார்...