மனதார மன்னித்து
விடுகிறேன் சாமி
அண்ணா!!
10 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஓமனாஜார்ஜ் என்ற கேரள பெண்மணி வாடிக்கையாளர் சிபிஐ காவல்துறையில் வேலை, அவரும் அவரின் கணவரும் மீஞ்சூர் அருகில் ஒரு மனை பிரிவை வாங்கி இருக்கிறார்கள். அது இரட்டை ஆவணம் சிக்கல் இருக்கிற மனை பிரிவு, வாடிக்கையாளர் வாங்கிய மனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யபட முடியவில்லை. காவல் துறையில் இருந்தாலும் நிலம் பற்றி அவர்களுக்கு விவரம் தெளிவாக தெரியாததால் என்னை அழைத்தனர். ஆவணங்களை பரிசோதித்தேன், பத்திரங்கள் சரியாக இருக்கிறது ஆனால் பட்டா மாறாமல் இருக்கிறது. பட்டாதாரரிடம் இருந்து பவர் பத்திரம் ஒன்று வாங்கி மேற்படி மனையை வேறு நபர்கள் ஆக்கிரமித்து இருந்தனர்.

நான் தனியாக என் ஆக்டிவா ஹோண்டா ஸ்கூட்டரில் இடத்தின் பத்திர நகலை எடுத்து கொண்டு இடத்தை பார்க்க சென்று இருந்தேன். அங்கு சென்றால் தான் தெரிகிறது இந்த மனை மட்டும் ஆக்கிரமிக்கிவல்லை, ஒட்டுமொத்த மனைபிரிவில் ஆக்கிரமிப்பு உள்ளது வேறு பெரிய பஞ்சாயத்து நடக்கின்ற சூழல் 50 பேர்களுக்கு மேல் இளைஞர்கள் மாஸ் காட்டி நின்று கொண்டு இருந்தார்கள்.

நான் நேராக அங்கு நிற்கும் இளைஞர்களிடம் சென்று வரைபடத்தின்படி நான் கண்டுகிடித்த மனையை காட்டி இது என் வாடிக்கையாளர் மனை என்று அவர்களுக்கு எடுத்து சொன்னேன்.

அவர்கள் என் பேச்சை எல்லாம் கேட்க வில்லை, அப்பொழுது அங்கே ஒரு சுமோ வில் சங்கர் என்பவர் வந்தார். இளைஞர்கள் எல்லாம் அந்த வண்டியை நோக்கி ஓடினர். அவர் KPP சாமி எம்.எல்.ஏ அவர்களின் தம்பி என்று சொன்னார்கள். நாம் அப்படியே அரை மணிநேரம் வாடிக்கையாளரின் இடத்தலேயே நின்று இருந்தேன்.

அந்த சுமோ கிளம்பியதும் அனைத்து இளைஞர்களும் என்னை நோக்கி வந்தார்கள் நீ இன்னும் போகலையா! என்று கேட்டார்கள். நான் எதற்காக போக வேண்டும் இந்த மனையில் யார் கூரை போட்டு இருக்கிறார்களோ அவர்களை பார்க்க வேண்டும் அவர்களிடம் இருக்கும் உரிமை ஆவணங்கள் பற்றி பேச வேண்டும் என்றேன். ஒருவன் எனது பின்பக்கமாக முதுகில காலால் உதைத்தான். நான் கீழே விழவில்லை ஆனால் தடுமாறினேன். ஒருவன் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் என் கண்களில் பயம் வந்துவிட்டது தனியாக வந்துவிட்டேனே என்று நினைத்தேன். இதுபோன்ற நேரங்களில் என் நணபன் டேவிட் பெரியார் மனது தேடும் அப்பொழுதும் டேவிட் பெரியாரை மிஸ் செய்தேன்.

உடனடியாக நான் அங்கிருந்து கிளம்பினேன். இந்த பக்கமே வரகூடாது என்ற எக்காளமிட்டனர் நான் எதுவம் பேசவில்லை. என்னுடைய சட்டை அழுக்காகி இருந்தது என் ஸ்கூட்டரை எடுத்துகொண்டு வீடு வந்து சேர்ந்தேன். யாரிடமும் அடி வாங்கியதை சொல்ல முடியவில்லை .

