Posts

Showing posts from November 4, 2020

சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு

Image
  சென்னை-எண்ணூர் அருகில் நந்தியம்பாக்கம் கிராமத்தில் ஆர்டிஐ 2j ஆய்வு தாத்தா சொத்துக்களை அப்பா அம்மாக்கள் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். இடங்களுக்கு எந்த எந்த சர்வே எண்கள் எங்கு எங்கு இருக்கிறது போன்ற விவரங்கள் எதுவும் தெரியாது. மேற்படி கண்டுக்காமல் விட்ட இடங்கள் எல்லாம் புதிய ஆவணங்களை உருவாக்கி சம்மந்தமில்லாதவர்கள் ஆண்டு அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்ற நிலையில் தாத்தா பாட்டி பெயர்கள் அ பதிவேட்டில் இருக்கிறதா என்று தேடிபார்க்க RTI யில் 2j மனு போட்டு இருந்தோம் .இரண்டு மணி நேரம் முழு கணக்கையும் தீர பார்த்து நமக்கு தேவையான குறிப்புகளை எடுத்து கொண்டோம். இப்பொழுது இதிலிருந்து நூல்பிடித்துகொண்டே சென்றால் கிடைக்கும் உறுதியான தகவல்கள் அடிப்படையில் சொத்து மீட்கும் படலம் ஆரம்பித்துவிடும். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன், எழுத்தாளர் தொழில்முனைவர், www.paranjothipandian.in. #rti #2j #vao #nanthiyambakkam #asset #சொத்துமீட்டல் # property

நில பிரச்சினையை படமாகவே வரைந்துவிட்டார்கள்!!!

Image
 நில பிரச்சினையை படமாகவே வரைந்துவிட்டார்கள்!!! தேனி மாவட்டத்தில் ஒரு பங்காளிகளுக்குள் நில சிக்கல் பாகம் பிரிவினை செய்யாமல் பல வருடங்களாக தனிதனியாக நின்று அனுபவித்து வருகிறார்கள்.யுடிஆரில் ஒரு பங்காளி பெயர் மட்டும் ஏறிவிட்டது அந்த வாய்ப்பை பயன்படுத்தி பல கிரய பத்திரங்களை உருவாக்கி விட்டனர் பொது பாத்தியதை வழி நீர்கால் எல்லாம் இப்பொழுது உரிமை இல்லை என்று தடுக்கின்றனர். இந்த சிக்கலை சரி செய்ய முடிவெடுத்த படத்தில் உள்ள சகோதரி எல்லா நில ஆவணங்களையும் ஆராய தொடங்கிய பிறகுதான் பங்காளிகள் நன்றாக பேசிகொண்டே இப்படி இரகசியமாக நிறைய தில்லுமுல்லுகள் பத்திரங்களில் செய்து இருக்கிறார்கள் என்று தெரிய வந்து இருக்கிறது. இந்த பிரச்சினை வருவதற்கு முன் சர்வே எண் என்றால் என்னவென்றே தெரியாது சகோதரிக்கு அதன்பிறகு யூடியூப் சேனல் புத்தகம் வக்கீல் என்று பலவகையில் நிலங்களை அதன்அடிப்படைகளை கற்று கொண்டு இருக்கிறார். அவரின் எதிர்மனுதாரர் உருவாக்கிய அனைத்து பத்திரங்களின் சொத்துவிவரங்களையும் தனி தனி வரைபடமாக ஒரே பிளானில் வரைந்து ஒவ்வொரு பத்திரத்தில் நடந்த தில்லுமுல்லுகளை தனிதனியாக வரைபடமாக வரைந்து இருந்தார். இதுவரை நிலசிக

