Posts

Showing posts from December 16, 2025

இனாம் நிலங்களுக்கு இனாம் கமிஷனர் என்று ஒருவர் இருந்தார் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

Image
  இனாம் நிலங்களுக்கு இனாம் கமிஷனர் என்று ஒருவர் இருந்தார் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்! 1) இனாம் நிலங்களுக்கு வரி கொடுக்க தேவையில்லை ஒரு சில இடங்களில் சிறிய அளவில் மட்டுமே வரிகள் விதித்தி ருப்பார்கள். இதனைப் பயன்படுத்தி இந்த நாட்டில் இருந்த பல நிலக்கிழார்கள் எங்களது நிலமும் இனாம் நிலம் தான் அதனால் நாங்களும் வரி கொடுக்க மாட்டோம் என்று வெள்ளையர்களிடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு ஏற்றவாறு அந்த காலத்து கரணங்களும் அதாவது அந்த காலத்து கிராம நிர்வாக அதிகாரிகளும் அந்த இனாம்தாரர்களின் சொந்தக்காரர்களாக இருப்பதால் இனாம் இல்லாத நிலங்களையும் இனாம் நிலங்கள் என்று கணக்கு எழுத ஆரம்பித்து விட்டனர். இதனால் அதிக அளவில் வருவாய் கசிவு ஏற்படுவதை உணர்ந்த வெள்ளையர்கள் இனாம் நிலங்களை கணக்கெடுக்க ஆரம்பித்து விட்டனர். 2) அப்படி கணக்கெடுப்பதற்கும் அது இனாம் நிலம் தான் என்று உறுதிப்படுத்துவதற்கும் அரசின் சார்பில் ஒரு அதிகாரி தேவைப்பட்டார் அந்த அதிகாரியை தான் இனாம் கமிஷனர் என்கிறோம். இனாம் கமிஷனர் என்பவர் ஒரு நீதிபதி அல்ல ஆனால் அரசின் முழு பிரதிநிதி ஆவார். 3)இனாம...

தேசிய எஸ்சி எஸ்டி இயக்குனரை சந்தித்து தருணம்

Image
  தேசிய எஸ்சி எஸ்டி இயக்குனரை சந்தித்து தருணம் திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டம் மேப்பதுறை கிராமம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் தண்டலம் கிராமத்தில் பஞ்சம நிலத்தை பொதுநலமாக வகைப்படுத்தி இருப்பது எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலருக்கு பஞ்சம தரிசு என்று பதிவு செய்ய கோரி மனு நீண்ட நாள் நிலுவையில் இருக்கின்றது தேசிய எஸ்சி எஸ்டி ஆணையத்தின் (Government of India, National Commission for Scheduled Castes(A Constitutional Body set up under Article 338 of the Constitution of India) (Jurisdiction: Tamil Nadu & Pondicherry)) தமிழகத்தின் இயக்குனர் டாக்டர் எஸ் ரவிவர்மன் அவர்களை நேற்று (11.12.2025 )சந்தித்து திருவண்ணாமலை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டினேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை 098416 65836 See less

இனாம் நில நிர்வாக முறையில் என் பிரான்சைஸ்மென்ட்(Enfranchisement) என்றால் என்ன?

Image
  இனாம் நில நிர்வாக முறையில் என் பிரான்சைஸ்மென்ட்(Enfranchisement) என்றால் என்ன? 1) இனாம் நில சிக்கலில் உள்ளவர்கள்:மைனர் இனாம் நிலம் தற்பொழுது வரை வைத்திருப்பவர்கள் கற்றறிந்த வழக்கறிஞர்கள் சட்ட ஆர்வலர்கள் அனைவரும் தாசில்தார் செட்டில்மெண்ட் ரெக்கார்டு தீர்ப்புகளை படித்திருப்பீர்கள் இந்த இனாம் என்பிரண்ட்சைஸ்ட் (Enfranchisement )செய்யப்பட்டது அல்லது இது அன்என்பிரான்சிஸ்ட் (Unenfranchisement) ஆக இருக்கிறது என்ற வார்த்தையை படித்திருப்பீர்கள் அல்லது கேள்வி மட்டும் இருப்பீர்கள் 2).இது ஒரு மிக முக்கியமான சட்ட வார்த்தை மிக ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியது அதனால் இதனை சாமானியர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுகிறேன் நேற்று நான் எழுதிய Resumption சம்பந்தமான கட்டுரைக்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அதாவது1) Resumption (ரிசம்ப்ஷன் என்பது சேவை செய்யாதபோது அரசு அல்லது மன்னர் நிலத்தை மீண்டும் எடுத்து கொள்ளும் அதிகாரம் என்று புரிந்து கொள்ளலாம் 3)அதேபோல் Enfranchisement என்பது இனாம் நிலத்திற்கு இருந்த “பறிமுதல் ஆபத்து”, “சேவை கடமை” போன்ற கட்டுப்பாடுகளை நீக்கி,அதனை சு...

இனாம் நிலத்தில் Resumption என்றால் என்ன?

