Posts

Showing posts from October 9, 2019

செட்டில்மென்ட் பத்திரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 22 விஷயங்கள் !!

Image
1. செட்டில்மென்ட் பத்திரம் என்பதும் குடும்ப ஏற்பாட்டு பத்திரம் என்பதும் ஒன்றுதான். 2. ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை குடும்பத்தில் உள்ள தன் உறவுகளுக்கு தன் வாழ்நாள் காலத்திலேயே பிரித்து கொடுக்கும் பத்திரம் செட்டில்மெண்ட் பத்திரம் (அ) தான செட்டில்மெண்ட் பத்திரம் ஆகும். 3. மேற்படி செட்டில்மெண்ட் பத்திரம் குடும்ப உறவினருக்கு மட்டும்தான் போட முடியும். தந்தை, தாய், கணவன், மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை ஆகியோர் மட்டும் உறுப்பினர்களாக பத்திர அலுவலகம் ஏற்று கொள்கிறது.. 4. குடும்ப உறுப்பினர் இல்லாதவருக்கு கொடுக்க நினைத்தால் அதற்கு “ தானப் பத்திரம்” போட வேண்டும். ( GIFT DEED) இறந்த பிறகு செட்டில் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உயில் எழுத வேண்டும். 5. செட்டில்மெண்ட் பத்திரம் கொடுத்து விட்டு பிறகு மனம் வருத்தப்பட்டு செட்டில்மெண்டை ரத்து செய்கின்றனர். இப்படி ரத்து செய்வது சட்டப்படி செல்லாது என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது. 6. பத்திர பதிவு அலுவகத்தில் செட்டில்மெண்ட் பத்திரத்தை கடந்த 5௦ ஆண்டுகளாக ரத்து செய்கின்ற செட்டில்மெண்ட் ரத்து பத்திரம் போடுகின

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்

Image
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம். • அவருடைய பெற்றோர்

ரியல் எஸ்டேட்டில் சாதாரண மனிதர்களின் சில நம்பிக்கைகளும் உண்மை நிலவரங்களும்!

Image
ரியல் எஸ்டேட்டில், சொத்து வாங்குவது, சொத்து விற்பதில் சாதாரண மனிதர்கள் பவிதமான நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். அவர்கள் நம்புவதை போல் களத்தில் உண்மை நிலவரங்கள் இருப்பதில்லை. மக்கள் புரிந்து கொண்டது ஒன்று, நடைமுறையில் இருப்பது மற்றொன்று. எனக்கு தெரிந்த சிலவற்றை கீழ்க்கண்ட பட்டியலில் காண்போம் 1. மக்கள் நம்பிக்கை : இடம் பேங்க் லோனில் இருந்தால் இடத்தோட லீகல் சரியாக இருக்கும் யதார்த்த நிலவரம் : வங்கியில் லோன் இருந்தாலும் லீகல் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2. மக்கள் நம்பிக்கை : எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தால் யாரும் இடத்தை TRESPASS / ENCROACHMENT செய்யமாட்டார்கள் யதார்த்த நிலவரம் : TRESS PASS / ENCROACHMENT என்பது முழுவதும் ஆவணங்கள் சம்மந்தப்பட்டது அல்ல! அவை இடத்தின் உரிமையாளருடைய மனநிலை, ஆளுமை, புத்தி கூர்மை & எதிர்கொள்ளுதல் சம்மந்தப்பட்டது. 3. மக்கள் நம்பிக்கை : பட்டா ஆன்லைனில் அப்ளை செய்தால் பட்டா உடனடியாக வந்து விடும். யதார்த்த நிலவரம் : பட்டா மனு அப்ளை செய்வது மட்டும் தான் ஆன்லைன். மீதி V.A.O. சர்வேயர், R. I., DEPUTY, THASILDHAR ஆகியோரை நேரிடையாக செ

பவர் ஆப் அட்டார்னியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 26 விஷயங்கள் :

