Posts

Showing posts from January 12, 2026

மடாதிபதி, ஷெபைத், முத்தவல்லி எழுதி கொடுக்கின்ற ஆவணங்கள் மூலம் சொத்து உரிமை மாறுமா?

Image
  மடாதிபதி, ஷெபைத், முத்தவல்லி எழுதி கொடுக்கின்ற ஆவணங்கள் மூலம் சொத்து உரிமை மாறுமா? 1)“கோவில் நிலம்”, “மடம் நிலம்”, “வக்ஃப் நிலம்” என்று சொல்லப்படும் நிலங்களை, மடாதிபதி, , ஷெபைத், முத்தவல்லி ஆகியோர்தங்களுக்குச் சொந்தமானது போல விற்றும், குத்தகைக்கும் கொடுத்து வருகிறார்கள். அதனால் அதனை வாங்கியவர்களுக்கும் நிறைய கேள்விகள் இருக்கிறது மடாதிபதி என்றால், நிலம் அவருக்கே சொந்தமா?” அவர் எழுதி கொடுத்தால் அது போதுமானது தானா? என்ற சட்ட மயக்கம் சாமானியர்கள் மத்தியில் அதிக அளவில் நிலவுகின்றது அதற்காகத்தான் இந்த தீர்ப்பினை நாம் பார்ப்போம் 2)Vidya Varuthi Thirtha v. Balusami Ayyar என்ற வழக்கு முதலில் 05.03.1913 தேதியில் மதுரை சப் கோர்ட் (Subordinate Judge’s Court, Madura ) டில் ஒரு மடத்துக்குச் சொந்தமான மதுரை நகரத்திற்குள் இருக்கின்ற சில நிலங்களை குறித்து விளம்புகை உரிமை அறிவிப்பு பிரதிவாதிகள் வெளியேற்றம் (ejectment) கைப்பற்றல் வேண்டும் என்று பரிகாரம் கோரி மடாதிபதி தரப்பினர் வழக்கு தொடர்ந்தார்கள் 2)மதுரை நகரத்தில் உள்ள அந்த மட சொத்து “எந்த சர்வே நம்பர் / எந்த தெரு” என்று எ...

இனாம் தூய பதிவேட்டில் உள்ள அளவை வைத்து அதனுடைய எல்லையை நிர்ணயிக்க முடியுமா?

Image
  இனாம் தூய பதிவேட்டில் உள்ள அளவை வைத்து அதனுடைய எல்லையை நிர்ணயிக்க முடியுமா? 1) இப்படி ஒரு வழக்கு 1920 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது அதனைப் பற்றி பார்ப்போம் இந்த வழக்கை பொறுத்தவரை நில அளவை செய்து அத்து பார்க்க வேண்டியது ஒரு சர்வே நம்பருக்கும் இன்னொரு சர்வே நம்பருக்கும் இடைப்பட்ட எல்லையை அல்ல. இந்த வழக்கு இரண்டு கிராமங்களின் எல்லையை(Village Boundary) அளப்பது சம்பந்தப்பட்டதாகும் 2) அன்றைய சிவகங்கை ஜமீனில் தர்மசாசனம் கழனிவாசல் ( முழு இனாம் கிராமம் ) செக்கலகோட்டை ( ஜமீன் கிராமம்) என்று இரண்டு கிராமங்கள் பக்கத்து பக்கத்தில் இருந்தது இவர்களுக்கு தான் எல்லை சிக்கல், இனாம் கிராமத்தை பொருத்தவரை சர்வ மானியம் பெற்ற மஹா ஜனம் என்று அழைக்க படுகிற பிரமாண ர்களுக்கான கிராமம் செக்கல கோட்டை கிராமம் சிவகங்கை ஜமீனிற்கு கட்டு பாட்டில் உள்ள ஒரு ஜமீன் கிராமம். மேற்படி வழக்கு சர்வமானிய மகாஜனம் மற்றும் செக்கல கோட்டை கிராம சம்சாரிகளுக்கும் நடை பெற்றது. 3).சிவகங்கை சமஸ்தானம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மறவர் அரச குடும்பத்தின் ஒரு கிளையினரால் ஆளப்பட்டு வந்தது. இந்த ஆட்சி 1790...

இனாம் கிராமத்தில் பூமிக்கடியில் இருக்கும் கல்குவாரிகளுக்கு யார் உரிமையாளர்?

Image
    இனாம் கிராமத்தில் பூமிக்கடியில் இருக்கும் கல்குவாரிகளுக்கு யார் உரிமையாளர்? 1)இப்படி ஒரு வழக்கு 1916 ஆம் ஆண்டு நடந்தது வெள்ளையர்கள் 1800 களில் ஆட்சியில் அமர்வதற்கு முன்பிருந்த நவாப் அவர்கள் தாவா சொத்தான கிராமத்தை சீனிவாசாச்சாரியார் அவர்களின் முன்னோர்களுக்கு மேஜர் இனாமாக அதாவது ஏக்கரில் காணியில் அளவு சொல்லாமல் ஒரு பகுதியை குறிப்பிட்டு இனாமாக கொடுத்து விட்டார்கள் 2)அது கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளில் இருந்த கிராமம் என்பதால் நிறைய கற்கள் மண்ணுக்கு அடியில் உறங்கி கொண்டு இருந்தது அதன் பிறகு வெள்ளையர்கள் ஆட்சிக்கு வந்தும் அதனை மேஜர் இனாமாக தங்களுடைய கணக்கில் தொடர்ந்தார்கள் 3)அதன் பிறகு இனாம் கமிஷன் உருவாக்கி அனைத்து இனாம்களையும் கணக்கெடுக்கும் பொழுது இந்த இனாமையும் 1865 ஆம் ஆண்டு கணக்கெடுத்து தூய இனாம் பதிவேட்டில் TD நம்பர் கொடுக்கப்பட்டு இனாம் என்று ஆவணப்படுத்தப்பட்டு இருக்கின்றது. 4)சீனிவாசச்சாரியார் மூதாதையர்கள் ஏற்கனவே மெத்த படித்தவர்களாக இருந்த தாலும் இனாம் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் புரிந்து கொண்டிருந்ததாலும் வெள்ளையர் ஆட்சியில் உள்ள இனாம் அலுவலர...