பழைய மனைபிரிவுகளில் மனை உரிமையாளர்களை குழப்ப எங்காளுகளின் கை வண்ணம்!!

 பழைய மனைபிரிவுகளில் மனை உரிமையாளர்களை குழப்ப எங்காளுகளின் கை வண்ணம்!!



1960 களில் இருந்தே சென்னை மற்றும் பிற புறநகர்களை சுற்றி மனை பிரிவுகள் உருவாக ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அரக்கோணம் திண்டிவனத்தில் சென்னைகாரங்களை கூட்டிவந்து மனை விற்பது பெரிய சவால் இவ்ளோ தூரமாக இருக்கிறதே என்று சலித்து கொள்வார்கள். ஆனால் 1960 மற்றும் 1970 திருப்போருர் மறைமலை நகர் போன்ற ஊர்களில்  மனைபிரவுகள் போட்டு விற்ற ரியல்எஸ்டேட்காரர்களை பாராட்டிதான் ஆகவேண்டும். அப்படிபட்ட பல லே அவுட்கள் இப்பொழுது சூடாக சுட சுட மறுவிற்பனைகள் ஆகி கொண்டு இருக்கிறது.

சதுரடி ரூ 1000 த்தில் இருந்து ரூ 2500 வரை விற்பனை ஆகி கொண்டு இருக்கிறது இப்படிபட்ட லேஅவுட்களில் எங்காட்கள் இப்பொழுது ஒரு ரியல்எஸ்டேட் ஆபிஸ் அல்லது ஒரு டீகடை பேக்கரி அல்லது வேறு ஏதாவது வியாபரம் செய்ய கடை போட்டுகொண்டு யார் லேஅவுட்குள் வருகிறார்கள் யார் லே அவுட்குள் போகிறார்கள் என்று பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

பைனாகுலர் வைத்து வருகின்றவர்கள் எந்த மனையை தேடி வருகிறார்கள் என்றெல்லாம் பார்த்து வியாபாரத்தை பிடிக்கின்றார்கள். 1970 களில் மனை வாங்கியவர்கள் ரூ 100 அல்லது ரூ 200 க்கு வாங்கியிருப்பார்கள். அன்று வாங்கியவரின் வாரிசுகள் தான் இன்று மனையை தேடி வருவார்கள். அவர்கள்மனையை கண்டு பிடிக்க சிரமபடுவார்கள். மேற்படி மனைபிரிவில் மனை கற்கள் இருக்காது. மனைகள் மழை தண்ணீரில் மூழ்கி இருக்கும், பெரிய கோரை புற்கள் வளர்ந்து இருக்கும்

மனையை கண்டுபிடிப்பதற்காகவே ரியல்எஸ்டேட்காரர்களின் உதவியை உரிமையாளர்கள் நாட வேண்டி இருக்கும்.அப்படி தேடி வந்தால் தான் ரியல்எஸ்டேட்காரர்களுக்கு அது ஒரு வியாபார lead, அதனால் தான் யாரவது மனையை தேடி வருகிறார்களா என்று காத்திருக்கும் கொக்கு போல மனை பிரிவிலே காத்து இருப்பார்கள்.

இன்னும் சில மனை பிரிவுகளில் மனை உரிமையாளர்கள் தங்கள் மனையை சீக்கிரம் கண்டு பிடித்துவிட கூடாது என்பதற்காகவே பிளாட் எண்களை மாற்றி மாற்றி எழுதி வைப்பது மனைபிரிவுகளுக்கு உள்ளயே போர்டு வைத்து இந்த வரிசையில் இருக்கும் எண்கள் என்று தவறான எண்களை எழுதி வைப்பது போன்ற வேலைகளை எங்காட்கள் செய்வார்கள்.

உங்கள் அப்பா தாத்தா வாங்கிய மனைகள் 1960 1970 களில் இருந்தால் அதனை பார்க்க போகும் பொழுது கொஞ்சம் கவனம் எடுத்துகொள்ளுங்கள்.(படத்தில் இருப்பது தாம்பரம் வரதராஜாபுரம் இராயப்பா நகர் 900 சீரியல் வரும் மனைகளில் புதிய போர்டு வைத்து 300 சீரியல் எழுதியிருக்கிறார்கள் எங்காட்கள்)

#RoyappaNagar #varadharajapuram #plots #realestate #brokers

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
www.paranjothipandian.in
9841665836,9841665837,9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்