Image
1. தன்னுடைய வேலையை வேறு ஒருவர் கொண்டு செய்து முடிப்பது அல்லது செய்வதற்கு கொடுக்கும் அதிகார பத்திரம் பவர் ஆப் அட்டார்னி ஆகும். 2. தனக்கு பணிசுமை அதிகமாக இருந்தாலும் , அல்லது அந்த வேலையை செய்ய நேரமின்மையாகவும் இருந்தாலும் , மேற்படி வேலைகளை செய்வதற்கு பவர் ஆப் அட்டார்னியாக ஏஜென்ட்டை வைத்து கொள்ளலாம். 3. பவர் பத்திரங்களில் இரண்டு வகை ஒன்று ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி இன்னொன்று ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி ஆகும். 4. ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி என்பது ஒரே ஒரு வேலையை மட்டும் செய்வதற்காக கொடுக்கும் பவர் பத்திரம் ஆகும். 5. ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி என்பது ஒன்றுக்கு மேற்பட்ட வேலையை செய்வதற்கு கொடுக்கப்படும் பவர் பத்திரம் ஆகும். ஜெனரல் பவர் ஆப் அட்டார்னி 6. நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனுதாரர் தனக்கு பதிலாக வேறு ஒரு நபரை ஏஜென்ட்டாக நியமித்து பவர் கொடுப்பது . வெளிநாட்டில் இருக்கும் ஒரு நபர் தனக்கு பதிலாக சொத்தை வாங்குவதற்கு ஒரு ஏஜென்ட்டை நியமித்து பவர் கொடுப்பது போன்றவை ஸ்பெசல் பவர் ஆப் அட்டார்னி . 7. நீதிமன்றத்தில் வழக்கு போடுவதற்கு போடும் ஸ்பெசல் பவர் பத்திரம் என்பது ஒரே ஒரு வழக்குகா

பதிவு துறையில், ‘சமாதான் திட்டம்’ அறிவிப்பு….!

Image
படித்து பயன் அடையுங்கள்! பகிர்ந்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவுங்கள்! பதிவுத்துறையில் வழிகாட்டி மதிப்பு குளறுபடியால், நிலுவை வைக்கப்பட்ட, ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு தீர்வு காண, ஜூன் இல் இருந்து ‘சமாதான் திட்டம்’ நடைபெற்று வருகிறது. சொத்து பரிமாற்ற பத்திரங்களை, அந்தந்த பகுதிக்கான வழிகாட்டி மதிப்பு அடிப்படையில், பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்றபடி, முத்திரைத் தீர்வை, பதிவு கட்டணம் போன்றவை முடிவு செய்யபடுகிறது. ஆனால், வழிகாட்டி மதிப்பை விட, குறைந்த மதிப்புக்கு, சிலர் பத்திரங்களை பதிவு செய்வதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட குறைந்த மதிப்புக்கு உரிய காரணத்தை உறுதி செய்ய, பதிவு சட்டம், 47 – ஏ மற்றும், 19 – பி ஆகிய பிரிவுகளின் படி, மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும். விசாரணைக்கு அனுப்பப்படும் பத்திரங்கள், மாவட்ட பதிவாளர் களவிசாரனை மேற்கொண்டு உடனடியாக கோப்புகளை நகர்த்தாமல் நீண்ட காலமாக நிலுவையில் போடப்படுவதால், சொத்து வாங்கியோருக்கு, பத்திரம் கிடைக்காமல் போகிறது. மேலும், பதிவுத்துறைக்கும், வருவா

