சோளிங்கர் நகரத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் -2 வெற்றிகரமாக நடந்தது!

  சோளிங்கர் நகரத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் -2 வெற்றிகரமாக நடந்தது!

            

அடுத்த மாதம் விழுப்புரத்தில்சோளிங்கர் நகரத்தில் நிலத்தின் நலமறிய ஆவல் -2  வெற்றிகரமாக நடந்தது! அடுத்த மாதம் விழுப்புரத்தில் நிலம் உங்கள் எதிர்கால அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் ஆர். கே. பேட்டை J .மோகன் அவர்களின் முன்முயற்சியில் சோளிங்கர் நகரில் 25.09.2021 தேதி வழி காட்டுதல் முகாம் மற்றும் கருத்தரங்கம் நடத்த கடந்த ஆகஸ்டு மாதமே நான் நேரடியாக சோளிங்கர் வந்து அரங்கம், பயனாளிகள் வந்து சேருவதற்கான பயண வசதி  எப்படி இருக்கின்றது, போன்ற அனைத்தையும் சோதித்து விட்டு நிகழ்ச்சி தேதியை உறுதி செய்தேன்.
அதன்பிறகு நிகழ்ச்சி நிரலை மற்றும் அறிவிப்பை சமூக ஊடகங்கள் மூலம் தெரியபடுத்தி வெளியிட்டு முன்பதிவை ஆரம்பித்தோம்! நிறைய அழைப்புகள்! நாங்கள் வருகிறோம் என்று வந்த வண்ணம் இருந்ததால் நிலத்தின் நலமறிய ஆவல் நிகழ்ச்சிக்கு பலமான ஆதரவு தளம் உருவாகிவிட்டதை உணர ஆரம்பித்து விட்டேன். இனி அது மாதம் தோறும் தமிழகத்தின் பல இரண்டாம் மூன்றாம் நகரங்களில் தொடர்ந்து பயணித்து விடும் என்ற நல்நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்து விட்டது.

 
நிகழ்ச்சிக்கு தேவையான முன்னேற்பாடுகளை முன் கூட்டியே செய்து விட ஆரம்பித்து விட்டேன் !வருகின்ற பயனாளிகளுக்கு கொடுக்கும் சிறு புத்தகம், ஏற்கனவே சிறிய சிறிய எழுத்து பிழைகள் இருந்தன! அதனை எல்லாம் திருத்தி தர அன்பு அண்ணன் பாநாசம் ஜெயகுமார் அவர்களை வேண்டினேன்! அண்ணனும் அதனையெல்லாம் பாபநாசத்தில் இருந்தே திருத்தி அனுப்பினார் நிகழ்ச்சிக்கு தேவையான நினைவு பரிசுகள் பிளக்ஸ்,பேனர்கள் என்று எல்லாமே தயார் செய்து முன்கூட்டியே பார்சலில் சோளிங்கருக்கு அனுப்பி விட்டேன். அதே நேரத்தில் 57 பேர் வருவதாக உறுதி அளித்து 51 பேர் வந்தார்கள்!

 
வந்தவர்களில் எழுபது சதவீதம் நில பிரச்சினைக்கான ஆலோசனைக்காக வந்து இருக்கிறார்கள்! 30 சதவீதம் கற்றுகொள்ளுதல் மனநிலையில் வந்து இருக்கிறார்கள் என்பதை நிகழ்ச்சி ஆரம்பித்த  காலை 10 மணிக்கே உணர்ந்து விட்டேன்.
அதனால் தன்னார்வலர்களான என் தம்பிகளை அனுப்பி வந்த ஒவ்வொரவரிடமும் அவர்கள் பெயர் முகவரி, சொத்து சிக்கலில் இருக்கும் சொத்து விவரம், எதிர் மனுதாரிரன் மீது வைக்கும் குற்றசாட்டு, உங்களுக்கு என்ன பரிகாரம் தேவை என்று அவர்களிடம் நேரடியாக ஒன் டூ ஒன் பேசி அதனை ஒரு தாளில் விரிவாக எழுத சொல்லியிருந்தேன். காலை 11.30 மணிக்குள் அனைவர் சிக்கலும் தனி தனி தாளில் மொத்தமாக எனக்கு வந்து சேர்நது விட்டது, அதனை எல்லாம் யுடிஆர் சிக்கல் எது ? மோசடி பத்திரம் எது? பாகபிரிவினை சிக்கல் எது? பத்திரத்தில் பொய் சேர்க்கை எது?ஹக்கு பிரச்சினை எது என உடனடியாக தரம்பிரித்து விட்டேன்

