Posts

Showing posts from October 9, 2019

பதிவு துறையில், ‘சமாதான் திட்டம்’ அறிவிப்பு….!

Image
படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்! பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு குளறுபடியால், நிலுவை வைக்கப்பட்ட, ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு தீர்வு காண, ஜூன் இல் இருந்து ‘சமாதான் திட்டம்’ நடைபெற்று வருகிறது. சொத்து பரிமாற்ற பத்திரங்களை, அந்தந்த பகுதிக்கான வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்றபடி, முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் போன்றவை முடிவு செய்யபடுகிறது. ஆனால், வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்புக்கு, சிலர் பத்திரங்களை பதிவு செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்த மதிப்புக்கு உரிய காரணத்தை உறுதி செய்ய, பதிவு சட்டம், 47 – ஏ மற்றும், 19 – பி ஆகிய பிரிவுகளின் படி, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும். விசாரணைக்கு அனுப்பப்படும் பத்திரங்கள், மாவட்ட பதிவாளர் களவிசாரனை மேற்கொண்டு உடனடியாக கோப்புகளை நகர்த்தாமல் நீண்ட காலமாக நிலுவையில் போடப்படுவதால், சொத்து வாங்கியோருக்கு, பத்திரம் கிடைக்காமல் போகிறது. மேலும், பதிவுத்துறைக்கும், வருவா...

10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து…

Image
10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து, அதற்கு முன் 5 ஆண்டுகள் ரோட்டு கடைகளிலும் வீட்டிலும் அலுவலகம் வியாபாரத்தை நடத்தினேன். இன்று மும்பை;பெங்களூர்,சென்னை,கோயம்பத்தூர்,நெல்லை என வளர்ந்துள்ளது..நன்றியுடன் இந்நாளை கழிக்கிறேன். படத்தில் என் அன்பு ஆசிரியரும்,தாயாரும்..அலுவலகம் திறக்க ..பின்புறம் நம்ம Ravindran Pothiyamalai தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #மும்பை #பெங்களூர் #சென்னை #கோயம்பத்தூர் #நெல்லை #chennai #business #office #coiambatore #praptham #realtors

தங்க சுரங்கம் பூமிக்கு அடியில் இல்லை! அவை பூமிக்கு மேலே இருக்கிறது!

Image
முதலீட்டு நோக்கில் வீட்டு மனைகளை வாங்கி வைப்பவர்கள் அறிவார்ந்த பார்வைக்கு! எனக்கு ஒரு நண்பர் மூலம் திரு.பிரான்சிஸ் அவர்கள் அறிமுகம் ஆனார். அவரின் மனைகளை அரசு ,நில ஆர்ஜிதம் செய்து விட்டது. அதன் சம்மந்தமாக சில வேலைகளை நான் செய்ய நேரிட்டது. மேற்படி நண்பர் முதலீடு செய்த தொகை ரூ 12000/- , இருபது ஆண்டுகள் கழித்து அரசு நில ஆர்ஜித தாெகையாக அவரிடம் 58 இலட்சத்து 46ஆயிர்த்தை அவரிடம் கொடுத்தது . நில எடுப்பு இல்லை என்றால் நிச்சயம் இதை விட மூன்று மடங்கு வாங்கியிருப்பார். இதுல சிறப்பு என்ன வென்றால் 1983 ல் தாம்பரமே ஆள் இல்லாத காடு! ஒரகடத்தில் மனை வாங்க அநியாயத்திற்கு நெஞ்சு வேணும்! அது நம்ம பிரான்ஸிஸ் அவர்களிடம் இருக்கிறது! தங்க சுரங்கம் பூமிக்கு அடியில் இல்லை! அவை பூமிக்கு மேலே இருக்கிறது! புரிந்தவர்கள் செயலில் காட்டுபவர்கள் வெற்றியாளர்கள்!! திரு.பிரான்சிஸ்ராஜ் அவர்கள் ரூ.12400/- க்கு 1983 ஆம் ஆண்டு மனைகள் வாங்கியதற்கான ரசீது. திரு.பிரான்சிஸ்ராஜ் அவர்களின் இடத்தை தமிழக அரசு நிலா ஆர்ஜிதம் செய்ததற்கு நஷ்ட ஈடாக 2௦13 ஆம் ஆண்டு கொடுத்த தொகை 58 லட்சத்து 46ஆயிரத்து 456 ...

தமிழக தலைவர்களின் ஆளுமையின்மையினால் பாதிக்கப்படும் சுற்றுசூழல்!!

Image
போன்ற நாடுகள் வளர்ந்து வரும் உலக மயமாக்களில் 1990 களில் இணைந்து கொண்டு கிட்டதட்ட 50% தன்னை உலக மயமாக்கலின் கட்டுபாட்டில் நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வந்துவிட்டது என்பதே எதார்த்தம். அதனால் உலகத்தின் எந்த பகுதியில் விவசாயம் நடக்க வேண்டும், நீர்நிலைகள் பாதுகாக்க வேண்டும்.  எந்த பகுதியில் மலைகளின் கனிமங்களை வெட்டி சூழலை கெடுக்க வெண்டும். இந்த உலகத்தில் எந்த பகுதி குப்பை தொட்டியாக இருக்க வேண்டும்.எந்த பகுதி கஜானாவாக இருக்க வேண்டும் என்பது மத்திய,/மாநில நீதிமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் இடம் இல்லை என்பதே எதார்த்தம். நொய்யல் ஆறு சாய கழிவுகளுடன் இவர்களுக்கெல்லாம் அதிகாரமற்ற அதிகாரங்களே அதாவது பராமரிக்க கூடிய அதிகாரங்களே உள்ளது. இவர்களால் ஆக்கவோ அழிக்கவோ கூடிய அதிகாரம் கிடையாது. Fittest For The Surveival விதிப்படி ஒரிசாவில் இருக்கின்ற பழங்குடியினர் வாழ்க்கை ஒழிக்கப்பட்டதால் நாம் அந்த கனிமங்களை பொருட்களாக பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். மாநில பிரிவுகளின் போதும் தமிழகத்தில் இருந்த அரசியல் தலைவர்கள் Fittest For The Surveival விதிப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகப்படி வசிக்கும...

