Posts

Showing posts from November, 2021

கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது!

Image
   கடலூர் நிலத்தின் நலமறிய ஆவல் வழிகாட்டுதல் முகாம் வெற்றிகரமாக நடந்தது! 27.11.2021 அன்று கடலூர் புதுப்பாளையம் ஆருத்ரா அரங்கில் வழிகாட்டுதல் முகாம் நடத்த ஏற்பாடு செய்யபட்டு அறிவிக்கபட்டு விட்டது!இந்த நிலையில் தொடர் மழை அறிவிப்பு உள்ளபடியே பயனாளிகள் வருவார்களா என்ற லேசான தயக்கத்தை உருவாக்கி விட்டு இருந்தது ஆனால் நிகழ்ச்சி தொடர் மழை இருந்தாலும் வெற்றிகரமாக நடந்து விட்டது! இந்த நிகழ்வு காலையில் சிறிது தாமதமாக ஆரம்பித்து மதியம் ஒரு மணி வரை நில சிக்கல் என்று வருபவர்களுக்கு அவர்களின் சிக்கலை ஆவணப்படுத்துகிற வேலை நடந்தது அண்ணன் பாபநாசம் ஜெயகுமார் சோளிங்கர் மோகன் கிருஷ்ணகிரி முத்து ஒமலூர் தமிழ் ஆகியோர் முழு மூச்சாக ஆவணப்படுத்துகின்ற வேலையை செய்தார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தம்பி அருண்குமார் அனைவருக்கும் தேனீர் மதிய உணவு ,முட்டை பிரியாணி தன் செலவிலேயே அனைவருக்கும் விருந்து வழங்கினார். அதன் பிறகு மதியம் மேடை மரியாதை நிகழ்ச்சி செய்ப்பட்டது நிதிகொடுத்தோர் உடல் உழைத்தோர் அனைவருக்கும் நன்றி நவிலபட்டது நினைவு கேடயம் வழங்கபட்டது பொன்னாடை போர்த்தபட்டது விருந்தினர்கள் திரு.பரமகுரு ,வளவனூர்...

 ஆர்டிஐக்கு பிறந்த நாள் விழா ! அன்று அண்ணன் தியாகராஜன் அவர்களுடன்!!!

Image
 ஆர்டிஐக்கு பிறந்த நாள் விழா ! அன்று அண்ணன் தியாகராஜன் அவர்களுடன்!!! தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 தேதி அக்டோபர் மாதம் 12 தேதி கொண்டு வரபட்டது. அந்த சட்டத்தால் மக்களிடையே பல தகவல்கள் வெளிப்படையாக கிடைக்க ஆரம்பிக்க அரசு நிர்வாகத்தில் ஊழல்களும் முறைகேடுகளும் குறைய ஆரம்பித்துவிட்டது உண்மை! இந்த ஆர்டிஐயால் பலருக்கு பலவிதமான பயன்கள் என்றால் அண்ணன் தியாகாராஜன் அவர்களால் கோயம்புத்தூரில் ரிசர்வ் சைட்டுகள் பாதுகாக்கபடுகின்றன பலகோடி ரூபாய்களை கோவை மாநகராட்சிக்கு மிச்சபடுத்தி கொடுத்து இருக்கிறார். ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் டாப் 10 இளைஞர்களில் ஒருவராக விருது பெற்றவராக இருக்கிறார். ஆரர்டி ஐ மூலம் தியாகராஜன் அண்ணன் ஒரு வழியில் பயணிக்க !நானோ இந்த ஆர்டிஐயால் என்னுடைய வாடிக்கையாளர் பலரின் சொத்து சிக்கலை தீர்க்க துணையாக வைத்து இருக்கிறேன். பல தகவல்களை தேடி எடுத்து வாடிக்கையாளரின் சொத்து சிக்கல் தீர்த்து இருக்கிறேன். ஆர்டிஐ யால் தகவல்கள் மறுக்கபடுகிறது. ஆர்டிஐ யால் பலன் இல்லை என்ற உற்சாகமற்ற வார்த்தைகளை அரசு ஊழியர்கள் பரவ விடுகிறார்கள். தகவல் கொடுக்காமல் தண்ணி காட்டும் பல ஆர்டிஐ தீர்ப்புகளை வைத்து...

நிலத்தின் நலமறிய ஆவல் -3சமூக கடமை ஆற்றி உணர்ச்சி ரீதியான பலத்தை தோழமைகளுக்கு நன்றி!!!

Image
  நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளையின் நிலத்தின் நலமறிய ஆவல் -3 வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்கு தங்கள் சமூக கடமை ஆற்றி உணர்ச்சி ரீதியான பலத்தை (Emotionally Strong) தோழமைகளுக்கு நன்றி!!! இப்படிக்கு சா.மு. பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர் தொழில்முனைவர் 9962265834 / 9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #trust

பர்கூர சார்பதிவகத்தில் நமது அண்ணன்!