பாண்டிசேரி நிலங்களை ஒருங்கிணைத்த மூன்று பிரெஞ்சு தலைவர்கள்-Crash Course

Image
 பாண்டிசேரி நிலங்களை ஒருங்கிணைத்த மூன்று பிரெஞ்சு தலைவர்கள்-Crash Course ழா பெல்லான் என்ற பிரெஞ்சுகார் செஞ்சியில் அப்பொழுது ஆட்சியில் இருந்த சுல்தான்களின் கீல்லேதாரர் நசீர் கான் அவர்களின் அழைப்பிற்கு இணங்க இப்போதைய பாண்டிசேரியின் கடற்கரையோரம் சிறு பண்டகசாலை மற்றும் வணிக மையத்தை ஆரம்பித்து இருந்தார். அவரிடம் உதவியாளராக இருந்து பின்னால் பொறுப்பிற்கு வந்த பிரான்சுவா மார்ட்டின் என்ற பிரெஞ்சு தலைவர் இப்போது இருக்கும் பாண்டிசேரியை ஒயிட்டவுன் பிளாக் டவுனாக இரண்டாக பிரித்து வடிவமைத்தார். இப்பொழுது இருக்கும் நீண்ட நேரான தெருக்கள் அகன்ற சாலைகள் முறையான கால்வாய் ஆகியவற்றை பிரான்சுவா மார்ட்டின்அமைத்தார்.அதே காலகட்டத்தில் சென்னையிலும் பிரிட்டிஷாரர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றி நகரை உருவாக்கினார்கள்.ஜார்ஜ் கோட்டை இருந்த பகுதி ஒயிட் டவுன் என்றும் அப்பொழுது அதனை சுற்றி இருந்த முதலியார் செட்டியார் பிராமணர் குடியிருப்புகளை பிளாக் டவுன் என்றும் அழைத்தார்கள். இன்றும் அந்த பிளாக்டவுனை ஜார்ஜ் டவுன் என்று சொல்கிறோம். பிரான்சுவா மாரட்டின் அவர்கள் இப்பொழுது பூங்காவாக இருக்கும் இடத்தில் தான் அப்போதைய செயி

கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம்!!!

Image
 கருப்புசட்டை -தனித்து நிற்கும் வீரம் அண்ணன் திருநெல்வேலி இராமகிருஷணன் அர்பணிப்புள்ள ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் அடிக்கடி தொடர்பிலேயே இருப்பார். அனைத்து தொழில் சார்ந்த விஷயங்களை பகிரந்து கொள்வார். கருப்பு சட்டை பற்றியும் ஒரு வாட்ஸப் செய்து போட்டு இருந்தார். உங்களுக்கு கருப்பு சட்டை சிறப்பாகதான் இருக்கறது. கருப்பு சட்டை ஒரு தனி அடையாளம் பிஸினஸ் உலகில் ஸடீவ் ஜாப்ஸ் தன்னை கருப்பு சட்டையிலே காண்பிப்பார். ஆப்பிள் கம்பெனியில் கருப்பு வண்ணம் இல்லாமல் இருக்காது. கருப்பு richness மற்றும் stand alone, brave போன்ற தன்மைகளை பிரதிபலிக்கும். அதனால் தொடர்ந்து கருப்பணியுங்கள் தலைமைத்துவத்துடன் தொழில் செய்யுங்கள். இப்படிக்கு, சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் www.paranjothipandian.in

மனிதர்கள் பல விதம்!!!

Image
    மனிதர்கள் பல விதம் கடந்ந வாரம் கடலூருக்கு கீழே தஞ்சை பள்ளதாக்கில் அதிராம்பட்டினம் வரை சென்று வந்ததில் திரு. நாகேஸ்வரம் -கும்பகோணம் பகுதிகளில் சொத்து சிக்கலகளுக்காக களபணி செய்தேன் அனைவருமே நல் விருந்தோம்பி வழி அனுப்பி வைத்தனர்.சந்தித்த ஒவ்வொருவரும் சமூகத்தின் ஒவ்வொருவிதமான வார்ப்பு ஒவ்வொருவருக்கும் வேறு வேறு வகையான நில சிக்கல்கள், ஆனால் சிக்கலை அணுக தெரியாமல் உணர்ச்சி கொந்தளிப்புகளால் தங்கள் மனதை குழப்பிகொள்கின்றனர். மனிதர்களின் அடிப்படை பலவீனமான பண்புகள் அப்படியே இருக்கிறது. நிலசிக்கல் தாண்டி அவர்களின் மன தெளவிற்காகவும் பேச வேண்டி இருக்கிறது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in #man #different #social #service