தமிழகத்தின் பல வீட்டு மனைகளுக்கு பதில் சொல்லாத அரசு ஆணை 78 இல் உள்ள 5 முரண்பாடுகள் :

Image
அங்கீகாரம் இல்லாத மனைகளை மற்றும் மனை பிரிவுகளை வரைமுறை படுத்த 04.0-5.2017 அன்று வீட்டு வசதி துரையின் மூலம் போடப்பட்டுள்ள G.O(MS) 78 இல் இன்னும் பதில் சொல்ல முடியாத 5 முரண்பாடுகள் இருக்கிறது. இவற்றிற்கு தீர்வு காணாமல் G.O(MS) 78 நடைமுறை படுத்துவதன் மூலம் மிக பெரிய பயன் எதுவும் உருவாகாது. DTCP உருவாவதற்கு முன்னரே இருக்கும் மனைகள்: 1971-ம் ஆண்டு முதல் DTCP அங்கீகார அமைப்பு தமிழகத்தில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்பே பல வீட்டுமனைப்பிரிவுகள் தமிழகத்தில் உருவாகி இருந்தது, அவற்றை அங்கீகார DTCP வரைமுறைக்குள் கொண்டுவர முடியாததால் அதனை அப்படியே ஏற்றுக்கொண்டன. சென்னையை சுற்றி இப்படி அலமேலு மங்காபுரம், கணபதி சிண்டிகேட் என்று பல மனைப்பிரிவுகள் 1960-களிலேயே உருவாகி இருந்தன, அவற்றில் தற்பொழுது குடியிருப்புகளாக மாறி இருக்கிறது. நத்தம் வீட்டு மனைகள்: இவை இல்லாமல் பழைய ஊர்களில் ஊர்களுக்கு அருகிலேயே எதிர்கால வீட்டுமனை தேவைகளுக்காக கிராம நத்தம் என்று வகைப்படுத்தி நிலங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன அவற்றிற்கெல்லாம் இன்றுவரை கிராம நத்த தூய நிலவரி திட்டத்தின் அடிப்படையில் வருவாய் துறையில் பட்டா முழும...

ஏப்ரல் மாதம் 2019 இல் வளர்தொழில் மாத இதழில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை “பதிவு செய்ய கட்டாயபற்ற ஆவணங்கள் ”!!!!

Image
இந்த மாத வளர்தொழில் மாத இதழில் சொத்து தொடர்பானவற்றில் “பதிவு செய்ய கட்டாயபற்ற ஆவணங்கள்” என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. வாய்ப்பு இருக்கும் நண்பர்கள் படித்து பயனுறுமாறு வேண்டுகிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதிபாண்டியன் ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #வளர்தொழில்  #சொத்து  #பதிவு #ஆவணங்கள் #கட்டுரை #document #registration #valarthozil #artical #paranjothipandian #press

5S சான்றிதழும் ரன்னர்அப் அவார்டும் – பிராப்தம் குழு

Image
கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது தெனகாசி அலுவலகத்தில் 5S தரத்தை நடைமுறை படுத்த நமது தென்காசி அலுவலக குழுவினர்கள் அசராது உழைத்து 5S ன் நடைமுறைகளை அமுல் படுத்தி அதற்கு தினமும் நேரம் கொடுத்து அதற்கென்று கொஞ்சம் மெனக்கெட்டு 5S வேலைகளை செய்தனர். இந்த 5S னால் நிறைய செலவுகள் மிச்சம். நிறைய நேரம் மிச்சம், நிறைய இடம் மிச்சம்.காணாமல் போன பொருட்கள் பல கிடைத்து இருக்கின்றன.இந்த 5S தரத்தை தென்காசி டீம் கொஞ்சம் கொஞ்சமாக மதுராந்தகம்,கோயமுத்தூர,சென்னை,மும்பை கிளைகளில் மற்றவர்களுக்கு வீடியோ கால மூலம் பயிற்றுவித்து 5S தரத்தை நடைமுறை படுத்தும் வேலையை நமது தென்காசி குழுவினர் சிறப்புற செய்கின்றனர்.இதோ இன்று திருமதி.மீனாட்சி தலைமையில் திருமதி.வள்ளிமயில்,திருமதி.விஜயலட்சுமி,செல்வி.கங்கா,செல்வி.இரம்யா என அனைவரும் 5S சான்றிதழும் ரன்னர்அப் அவார்டும் பெற்றுள்ளார்கள்.அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.இவர்களை வழி நடத்திய திரு&திருமதி முருகானந்தம் அவர்களுக்கும் நன்றிகள் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலா...

நிலம் உங்கள் எதிர்காலம் ! புத்தகம்..!!

நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 1. தமிழகம் முழுவதும் மீண்டும் நில அளவை சர்வே செய்யவேண்டும் ஏன்?. 2. ஒப்படை பட்டாக்கள் எப்பொழுது ரெவின்யூ கணக்கில் ஏறும். 3. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 4. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 5. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 6. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 7. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 8. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், எளிய மக்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். ரியல் எஸ்டேட் தொழில் கடைநிலை ஏஜென்டாக தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி கற்று கொண்டதை புத்தகமாக ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவ...