சேலம் வெள்ளையர் ஜமீன்தார் கல்லறை!!!
சேலம் வெள்ளையர் ஜமீன்தார் கல்லறை!!!
பிரிட்டிஷாரின் அடையாளம் அழுத்தமாக இருக்கின்ற ஊர் சேலம் ஆகும். தற்பொழுது இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே பழைய கல்லறை இருக்கிறது. அன்றைய துரைமார் கலெக்டர் நீதிபதி பிரபுக்கள் குடும்பத்தினர் என்று அனைவரும் புதையுண்டு இருக்கின்றனர். எழுதி கொண்டு இருக்கும் நில நிர்வாக வரலாற்று புத்தகத்தில் சிறப்பிடம் வகிக்கும் சேலம் ஜமீன் வெள்ளைகார fisher ஜமீன்தார் இங்கு தான் புதையுண்டு இருக்கிறார். தமிழகத்தில் ஜமீன் அந்தஸ்து பெற்ற வெள்ளையர் குடும்பம் இந்த fisher குடும்பம். சேலத்தை ஆழமாக கவனிக்காத சேலம்வாசிகள் கொஞ்சம் இதனை போய் பார்ப்பார்கள் என்று நினைக்கின்றேன்
அடுத்து கிறிஸ்தவத்திற்கு மாறிய சேலம் சிவில் கோர்ட் அரசு வழக்கறிஞர் இராமசாமி ஐயர் கல்லறையும் இங்கு இருக்கிறது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில்முனைவர்
9841665836/9962265834
Comments
Post a Comment