பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

1.காந்தி்ஜியின் சீடரும் மிகச்சிறந்த காந்திய தலைவரும் ஆன திரு.ஆச்சார்ய வினோபாவே என்ற உயர்ந்த மனிதனின் சிந்தனையில் அனைவருக்கும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் நோக்கத்தில் தோன்றிய இயக்கம்தான் பூமிதான இயக்கம்..

2.நிலமற்றவர்களுக்கு நிலமுள்ள பண்ணையார்கள்,ஜமீன்கள்,நிலகிழார்கள் நிலத்தை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள்.அல்லது பூமிதான இயக்கத்தினர் கேட்டு பெறுவார்கள்.

3.அந்த நிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் &கூலிகளுக்கு பிரித்து கொடுப்பார்கள் பூமி தான இயக்கத்தினர்.

4.அதன்படி தமிழகத்தில் திரு.வினோபாவே அவர்கள் 1956 களில் ஓராண்டுக்கு தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து பூமி தானங்களை நிலகிழார்களிடம் இருந்து பெற்றார்.

அப்படி பெற்ற நிலங்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிர கணக்கான ஏக்கர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டு இருக்கிறது.


5.கொஞ்ச நிலங்கள் பகிர்தளிக்க படாமல் பூமி தான போர்டு கிட்டயே உள்ளது.கொஞ்ச நிலங்கள் அந்தந்த பகுதியில் சட்ட சிக்கல்கள் சட்ட குழப்பங்களால் பூமி தான இயக்கத்தாலேயே இன்னும் கையகப்படுத்த படாமல் இருக்கிறது.

6.பூமி தான நிலங்களை அந்த அந்த பகுதிகளில் தீரவிசாரித்தாலே மக்கள் அடையாளம் காட்டுவார்கள் அல்லது மேனுவல் கால ஈ.சி பார்க்கும்போது பூமிதான போர்டுக்கு நிலங்களை தான பாத்திரம் எழுதி கொடுத்த Entry அதில் காட்டபட்டு இருக்கும்.

7.பூமி தான போர்டு பெயரில் பட்டா,சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் கிராம நிர்வாக அலுவலக அ- பதிவேடு பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

8.பூமிதான நிலங்களை நிர்வகிக்க பூமிதான போர்டு என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.பூமிதானபோர்டுக்கு நிலகிழார்கள் தானம் கொடுத்து அது கிரயபத்திரம் ஆகி போர்டு பெயருக்கு தனிபட்டா ஆனதும் மேற்படி நிலங்களை நில மற்றஏழைகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள்.

9.நிலங்களை பெரும் ஏழை பயனாளிகள் அனைத்து வகை சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தார்கள்.பூமிதான நிலங்கள் ஒடுக்கபட்ட Sc St மக்களுக்கு தான் கொடுக்கப்பட்டது என்பது தவறான கருத்து.

10.Sc/St மக்களுக்கு கொடுக்கப்பட்டது DC நிலம் (அ) பஞ்சமி நிலம் என்பர். பஞ்சமி நிலத்துக்கும் பூமிதான நிலத்துக்கும் நிறைய வித்தாயாசங்கள் இருக்கின்றன.

11.பூமி தான நிலத்தை பெற்ற பயனாளிகள் மேற்படி இடத்தை அடமனம் ,விற்பனை,தானம்,ஒத்தி போன்ற எந்த வித பாராதீனமுமம் வில்லங்கமும் செய்ய கூடாது.

12.தொடர்ந்து சில ஆண்டுகள் பூமி தானம் பெற்ற பயனாளிகள் நிலங்களை உழாமல் அனுபவிக்காமல் இருந்தால் அதனை பூமிதானபோர்டு மீண்டும் கையகப்படுத்தி வேறு பயனாளிகளுக்கு கொடுக்கும்.

