Posts

Showing posts from January, 2021

சூலூர்-ரோஜா நகர் குடியிருப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்!!!

Image
  சூலூர்-ரோஜா நகர் குடியிருப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்!!! ரோஜா நகர் குடியிருப்பு அங்கு வாழும் குடியிருப்புவாசிகளுக்கு சட்ட சிக்கலால் ரோஜாவில் இருக்கும் முள்ளாய் குத்த ஆரம்பித்து இருக்கின்றது. அது சம்மந்தமாக ஒரு நீண்ட விவாதம் நான் தங்கி இருந்த மதுரை விடுதியில் நடந்தது. கொங்கு மனிதர்களின் மொழி ,குரல் கலந்துரையாடலுக்கு சுவையூட்டியது. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் #kongu_tamil #paranjothi_pandian #consulting #soolur #rajoanagar #law_problem #madurai #author #writer #trainer

கோவை தங்க முருகன் ரியல்எஸ்டேட் நிறுவனம் எனது நிறுவனத்துடன் இணைப்பு!!!

Image
கோவை தங்க முருகன் ரியல்எஸ்டேட் நிறுவனம் எனது நிறுவனத்துடன் இணைப்பு!!! 2016 பத்திரபதிவு தடைக்கு பிறகு மாத தவணையில் மனைகள் விற்கும் நிறுவனங்கள் பெருத்த பாதிப்புகளை அடைந்தன.விற்பனைகள் குறைந்தது வாங்கிய வட்டிகடன் ஏறியது.கூட இருக்கும் நண்பர்கள் தண்ணீர் வற்றிய பிறகு குளத்தை மறந்து செல்லும் நாரைகள் ஆகிவிட்டனர் அரசியல்வாதிகள் பஞ்சாயத்துகள்,காவல் நிலைய பஞ்சாயத்துகள் வழக்கறிஞர் பஞ்சாயத்துகள்!என்று முகவர்களும் வாடிக்கையாளர்களும் ஒட்டு மொத்த நிறுவனத்திற்கும் அழுத்தங்களை கொடுத்தார்கள். ஏற்கனவே பொறாமையில் இருப்பவர்கள் ஆகா மாட்டிட்டான் பரஞ்சோதி என்று அகமகிழந்தனர்.தொடரந்து உழைக்க இயலாத முகவர்கள் தங்களால் தான் நிறுவனம் வளர்ந்துவிட்டது என்று பெருமூச்சு விட்டு கொண்டனர். அத்தனை தடைகளை தாண்டி எந்த வித எதிர்மறை எண்ணங்களையும் மனதிற்குள் புக விடாமல் நல்லெண்ணம் நல்நம்பிக்கை உணர்ச்சிகளை மட்டும் பிரபஞ்ச வெளியில் படரவிட்டு புதிய வாய்ப்புகளை கண்டுபிடித்து வியாபரத்நை மீண்டும் நிலை நிறுத்த வேண்டியதுதான் ஒரு தொழில் முனைவரின் கடமை.அதனை நான் மிக சிறப்பாகவே செய்து இருக்கிறேன். என்னுடைய வியாபரா சரிவுக்கு நான் தான் காரணம்...

தேனியில் ஒரு தேன் குடும்பத்துடன் சந்திப்பு!!!

Image
 தேனியில் ஒரு தேன் குடும்பத்துடன் சந்திப்பு!!! தேனியில் தம்பி கார்த்திக் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு கொரானாவுக்கு முன்பு அணுகி இருந்தார். ஆவணங்களை எல்லாம் வாசித்துவிட்டேன். இன்னும் தெளிவான புரிதலுக்காக நேரடியாக சைட்டை பார்வையிட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். சமீப களபணியில் தேனிக்குத் தான் முதலில் சென்றேன். நல்ல வரவேற்பும் விருந்தோம்பலுடன் சைட்டை பார்யிட்டு மதுரைக்கு கிளம்பினேன். வருங்காலத்தில் சிறந்த இரு வழக்கறிஞர்கள் இந்த குடும்பத்தில் இருந்து தேனி மக்களுக்கு கிடைப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் #theni #family #field #consultancy #advocate #paranjothi_pandian #trainer @ #author #writer #sitevisit

மதுரையில் இனாம் நில சிக்கல் சம்மந்தமான நில ஆலோசனை கூட்டம்

Image
  மதுரையில் இனாம் நில சிக்கல் சம்மந்தமான நில ஆலோசனை கூட்டம் மதுரை-திருபரங்குன்றம் செங்குந்த முதலியார் மக்கள் தங்களின் இனாம் நில சிக்கல்கள் ஒரு கலந்தாய்வு கூட்டமும் இனாம் நில சம்மந்தபட்ட வரலாற்று தகவல்களையும் என்னிடம் இருந்து பகிரந்து கொள்வதற்காக என்னை அழைத்து இருந்தனர். மூன்று மணிநேரம் தொடர்ந்து பேசினேன்,அதன்பிறகு அவர்களின் கேளவிகளுக்கு பதில்கள் அளித்தேன்.மிகவும் மரியாதையாகவும் பண்பாகவும் உபசரி த்தனர். கூட்டத்தில் ஓய்வுபெற்ற விஷய ஞானம் உள்ள தாசில்தாரும் இருந்தார். இவர்களின் இனாம் நில சிக்கல்கள் தீருவதற்கு ஏதோ ஒரு வகையில் உதவிகரமாக இருக்கிறேன் என்ற மன நிறைவுடன் கூட்டத்தை முடித்தேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9841665836, 9841665837, 9962265834 #madurai #thirupparangkuntram #inam #land #problem #paranjothi_pandian #author #consulting #trainer #wrier

தரங்கம் பாடியில் இருக்கும் நண்பர்கள் அறிவது!!!

