Posts

Showing posts from October, 2021

பூமிதான நிலங்களுக்கு ரெவின்யூ பட்டா வழங்கிட வேண்டும்!(பார்ட்2). சா.மு.பர...

Image

வேம்பார் அருகில் மனை பிரிவு அமைப்பதற்கான களபணி!!!

Image
   வேம்பார் அருகில் மனை பிரிவு அமைப்பதற்கான களபணி!!! சொத்தை உயர் மதிப்பாக்குவது அதனை பாதுகாப்பது அதன் ஆவணங்களை பாதுகாப்பது எல்லாம் Creative ஆன வேலை! பலர் பிரச்சனை வந்தவுடன் அதனை சரி செய்வார்கள் (Survival mode) ஆனால் என் முன்னே இருக்கிற சகோதரர்கள் super creative ஆக இருப்பவர்கள்!இது போல் எல்லா நடுத்தர மக்களும் ஆக வேண்டும். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #land #problem #issue #document #creatvie #survival #mode #field #solve #asset

விழுப்புரம் நகரத்தில் 30.10.2021 அன்று சொத்து சிக்கல்களுக்கான வழிகாட்டுத...

Image

சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!கள்ளக்குறிச்சி முகாம்

Image
 சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!கள்ளக்குறிச்சி முகாம் நிலம் உங்கள் எதிர் காலம் மக்கள் நல அறகட்டளை மாதந்தோறும் இரண்டாம் நகரங்களில் நில சிக்கல்களில் திக்கு தெரியாமல் நிற்பவர்களுக்கு வழி காட்டுதல் முகாமை குறைந்த கட்டணத்தில் நடத்துகிறது! கள்ளகுறிச்சி,சோளிங்கர் ஆகிய இரு இடங்களிலும் நடத்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நபர்கள் நிதிகொடை அளித்து ஊக்கபடுத்தி் இருக்கிறார்கள்!அவற்றின் வரவு செலவு கணக்குகளை நாங்கள் ஏற்கனவே நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை டெலிகிராம் குழுவிலும் www.paranjothipandian.in இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறோம். மேற்படி உறுதுணையாக நின்ற தோழர்களுக்கு நன்றி கடிதங்கள் அனுப்பவிருக்கிறோம்.அந்த கடிதங்களை ஆன்லைனிலும் வெளியிடுகிறோம் நீங்கள் கூட நிற்கிறீர்கள் என்ற ஆதரவு அதிகமாக உழைக்க தெம்பை தரும் நிலத்தின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடயை வேண்டும் என்ற இலட்சிய பயணத்தில் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 / 9962265834

சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல!

Image
 சமூக பொறுப்புணர்வாளர்களுக்கு நன்றிகள் பல! நிலம் உங்கள் எதிர் காலம் மக்கள் நல அறகட்டளை மாதந்தோறும் இரண்டாம் நகரங்களில் நில சிக்கல்களில் திக்கு தெரியாமல் நிற்பவர்களுக்கு வழி காட்டுதல் முகாமை குறைந்த கட்டணத்தில் நடத்துகிறது!   கள்ளகுறிச்சி,சோளிங்கர் ஆகிய இரு இடங்களிலும் நடத்த நிகழ்ச்சிக்கு பல்வேறு நபர்கள் நிதிகொடை அளித்து ஊக்கபடுத்தி் இருக்கிறார்கள்!அவற்றின் வரவு செலவு கணக்குகளை நாங்கள் ஏற்கனவே நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை டெலிகிராம் குழுவிலும் www.paranjothipandian.in இணையத்திலும் வெளியிட்டு இருக்கிறோம்.     மேற்படி உறுதுணையாக நின்ற தோழர்களுக்கு நன்றி கடிதங்கள் அனுப்பவிருக்கிறோம்.அந்த கடிதங்களை ஆன்லைனிலும் வெளியிடுகிறோம் நீங்கள் கூட நிற்கிறீர்கள் என்ற ஆதரவு அதிகமாக உழைக்க தெம்பை தரும் நிலத்தின் பயன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடயை வேண்டும் என்ற இலட்சிய பயணத்தில்     நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9841665836 / 9962265834  

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழங்கபடாமல் இருக்கின்ற பூமிதான நிலங்களும் அதனை ...