தகவல் பெறும் உரிமை சட்டம் – 2005……

Image
உரிமைச் சட்டம் • தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்? • தகவல் உரிமை என்றால் என்ன? • தகவல் உரிமை எதற்காக? • என்னென்ன தகவல் கேட்கலாம்? • தகவல் கொடுக்க வேண்டியவர்கள்? • என்னென்ன முறையில் தகவல் பெறலாம். • தகவல் கொடுக்க வேண்டிய அதிகாரிகளின் கடமைகள்? • தகவலை யாரெல்லாம் கேட்கலாம்? • யாரிடம் கேட்கலாம்? • விண்ணப்பம் எழுத யார் உதவ வேண்டும்? • தமிழிலேயே விண்ணப்பிக்கலாமா? • தபாலில் அனுப்பும் முறை, முகவரிகள் தெரியவில்லையா? தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள் அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவு மறைவற்ற அரசு நிர்வாகத்தைக் கொண்டு வருதல் அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிபவர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தி விரைவாக பணி செய்ய வைத்தல். எந்த ஒரு குடிமகனுக்கும், பதிலளிக்கும் கடமை அரசாங்கத்திற்கும், அதன் அதிகாரிகளுக்கும் உண்டு என்பதை உணரச் செய்தல். அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த தகவலைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு அதைக் கொடுக்க வழிவகை செய்வதோடு லஞ்ச -ஊழலைத் தடுத்தல். தகவல் உரிமை என்றால் என்ன? தகவல்

யாருக்கு எல்லாம் சொத்தில் உரிமை இல்லை!

Image
1. ஒரு பெண்ணுக்கு, அவளின் பெற்றோர்கள் இடத்தில் இருந்து வந்த சொத்து என்றால், அப்பெண் இறக்கும் போது அவளுக்கு குழந்தைகளும் இல்லை என்றால், அச்சொத்தை அவளின் கணவன் அடைய உரிமை இல்லை! அச்சொத்து மீண்டும் பெற்றோர்கள் வீட்டிற்கே சென்று விடும். 2. வாரிசு முறைப்படி சொத்துக்களை பெற்று கூட்டாக இருக்கின்ற சொத்துக்களை ஒரே ஒருவர் மட்டும் தன் பிரிவு படாத பங்கை வெளி நபருக்கு உடனேயே விற்றுவிட உரிமை இல்லை. அப்படி விற்க விரும்பினால் முதலில் மற்ற பங்குதாரர்களுக்கு விற்க வேண்டும். 3. தந்தையை கொன்ற மகனுக்கு தந்தையின் சொத்தை பங்கு கேட்டும் உரிமை இல்லை. 4. கணவன் இறந்த பிறகு அவரின் தந்தை வழியே கிடைக்கும் பூர்வீக சொத்துக்களை விதவை மனைவி வேறு திருமணம் செய்து இருந்தால் அந்த சொத்தில் உரிமை இல்லை. 5. இந்து மதத்தில் இருந்து மதம் மாறி விட்ட பிறகு இந்து தாத்தா சொத்து வேறு மத பேரன் அடைய உரிமை இல்லை. ஆனால் வேறு மத மகன் அடைய உரிமை உண்டு. 6. சொத்தை வைத்து இருப்பவர், அவர் உயிருடன் இருக்கும் போதே உயில், செட்டில்மெண்ட் எழுதி இருப்பார் என்றால் அந்த உயில் படியே போய் சேரும். அதில் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. 7. மனைவ

பாகபிரிவினை ! பாகபிரிவினை !! பாகபிரிவினை !!!

Image
பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டிய 12 விஷயங்கள் 1. சரிசமமாக பிரித்து கொள்கிறோம் என்பது பல பங்குகளாக பிரித்து கொண்டு, ஒருவருக்கு மட்டும் அதில் மதிப்பு குறைவானதாக சொத்து கிடைத்தால், அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து கோர்ட்க்கு சென்று அந்த பாகப்பிரிவினை செல்லாது என்றும் நியாயமாக பிரிக்கவில்லை என்று டிகிரி வாங்கலாம். 2. எல்லோருக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒருவருக்கு கூட, ஒருவருக்கு குறைய இருக்கலாம். ஆனால் அதற்கு சரியான விளக்கம் பாகப்பிரிவினை பத்திரத்தில் இருக்க வேண்டும். 3. பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாக பாகம் பிரித்துக் கொள்ளலாம். பிரிக்க முடியாததை பிரித்தால், மிக சிறிய பங்காகி விடும் என்று கருதினால் அதனை, (NOT DIVISIBLE BY METES AND BOUNDS) அதாவது, நீள அகலத்துடன் பிரிக்க முடியாத சொத்து என்று சொல்லபடுகிறது. 4. பிரிக்க முடியாத சொத்தை யாராவது ஒருவர் யாருக்காவது விட்டு கொடுத்துவிட்டு அதற்கேற்ற பணத்தை பெற்று கொண்டு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து சொத்தில் இருந்து வெளியேறலாம். (இப்பொழுது பாகப்பிரிவினை பத்திரம் தேவையில்லை.) 5. பிரிக்க முடியாத

உயில் சொத்தா? கவனிக்க வேண்டிய 35 செய்திகள் ….

