Posts

Showing posts from July 29, 2024

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 6-வது பாகம்) 20. இந்த வரைவு வெளி வருவதற்கு முன்பு உங்கள் பகுதிகளில் நில ஆர்ஜிதம் முன்மொழிவு நோட்டீஸ் கொடுத்திருந்தால் அந்த நிலத்திற்கெல்லாம் உண்மையான சந்தை மதிப்பு போடாமல் அதற்கு குறைவாகவே MVG நிர்ணயிக்க வாய்ப்பிருக்கிறது 21. பஞ்சம நிலங்களை மீட்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களுக்கு சொல்வது என்னவென்றால் பஞ்சம நிலங்களுக்கு “0” ZERO மதிப்பு போட வேண்டும் அங்கு MVG பகட்டு மதிப்பாக போடுவதால் அல்லது ஏதோ ஒரு மதிப்பு போடுவதால் அது பஞ்சம நிலம் இல்லை என்று சாதாரண பொது மக்கள் நினைத்து விட்டு அதனை வாங்க விற்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே அதனை தடுப்பதற்கு பஞ்சம நிலம் ஆதாரம் உங்களிடம் இருந்தால் அதனை வைத்து இந்த MVG வரைவை ஆட்சயபனைகள் செய்ய வேண்டும் 22. இந்து அற நிலையத்துறை மற்றும் வக்ப் போர்டு நிலங்களில் வீடுகளில் வசித்து வருகின்ற மக்கள் வாடகையில் வாழ்ந்து வருகிறார்கள் . இந்த MVG உயர்ந்தால் அதன் அடிப்படையில் வாடகையும் உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு உருவாக்கிய MVG யை வைத்து இந்து

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 5-வது பாகம்) 3. தொழில் முனைவர்கள் இறால் பண்ணை அமைக்க அரசு நிலங்களை குத்தகைக்கு எடுத்தாலோ உப்பு தயாரிக்கும் பொருட்டு உப்பளங்களை குத்தகைக்கு எடுத்தாலோ அரசு நிலத்தின் மேல் குழாய் பதித்து நீர் கொண்டு செல்வதற்கும் குத்தகை எடுத்தாலோ அந்த குத்தகை நிர்ணயம் செய்வதை இந்த MVG யை பொறுத்து அமையும். 4. MVG கள ஆய்வு செய்து சிரத்தை எடுத்து மெனக்கெட்டு அறிவியல் பூர்வமாக நிர்ணயித்தால் யாரும் பாதிக்கப்பட போவதில்லை ஆனால் “சும்மா அடிச்சி விடலாம்” என்று தமிழ்நாடு முழுவதும் 15% 20% என்று உயர்த்தி நிர்ணயித்தால் உண்மையிலேயே 15% 20% உயர்ந்து விட போவதில்லை நிலத்தின் விலை என்னவோ அது தான் வழிகாட்டி மதிப்பாக இருக்க வேண்டும் ஆனால் பதிவுத்துறை வழிகாட்டி மதிப்பை உயர்த்தி நிலத்தின் மேல் உயர்ந்து விட்டதை போல ஒரு மாயை தோற்றத்தை ஏற்படுத்தினால் அப்பாவி பொது மக்கள் பலர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் உண்மைமயாகத்தான் நிலத்தின் விலை உயர்ந்து விட்டது அதனால் தான் வழிகாட்டி மதிப்பும் உயர்ந்து விட்டது என்று நம்ப ஆரம்பித்து நீர

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 4-வது பாகம்) 13. அரசு, பொது மக்களின் நிலங்களை ஆஜிர்தம் செய்யும் பொழுது அதற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அந்த இழப்பீடு MVG யை அளவு கோலாக வைத்து தான் நிர்ணயிப்பார்கள். 14. இந்த வரைவு வெளி வருவதற்கு முன்பு உங்கள் பகுதிகளில் நில ஆர்ஜிதம் முன்மொழிவு நோட்டீஸ் கொடுத்திருந்தால் அந்த நிலத்திற்கெல்லாம் உண்மையான சந்தை மதிப்பு போடாமல் அதற்கு குறைவாகவே MVG நிர்ணயிக்க வாய்ப்பிருக்கிறது. 15. பஞ்சம நிலங்களை மீட்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களுக்கு சொல்வது என்னவென்றால் பஞ்சம நிலங்களுக்கு “0” ZERO மதிப்பு போட வேண்டும் அங்கு MVG பகட்டு மதிப்பாக போடுவதால் அல்லது ஏதோ ஒரு மதிப்பு போடுவதால் அது பஞ்சம நிலம் இல்லை என்று சாதாரண பொது மக்கள் நினைத்து விட்டு அதனை வாங்க விற்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே அதனை தடுப்பதற்கு பஞ்சம நிலம் ஆதாரம் உங்களிடம் இருந்தால் அதனை வைத்து இந்த MVG வரைவை ஆட்சயபனைகள் செய்ய வேண்டும். 16. இந்து அற நிலையத்துறை மற்றும் வக்ப் போர்டு நிலங்களில் வீடுகளில் வசித்து வருகின்ற மக்கள் வாடகையில் வா