 
அதன்பிறகு வெகுதூரத்தில் இருந்து வருகின்றவர்கள் யார்? சோளிங்கர் சுற்றி இருப்பவர்கள் யார்?என்று பார்த்து சோளிங்கர் சுற்றி இருப்பவர்களுக்கு கடைசி டோக்கன்களும் தூரத்தில் இருந்து வருகிறவர்களுக்கு முதல் டோக்கனும் போடபட்டு கோவை,தூத்துகுடி,உளுந்தூர் பேட்டை, திருநெல்வேலி, சென்னை போன்ற புகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு முதலிலும் வேலூர் , இராணிபேட்டை, ஒடுக்கத்தூர், அரக்கோணம், பள்ளிபட்டு, திருத்தணி பகுதிகளில் இருந்து வருகிறவர்களுக்கு அடுத்ததாகவும் சோளிங்கர் மற்றும் ஆர் கே பேட்டை பகுதிகளில் இருப்பவர்கள் இறுதியாகவும் டோக்கன் வழங்கபட்டது.
மேற்படி டோக்கன் வழங்கபட்ட படி முதல் நாள் அரங்கத்தில் மதியம் சாப்பாட்டுக்கு முன்னே ஆரம்பித்து இரவு 9.30 மணிவரை தொடர்ந்தது அதன்பிறகு இரவு 2 மணிவரை நான் தங்கி இருந்த விடுதியின்  அறையில் தொடர்ந்தது! மறுநாள் ஞாயிற்று கிழமை காலை 8 மணி அளவில் இருந்து மாரை 7 மணி வரை கவுன்சிலிங் தொடர்ந்தது வந்திருந்த 51 நபர்களில் 31 நபர்களுக்கு விரிவான  கவுன்சிலிங் மற்றும் வழிகாட்டுதல் கொடுக்கபட்டது.

மீதி 20 நபர்கள் விஷயங்களை கற்று கொள்ளவும் ஆவண எழுத்தர் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்  விரும்புகின்றவரர்களும் வந்து இருந்தனர் அதனால் மதியம் உணவு. முடித்ததுவம் 1.30 மணிநேரம்  நிலசிக்கல்கள் சம்மந்தமாக ஒரு பாடம் எடுத்து இருந்தேன். அனைவருக்குமே புதிய தகவல்கள் ,புதிய பார்வைகளாக அமைந்து  இருந்தது.அனைவரின் கண்களிலும் புதிய வெளிச்சங்களை பார்த்தேன் வந்து இருந்த அனைத்து நண்பர்களும் கண்டுகொள்ளாமல் அலட்சியத்தோடு வீட்டில் இருக்கும் பத்திரங்களை பட்டாக்களை பிற ஆவணங்களை  பார்த்து இருப்பார்கள். நிலங்களை தனக்கு நிறைய தெரியும் என்று நினைத்து இருந்தவர்கள் கூட நிலத்தில் இவ்வளவு ஆழம் இருக்கிறதா? என்று உணர ஆரம்பித்து விட்டு இருந்தார்கள்! அனைவருமே என்னுடன் நேரிடையாக வந்து தங்களின்  கருத்துரைகளை கொடுத்து இருந்தனர். நன்றி சொல்லிவிட்டு சொல்லி இருந்தனர்
வழிகாட்டுதல் பெற்ற பலரின் எழுத்துபூர்வமான குறிப்புகளை வரிசை எண் இட்டு அனைத்தையும் ஒளி வருடல் செய்ய பட்டு அவை பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான வேலைகளை ஆர் .கே .பேட்டை J.மோகன் அவர்ரகள் செய்து முடித்து இருந்தார்கள்
என்னுடன் அமர்ந்து நான் மனுதாரர்களின் ஆவணங்களை வாசித்துவிட்டு சொல்ல கைவலிக்க வலிக்க எழுதி கொடுத்த சேலம் ஓமலூரை சேர்ந்த என் தம்பி தமிழும்,தரும்புரியை போச்சம்பள்ளியை சேர்ந்த அருள் வேடியும் மிகவும் பாராட்ட பட வேண்டியவர்கள்
வந்திருந்த மக்களுக்கு அவர்களின் முதல்கட்ட சிக்கலை ஆவணபடுத்திய திரு.பாலகிருஷணன்,வழக்கறிஞர் வினோத், திமிரி சண்முக பிரியன், திருப்பூர இரவிசந்திரன், திரு.சத்தியராஜன், பள்ளிபட்டை சேர்ந்த வழக்கறிஞர் நண்பர்கள் திரு.ஹரி மற்றும் திரு.மணி அவர்கள் அனைவரும் பாராட்டபட வேண்டியவர்கள்.