Image

சோளிங்கர் முகாம் மறுநாளும் தொடர்ந்த கதை!

Image
  சோளிங்கர் முகாம் மறுநாளும் தொடர்ந்த கதை! நிலம் சம்மந்தபட்ட சந்தேகங்கள் சிக்கல்கள் வழிகாட்டுதல் முகாம் ஒரு நூலாசிரியராக பல்வேறு களபணிகள் பார்த்த அனுபவத்தில் வழிகாட்டுதல்களை முகாம் போட்டு சொல்லி கொடுத்து வருகிறோம். சோளிங்கர் முகாமில் வழிகாட்டுதல் முடிக்க முடியாதவர்கள் மறுநாள் தங்கும் அறைக்கு வாருங்கள் என்று சொல்லி இருந்தேன்!அதிகாலை ஆகும்பொழுதே உங்களை காண நிறைய பேர் காத்து இருக்கிறார்கள் என்று விடுதி வரவேற்பாளர் இன்டர் காமில் சொன்னார் ! அப்படியே பல்விளக்காமல் வேலையில் உட்கார்ந்தது தான் மாலை 4 மணிவரை 8 பேர் வரை ஆலோசனை வழிகாட்டுதல் வழங்கினேன்! அண்ணன் பாட்டாளி மக்கள் கட்சி வேலுர் மாவட்ட இளைஞரணி திரு எம் ஆர் கே இராமகிருஷ்ணன் அவர்கள் என்ன மண்டைண்ணா இது சும்மா பேப்பர பார்த்துட்டு ரெஸ்ட் கொடுங்க என்று அன்பாக பிரியாணி உணவு கொண்டு வந்து இருக்கிறேன் என்று சொன்னவுடன் அட ஒரு மனுசன் பசியால் கஷ்டபடுவதை ஒரு நபராவது புரிந்து கொள்கிறாரே என்று மகிழ்சசி பிறகு புத்துணர்ச்சியாகி உணவருந்து ஒய்வெடுத்து மாலை கள பணிக்காக சுற்றுவட்டாரம் சுற்றி வந்து சேர்ந்தோம் அதன்பிறகு இருந்த ஆலோசனைகளை விடிய விடிய வாசித்து குறப

பழைய பத்திரங்களில் பரப்பை கணக்கிட உதவும் பின்ன எண்கள் பற்றி-சா.மு.பரஞ்சோ...

Image

பூமிதான நிலத்திற்கு ரெவின்யூ பட்டா கொடுத்தல் வேண்டும்! (பார்ட்1)-சா.மு.ப...

Image

சொகுசு குடியிருப்புகளுக்கு கண் திருஷ்டி பிராண்ட் ஆயிட்டியே அங்குலி மாலா குருவே!

Image
  சொகுசு குடியிருப்புகளுக்கு கண் திருஷ்டி பிராண்ட் ஆயிட்டியே அங்குலி மாலா குருவே! நம்ம ரியல் எஸடேட் காரர்கள் பலர் புத்தரை அவரின் போதனைகளை மெதுவாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஆரம்பித்து விட்டனர்! நெல்லையில் மயன் பிலட்ர்ஸ் புத்தரை தன் கட்டுமானங்களில் வைக்கிறார்! ஜென் கார்டன்கள் என்று பல பேர் வைத்துகொண்டும் விற்று கொண்டும் இருக்கிறார்கள்! அதிக கட்டணம் வாங்கும் சலூன்களில் புத்தர் சிரிக்க ஆரம்பித்து விட்டார் இந்த படம் கோவையில் ஒரு அடுக்கு மனையின் முன் புத்தர் திரிஷ்டி கழிக்க வைத்து இருக்கிறார்கள்! என்னை பார் நான் தியானித்து கொண்டு இருக்கிறேன் நீயும் தியானி!அட்ட தீப பவ உனக்குள் நீ ஓளியாவாய் என்று தான் சொல்லி கொடுத்து இருக்கிறார்! புத்தருக்கு தியானமண்டபம் நன்று! பில்டர்கள் மக்கள் பயனபாட்டுக்கு சிறிய தியான மண்டபமும் உருவாக்கி கொடுத்தால் சிறப்பாக இருக்கும் !விபாசான மிஞ்சிய தியானம் எங்கும் இல்லை அதனைதான் வேறு வேறு மாதிரி உருட்டி விற்று கொண்டு இருக்கிறார்கள் சுவாமிஜிக்கள்! சாரி புத்தருக்கும் நீ குரு! அங்குலி மாலாவுக்கும் நீ குரு! எது எப்படியோ ரியல் எஸ்டேட் காரர்களுக்கு உன் பிம்பம் வைக்க வேண்டும் என்

