திருநெல்வேலிகாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேரளா-பாராசாலா பத்திரங்கள் !!

திருநெல்வேலிகாரர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கேரளா-பாராசாலா பத்திரங்கள் !!
பதிவுசட்டத்தில் இரண்டு சார்பதிவக எல்லையில் ஒரே நேரத்தில் சொத்து வாங்கும் போது ஏதாவது ஒரு சார்பதிவக எல்லையில் பதியலாம் என்ற விதி இருக்கிறது .
அதனை பயன்படுத்தி பெரும்பாலும் திருநெல்வேலியில் நில வியாபாரம் செய்பவர்கள் நிலம் வாங்குபவர்கள் இருப்பவர்கள் கேரளா மாநிலத்தில் களியகாவிளை அருகில் உள்ள பாராசாலை என்ற ஊரில் உள்ள சார்பதிவக எல்லைக்குள் இரண்டு செண்டோ ஒரு செண்டொ வாங்கி அதோடு திருநெல்வேலியில் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி இரண்டையும் சேர்த்து கேரளாவில் பாரசாலையில் பதிந்துவிடுவர்.
எதற்காக என்றால் தமிழ்நாட்டு முத்திரை தீரவை வழிகாட்டி மதிப்பு என அனைத்தும் கேரளாவை விட அதிகமாக இருக்கும். அதனால் பலர் ரயில் ஏறி பாராசாலையில் பதிவு செய்வார்கள். இப்படி கேரளாவில் பதிவது மிக பிரபலாமான நடைமுறையாக அப்பொழுது இருந்தது.
1997 ஆம் ஆண்டு தான் இதனை தமிழ்நாடு அரசு தடை செய்தது அதன்பிறகு யாரும் ரயிலேறி அடுத்த மாநிலம் சென்று பதிவது இல்லை.
ஆனால் இன்றும் பல தாய் பத்திரங்களில் பாராசாலையில் பதிந்த பத்திரங்கள் திருநெல்வேலி மாவட்ட சொத்துக்களில் இருக்கும். இதில் இன்னும கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால்
இந்த பத்திரம் 1997 க்கு பிறகு பதியபட்டு இருந்தால் செல்லாது.
1997 க்கு முன் பதியபட்டு இருந்தாலும் அந்த பத்திரம் தமிழகத்தில் மாவட்ட பதிவாளரிடம் அட்ஜுடி கேஷன் (தீர்ப்பு பெற்று இருக்க வேண்டும்) செய்து இருக்க வேண்டும்.
மேற்படி பத்திரங்களில் பாராசாலை முத்திரையும் திருநெல்வேலி மாவட்ட பதிவாளரின் அட்ஜுடிசேசன் எண்ணும் போட்டு இருக்கும்.
மேற்படி சொத்துக்களை வாங்குபவர் சொத்து வந்த வரலாறு சொல்லும் போது பாராசாலை சார்பதிவகத்தில் பதியப்பட்டு திருநெல்வேலி மாவட்ட பதிவாளரிடம் அட்ஜுடிகேட் செய்ய பட்டு என்று ஷரத்து எழுத வேண்டும்.
இன்றும் திருநெல்வேலி நாங்குநேரி சார்பதிவகம் மிகபழமையான கட்டிடம் அதில் ஒரு தகர போர்டில் கேரளாவில் பதியபட்ட பத்திரங்கள் தமிழ்நாட்டின் சொத்துரிமையை பாதிக்காது என்று அழிந்து போன மங்கலான போர்டு இருக்கிறது.
நானும் தகவல் பெறும் உரிமை சட்டம் மூலமாக பாராசாலையில் பதிந்துள்ள தமிழக சொத்துகளின் பத்திர விவரங்கள கேட்டுள்ளேன். விரைவில் பதில் வரும் என்று நினைக்கின்றேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல் எஸ்டேட் தொழில்முனைவர்
9962265834
www.paranjothipandian.in
குறிப்பு:அன்பு வாசகரகளே!!நான் எழுதியுள்ள நிலம் உங்கள் எதிரகாலம் புத்தகத்தை வாங்கி என்னையும் என் டீமையும் ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.அதன்மூலம் இன்னும் பலரின் சொத்துகளை காப்பாற்றியும் வளரத்தும் கொடுக்க என்னாலும் என் குழுவினாலும் தொடர்ந்துசெயல்பட முடியும்.
புத்தகம வேண்டுவோர்:8344489222
#கேரளா-பாராசாலா பத்திரங்கள் #களியகாவிளை #முத்திரை தீரவை வழிகாட்டி மதிப்பு  #அட்ஜுடி கேஷன் #பாராசாலை சார்பதிவகம் #ஷரத்து #நாங்குநேரி சார்பதிவகம்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்