1.காந்தி்ஜியின் சீடரும் மிகச்சிறந்த காந்திய தலைவரும் ஆன திரு.ஆச்சார்ய வினோபாவே என்ற உயர்ந்த மனிதனின் சிந்தனையில் அனைவருக்கும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் நோக்கத்தில் தோன்றிய இயக்கம்தான் பூமிதான இயக்கம்.. 2.நிலமற்றவர்களுக்கு நிலமுள்ள பண்ணையார்கள்,ஜமீன்கள்,நிலகிழார்கள் நிலத்தை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள்.அல்லது பூமிதான இயக்கத்தினர் கேட்டு பெறுவார்கள். 3.அந்த நிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் &கூலிகளுக்கு பிரித்து கொடுப்பார்கள் பூமி தான இயக்கத்தினர். 4.அதன்படி தமிழகத்தில் திரு.வினோபாவே அவர்கள் 1956 களில் ஓராண்டுக்கு தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து பூமி தானங்களை நிலகிழார்களிடம் இருந்து பெற்றார். அப்படி பெற்ற நிலங்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிர கணக்கான ஏக்கர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டு இருக்கிறது. 5.கொஞ்ச நிலங்கள் பகிர்தளிக்க படாமல் பூமி தான போர்டு கிட்டயே உள்ளது.கொஞ்ச நிலங்கள் அந்தந்த பகுதியில் சட்ட சிக்கல்கள் சட்ட குழப்பங்களால் பூமி தான இயக்கத்தாலேயே இன்னும் கையகப்படுத்த படாமல் இருக்கிறது. 6.பூமி தான நிலங்களை அந்த அந்த பகுதிகளில் தீர...
1)அழகான பெயரகள் நிலவியல் சாலை அல்லது நிலவியல் ஓடை நிலவியல் கால்பாதை, நிலவியல் வண்டி பாட்டை, போன்ற பெயரகள் எல்லாம் கிராம அ-பதிவேட்டில் பார்க்கலாம். இதனை அந்த கால செட்டில்மெண்ட் கணக்கில் பூஸ்துதி ரோடு, பூஸ்துதி பாட்டை,பூஸ்துதிஓடை என்றும் குறிப்பிடபட்டு இருக்கும் 2) சில ஊரில் பேச்சு வழக்கில் பூஸ்டர் ஓடை பூஸ்டர் ரோடு என்றும் சொல்லிகொண்டு இருப்பார்கள். இப்படிபட்ட வார்த்தைகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்றால் பட்டா நிலத்திதல் இருக்கிற ஓடை,பட்டா நிலத்தில் இருக்கிற சாலை என்று அர்த்தம் 3) பட்டா ஓடை, பட்டா சாலை இரண்டுக்கும் தனி சர்வே எண் உட்பிரிவ கொடுத்து புலப்படத்தில் கூர் செய்து (தனியாக பிரித்து காட்டி இருப்பார்கள்) அபதிவேட்டிலும் நிலவியல் பாதை என்று குறிப்பிட்டு இருப்பார்கள் 4) போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலங்களில் நிலவு வெளிச்சத்தில் அந்த நடைபாதை வண்டி பாதை ஓடைஒரமாக நடத்து முக்கிய சாலையை அடைவார்கள் அதனை நிலவியல் சாலை என்பார்கள் 5) இயற்கையாகவே தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உருவாகி ஓடும் ஓடைகள் ,நீர்வழிபாதைகள், மக்கள் நடைபாதைகளை அவர்கள் வசதிக்கு ஏற்ப பட்டா நிலங்களில் நடந்து ப...
நிலத்திற்கு “பட்டா” என்ற வருவாய் துறை ஆவணம் தவிர அதனுடன் கீழ்க்கண்ட நான்கு ஆவணங்கள் மிக முக்கியமானவை . அவை பட்டாவை உறுதி செய்யவும், வேறு ஏதாவது வில்லங்கங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்து நிலங்களை வாங்குவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும், மேற்படி நான்கு ஆவணங்களை பற்றியும் சரியான புரிதல் இன்று வரை பொதுமக்களுக்கு இல்லை, என்பதே உண்மை! அதனை இந்த கட்டுரை தீர்க்கும் என நினைக்கிறன். 1. சிட்டா: “சிட்டா” என்பது கிராம நிர்வாக கணக்கு புத்தகங்களில் ஒரு பதிவேடு (கணக்கு எண் 10 ) இதில் யார் யாருக்கு எல்லாம் “பட்டா” கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதனுடைய விவரங்கள் தொகுக்கப்பட்டு இருக்கிற பதிவேடு ஆகும் . உதாரணமாக பள்ளிகூட ரேங்க் கார்டு மாணவர்களுக்கு கொடுக்கபட்டு இருக்கும், அது வெளியே சுற்றி வரும் ஆவணம் அதுபோல் பட்டாவை வைத்து கொள்ளுங்கள். பள்ளிகூட லெட்ஜெரில் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்கள் தொகுத்து ஒரு பேரேடு இருக்கும் அது போல தான் இந்த சிட்டா பதிவேடு! பட்டா வெளியில் சுற்றி வருவதால் போலி அச்சடிப்பு , நகல், கலர் ஜெராக்ஸ், மூலம் பட்டாக்களில் அளவுகள் மாற்றங்கள், பட்டாதாரர் பெயர், தந்தை பெயர் மாற்றங்கள் ...
Comments
Post a Comment