அரசு வங்கி துறைகவனத்திற்கு!

அரசு வங்கி துறைகவனத்திற்கு!

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் நடுத்தரமற்றும் அடிதட்டு மக்கள் ரொக்கபொருளாதாரத்திலேயே (Cash Economic) தான்வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்  இவர்கள்விவசாயம் மற்றும் அதன் சார்ந்த தொழில்கள்,மீன் மற்றும் கால்நடை சார்ந்த தொழில்கள்,கட்டுமான தொழிலாளர்கள் ஆட்டோ மற்றும்டாக்சி டிரைவர்கள் தினக்கூலி அடிப்படையில்வேலை பார்ப்பவர்கள்,மேற்கண்டவர்களுக்கான சில்லறை காய்கறிமற்றும் மளிகை வியாபாரிகள், பெட்டிகடைவியாபாரிகள் ஆகியோர்களிடம் இதுநாள் வரைமுழுவதுமாக ரொக்க பொருளாதாரத்தில் தான்பரிவர்த்தனைகள் நடந்து வருகிறது. இந்தபரிவர்த்தணைகளில் பெருமளவு ரொக்கங்கள்கணக்கில் வராமலும் வங்கிக்குள் வராமலும்அரசின் வரி விதிப்புகளின் பார்வைக்குவராமலும் சுழன்று கொண்டே இருக்கிறது.இவற்றை உணர்ந்த புத்திசாலிகள் ஞாயமாகசம்பாதித்து கணக்கில் வராமல் வைத்திருக்கும்பணத்தை மேற்கண்ட அமைப்பு சாராதொழில்களில் வட்டிக்கு நிதியுதவி செய்துமேலும் தங்களுடைய பணத்தை பெருக்கிகொண்டு இருக்கின்றனர். மேலும் ஞாயமற்றவகையில் அரசு அதிகாரிகளின் இலஞ்சம்,அரசியல் வாதிகளின் ஊழல், கல்விதந்தைகளின் கட்டண கொள்ளை, சட்டத்திற்குஎதிரான வியாபாரங்கள் மூலமாக வருகின்றபணங்களும் மேற்கண்ட அமைப்பு சாராதொழில்களில் முதலீடு செய்துபாதுகாக்கப்படுகிறது. அமைப்பு சாரா மற்றும்அடித்தட்டு தொழிளாலர்கள் ஞாயமாகசம்பாதிப்பவர்களின் கணக்கில் வராதபணத்தையும் முறைகேடாகசம்பாதிப்பவர்களின் பணத்தையும்பாதுகாக்கின்ற ஒரு கேடயமாகவும் பெருக்குகின்ற ஒரு முதலீட்டு வியாபார வாய்ப்பாகவும் இருக்கின்றது.

அரசு வங்கி துறைகள் அமைப்பு சாராதொழில்களுக்கு நிதி உதவி செய்துதங்களுடைய கட்டுபாட்டிற்குள் கொண்டுவரதவறிவிட்டதன் விளைவே சிறிய அளவில்இருந்த இந்த கருப்பு சந்தை இன்று மலைமுழுங்கி மகாதேவன்களின் கூடாரமாகமாறிவிட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் வங்கிஊழியர்களின் திறமையற்ற நிர்வாகமும்என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாததும்நாட்டு பற்றும் அடிதட்டு மக்களுக்கு வங்கி சேவை முழுவதுமாக போய் சென்று சேர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வமின்மையும் அதற்காகஉழைத்திட வேண்டுமென்ற அர்பணிப்பும் வங்கி நிர்வாகத்தில் கீழிருந்து மேல்வரைஇல்லாததனால் அரசு வங்கி மற்றும் இதரதுறைகளில் அமைப்பு சாரா தொழில்கள்பொருளாதாரத்தில் இன்றுவரைமையப்படுத்தப்படாமல் இருக்கிறது.

இருக்கிறதிலேயே ரொம்ப என் மனசுக்குவேதனையா இருக்கிறது என்னவென்றால்இந்தியா முழுவதும் உள்ள அனைத்துகிராமங்களிலும் தன்னுடைய நெட்வொர்க்கைவிரிவுபடுத்தி இருக்கும் தபால்துறை மூலம்அடிதட்டு மக்களின் பொருளாதாரத பரவலுக்குஎவ்வளவோ விஷயங்களை செய்யாலாம்.எல்லா இடத்திலும் மங்குனி மேனேஜர்களாகபோட்டு அந்த துறையையே கெடுத்துவைத்திருக்கிறார்கள். அதே போல அரசுவங்கிதுறை LIC போன்ற நிறுவனங்கள்என்டர்புரொனோரியல் அப்ரோச் இல்லாதAccounts பார்க்கும் கிளர்க்குகளையேநிர்வாகிகளாக போட்டு ரிஸ்க்கே எடுக்காமல்பணத்தை வேறுவேறு வங்கிகளுக்குள்ளேயேவட்டிக்கு விடுவது அல்லது மலைமுழுங்கிமகாதேவன்களுக்கு மட்டுமே வட்டிக்குகொடுத்து திருதிருவென்று முழிப்பது, என உறுதி எடுத்திருக்கின்றனர் போலும்.