Image
  பர்கூர சார்பதிவகத்தில் நமது அண்ணன்! தமிழகம் முழுவதும் பல்வேறு சார்பதிவகங்களில் நமது அண்ணன் தம்பிகள் பலர் ஆவண எழுத்தர் தொழில் முனைவர் ஆகி கொண்டு இருக்கிறார்கள்! கடந்த 30 ஆண்டுகளாக உலகமயமாக்கல் நடந்ததில் இருந்து சொத்து விலை ஏற ஏற அதிக மோசடி பத்திரங்கள் நடத்துவிட்டது அதனை எல்லாம் இப்பொழுது சீர் செய்ய அந்த சொத்துகளின் டைட்டிலை சரி செய்ய இளமையான துடிப்பான உடலும் ஆழ்ந்து வாசிப்பு பழக்கமும் ஆவண எழுத்து தொழில் முனைவோருகளுக்கு நல்ல வாய்ப்பு வருங்காலத்தில் இருக்கிறது. அப்படி பட்டவர்கள் நிச்சயம் ஆவண எழத்தர் தொழில் முனைவோர் ஆக பாருங்கள்! பர்கூர சார்பதிவகத்தில் அண்ணன் மஞ்சுநாத் அவர்கள் தனது ஆவண எழுத்தர் தொழிலை ஆரம்பித்து இருக்கிறார்.அன்னார் என்னிடம் ஆவண எழுத்தர் பயிற்சி மாணவராக இருந்தார் என்பது எனது மாணவர் என்பதும் எனக்கு சின்ன பெருமை! நிச்சயம் பெறும் வெற்றி பெறுவார்கள் அண்ணா! அறிவுடன் கூடிய உழைப்பு வாங்கும் கட்டணத்தைவிட அதிக சேவையை கடைபிடியுங்கள். சார்பதிவாளர் மாவட்ட பதிவாளர் பதிவுதுறை ஐஜி டிஐஜி மனைவிமார் குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டு வேலைகள் வெளியூர் பயணங்கள் செய்யும் பொழுது பயண வேலைகள் பார...

கந்தர்வ கோட்டையில் ஒரு நில வேள்வி!

Image
  கந்தர்வ கோட்டையில் ஒரு நில வேள்வி!   அரசு தனது நிலங்களை பாதுகாத்து கொள்ள பல்வேறு போர்டுகளை ஏற்படுத்தி அதனை நிர்வாகம் செய்ய பாதுகாத்து கொள்ள பல்வேறு கமிட்டுகளை உருவாக்கி அவர்களுக்கு சம்பளங்களும் கொடுத்து தனது சொத்துகளை பாதுகாத்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் மோசடி பத்திரங்கள் போலி பட்டாக்கள் போன்ற எந்தவிதமான பத்திரங்கள் அரசு சொத்துகளில் போட்டால் செல்லாது என்ற சட்ட பாதுகாப்போடு இருக்கிறது.   ஆனால் இந்த விழிப்புணர்வு அற்ற மக்களோ தான் வாழும் போதும் வீழும் போதும் எந்த வித முன் முயற்சி கற்றலும் இல்லாமல் இருக்கின்ற நிலங்களை பாதுகாத்து பத்திரங்களை ஒழுங்குபடுத்தி வைக்காமல் சொத்துகளை பயன்படுத்தி வருகிறார்கள் சொத்துக்கு சிக்கல் என்று வரும்பொழுது தான் பதறி அடித்து கொண்டு கனவில் இருந்து விழிப்பது போல விழிக்கிறார்கள்!   அப்படி பல இலட்சுகாந்தன்களின் கதை தான் கந்தரவ கோட்டையில் நேரடியாக சென்று விழிப்புணர்வு கொடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வும் கொடுத்துவிட்டு வந்தேன்.   இப்படிக்கு   சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834 / 98416658...

தம்பி வீரப்பூர் முத்து அவர்களுடன் திருச்சியில்!!!

