கூட்டுறவு மூலம் வீட்டுமனை புரட்சியில் கரம் கோர்ப்பீர்!!
 
            நடுத்தர  அடிதட்டு  மக்களுக்கு  நான்  சொல்வது  என்னவென்றால்  ரியல்  எஸ்டேட்  விலைவாசியில்  ஒரு  வீட்டு  தேவைக்காக  உங்களுடைய  பொருளாதார  வாழக்கையை  இழக்க  வேண்டிய  நிலைதான்  எதிர்காலத்தில்  வரும் . பல  பன்னாட்டு  நிறுவனங்கள்  ரியல்  எஸ்டேட்டில்  வீடுகள்  சந்தையில்  இறங்கி  விட்டன . அவர்களுக்கு  வங்கிகளும்  ஏன்  அரசே  கூட  உதவிகள்  செய்யும்  . அப்படி  பன்னாட்டு  ரியல்  எஸ்டேட்  வியாபரிகள்  விரிக்கிற  மாயவலையில்  சிக்கி  உங்கள்  சேமிப்பை  இழக்காமல்  இருக்கவும்  ( பெங்களூரு  சென்னையில்  கடந்த  10 ஆண்டுகளில்  நடந்த  போலி  விலைஉயர்வால்  பலர்  இன்னும்  கடன்  கட்டி  கொண்டு  இருக்கிறார்கள் ) விலை  உயரும்  என்ற  நீர்குமிழிகளில்  பல  முதலீடுகள்  உங்கள்  மீது  திணிக்கப்பட்டு  விற்கப்பட்டு  இருக்கின்றன . இவற்றை  எல்லாம்  சரி  செய்ய  முடியாது . ஆனால்  விவரம்  தெரிந்தவர்கள்  இதில்  இருந்து  எதிர்காலத்தில்  தப்பித்து  கொள்ளலாம்  என்னாலும்  என்  அனுபவத்தினாலும்  இதற்கு  வழிகாட்டலாம் . அதற்கான  life boat தான்  நாம்  உருவாக்க  போகும்  கூட்டுறவு  வீட்டுவசதி  சங்கம் . மேலும்  தற்சார்புடைய  நமக்...