Posts

Showing posts from November 14, 2016

தேவை : தமிழகம் முழுவதற்குமான ஒரு மாஸ்டர் பிளான்

தேவை : தமிழகம் முழுவதற்குமான ஒரு மாஸ்டர் பிளான் கடந்த செப்டம்பர் 9- ம் தேதி அங்கீகாரம் இல்லாத , பஞ்சாயத்து அங்கீகாரம் , என் . ஓ . சி மனைகள் பத்திரப்பதிவை தடைசெய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது . இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரப்பதிவுகள் நடக்காமல் இருக்கின்றது . இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஒரு பக்கம் , திருமணம் , வீடுகட்டுதல் போன்ற சொந்த செலவுகளுக்கு பணத்தை புறட்ட கையிலிருக்கும் நிலங்களை விற்க அக்ரிமெண்ட் போட்டவர்களும் , குடும்பத்திற்குள்ளேயே பாகப்பிரிவினை பத்திரம் , உயில் , போன்ற பத்திரங்கள்   செய்ய முடியாமலும் பொதுமக்கள் அவதி படுகின்றனர் , இது தற்காலிகமானது என்றாலும் இந்த தடை உத்தரவால் வீடு , வீட்டு மனை உருவாக்கும் நிறுவனங்கள் அரசின் அங்கீகார அமைப்புகள் மற்றும் பத்திரப்பதிவுதுறை , வருவாய் துறை , ஆகியவைகள் தொலைநோக்கு அடிப்படையில் புதிய கொள்கை முடிவினை கொண்டுவர வேண்டியது அவசியமாகும் , தற்பொழுது இருக்கின்ற வீடு ,