Image
  தம்பி வீரப்பூர் முத்து அவர்களுடன் திருச்சியில்!!!   தம்பி முத்து மணப்பாறை அருகே வீரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர், என்னுடைய நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகத்தின் வாசகர்! அனைத்து சமூக ஊடகங்களிலும் என்னை பின் தொடர்பவர்   நான் நேரடியாக பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்ற பட்டியலில் இருப்பவர். தேனியில் இருந்து திருச்சி பயணிக்கும் பொழுது திருச்சியில் இரவு தங்க வேண்டியதால் தம்பிக்கு ஒரு வாட்ஸ்அப் தகவலை தட்டிவிட்டேன். ௧ஜபிரயா ஹோட்டல், அறை எண் இது என்று அனுப்பி விட்டு தூங்கிவிட்டேன்.காலை வந்து என்னை தம்பி முத்து எழுப்பிகிறார்   மணப்பாறை சுற்றி 12 வது படித்து முடிக்கும் பெண்பிள்ளைகள் 3ஆண்டு கட்டு குத்தகையாக பஞ்சு மில்லலுக்கு போய் வேலைசெய்வது தொடருகிறதா? மணப்பாறை மாட்டுசந்தை நிலவரம்,வீரப்பூர் கோயில் திருவிழா?போன்ற மக்களின் செய்திகளை கேட்டறிந்து கொண்டேன்.அப்படியே திருச்சியில் இருந்து கந்தரவ்கோட்டை தஞ்சை பயணம் என்பதால் இருவரும் அன்பு பரிமாறி கொண்டு பிரிந்தோம்.   இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834/9841665836  #paranjothipandian #author...

மதுரையில் ஒரு அன்பு தம்பி அருண்!!!

Image
  மதுரையில் ஒரு அன்பு தம்பி அருண்!!! மதுரைகாரங்க ரொம்ப பாசகாரங்க!அடோன் அண்ணன் ,சேகர் அண்ணன்,சின்ன மருது என்று என்னை நேசிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள் !அண்ணன் அருணும் அப்படிதான் கூர்ந்த அறிவு நில சிக்கல்களை பகுத்தாயும் திறன் நல்ல வாசிப்பு பழக்கம் என்று நிறைய கற்று கொள்ள வேண்டி இருக்கிறது அருண் அண்ணிடம்! மதுரை வந்து இறங்கியதும் அன்பு வரவேற்பும் விருந்தோம்பலும் கொடுத்தார். அருண் அவர்களுக்கு சில பொது செய்திக்கான ஆர்டிஐ மனுக்களை செய்து கொடுக்க சொன்னேன். செய்து கொடுப்பதாகவும் சொல்லி அதன் மாதிரி எனக்கு அனுப்பியும் வைத்தார்! ஐடி நிறுவன உத்தியோகம் போதுமான நடுத்தர வருமானம் என்று இருக்கிறார். மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினால் நிலம் சம்மந்தமாக செய்ய உங்களை நெறிபடுத்தி கொள்ளுங்கள் அண்ணா!அதில் தான் கற்றுலும் இருக்கிறது வரலாறும் எதிர்காலும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன் கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834/9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #field #experience #madurai #real...

வழிசிக்கலில் மனதை தவிக்க விடும் தரும்புரி தம்பி!

Image
  வழிசிக்கலில் மனதை தவிக்க விடும் தரும்புரி தம்பி! வழி தேவைபடுகிறது!அதற்கான சட்டத்திற்கு உட்பட்ட வேலைகளை ஒரு கால்பந்தாட்டம போல் எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லி கொடுக்க ஆள் இல்லாததால்! ஒரு உணர்ச்சி கொந்தளிப்பான போராட்டமாக மாற்றி வைத்து இருந்தார் என்னை பாண்டிசேரியல் வந்து சந்தித்தார் பிறகு நான் தரும்புரி அருகே இருக்கும் அவர் கிராமம் சென்று அனைத்தையும் பார்வையிட்டு் குறிப்பெடுத்து செய்ய வேண்டியதை விளையாட்டு போல் அணுகவும் தோற்றாலும் ஜெயித்தாலும் அதனை இரசித்து அடுத்து எப்படி அடுத்த ஆட்டம் ஆட வேண்டும் என்று யோசித்து செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன் இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9962265834/9841665836 #paranjothipandian #author #trainer #writer #consulting #filed #experience #realestate #agent #land #problem #issue #solve  

 ஹக்கீம் அண்ணன் ஒரு தகவல் மருத்துவர்!

Image
  ஹக்கீம் அண்ணன் ஒரு தகவல் மருத்துவர்!   அண்ணன் ஹக்கீமை சில ஆண்டுகாளாக நேரடியாக சந்தித்த பொழுது அவரின் பெயரை Google இல் தேடினேன் அதற்கு அர்த்தம் என்னவென்று!!   கற்று தேர்ந்த மனிதன் உடல் சார்ந்த மருத்துவர் என்றெல்லாம் வந்தது! உண்மையில் பெயருக்கு ஏற்றார் போல் அண்ணன் கற்றறிந்தவர் தான்   நான் ஆவண எழுத்தர்கள் சொத்து சிக்கலை தீர்க்க ஆர்டிஐ எப்படி பயன்படுத்தலாம் என்று வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறேன்.அதேபோல் அண்ணன் ஹக்கீம் அவர்கள் எப்படி ஆர்டிஐ ஆர்வலர் களுக்கு வகுப்பு எடுத்து கொண்டு இருக்கிறார்   அவரின் பல ஆர்டிஐ மனுக்கள் மதுரை கார்ப்ரேசன் முதல் டெல்லி பாராளுமன்றம் வரை பட்டைய கிளப்பி இருக்கிறது.மதுரை எயிம்ஸ் அடிகல் நாட்டல் அண்ணனின் ஆர்டிஐ யின் பயன்!   அண்ணன்னும் நானும் கடந்த ஒரு வருடமாக சேர்ந்து மேடை ஏறுகிறோம் !பல்வேறு செய்திகளை மக்களிடையே கொண்டு செல்கிறோம் அண்ணனும் தன்னுடைய மேடைகளை பரஞ்சோதி தம்பிக்கு கொடுக்க வேண்டும் என்று உறுதுணை செய்கிறார்   அன்னாருக்கு என் அன்பும் நன்றியும்!!!   இப்படிக்கு   சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்-தொழில் முனைவர் 9...

இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!!

Image
  இராமநாத அரண்மனையும் இராஜாவின் சந்திப்பும்!!! இராமநாதபுரத்தில் ஒரு களபணி நிலுவையில் இருந்தது அதனை முடித்துவிட இராமநாதபுரம் சென்றேன். காலை இராமநாதபுரம் அரண்மனையை பார்க்க விருப்பம் நமது நில வரலாறு புத்தகத்திற்கு தரவுகளுக்காக !அதனால் காலையில் ஒரு ஆட்டோவில் கிளம்பி அரண்மனை சென்றோம். ஆட்டோகாரரிடம் இராமநாதபுரம் என்ற சிறப்பு அண்ணே என்றேன். அரபுநாடுகளும் இஸ்லாமிய சகோதரர்களும் இல்லை என்றால் இராம்நாடு இல்லை என்று சொல்லி விட்டார். அரண்மனைக்கு கொண்டு வந்து விட்டார்! நானும் நண்பர் இரவீந்திரனும் இராம்நாடு அரணமனையை சுற்றி வந்து அங்கு இருக்கும் இராஜாவை சந்திக்க முடியுமா என்று அரண்மணை ஊழியர்களை கேட்டேன் நான் ஒரு எழுத்தாளர் நிலம் சம்மந்தமாக ஆய்பவன் யூடியுபர் என்று அறிமுகபடுத்தி கொண்டேன். அதன்பிறகு ஒரு அரண்மணை நிர்வாகி இராஜாவிடம் பேசினார்! உடனடியாக அனுமதி கிடைத்து விட்டது! நீங்கள் அவரை சந்திக்கலாம் என்று சொன்னார்கள்! நாங்கள் இருவரும் அரண்மனையில் இராஜா அமர்ந்து இருக்கும் முற்றத்திற்கு சென்றோம்.எங்களை ஆசனம் கொடுத்து அமர சொன்னார்! கேள்விகளை கேட்க சொன்னார் !நான் ஏற்கனவே பேராசிரியர் கமால் அவர்களின் புத்த...

வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!

Image
  வேலை என்றால் சோறும் போட்டு காசும் கொடுக்கிறது போல் இப்படிதான் இருக்க வேண்டும்!!   கலந்துரையாடல் வரும் நில சிக்கல் வாடிக்கையாளர்களிடம் முன் கூட்டியே சொல்லி விடுவேன் அண்ணே வேலைக்கான சேவைகட்டணம் கூட முன்னே பின்னே பார்த்துக்காலம் ! நல்ல சோறு நல்ல தூக்கம் எனக்கு முக்கியம் கடும் அலைச்சலில் வருவேன் சோறும் ரூமும் கொடுத்திடுங்க என்று   இதெல்லாம் முதலில் சொல்லாமல் இருந்த பொழுது அன்பு வாடிக்கையாளர்கள் என்னை பஸ் ஸ்டாண்டில் படுக்க வைத்து விடுவார்கள்! சுகாதாரமற்ற உணவுகளில் விட்டு விடுவார்கள் சில நேரங்களில் சோறும் கிடையாது அப்படியே விட்டு விடுவார்கள்   ஆனால் இப்பொழுது எல்லா வாடிக்கையாளரிடமும் கள பணிக்கு வந்தால் நமக்கு சோறுதான் முக்கியம் என்று சொல்லிவிடுவேன்! அதிலும் ஹோட்டலில் வாங்கி கொடுப்பார்கள் அதனை நான் மதிக்கிறேன்! ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில் ஒரு சுகாதாரம் இருக்கிறது அது எப்பொழுதாவது கிடைக்கும்   இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டிய ஆள் ஒருவர் இருக்கிறார் திரு .ரமணன் -நாகர் கோவில் அவர் வீட்டில் வாழை இலை விரித்து சோறு போட்டார். அதேபோல் இராமநாதபுரம் அடுத்த திருப்பாலைகுடி...