நாமே நிறைய பேருக்கு பஞ்சாயத்திற்கு போவோம் இதை யாரிடம் சென்று முறையிட அமைச்சர் கே.பி.பி.சாமி தம்பி இதில் இருக்கிறார். மேலும் அந்த பகுதி முழுவதும் ரியல் எஸ்டேட் இப்படி அரசியல் மாபியாக்களிடம் இருந்தது தெரிந்தது நாம் எவனாவது சாம்பார் பக்கெட் தூக்குற ஏதாவது ஆபிஸில் கிளர்க் வேலை செய்யுற குமாஸ்தாக்களுக்கு மட்டும் ஏதோ ஒரு மூலையில் இடம் வாங்கி கொடுப்போம் என்று என்னை தேநீர் குடித்து கொண்டே தேத்தி கொண்டேன்.

என்னுடைய வாடிக்கையாளரிடம் நான் அடிவாங்கியதை சொல்லாமல் மீதி எல்லாம் சொன்னேன் . ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்ற தகவல்களை சொன்னேன். அரசு எந்திரம் தி.மு.க கட்சிக்கு என அனைவருக்கும் பெட்டிஷன் அனுப்பலாம் என்று முடிவுசெய்து தி.மு.க.வில் கலைஞர், பேராசிரியர், ஸ்டாலின்.கனிமொழி என அனைவருக்கும் கேபிபி சாமி அவர் தம்பி பற்றி மனு அனுப்பினேன், மாநில காவல் துறை, முதலமைச்சர் தனிபிரிவு என அனைவருக்கும் பதிவு தபால் அனுப்பி பார்த்தேன் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை, மலைபோல் குவிந்த மனுவில் நம்முடைய பெட்டிஷன் எங்கேயோ மறைந்து இருக்கும் என்று நினைத்து விட்டு விட்டேன். பிறகு அந்த அடி வாங்கிய விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிவிட்டு இருந்தது.

இந்த விஷயத்தை பெரிய அளவில் பகிர்ந்தது எல்லாம் இல்லை! தம்பி திருநெல்வேலி பரணிதாஸ்க்கு மட்டும் பகிரந்து இருக்கிறேன். அதன் பிறகு என் பெத்தவளிடம் Forgiveness போடும் போது பகிர்ந்து இருக்கிறேன். அதன் பிறகு கே.பி.பி.சாமி எப்பொழுது எல்லாம் செய்திகளில் பார்ப்பேனோ அப்பொழுது எல்லாம் இந்த சம்பவம் நினைவுக்கு வரும்.ஆட்சி மாறியது அதிமுக வந்தது நில அபகரிப்பு ரியல் எஸ்டேட் மோசடி செய்த திமுக எம் எல் ஏ மந்திரிகளை விசாரித்து கைது செய்ய ஜெயலலிதா அம்மையார் தனி பிரிவு வைத்தார் நானும் என்னுடைய வாடிக்கையாளர் ஓமனா ஜாரஜ்வும் புகார் கொடுக்கின்ற மன நிலையில் இல்லை .

வெறுத்துமட்டும் போயிருந்தேன் ,வியாபரம் வளரந்து இருந்தது வேலை பளு வேறு என்று விட்டு விட்டேன்.ஆனால் வேறு யாரோ புகார் கொடுத்து இருப்பார்கள் போல முன்னாள் அமைச்சர் கே,பி.பி.சாமி கைது என்று செய்திகளை பார்க்க ஆரம்பித்தேன். சிறையில் இருக்கும் கேபிபி சாமி அவர்களை சிறையில் கனிமொழி சந்திப்பு என்ற செய்தி, அவர்குடும்பத்தில் இறப்பு என்று செய்தி சில ஆண்டுகளுக்கு முன் பாரத்தேன் .

