Posts

Showing posts from August 20, 2024

சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 3

Image
சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 3 அதுதானே நியாயம், ஆனால் பதிவுத்துறை அப்படி செய்வது இல்லை.           அச்சடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு உள்ள சார் பதிவேட்டில் உள்ள மதிப்பைதான் குறித்து கொடுக்கும், அப்படி தான் குறித்து கொடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். (சுற்றறிக்கை எண் 45351/L1/ 2012- நாள் - 24-01-2013) இதன்படி உள்ளாட்சி அமைப்புகள் இயக்குநர் – நகர்புற திட்டமிடல், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற அலுவலகங்களில் இருந்து வழிகாட்டி மதிப்பு விவரம் கேட்கப்படும் நிகழ்வுகளில் மாவட்ட வழிகாட்டி மதிப்பீட்டு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்புகளை வழங்கினால் போதுமானது எனவும் ஆவண பதிவுகளில் ஏற்பட்டுள்ள உயர் மதிப்புகளை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவுறுத்தப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்.            இதிலிருந்து என்ன தெரிகிறது, சாமானியன் பத்திர பதிவு செய்ய போனால் ஆவண பதிவுக