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 3-வது பாகம்) 8. நகர்ப்புற நில உச்சவரம்பு வரன்முறைப்படுத்துதல் மூலமாக அறியா கிரயம் பெற்றவர்கள் அரசிடம் பட்டா வாங்க வேண்டும் என்றாலும் நகர்புற நில வரி ULT கட்ட வேண்டும் என்றாலும் அதற்கு பணம் கணக்கிடும் பொழுது இந்த MVG யை வைத்து தான் கணக்கிட வேண்டும். 9. ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசிக்கின்ற மக்களுக்கு வருவாய் நிலை ஆணை 21-ன் படி வீட்டு மனை பட்டா கொடுக்கிறார்கள் என்றால் நிலத்தின் விலைக்கு பணம் கட்ட சொன்னால் அதற்கும் MVG அடிப்படையில் தான் கணக்கிட வேண்டிய வரும். 10. அரசு நிலங்களில் விவசாயம் செய்து கொண்டு இருந்தால் அதற்கு வருவாய் நிலை ஆணைய எண் 15 இன் படி விவசாய நில பட்டா கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு பணம் கட்ட வேண்டும் என்றால் அதற்கும் MVG அடிப்படையில் தான் கட்ட வேண்டிய தொகையை கணக்கிட வேண்டி வரும். 11. நில சீர்திருத்த துறையில் கீழ் DISPOSAL OF SURPLUS LAND விதிகளின் படி நிலத்தை விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் பொழுதும் அரசிற்கு கட்ட வேண்டிய கிரய தொகையை இனி இந்த MVG யை அள

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 2-வது பாகம்) 3. மேற்படி MVG மதிப்பீட்டை வைத்து தான் சாமானியன் சாதாரண பொது ஜனம் தனது குடும்பத்துக்குள்ளையோ அல்லது குடும்பம் அல்லாத நபரிடம் பாராதீனம் செய்யும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய முத்திரை கட்டணம் பதிவு கட்டணம் போன்றவற்றை செலுத்த வேண்டும். அதனால் MVG அதிகமாக நிர்ணயித்தால் விலை ஏறாத சொத்துக்களுக்கும் அதிக அளவு முத்திரை கட்டணங்களை கட்டி பொது மக்கள் தன் சேமிப்பை இழப்பார்கள். 4. நில உடமையாளர்கள் வங்கிக் கடன், நிலத்தின் மீதான தொழில் கடன், வீடு கட்டும் கடன், பிற அபிவிருத்தி கடன் வாங்க சொத்தை மதிப்பீடு செய்யும்பொழுது இந்த MVG யை வைத்து தான் கணக்கிடுகிறார்கள். அதனால் MVG யில் முறைபாடுகளும் பகட்டு மதிப்பும் இருந்தால் வங்கி கடன் வாங்குகின்ற பொது மக்கள் அதிகம் பாதிப்பு அடைவார்கள். 5. வருமான வரி, மூலதன ஆதாய வரி, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற வரிகளை விதிப்பதற்காக இந்த MVG ஒரு அளவீடாக இருக்கிறது. அதனால் ஏற்கனவே 2012இல் பதிவுத்துறை நிறைய பகட்டு மதிப்பை பதிவுத்துறை நிர்ணயித்து இருக்கிறார்கள்

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

Image
  முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! (முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 1-வது பாகம்) மாண்புமிகு முதலமைச்சர் ஐயா மு.க. ஸ்டாலின் அவர்களின் பதிவுத்துறையை நடத்திவரும் மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி அவர்கள் முயற்சியால் வழிகாட்டி மதிப்பு சீராய்வு தற்பொழுது மாநிலம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலின் “வரைவு” DRAFT யை 15 நாட்களுக்கு ஒவ்வொரு சார்பதிவு அலுவலகத்திலும் பொது மக்களின் பார்வைக்கு வைத்திருப்பார்கள். அதனை பொதுமக்கள் வாங்கி பார்த்து அதில் தங்கள் சொத்துக்களின் சந்தை மதிப்பு வழிகாட்டியை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும், அதில் முரண்பாடுகள் இருந்தால் அதனை மனுவாக எழுதி மாவட்ட மதிப்பீட்டு குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும், இந்த கடமையை அனைவரும் செய்ய வேண்டும் என்று சாதாரண பொது ஜனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நம்மைப் போன்ற தன்னார்வலர்களின் கடமை அதனால் இந்த கட்டுரையை எழுதுகிறேன். 1. ஏன் சந்தை மதிப்பு வழிகாட்டி (MVG) சாமானியனுக்கு முக்கியம். 1. MVG என்கிற மதிப்பு சட்ட அந்தஸ்து உடையது. இது தமிழகத்தில்