இனாம் நிலத்தை விற்கலாமா?


 

இனாம் நிலத்தை விற்கலாமா?

பழைய கிரைய பத்திரங்களில் இனாம் சர்வே நம்பர் என்று குறிப்பிடப்பட்டு நிறைய பத்திரங்கள் எழுதப்பட்டிருக்கிறது. இன்று சட்டக் கருத்துரை உனக்கும் வழக்கறிஞர்கள்
அதனை ஆழ்ந்து கவனிப்பதில்லை
அப்படிப்பட்ட பத்திரங்களை தாங்கள் பார்க்கும் பொழுது அது என்ன வகையான இனம் என்பதை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

தனிப்பட்ட நபர்களின் இனாமாக இருந்தால் (Personal Inams) விற்பனை செய்யலாம் அடமானமும் வைக்கலாம் இது இனாம்தார்களுக்கு முழுவதுமா கொடுக்கப்பட்ட பரிசு சர்வ மானியம் என்று சொல்வார்கள்( பிராமணர்களுக்கு பண்டிதர்களுக்கும் வீரர்களுக்கும் தனிப்பட்ட அவங்களுடைய வாழ்விற்காக கொடுத்தது )

கிராம கர்ணம் தலையாரி நீர்க்கட்டி போன்ற ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம் களை( Public Service Inams ) கிரயம் கொடுப்பது முழுத் தடை செய்யப்பட்டிருந்தது

அதேபோல் தேவதாயம் தர்ம தாய
ம் இனாம் நிலங்களுக்கும் அதாவது கோவில்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு
( Religious/Charitable Inams) சேவை/வழிபாடு தொடர்ந்து நடந்தால்அரசு தலையிடாது (Board Standing Order 54) என்று இருந்தது

எனவே இனாம் ஓழிப்பு சட்டங்கள் வருவதற்கு முன்பு ஆய்வு செய்கின்ற கிரைய பத்திரங்களில் இனாம் சர்வே எண் என்று வந்தால் கவனமுடன் ஆய்வு செய்ய வேண்டுகிறேன். நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என்றெல்லாம் லிமிடேஷன் சட்டம் பார்த்து கவனிக்காமல் விட்டு விடாதீர்கள் இந்து சமய அறநிலைத்துறைக்கும் வக்ப் போர்டிற்கும் இருக்கும் அது பொருந்தாது

இப்படிக்கு
சா. மு பரஞ்சோதி பாண்டியன்
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை
098416 65836
See less

Comments