 
தூக்குதல்,இறக்குதல், கொண்டுவருதல் ,பேனர்கள் கட்டுதல் ,ஒட்டுதல் என்று சுற்றி சுற்றி கள பணி ஆற்றிய மதுராந்தகம் சுரேஷ் அவர்களின உழைப்பு மிகவலுவான உறுதுணையாக நிகழ்சசிக்கு இருந்தது.அதேபோல் அனைத்த நிகழ்வுகளையும் தன்னுடைய காமிராவால் படங்களாக வீடியோக்களாக படம்பிடித்து பாதுகாத்து வைத்த சிவகங்கை -இராமநாதன் அவர்களின் உழைப்பும் என்றும் என் நன்றிகளுக்கு உரியது
மேலே சொன்னதெல்லாம் களத்தில் அரும்பாடுபட்டவர்கள் உழைத்தவர்கள் உறுதுணையானவர்கள், இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு வரை பிரச்சார காலத்தில் அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்த நிகழ்வு பற்றிய அறிவிப்புகளை தொடர்ந்து பிரசாரபடுத்திய  என் சகோதரி தென்காசி .திருமதி.மீனா இசக்கிராஜா அவர்களுக்கும், நிலம் உங்கள் எதிர்காலம் டெலிகிராம் குழுவில் இந்நிகழ்வை பிரசாரபடுத்தி இந்நிகழவுக்கான நிதி உதவிகளை பெறுவதற்கும் அதனை ஒருங்கிணைத்த அண்ணன் மேலூர் முரளி மற்றும் பாபாநாசம் ஜெயகுமார் அவர்களுக்கும் பி அறகட்டளை உறுப்புனர்களானா திரு,முத்து நயினார்,திரு.முத்து கதிர்வேல் திரு.பிரகாஷ் பாண்டிசேரி. கோவை இங்க நாதன் அவர்களுக்கும்  நன்றிக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் ஆவர் 

 
இதற்கு பண உதவியாகவும் பொருளுதவியாகவும் டெலகிராமில் பயணிக்கின்ற பல நண்பர்கள் டெலகிராம் குழுவில் இல்லாத சோளிங்கர் சுற்றுவட்டார புகுதிகளில் இருக்கும் நண்பர்களும் செய்து இருந்தார்கள் !இது அவர்களின் சமூக கடமை என்று கருதுகிறேன், அன்னாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!அதனுடைய விவரம் பின்வருமாறு!
பொருளாக வந்த நன்கொடை
1)திரு.சத்தியராஜன் -சென்னை 50 நோட்புக் 50 பேனா
2)சண்முக பிரியன்(திமிரி)-புத்தர் படம் அன்பளிப்பு
3)திரு.பாலாஜி -கொண்டாபுரம் ஆர்.கே.பேட்டை                -லஞ்ச் டேபிள் ,டேபிள் ஜமுக்காளங்கள் அதனுடை வாடகை
4)திரு.சண்முகபிரியன் -5 நபருக்கு காலை இடலி டிபன் நன்கொடை
5)வேலூர் மாவட்ட இளைஞரணி பாட்டாளி மக்கள் 5மட்டன் பிரியாணி மற்றும் மட்டன் கறி
6)விருந்தினர் 8 சால்வைகள் -வழக்கிறஞர் வினோத் ஆர் கே பேட்டை
10)Q T Associates நிகழ்ச்சிக்கு மதிய உணவு செலவு (மொத்த செலவு -4500 இல Q.T associates ரூ .3000)
11)லா பார்ட்யூன் ரியல்டி நன்கொடை ஹால் வாடகை ரூ .5000 
12)பிராப்தம் அகடமி பயிற்சி  வகுப்பு கையேடுகள் -ரூ 3000
13)திருமதி.பொம்மி (பா.ஜ.க) ஶ்ரீகாளிகாபுரம் நன்கொடை -சானிடைசர் மாஸ்க் 