13.பூமி தான நிலங்களின் பட்டா பூமி தானம் பெற்ற பயனாளிகளின் பெயரில் இருக்காது.எப்பொழுதும் பூமிதான நிலத்தின் ரெவின்யூ ன்யூ பட்டா பூமிதான
போர்டு பெயரில் தான் இருக்கும்.

14.கோவில் நிலங்கள் போல காலெமெல்லாம் அனுபவித்து கொள்ளலாம். பட்டா எப்பொழுதும் கோவில் பெயரில் இருப்பதை போல பூமிதான போர்டு பெயரில் இருக்கும்.

15.மேற்படி பூமிதான போர்டு பெயரில் இருக்கும் பட்டாவிற்கு வ நில தீர்வையை ஆண்டு தோறும் பூமிதானம் பெற்ற பயனாளிகள்தான் செலுத்த வேண்டும்.

16.பூமிதானம் பெற்றவரின் வாரிசுகள் மேற்படி நிலத்தை வாரிசுஉரிமையில் அனுபவ உரிமையை பெறலாம்..ஆனால் தங்கள் பெயரை பூமிதான போர்டு ஆவணங்களில் சேர்க்க மனு செயது சேர்த்துகொள்ளலாம்.

17.பூமிதான நிலங்களில் சட்டசிக்கல்களும் குழப்பங்களும் எப்படி உருவாகின்றது என்று புரிந்து கொண்டாலே இன்றைய இளம் தலைமுறையினர் பூமிதான நில சிக்கல்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.

18.பல ஊர்களில் வினோபாவே வரும் போது ஆர்வ கோளாறுகளில் பூமிதானம் கொடுத்தவர்கள் இருக்கிறார்கள்.நிலக்கிழார்களுக்கு ஏற்கனவே சிக்கல்கள் நிலங்கள்,பாகபிரிவினை வாரிசுரிமை சண்டை நடக்கும் நிலங்களை பூமி தான போர்டு பெயரில் தானம் கொடுத்து கிரயம் பாத்திரம் போட்டு விடுவர்.
19.அவை நீதிமன்றங்களில் வழக்குகள் ஆகி பூமிதான போர்டு கையகப்படுத்தால் பட்டா பெயர் மாற்றமால் நிலுவையிலேயே வைத்து இருக்கும்.

20.பூமி தான போர்டுக்கு தானம் கொடுப்பவர் கிரயப்பத்திரம் போட்டு விடுவார்கள்.ஆனால் அவர்கள் அனுபவத்தை ஒப்படைக்காமல் இருந்துவிடுவார்.மேடையில் எல்லார் முன்னிலையில் தானம் கொடுத்துவிட்டு பிறகு திரும்ப பெறும் நிலைக்கு தங்கள் வாரிசுளால் உந்தபட்டு வழக்கு போட்வர்களும் இருக்கிறார்கள்.

21.ஒரு சில இடத்தில பூமிதான போர்டு பெயரில கிரய் பத்திரம் ஆகி இருக்கும்.ஆனால் பட்டா பெயர் மற்றம் செய்யாமல் இருந்துவிடுவார்கள்.மேற்படி பட்டா போர்டுக்கு தானம் கொடுத்தவர் பெயரிலேயே நின்றுவிடும்.அதனை வைத்து
உயில்,தானம்,செட்ல்மெண்ட்,கிரயம் போன்ற பத்திரங்களை பத்திர அலுவலகத்தில் வைத்து சட்ட ரீதியான ஆவணங்களை உருவாக்கி இரட்டை ஆவண குழப்டிகள் உருவாக்கி வைத்து இருப்பர்.

22.மேனுவல் ஈ.சி. காலத்தில் ஈ.சி.யில் பூமிதான கிரய பத்திரம் நடந்து இருக்கும்.அதனை சோதிக்காமல் கணிணி கால ஈ.சி மட்டும் பார்த்துவிட்டு மேற்படி நிலங்களுக்கு ரெவின்யூபட்டா தனி நபர் பெயரில் இருக்கிற தெம்பில் வாங்கிவிடுவர்.

