Posts

Showing posts from November 8, 2021

வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!

Image
  வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!   கலந்துரையாடல் வரும் நில சிக்கல் வாடிக்கையாளர்களிடம் முன் கூட்டியே சொல்லி விடுவேன் அண்ணே வேலைக்கான சேவைகட்டணம் கூட முன்னே பின்னே பார்த்துக்காலம் ! நல்ல சோறு நல்ல தூக்கம் எனக்கு முக்கியம் கடும் அலைச்சலில் வருவேன் சோறும் ரூமும் கொடுத்திடுங்க என்று   இதெல்லாம் முதலில் சொல்லாமல் இருந்த பொழுது அன்பு வாடிக்கையாளர்கள் என்னை பஸ் ஸ்டாண்டில் படுக்க வைத்து விடுவார்கள்! சுகாதாரமற்ற உணவுகளில் விட்டு விடுவார்கள் சில நேரங்களில் சோறும் கிடையாது அப்படியே விட்டு விடுவார்கள்   ஆனால் இப்பொழுது எல்லா வாடிக்கையாளரிடமும் கள பணிக்கு வந்தால் நமக்கு சோறுதான் முக்கியம் என்று சொல்லிவிடுவேன்! அதிலும் ஹோட்டலில் வாங்கி கொடுப்பார்கள் அதனை நான் மதிக்கிறேன்! ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில் ஒரு சுகாதாரம் இருக்கிறது அது எப்பொழுதாவது கிடைக்கும்   இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டிய ஆள் ஒருவர் இருக்கிறார் திரு .ரமணன் -நாகர் கோவில் அவர் வீட்டில் வாழை இலை விரித்து சோறு போட்டார். அதேபோல் இராமநாதபுரம் அடுத்த திருப்பாலைகுடி சேர்ந்த இரவிசந்திரன் அவ