நேரடியாக  வந்து என்னிடம் கொடுத்த  நன்கொடை 
1)MRK இராமகிருஷ்ணா -1000
2)அருண்குமரன் அணைகட்டு-1650

டிரஸ்ட் கணக்கில் நேரடியாக விழுந்த நன்கொடை
1) ராபின்சன் -500

சாமி.ஜி – 500

செந்தில்வேல் – 500

வெங்கடேஷ் – 1000

அறிவழகன் .T – 2000

பொன்செல்வன் – 500

திருமுருகன் – 500

பெரியசாமி – 500

தேவா (திருச்சி) -500

இராமகிருஷ்ண வேணுகோபால் -ரூ 500


அதேபோல் அன்று நடந்த மேடை நிகழ்ச்சியில் வாழ்த்துரை கொடுத்த அண்ணன் S .சண்முகம் ,மற்றும திருமதி .கிருஷ்ணவேணி  மற்றும் தனிவட்டாட்சியர் தேவி அவர்கள் வாழ்த்துரை வழங்கி பாராட்ட வழக்கறிஞர் வினோத் முன்னிலையிலும் J.மோகன் அவர்கள் வரவேற்புரையும் திமிரி சண்முகபிரியன் அவர்கள் நன்றியுரையும் சொல்ல நான் நிகழ்சி எப்படி நடக்க போகிறது என்ற செய்தியினை தெரிவித்து அனைவருக்கும் பொன்னாடை மொமென்டோ கொடுத்து இதன் முன் முயற்சியாளர்களை பாராட்டினேன். நிகழ்ச்சி அமைப்பாளர்களும் எனக்கு அழகான புத்தர் படத்தினை அன்பளிப்பாக அளித்து பாராட்டினார்கள்
இந்த சோளிங்கர் நிகழ்ச்சி வெற்றியை இதனை முன்முயற்சி எடுத்து ஒருங்கிணைத்த J.மோகன் , வழக்கறிஞர் வினோத், திமிறி சண்முகபிரியன், வீர பிரம்ம ஆச்சாரி ஆகியோருக்கு அர்பணிக்கிறேன்.
மேலும் கள்ளகுறிச்சி மற்றும்  சோளிங்கர் நிகழ்ச்சியில் தேடி வருகின்ற மக்களின் முக்கிய தேவை கருத்தரங்கத்தை விட தங்கள் நில சிக்கலிக்கான வழிகாட்டுதலாக தான் இருக்கிறது. எனவே அடுத்து வர விருக்கும் நிகழ்வுகளை முழுவதுமாக வழிகாட்டுதல் முகாமா வைத்து விட்டு மதிய உணவுக்குபிறகு சற்று இளைப்பாறும நேரம் கருத்தரங்கம் நிகழ்ச்சி ஒருவ்கிணைப்பளர்களுக்கான பாராட்டுதல் நன்றி பகிர்நல் நிகழ்ச்சிகளை செய்யலாம. என்று இருக்கிறேன்
அடுத்த நிலத்தின் நலமறிய ஆவல் -3 வழிகாட்டுதல் முகாம் அக்கோடபர் மாத இறுதியில் விழுப்பரத்தில் நடத்தலாம் என்று இருக்கிறேன். விழுப்புரம் தம்பி ரியல் எஸ்டேட் களபணியாளர் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடன் பாசத்துடன் இருக்கும் திரு.ஜெயமூர்த்தி ஒரு அரங்கத்தை பார்த்து அதனை போட்டோ எடுத்தும் போட்டு இங்கே நடத்துங்கள் என்று போன வாரமே எனக்கு தனது கோரிக்கையை வைத்து இருந்தார். அன்னாரின் முன்முயற்சியை மகிழ்வோடு ஏற்றுகொண்டு அடுத்த மாதம் அக்டோபரில் நிலத்தின் நலமறிய ஆவல்-3 விழுப்புரத்தில் நடக்கும் அதனுடைய தேதி மற்றும் பிற விவரங்கள் பிறகு அறிவிக்கிறேன்.


இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில் முனைவர்

9841665836/9962265834

#paranjothipandian #author #trainer #writer #consulting #trust #nilam_ungal_ethirkalam #donation #nilaththin_nam_ariya_aaval #training #seminar #associates #sholingar #viluppuram 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்