23.அதாவது பூமீதான போர்டுக்கு தானம் அளிக்கப்பட்டு முழுமையாக போர்டு கைகக்கு களத்திலும் ஆவணங்களிலும் மாறாமல் இருக்கும் இடங்களில் தான் அப்பாவி மக்கள் தவறுதலாக சொத்தை வாங்கிவிட்டு தவிக்கின்றனர்.

24.எனவே பூமிதான நிலங்கள் அருகில் இருக்கிறது அல்லது பூமிதான நிலமா என்ற சந்தேகம் வந்தாலே நன்றாக ஆவண ஆய்வு கள ஆய்வு செய்து முடிவு எடுங்கள்.

25.பூமிதான போர்டுக்கு நிலகிழார் நிலங்கள் தானம் கொடுக்கும்பொழுது போர்டுக்கு பத்திர அலுவலகத்தில் கிரயம் எழுதி கொடுப்பர்.அதனால் அந்த பரிமாற்றம் ஈ.சி.யில் வரும். அதுவே போர்டு ஏழை பயனாளிக்கு நிலத்தை வழங்கும்போது எந்த தான கிரய பத்திரங்கள் சார்பதிவகத்தில் பதியாது..அதனால் மேற்படி பரிமாற்றம் ஈ.சி.யில் வராது.

26.பூமி தான நிலங்களை ஏழை பயனாளிக்கு ஒப்படைக்கும் போது காந்தி-வினோபாவே போட்ட தனி முத்திரை தாளில் பதிவு செய்யாமல் நிலம் சில கண்டிசனுடன் ஒப்படைக்கபட்டு இருக்கும் தொனியில் ஷரத்துகள் எழுதபட்டு இருக்கும்.

27.மேற்படி நிலத்தை யார் தானம் அளித்தார்களோ அவர்களின் பெயரும் அந்த ஆவணத்தில் குறிப்பிடபட்டு இருக்கும்.தெளிவாக தானம் அளிக்கபடவிருக்கும் சொத்துவிவரம் அதில் இருக்கும்.

28.பூமிதான போர்டு நிலங்களை கண்காணிக்க பராமரிக்க கதர்துறை அமைச்சர் கீழே சமூக சேவகர்கள்,சர்வோதய சங்கத்தினர்கள்,பூமிதானம் நிலம் கொடுத்த நிலகிழார்களின் வாரிசுகள் ஆகியோரை கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கமிட்டியை நியமிப்பார்கள்.

29.பூமிதான போர்டு 2006 க்கு முன் தலைமையகம் மதுரையில் இயங்கியது.அப்பொழுது போர்டு தனித்து இயங்கியது. 2006 க்கு பிறகு போர்டை வருவாய் துறையின் நிலசீர்திருத்த துறைக்கு கீழ் கொண்டுவரபட்டு தலைமையகம் சென்னைக்கு மாற்றபட்டுள்ளது.

30.பூமிதான போர்டு இன்னும் சிறப்பாக இயங்கினால் போர்டு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க முடியும்..யாருமே அனுபவிக்காமல் பூமிதான நிலங்கள் பல களத்தில் நான் கண்டுள்ளேன்.அவைகள் எல்லாம் நிலமற்ற ஏழைகளுக்கு பயன்பட செய்து வினோபாவின் ஆசையை நிறைவேற்றலாம்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

#பூமிதானம்  #ஆச்சார்ய #வினோபாவே #வருவாய்துறை #நிலகிழார்களின் #வாரிசுகள் #கதர்துறை #களஆய்வு #பட்டா #revenue #தானம் #ஒத்தி #ஏக்கர் #acre #ec  #உயில் #தானம் #செட்ல்மெண்ட் #கிரயம் #பஞ்சமி #நிலம் #dc-land  #deed #will #settlement #land #asset

Comments

Popular posts from this blog

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்