Image
இனாம் நிலத்தில் Resumption என்றால் என்ன?   1) இனாம் நில நிர்வாக ஆவணங்களில் resumption என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு இருக்கும். பெரும்பாலும் எஸ் ஆர் ரெக்கார்டுகளில் செட்டில்மெண்ட் தாசில்தார் அவர்கள் கொடுக்கின்ற தீர்ப்புகளில் இந்த வார்த்தை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது ஒரு சட்ட வார்த்தை தான் ஆனால் ஒரு நீண்ட ஆழமான விஷயங்கள் கொண்ட செய்தியை உங்களுக்கு தரும். 2)இனாம் நிலம் வழங்கப்பட்ட பொழுது இருக்கின்ற நிபந்தனையை ரத்து செய்தலை Resumption என்று சொல்வார்கள். இனாம் என்றால் வரி விலக்கு என்று அர்த்தம் ரிசெம்ப்ஷன் என்றால் முழு நில வரியை (Full Assessment) விதித்தல் என்று அர்த்தம். Actual possession மாற்றப்படாவிட்டாலும், இனாம் வழங்கும்பொழுது போடப்பட்ட நிபந்தனை முடித்தால் Resumption என்று சொல்லலாம் சில நேரங்களில் நிலத்தை அரசு திரும்ப எடுத்துக் கொள்ளுதல் நேர்வயும் சேர்த்து ரிசப்ஷன் என்று சொல்வார்கள்.(Unide Rajah Vs Pemma Swami (7 M.I.A 128)) 3) சில நேர்வுகளில் முழுமையான Resumption என்று சொல்லி நிலம் பறிமுதல் செய்து இருப்பார்கள்.சில நேர்வுகளில் வரி free யை ரத்து செய்த...

தர்மிலா இனாம் நிலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்!

Image
  தர்மிலா இனாம் நிலம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள்! 1)தமிழகத்தில் இனாம் நிலங்களில் தர்மிலா இனாம் நிலம் என்று ஒன்று இருந்தது. இந்த இனம் எஸ்டேட் கிராமங்களில் மட்டுமே இருக்கும் அதாவது ஜமீன் கிராமங்களில் மட்டுமே இருக்கின்ற இனாம் நிலமாகும் அதாவது தர்மம் என்ற வார்த்தைக்கு பொது மக்களுக்கான சேவை என்று எடுத்துக் கொள்ளலாம் தர்மிலா என்றால் பொது மக்களுக்கானது அல்ல என்று புரிந்து கொள்ளலாம். இந்த இனாம் ஜமீன்தார்களுக்கு யார் சேவை செய்கிறார்களோ அவர்களுக்காக ஜமீன்தார் அவர்களால் வழங்கப்பட்ட நிலமாகும் 2)ஜமீன்தார் அவர்களுக்கு மருத்துவம்,மாளிகை காவல் வேட்டை, பிரயாணம் பாதுகாப்பு, பல்லக்கு தூக்குதல்,ஜமீன்தார் விழாக்கள், குடும்ப சார்ந்த சேவைகள் செய்பவர்களுக்கு ஜமீன்தாரால் கொடுக்கப்படுகின்ற வரி இல்லாத நிலம். இந்த தர்மிலா இனாம் 3) இந்த நிலங்கள் எஸ்டேட் ஒழிப்பு செட்டில்மெண்டில் அதாவது 1950 இல் இருந்து 1965க்குள் தமிழகத்தில் நடந்திருக்கின்ற செட்டில்மெண்டு அ பதிவேட்டில் இனாம் என்றே போடப்பட்டிருக்கும். தர்மிலா என்று போடாமல் விட்டிருப்பார்கள் ஏனென்றால் ஜமீன் ஒழிக்கப்படும் பொழுது அவர்கள...

இனாம் நிலத்தை விற்கலாமா?

Image
  இனாம் நிலத்தை விற்கலாமா? பழைய கிரைய பத்திரங்களில் இனாம் சர்வே நம்பர் என்று குறிப்பிடப்பட்டு நிறைய பத்திரங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இன்று சட்டக் கருத்துரை உனக்கும் வழக்கறிஞர்கள் அதனை ஆழ்ந்து கவனிப்பதில்லை அப்படிப்பட்ட பத்திரங்களை தாங்கள் பார்க்கும் பொழுது அது என்ன வகையான இனம் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும். தனிப்பட்ட நபர்களின் இனாமாக இருந்தால் (Personal Inams) விற்பனை செய்யலாம் அடமானமும் வைக்கலாம் இது இனாம்தார்களுக்கு முழுவதுமா கொடுக்கப்பட்ட பரிசு சர்வ மானியம் என்று சொல்வார்கள்( பிராமணர்களுக்கு பண்டிதர்களுக்கும் வீரர்களுக்கும் தனிப்பட்ட அவங்களுடைய வாழ்விற்காக கொடுத்தது ) கிராம கர்ணம் தலையாரி நீர்க்கட்டி போன்ற ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம் களை( Public Service Inams ) கிரயம் கொடுப்பது முழுத் தடை செய்யப்பட்டிருந்தது அதேபோல் தேவதாயம் தர்ம தாய ம் இனாம் நிலங்களுக்கும் அதாவது கோவில்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு ( Religious/Charitable Inams) சேவை/வழிபாடு தொடர்ந்து நடந்தால்அரசு தலையிடாது (Board Standing Order 54) என்று இருந்தது எனவே இ...