புத்தகம் செதுக்கிய நல்லோன் திரு.இறைவன்!!!

புத்தகம் செதுக்கிய நல்லோன் திரு.இறைவன்!!!


 

 
உண்மையில் நிலம் உங்கள் எதிர்காலம் பாகம் 1 பாகம் 2 இதன் புத்தக அச்சும் அமைப்பும் உண்மையில் இப்படி வரும் என்று நான் நினைத்தது இல்லை!
புத்தகத்தை பார்த்தவுடன் கொஞ்சம் மெய்மறந்தேன். நான் எவ்வளவு நேரம் எழுதினாலும் பிழை திருத்தினாலும் தொகுத்தாலும் அட்டவணைகள் இட்டு பிரித்து எழுதினாலும் அதனை உருவாக்கும் அச்சகமும் அதன் ஊழியர்களின் பங்கு மிகவும் இன்றியமையாத்து.
 
நான் இராபரட் கிரீன் எழுதிய புத்தகங்களை ஆன்லைனில் வாங்கினேன்.வந்த ஒரு சில நாட்களிலேயே அந்த அட்டையில் இருக்கின்ற வண்ணங்கள் என் நக கீறலால் வந்து விட்டது.இன்னும் சில புத்தகங்கள் என் பையில் வைத்து இருந்து லேசான மழையால் நனைத்தவுடன் அந்த புத்தகத்தின் பக்கங்கள் தனிதனியாக பிரிந்து விட்டது.
 
நம் நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகம் எப்பொழுது தேவைபட்டாலும் மக்கள் எடுத்து பார்க்கவேண்டிய புத்தகம். அதனுடைய பைண்டிங் மிகசிறப்பாக இருக்க வேண்டும். அட்டையின் அச்சு சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணிணேன்.
 
அவ்வண்ணமே செய்து கொடுத்த சிவகாசி சண்முகா பிரஸ்ஸின் தலைவர் திரு இறைவன் அவர்களுக்கு நேரடியாக சிவாகாசி சென்று நன்றி தெரிவித்தேன்
 
இப்படிக்கு
 
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
#paranjothipandian #book #nilamungalethirkalam #writer #trainer #consulting #author #shanmugapress #iraivan #binding #printing

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்