Image
   தரங்கம் பாடியில் இருக்கும் நண்பர்கள் அறிவது!!! நான் ஆய்வு செய்து எழுதிக்கொண்டு இருக்கும் தமிழ்நாடு பாண்டிசேரி நில நிர்வாக வரலாறு என்ற புத்தகத்திற்கு இந்த டேனிஷ் கலாச்சார மையத்தில் சில தரவுகள் தேவை ! இருமுறை சென்று பார்த்தேன் கொரானா புண்ணியத்தால் மூடியே இருக்கிறது. அருகில் இருக்கின்ற நண்பர்கள் இந்த காலாச்சார மையம் திறந்து இருந்தால் தகவல் கொடுக்கும்படி வேண்டுகிறேன். அங்கு இருக்கிற தமிழ் பேசும் பொறுப்பாளர் தொடர்பு எண் இருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில் முனைவர் #tharangam_padi   #friends   #danish   #cultural   #tamil   #paranjothi_pandian   #realestate   #agent   #trainer   #author   #consulting

தம்பி இராஜேஷ் -ஶ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர்!எனது எழுத்துக்களின் தொடர் வாசிப்பாளர்!

Image
தம்பி இராஜேஷ் -ஶ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர்!எனது எழுத்துக்களின் தொடர் வாசிப்பாளர்! கனிவான பேச்சுடையவர்! நிலம் சம்மந்தபட்ட போதுமான அறிவை பெற்றுவிட்ட பிறகு!! எனது ஆவண எழுத்தர் பயிற்சியிலும் பங்கு பெற்று இப்பொழுது ஆவண தயாரிப்பகம் தொடங்கி தொழில் முனைவோர் ஆகிவிட்டார். பத்திரங்கள் பதிந்து கொடுத்து பாராட்டுகளையும் அங்கிருக்கும் மக்களிடம் பெற்று கொண்டு இருக்கிறார்!எனது மாணவன் என்று இனி நான் பெருமைப்படச் சொல்லிக் கொள்ளலாம் கற்றுக் கொண்டால் பெற்றுக் கொள்வோம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் #document_writer #class #online #paranjothi_pandian #mushnam #student #author #trainer #writer #consulting

கற்றுக் கொண்டால் பெற்றுக் கொள்வோம்!!

Image
   தம்பி இராஜேஷ் -ஶ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர்!எனது எழுத்துக்களின் தொடர் வாசிப்பாளர்! கனிவான பேச்சுடையவர்! நிலம் சம்மந்தபட்ட போதுமான அறிவை பெற்றுவிட்ட பிறகு!! எனது ஆவண எழுத்தர் பயிற்சியிலும் பங்கு பெற்று இப்பொழுது ஆவண தயாரிப்பகம் தொடங்கி தொழில் முனைவோர் ஆகிவிட்டார். பத்திரங்கள் பதிந்து கொடுத்து பாராட்டுகளையும் அங்கிருக்கும் மக்களிடம் பெற்று கொண்டு இருக்கிறார்!எனது மாணவன் என்று இனி நான் பெருமைப்படச் சொல்லிக் கொள்ளலாம் கற்றுக் கொண்டால் பெற்றுக் கொள்வோம்!! இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் #document_writer #class #online #paranjothi_pandian #mushnam #student #author #trainer #writer #consulting

நான் பால்புட்டி பசங்க ண்ணா!!

Image
   நான் பால்புட்டி பசங்க ண்ணா!! கடந்த 15 நாட்களாக இருபதிற்கும் மேற்பட்டோர் நான் தங்கியிருந்த கொளத்தூர் விடுதியில் வந்து நிலம் சம்மந்தமாக சந்தித்து பேசிவிட்டு சென்றனர். அதில் இந்த தம்பி மட்டும் மறக்க முடியவில்லை!! வந்து என்னை சந்திக்கும்பொழுதே அண்ணே நீங்க வீடுயோவில் சொல்லி இருந்தீங்களே பால்புட்டி பசங்க என்று அதில் ஒருவன் நான் என்றார். அப்படியே வளர்ந்திட்டோம் ! இப்பொழுதுதான் self learn செய்யுறேன் என்று சொன்னார். எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி !! நான் யூடியூபில் பால்புட்டி பசங்க என்று வேண்டுமென்றே பயன்படுத்தினேன். அதுபோன்ற வார்த்தைகள் கேட்பவர்களின் ஆழ்மனதில் தைத்து விடும்.அதன் பிறகு தான் transformation நடக்கும். அப்படி நமது பேச்சால் மாற்றம் நடந்த ஒரு தம்பியை சந்தித்து இருக்கிறேன். அவர் மேல் இருக்கும்அன்பு கருதி அவரின் முகத்தை நானே மறைத்து உள்ளேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில்முனைவர் www.paranjothipandian.in #realestateinvestors #realestateconsultancy #realestateservices #paranjothipandian #plots #land #landsale #books #patta #chitta