Image
1. ஒருவர் தன் வாழ்நாளுக்குப் பின்னர் அவரின் சொத்துக்களை, உயில் மூலம் அவர் விரும்பும் நபருக்கு எழுதிக் கொடுக்கலாம். 2. இந்து & கிறிஸ்த்துவ மதத்தில் உயில் எழுதுவதை சட்டம் அனுமதிக்கிறது. 3. முகமதிய சட்டத்தில் ஒருவரின் வாரிசுகளுக்கு சொத்தில் பங்கு இல்லமால் செய்யும்படி உயில் எழுத முடியாது. சொத்தை வைத்து இருப்பவர் அந்த சொத்தில் 3 ல் 1 பங்கு சொத்துக்கு உயில் எழுதி வைக்கலாம். ஆனால் அதற்கும் வாரிசுகள் சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதனால் பொதுவாக முகமதியர்கள் உயில் எழுத முடியாது என்றே கொள்ள வேண்டும். 4. உயில், எழுதி வைத்தவரின் ஆயுட் காலத்திற்குப் பின்னர் தான் அமலுக்கு வரும். உயிலை எழுதியவர் உயிருடன் இருந்தால் அந்த உயில் அவர் இறக்கும் வரை நடைமுறைக்கு வராது. 5. ஒருவர் ஒரே ஒரு உயிலைத் தான் எழுதி வைக்க முடியும். அடுத்தடுத்து உயில் எழுதி வைத்தாலும், இறுதியாக எழுதி வைத்த உயில் தான் செல்லும். மற்ற உயில்கள் செல்லாது போய்விடும். 6. உயில்களின் எல்லா பக்கத்திலும் உயில் எழுதுபவர் கையெழுத்து போட்டு இருக்க வேண்டும். கடைசிப் பக்கத்தில் உயில் எழுதுபவர் கையெழுத்திற்கு கீழே கண்டிப்பாக இரண்டு சாட்

மைனர் சொத்தும் கார்டியன் நிலையும் – 24 உண்மைகள்!!!

Image
1. இந்தியாவில் உள்ள அனைவருக்கும் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மேஜர் வயதை அடைந்தவர். என்று சட்டம் சொல்கிறது. அதற்கு கீழ் உள்ளவர்கள் அனைவரையும் மைனர் என்று சொல்லாம். 2. சொத்து வாங்குவது, விற்பது, உடன் படிக்கைகள் ஏற்படுத்தி கொள்வது, கோர்டில் வழக்கு போடுவது போன்ற விசயங்களுக்கு கட்டாயம் 18 வயது ஆகி இருக்க வேண்டும். 3. 18 வயது நிரம்பியவர் மட்டும் தான் தனியாக செயல் பட முடியும். அதற்கு கீழ் உள்ளவர்கள் தனியாக இயங்க முடியாது. அவருக்கு ஒரு கார்டியனோ ( பாதுகாவலர் ) வேண்டும். 4. பாதுகாவலர் (கார்டியன்) என்றால் மைனரின் உடலையும் அவரின் சொத்துக்களையும் பாதுகாப்பாளர் ஆவார். இரண்டுக்கும் சேர்த்து ஒரு பாதுகாவலர் இருக்கலாம். அல்லது ஏதாவது ஒன்றுக்கு மட்டும் பாதுகாவலராக இருக்கலாம். 5. மைனருக்கு, சொத்து இரண்டு வகைகளில் கிடைக்கும். ஒன்று பூர்வீக சொத்துக்கள், மற்றொன்று மைனரின் பெயரில் வாங்கப்பட்ட தனிப்பட்ட சொத்துக்கள். 6.மைனரை பாதுகாப்பது என்பது, படிக்க வைப்பது, சாப்பாடு கொடுப்பது நோய்களில் இருந்து காப்பது போன்றவை. 7. மைனர் சொத்தை பாதுகாப்பது என்பது சொத்து எப்படி பாராமரிப்பது, எப்படி வாங்குவது,

