புதிதாய் ஏற்படும் காதல் உறவுகளால் சொத்துகளும் சிக்கல்களில் சிக்குகின்றன.


உயில் பத்திரம்,செட்டில்மெண்டு பத்திரம்,ரத்து பத்திரம்,ஜீவனாம்ச பத்திரம் போன்ற பத்திரங்கள் எல்லாம் வெறுமனே பத்திரங்களாக பார்க்க முடியாது.அந்த பத்திரங்களுக்கு பின்பு பலவேறு விதமான பாச பிணைப்புகளும் நேச உறவுகளும் இருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம்.

ஒருவருடைய மனநிலை சீரான(harmoney) நிலையில் இருந்தால்தான் சொத்து சம்மந்தபட்ட முடிவுகளும் சீரானதாக இருக்கும். ஆனால் சொத்துக்கள் பல சிக்கல்கள் உருவாவதற்கு காரணம் அன்பின் குறைபாடும் உறவுகளை ஆதிக்கம் செலுத்துதலும் Transactions attachment possession controlled போன்ற குணங்கள் எல்லாம் அனபின் காதலின் பெயரால் பலர் சொத்துகளை பாடாய் படுத்துகிறது.

இந்த உளவியல் சிறு வயதில் இருந்தே கொஞ்சம் புரிந்ததால் சொத்துக்கள் விற்பனை ஏற்பாடு செய்ய அட்வானஸ் போடும்போதும்  கிரயபத்திரம் போடும் போதும் மனிதர்களின் உணர்வுகளை சாமர்த்தியாமாக கையாண்டு அந்த வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்து இருக்கிறேன்.

பல வியாபரங்களில் அண்ணன் தம்பி அக்கா தங்கை தந்தை மகன் உறவுசிக்கலகளை தீர்த்தபிறகுதான் பத்திரமே நடக்கும் கமிசன் வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

இந்த சிக்கல்கள் எல்லாம் கலாச்சார வரம்புக்குள் இருக்கிறது எந்தவித சிக்கலும் இல்லை!! காதல் என்ற உறவுதான் கலாச்சார கட்டுபாடுகளை தாண்டி பொருந்தா காதலாக மறைத்து ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும்.
அதனால் பல சொத்து கைமாறுதல் தடை படும் அதனை கண்டுபிடித்து சரி செய்வதில் கொஞ்ச நாளிலே நான் நிபுணர் ஆகிவிட்டேன்.

சரி விஷயத்தற்கு வருகிறேன் செட்டில்மெண்டு பத்திரம்,உயில்,பவர் பத்திரம் போன்றவை அடிக்கடி இரத்து ஆனாதாய் நீங்கள் வாங்கும் சொத்தின் ஈசியில் பார்த்தால் புரிந்துகொள்ள வேண்டும் அந்த சொத்து வைத்திருப்பவர் மனது harmony யீல் சீராக  இல்லை என்று புரிந்து கொள்ளலாம்.
இன்னும் சொத்து அவரிடமே இருந்தால் இன்னும் பல சிக்கல்கள் ஏற்படுத்துவாரா என்று அவரை சந்தித்து ஐயங்களை தீரத்துகொள்ள வேண்டும்.

ஒருவர் தன் மகளுக்கு தன்சுயசம்பாத்திய நிலத்தை செட்டில் மெண்டு போட்டு கொடுத்திவிட்டு ஓய்வெடுத்துவந்த நிலையில் புதிதாய் முளைத்த ஒரு காதலால் அந்த செட்டிலமெண்டு பத்திரம் இரத்து செய்யபடுகிறது
ஒருவர் தன்னுடைய நிலத்தின் ஒருபகுதியை பக்கத்து நிலத்துகாரருக்கு எதுவும் எழுதி கொடுக்காமல் ஆக்கிரமிக்க விட்டு விடுகிறார் விசாரித்து பாரத்தால் பக்கத்து நிலத்துகாரி. மனைவியுடன் காதல் மலர்ந்து இருக்கிறது. இருவரின் உறவு இருக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை.உறவு கசந்துவிட்டாலோ,அல்லது அதில் ஒருவர் இறந்து விட்டாலோ அந்த சொத்தும் சிக்கலில் ஆட்பட்டு விடும்.

உயில் மாற்றி மாற்றி எழுதிகொண்டே இருக்கறார் என்றால் மனிதன் யார்மீதும் நம்பஇக்கையற்று போய்விட்டார் என்று அரத்தம்.
மேற்படி சொத்துகளை அதாவது செட்டில்மெண்டு உயில் போன்ற சொத்துக்ககளை எல்லாம் வாங்கும் முன்பே நிலம் கொடுப்பவர் சீரான மனநிலையல் இருக்கிறாரா என்று பக்குவமுடன் ஆராய்நது முடிவு எடுக்க வேண்டும் அதற்கு ஏற்ற வாறு நம்முடைய ஆவணங்களையும் உருவாக்க வேண்டும்.

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில் முனைவர்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ஜீவனாம்சபத்திரம் #உறவு #harmoney #love #asset #Transactions #attachment #possession #controlled #கலாச்சாரம் #வரம்பு #உயில் #பவர் #பத்திரம் #மனநிலை #ஈசி

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்