எப்பொழுது எல்லாம் செய்திகளில் கே.பி.சாமி பற்றி பார்க்கும் போது என்னை முதுகின் பின்னால் உதைப்பட்டது படம் போல எனக்கு வந்து போகும் இதோ சாமி அவர்கள் மரணம் என்று செய்தி வந்ததும் என்ககு நான் அடி வாங்கிய காட்சி தான் வந்து போனது ,தம்பி பரணி யும் காலையில் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி இருந்தார் .KPP சாமி மரணம் என்று அவருக்கும் தோன்றி இருக்கும் நான் உதை வாங்கியது

மேற்படி சம்பவத்தில் நேரடியாக அவர் ஈடுபடவில்லை, ஆனால் அவரின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டது அவரின் குழுவினர் மாபியா போல செயல்பட ஆரம்பித்தனர்.மக்களால் கொடுக்கபட்ட அதிகாரம் தான் என்ற Ego வினால் வீணடித்து விடுகின்றனர் மந்திரிமார்கள் எம்.எல்.ஏ க்கள்
சரி இதனை எழுதுவதன் மூலமாக என் ஆழ்மனசை விட்டு அந்த எமோசன்ஸ் வெளியேறிவிடும் என்று நம்புகிறேன்.

இவ்வளவு நாள் மன்னிக்காமல் இருந்து இருக்கிறேன்.இனி அவரை முழுமனதாக மன்னித்து விடுகிறேன்.வாழ்ககை அவ்வளவுதான் அதிகாரம் நிலம் எல்லாம் அன்பால் கட்டுபடனும்.

செய்கின்ற ரியல்எஸ்டேட் தொழிலுக்காக வாடிக்கையாளருக்காக அடி வாங்கியது நானாகத்தான் இருக்கும்.இது போல வேறு இரண்டு இடங்களில் உதைவாங்கி இருக்கிறேன்.அதனை இன்னோரு வாய்ப்பில் எழுதுகிறேன்
குறிப்பு: இந்த பதிவை எழுதுவதால் தி.மு.வை எதிர்த்து எழுதுகிறேன் என்று கம்பு சுத்த வேண்டாம்.நான் என் அனுபவத்தை என் புரிதலை என் உணர்வை பதிவிடுகிறேன்.

நான் அடிப்படையில் 9தாம் வகுப்பிலே இருந்தே தி.க ஆனால் தி.மு.க இல்லை,ஆனால் என் தந்தை தீவிர தி.மு.க களபணியாளர், ராஜிவ் படுகொலையில் திமுகவினர் மேல் நடந்த தாக்குதலில் வீடு புகுந்து எங்களையும் என் தந்தையையும் அதிமுக காங்கிரஸ் காரர்கள் அடித்ததால் சென்னை பட்டினம்பாக்கம் குப்பத்தை விட்டு வெளியேறி எங்களை படிக்க வைக்க மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன்பிறகு தீவிர களபணி திமுகவில் அவர் செயல்படவில்லை.ஆனால் கலைஞர் பற்றி அடிக்கடி பற்றி என் மனதில் விதைத்தது என் தந்தைதான் எனக்கு தி.மு.க வின் அனைத்து மக்களுக்கான சமூக நீதி பிடிக்கும் ஆனால் அவர்களின் தேர்தல் அரசியல்வாதிகள் ஆர்எஸ் பாரதி போன்றவர்களை அனிமல்களாகவே பார்க்க தோன்றுகிறது.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
எழுத்தாளர்/தொழில்முனைவர்
9962265834

சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்கலுக்கு தீர்வுக்காண தொடர்புகொள்ளுங்கள:9841665836

குறிப்பு:அன்பு வாசகர்களே!!நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளர்த்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்து செயல்பட முடியும்-
புத்தகம வேண்டுவோர்:8344489222

#ஓமனாஜார்ஜ் #சிபிஐ காவல்துறை #மீஞ்சூர் #இரட்டை ஆவணம் சிக்கல் #பட்டா பெயர் மாற்றம் #பவர் பத்திரம் #ஆக்கிரமிப்பு #பஞ்சாயத்து #KPP சாமி #எம்.எல்.ஏ #பெரியார் #அமைச்சர் கே.பி.பி.சாமி #கிளர்க் வேலை #பெட்டிஷன் #Forgiveness

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்