அரசு வழிகாட்டி மதிப்பு : அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

Image
அரசு வழிகாட்டி மதிப்பு : அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் 1. நிலங்களை வாங்கவும், விற்கவும், செய்யும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாளாய் வாங்குவோம். அப்படி முத்திரைத்தாள் வாங்குகையில் எவ்வளவு தொகைக்கு வாங்க வேண்டும் என்று இந்த வழிகாட்டி மதிப்புதான் சொல்கிறது. 2. ஒருவர் இடம் வாங்கும் பொழுது கிரையம் நிச்சயித்த விலைக்கு 7% முத்திரைத்தாள் என்று சொன்னால், மக்கள் கிரயம் நிச்சயித்த விலையை விட கிரைய பத்திரத்தில் மிக குறைவான விலையை காட்டி குறைவான அளவுக்கே முத்திரைத்தாள்களை வாங்குவார்கள். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படும், அதனை தவிர்க்கவே அரசு வழிகாட்டி மதிப்புகளை உருவாக்குகிறது. 3. வழிகாட்டி மதிப்பை நிர்ணயித்து விட்டால், அதன் மதிப்பை விட குறைவாக விற்றாலோ (அ) அதிகமாக விற்றாலோ அவை பற்றி அரசு கவலைபடவில்லை. ஆனால் வழிகாட்டி மதிப்பிற்கு முத்திரைத்தாள்கள் வாங்கிவிட வேண்டும். 4. வழிகாட்டி மதிப்புகளை கிராமப்பகுதிகளில் புல எண்கள் அடிப்படையிலும், நகரப்பகுதிகளில் தெரு பெயரின் அடிபடையிலும் நிர்ணயிக்கின்றனர். 5. கிராமப்பகுதிகளில் கிராம நத்தம், & மனைக்கட்டு பகுதிகளில் வழிகாட்ட

உங்கள் நிலம் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டால்… முக்கியமாக செய்ய வேண்டிய 16 காரியங்கள்…

Image
உங்கள் நிலம் மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டால்… முக்கியமாக செய்ய வேண்டிய 16 காரியங்கள் 1. உங்களிடம் இருக்கும் அனைத்து ஆவணங்களையும் கூர்மையாக சரிபார்த்து அதில் ஏதாவது குறை இருந்தால், வேறு ஏதாவது கூடுதல் ஆவணங்கள் தேவைப்பட்டால், உடனடியாக அதனை நேர் செய்ய செயலாற்ற வேண்டும். அதன் மூலம் எதிரி தரப்பு ஆவணங்கள் பலமுள்ளவையாக்கப்படுவது தவிர்க்கப்படும். 2. இடம் சமந்தமாக, உள்ளாட்சி வருவாய், மின்சாரம், குடிநீர், சாலை, அங்கீகாரம் போன்ற துறைகளில் எதிரி எதனையும் செயல்படுத்த கூடாது என்று ஆட்சேபனை கடிதம், பதிவுதபாலில் அனுப்பபட வேண்டும். 3. எதிர் தரப்பினரிடையே இருக்கும் , அல்லது அவர்கள் கூறும் அனைத்து ஆவணங்களையும் , சார்பதிவகம், இணையதளம், சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் போன்ற இடங்களுக்கு சென்று அந்த ஆவணங்களின் நகல்களை கைப்பற்றுதல் வேண்டும். 4. எதிர் தரப்பினர் ஆவணங்களை கூர்ந்து படித்து, எங்கு அவர்கள் ஆவணங்களை திருத்தியோ (அ) நேர் செய்தோ, உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 5. எதிர் மனுதாரர் நம்முடைய நிலத்தை ஆக்கிரமிக்க காரணமான MOTIVE – யை கண்டுப்பிடிக்க வேண்டும். நாம் பலவீனமாக ( கல்

