சமத்துவபுர வீடுகளை வாங்கலாமா? தெரிந்து கொள்ள வேண்டிய 15 செய்திகள்!
1) தமிழகம் முழுவதும் ஊர் சேரி என இரண்டாக பிரிந்து கிடப்பதும் தீண்டாமை வேறுபாடு ஏறத்தாழ்வு என மனிதர்களை பிரிக்கும் சைக் எண்ணங்கள் வீரியமிகுந்து இருக்கின்றதை குறைக்க மாற்று மருந்து (Antidote) திட்டமாக சமத்துவபுரம் திட்டத்தை மாவட்டந்தோறும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் உருவாக்கினார்கள். 2) இந்த சமத்துவபுரம் அமைந்த இடங்கள் எல்லாம் பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்களாக இருக்கும்.அதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேர்ந்தெடுத்து நத்தம் நிலமாக மாற்றுவார்கள். 3) சமத்துவபுரத்திற்கு ஒப்படைதாரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நத்தம் நிலவரிதிட்டம் செய்து நத்தம் புலப்படம் நத்தம் தூய அடங்கல் பதிவேடு அரசு உருவாக்கும். 4) மேற்படி நத்தம் நிலத்தை கிராமங்களில் வீட்டுமனை ஒப்படை செய்வது விஷயமாய் கொடுக்கப்படும் நமூனா பட்டா பயனாளிகளுக்கு கொடுக்கப்படும். 5) சமத்துவபுரம் வீடுகளை பொறுத்தவரை அதன் அடிமனை ஒப்படை பட்டா விதிகளின் படி கொடுக்கப்படுகிறது. 6) பல சமத்துவபுரங்களில் ஒதுக்கபட்ட இடங்களை நத்தம் கிராம கணக்கில் உடனடியாக ஏற்றிவ