இனி அமேசான் இணையதளத்திலும் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 கிடைக்கிறது!

Image
   இனி அமேசான் இணையதளத்திலும் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 கிடைக்கிறது! கடந்த சில மாதங்களாக நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 கிடைக்கவில்லை பாகம் 1 ஐ மட்டும் நூலகம் வாங்கி விட்டதால் இந்த நெருக்கடி அது மட்டும் இல்லாமல் நிறைய பிழைதிருத்தம் செய்து மேம்படுத்த வேண்டி இருந்தது எல்லாம் சரிசெய்து மூன்றாம் பதிப்பு வெளிந்து விட்டது! இப்பொழுது பாகம் 2 மட்டும் வாங்கியவர்கள் பாகம் 1 வந்து விட்டது அதனையும் வாங்கி படியுங்கள்!புதிய நபர்கள் இரண்டு பாகங்களையும் வாங்கி படியுங்கள்! அன்பர்களுக்கு பரிசளியுங்கள்! நிலத்தின் அறிவை கடத்தி நிலத்தின் வளத்தை பெறுவோம்!!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #paranjothipandian #auhtor #trainer #writer #consulting #nilam_ungal_ethirkalam #book #gift #amazon #problem #realestate #property

நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் 2 முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கபட்டு கொண்டிருக்கிறோம்

Image
   நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 மற்றும் 2 முன்பதிவு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கபட்டு கொண்டிருக்கிறோம் நிலம் உங்கள் எதிர் காலம் பாகம் 1மற்றும் பாகம் 2அச்சு புத்தகங்கள் மூன்றாவது பதிப்பாக சலுகை விலையில் முன் பதிவு திட்டத்தை அறிவித்து இருந்தோம் ! இரண்டு புத்தகமும் 1100 பக்கங்கள் விலை ரூ 1100 என்று இருந்ததை முன் கூட்டியே முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ 650 என்று அறிவித்து இருந்தோம் நூற்றுக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து காத்து இருந்தார்கள் -அன்னாருக்கு எல்லாம் புத்தகம் அனுப்பி வைத்து கொண்டு இருக்கிறோம்! கற்றுகொள்வது !வாசிப்பது,பகிர்வது போன்றாவற்றால்தான் அறிவை பெற முடியும் என் கடமை கடைவிரிப்பது கொள்வது உங்கள் கடமை! சில மாதங்களில் 4வது பதிப்பை கொண்டு வரவேண்டும் உங்கள் ஆதரவுடன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836/9962265834 #nilam_ungal_ethirkalam #author #trainer #writer #consuting #paranjothipandian #land #problem #issue #property #development

மதுரை பதிப்பகம் தின மலருக்கு நன்றி

Image
   நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 2 பற்றி நல் விமர்சனம் கொடுத்த மதுரை பதிப்பகம் தின மலருக்கு நன்றி!!! இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில் முனைவர் 9841665836/9962265834 #dinamalar #author #trainer #consulting #paranjothipandian #book #nilam_ungal_ethirkalam #land #problem #publishing

ஆர் கே.பேட்டை தாண்டினா ஆந்திரா! ஆனால் ஆர் கே பேட்டையே தமிழாந்திரா!