10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து…

Image
10 வருடம் ஆகிறது இன்றோடு எனது வியாபாரத்தின் அலுவலகம் திறந்து, அதற்கு முன் 5 ஆண்டுகள் ரோட்டு கடைகளிலும் வீட்டிலும் அலுவலகம் வியாபாரத்தை நடத்தினேன். இன்று மும்பை;பெங்களூர்,சென்னை,கோயம்பத்தூர்,நெல்லை என வளர்ந்துள்ளது..நன்றியுடன் இந்நாளை கழிக்கிறேன். படத்தில் என் அன்பு ஆசிரியரும்,தாயாரும்..அலுவலகம் திறக்க ..பின்புறம் நம்ம Ravindran Pothiyamalai தொடர்புக்கு : 9841665836 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் ) இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3 #மும்பை #பெங்களூர் #சென்னை #கோயம்பத்தூர் #நெல்லை #chennai #business #office #coiambatore #praptham #realtors

ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிப்பு! மனை விற்பனை முகவர்கள் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்…

Image
ரியல் எஸ்டேட் சட்ட விதிகள் அறிவிப்பு மனை விற்பனை முகவர்கள் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் சென்னை: ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்ட விதிகள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மனை விற்பனை முகவர்கள் கட்டாயம் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்விதிகள் நடந்து வரும் மற்றும் எதிர்கால திட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை மத்திய அரசு கடந்த மே 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை (முறைப்படுத்துதலும் மேம்படுத்துதலும்) விதிகள் 2017 உருவாக்கியுள்ளது. அதன்படி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது அவரது பிரதிநிதி, செயலாளர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் செயலாளர், சட்டத்துறை ஆகியோர் அடங்கிய தேர்வுக்குழு ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும் குழுமம்/தீர்ப்பாயத்தின் இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிய பரிந்துரைகளை வழங்கும். அதுவரை இடைக்கால ஏற்பாடாக வீட்டுவசதி மற்று

முத்திரை தாள்கள் – தெரிந்து கொள்ள வேண்டிய 30 விஷயங்கள்

Image
1. முத்திரைத் தாள்கள் என்பது சொத்துக்கள் பரிமாற்றங்கள் நடக்கும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய வரியை முத்திரைத் தாள்களாக நாம் வாங்கி அதில் விற்பனை, தானம், செட்டில்மெண்ட் போன்ற பத்திரங்களை அந்த நாளில் எழுத்தி கையொப்பமிட்டு, பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய கொடுக்கிறோம். 2. இந்திய முத்திரைத்தாள்கள் சட்டம் 1899 என்ற சட்டம் மேற்படி முத்திரை தாள்கள் அதன் நடவடிக்கைகளை ஏற்படுத்துகிறது. 3. முத்திரைத் தாள்கள் & முத்திரை ஸ்டாம்கள் மூலமாக அரசு தங்களுடைய வரியை வசூலிக்கின்றன. 4. அஞ்சல்துறை தவிர்த்த ஸ்டாம்களை முத்திரைதாள் ஸ்டாம்ப்போடு எக்காரணம் கொண்டும் குழப்பி கொள்ள கூடாது. 5. முத்திரைத்தாள் & ஸ்டாம்கள் இந்தியாவில் நாசிக் & ஹைதராபாத்தில் மட்டும் அச்சிட்டு இந்தியா முழுவதும் சப்ளை அனுப்பபடுகிறது. 6. தமிழகத்தில் இவை கருவூலம், சார் கருவூலம் வழியாக முத்திரைதாள் விற்பனையாளர்கள் மூலமாக பொது மக்கள் கையில் தவழ்கிறது. 7. முத்திரைத்தாள் A4 Size அகலமும் , Fullsape பேப்பருக்கு கொஞ்சம் குறைவான உயரத்தில் , 3 ல் ஒரு பங்கில் இந்திய அரசு முத்திரை அச்சிடப்படும். 2 பங்கு நாம் நம்முடைய கிரைய விவர