கறுத்த பூமி கோசுகுண்டு கிராமம்
கறுத்த பூமி கோசுகுண்டு கிராமம்
மதுரைக்கு தெற்கே விருதுநகரில் இருந்து கோவில்பட்டி சிவகாசி அருப்புகோட்டை என்று தூத்துகுடி வரை விரிந்து பரந்த நிலபரப்பு கறுத்த மண்ணாக இருக்கிறது. இவையெல்லாம் வைகை ஈரமும் தாமிரபரணி ஈரமும் படாத நிலங்கள். இந்த பெரிய நில பரப்பு சில இலட்சம் ஏக்கர்கள் இருக்கும். நாயக்கர்கள் ,வெள்ளைகாரர்கள் இதனை பருத்தி விளைவிக்க எண்ணெய்வித்துக்கள் விளைவிக்க ஊக்கபடுத்தி பல கிராமங்களை உருவாக்கினர். இங்கு விளைகின்ற பஞ்சுகளை வெள்ளைகாரர்கள் அப்படியே தூத்துகுடி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்தனர்-அதனால் தான் இந்த மண்ணுக்கு black cotton soil என்றே பெயரிட்டார்கள் வெள்ளையர்கள்.
ஒரு களபணிக்காக பந்தல்குடி அருகில் கோசுகுண்டு கிராமத்திற்கு சென்றேன். வெயிலில் மண் கருப்பு தங்கமாக மின்னுகிறது.
இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர் தொழில்முனைவர்
9841665836/9962265834
Comments
Post a Comment