Image
  ஆர் கே.பேட்டை தாண்டினா ஆந்திரா! ஆனால் ஆர் கே பேட்டையே தமிழாந்திரா! நிலத்தின் நலமறிய ஆவல் -2 கருத்தரங்கு சோளிங்கரில் நடந்தது அதன் அருகில் இருக்கின்ற ஊர் தான் ராமகிருஷ்ணராஜு பேட்டை தமிழகத்தின் பின் தங்கிய மக்கள் வசிக்கும் புகுதி சிறிய மலை கிராமங்கள் 10 இருக்கும் அதனைவிட்டால் இருபது கிராமங்கள் தான் இந்த ஆர் கே பேட் தாலுகாவில் !இப்பொழுதுதான் இதனை ஒரு தாலுகா தலைமை நகரம் ஆக்கி இருக்கிறார்கள். அப்படியே 2 கி மீட்டர் தாண்டினால் ஆந்திரா மாநிலம் வரவேற்கிறது. இந்த பகுதி தமிழ் சும்மா சொல்ல கூடாது டோன் இழுப்பு எல்லாம் வேறு ரகம்! இருக்கிறது எனபதை கீது என்கிறார்கள்! தமிழ் வன்னியகவுண்டர்கள் எல்லாம் ரெட்டி பட்டத்தோடு உலாவருகிறார்கள்! ஏற்கெனவே ஊத்துகோட்டை பக்கம் சென்ற பொழுது ஆற்காடு முதலியார் எல்லாம் ரெட்டி பட்டம் போட்டு இருந்ததை பார்த்தேன் மெட்ராஸ் பிரசிடென்சி காலத்தில் இந்த பகுதி கார்வெட்நகர் ஜமீன் பகுதியில் இருந்தது! நிலங்களை எல்லாம் பழைய பைமாஷ் முறைபடி ஜமீன் சர்வே செய்து வைத்து இருந்தார்கள்! பத்திரங்கள் எல்லாம் தெலுங்கில் தான் இருந்து இருக்கிறது! செட்டில்மெண்டு ஆவணங்கள் 1958 இல் இருந்து தொடங்குகிறத

எட்டுவழி சாலைதான் வேண்டாம்பா நான்குவழி சாலை போடுங்கப்பா?

Image
   எட்டுவழி சாலைதான் வேண்டாம்பா நான்குவழி சாலை போடுங்கப்பா? திருவண்ணாமலை டூ அரூர் சாலையில் சாத்தனூர் பெரிய டேமில் இருந்து வரும் தண்ணீருக்காக ஒரு பிக் அப் டேம் இருக்கிறது! இந்த டேமிற்கு பள்ளி மாணவர்கள் school tour இன் பொழுதும் கல்லூரி காதலர்கள் ! ஞாயிற்றுகிழமை குடும்பஸ்தர்கள் எல்லாம் வந்து போவார்கள். குட்டி சுற்றுலா தளம் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். இந்த பகுதியில் கொஞ்சம் நிலங்கள் என் நிறுவனத்தில் இருக்கிறது! ரொம்ப நாள் கழித்து அதனை பார்க்க நானும் என் பார்ட்னர் இரவீந்திரனும் சென்று இருந்தோம் பக்கத்து ஊரான தண்டராம்பட்டு கொஞ்சம் மாற்றம் தெரிந்து இருக்கிறது !சில கல்லூரி விழுந்து இருக்கிறது. இந்த சாலையை தான் எட்டு வழி சாலை ஆக்க திட்டமிட்டு இருந்தார்கள்! அந்த எட்டு வழி சாலை அரசியல் காரணங்களால் வரவில்லை! சாலை போடுவதில் கூட நாட்டில் அரசியல் இருக்கிறது !பல பகுதிகளில் பயணிக்கும் பொழுது ஊர் தெரு வில் மேலமட்டு மக்கள் இருக்கின்ற தெருவை பஸ் போகும் அளவுக்கு பெரிய சாலை ஆக்கி அதில் பஸ் விட்டு ரியல்எஸ்டேட் மதிப்பை ஏற்றிவடுவார்கள். அது சேரியாக நலிந்த பரிவினர் பாய்மார்கள் வசிக்கும் கிராமங்களில் சாலையை கிர