 SBI வாராக்கடனில் வைத்துள்ள விஜயமல்லையாவின் 7 ஆயிரம் கோடியை என்னிடம்கொடுத்தால் தமிழகத்தில் 3 தாலுக்காக்களைBusiness Cluster ஆக மாற்றி 14 ஆயிரம்கோடிகளாக 10 ஆண்டுகளில் திருப்பிகொடுத்திருப்பேன். அதேபோல் இந்ததபால்துறையை கடந்த 50 ஆண்டுகளாகதலைமையேற்று நிர்வகித்து கொண்டிருந்தபொறுப்பாளர்கள் 20 பேரை நேரில் பார்த்தால்இவ்வளவு நெட்வொர்க் வச்சிகிட்டு  அடிதட்டுமக்களை ஒருங்கிணைத்து பொருளாதாரபரவலை செய்யாமல் ஏன் விட்டீங்க என்றுசொல்லி கடிச்சே விட்டிரலாம் போலிருக்கு. (சும்மா காமெடிக்கு)

ஒரு சாதாரண சிறிய பைனான்சியர்களேதங்களுடைய களப்பணி மூலம் இந்த அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள அடிதட்டுமக்களுக்கு வட்டி மற்றும் தண்டலுக்குநிதியுதவி செய்து கோடி கணக்கில் பணத்தைபெருக்கி வைத்திருக்கின்ற போது உங்களால்ஏன் முடியவில்லை! Table – ல உட்கார்ந்துவெரும் பேப்பர் படிக்க தான் லாயக்கி!

தற்பொழுது தனியார் வங்கிதுறை, தனியார்அஞ்சலகம் எல்லாம் வந்த பிறகு அதற்குள்ளேபன்னாட்டு நிறுவனங்கள் ஊடுருவியநிலையில் தற்பொழுது கருப்பு சந்தையைஒழிக்கும் நோக்கில் செய்யப்படும் இந்தகாரியங்களெல்லாம் அடிதட்டு அமைப்பு சாராதொழிலாளர்கள் மூலமாக வரும் இலாபங்கள்வெளிநாட்டவர்க்கு போவதற்காக அதிகவாய்ப்புகள் இருக்கிறது. இதற்கு பன்னாட்டுகமிஷன் ஏஜெண்ட்டாக நமது பிரதமர்செயல்பட்டு விட்டார் என்ற குற்றசாட்டிற்கு ஆளாகாமல்

 இந்திய அரசு நிறுவனங்களை அடிதட்டுமக்களிடையே ஊடுருவ செய்து என்டர்புரொனோரியல் அப்ரோச்சின் மூலம்பன்னாட்டு நிறுவனங்களை வெற்றிகொள்வதற்கு ஏற்றவாறு அரசு நிர்வாகத்தை உருவாக்குமாறு நமது பிரதமரிடம்வேண்டிக்கொள்கிறேன்.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின்நிர்வாகத்தினர் கொள்ளை அடிப்பதற்காகவேலை செய்பவர்களிடம் சம்பளத்தைகுறைத்து கொடுப்பதற்காக 1 மணி நேரம்வேலை செய்தால் போதும் என்றுசோம்பேரிதனத்தை அடிதட்டு மக்களுக்கும்ஊட்டுகின்ற அரசு ஊழியர்களால் தான்தற்பொழுது மக்கள் அனைவருக்கும் வேலைசெய்யாமல் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால்1 மணி நேரம் கூட அரசு அலுவலகத்தில்வேலை செய்யாமல் ஆயிரக்கணக்கில்சம்பளத்தை வாங்கி கொண்டு நாட்டின்நிர்வாகத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டுபோகாமல் சாணி போல ஒரே இடத்தில் நிற்கவைத்து இருக்கின்றனர்.

தற்பொழுது வங்கிகளில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் தடையால் கோடி கணக்கில்மலைபோல பணங்கள் குவிந்துள்ளது.இவற்றை அமைப்பு சாரா தொழில்களுக்குCustomized நிதியுதவி திட்டங்களாக உருவாக்கிஅடிதட்டு மக்களுக்கு பயன் அளிக்குமாறுசெய்திட வேண்டும்.

டேபிள்ளேயே உட்கார்ந்து வாடிக்கையாளரைவரவைத்து பேசுகின்ற நிர்வாகத்தைவிட்டுவிட்டு களத்தில் இறங்கி மக்களை நீங்கள்நேரில் போய் சந்திக்கும் போது தான் அரசுநிறுவனங்கள் வளரும் இல்லையென்றால்இன்னும் கொஞ்ச நாளில் இவற்றையெல்லாம்நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கும்பன்னாட்டு நிறுவனங்கள் வெகு விரைவில்அமைப்பு சாரா தொழில்கள் மற்றும் அடிதட்டுமக்களின் நெட்வொர்க்கை பிடித்து விடும்.

பின்னர் இவையெல்லாம் நல்ல நிர்வாகம்மற்றும் ஆளுமை திறன் நாட்டுபற்றுஇல்லாததனால் வந்த நிலை என்று புரியாமல்இது பன்னாட்டு சதி, சுரண்டல் என்றுபேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.வங்கியில் வேலை பார்க்கும் மங்குனிமேனேஜர்களே தற்பொழுதாவது அமைப்புசாரா தொழில்கள், ரூரல் ஹவுசிங், பெண்கள்முன்னேற்றம் போன்ற தொழில்களுக்குஅதிகளவில் நீங்கள் தேடிவந்து நிதியுதவிசெய்யுங்கள்.


 இப்படிக்கு

 சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

 மேனேஜிங் டைரக்டர்

 பிராப்தம் ரியல்டர்ஸ் பிரைவேட்லிமிடெட்.
 
 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு : நீலவேணி 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

 

Comments

  1. Nice blog..! I really loved reading through this article... Thanks for sharing such an amazing post with us and keep blogging...
    manager tables for sale in Hyderabad
    manager tables manufacturers in Hyd

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்