சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை!

சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! 


அரசு பல்வேறு பொதுதேவைக்காக சாமானியர்களின் நிலங்களை கையகபடுத்தி நல்ல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. சிப்காட்,சிட்கோ,சிறப்பு பொருளாதார மண்டலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்புற வாழ்விட வாரியம்” பொதுப்பணித்துறை மற்றும் CMDA போன்ற அரசு துறைகள் சாமானியர்களின் நிலங்களை கையப்படுத்துகிறது.அப்படி கையப்படுத்தும் பொழுது அரசு நில ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கு ஈடாக சாமானியருக்கு நட்ட ஈட்டை கொடுக்கும்.மேற்படி நஷ்ட ஈடு அரசு நிலத்தை எடுக்கும் நேரத்தில் இருக்கும் சந்தை மதிப்பு வழிகாட்டியை பார்த்துதான் சாமானியன் நிலத்திற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிப்பார்கள்.அந்த நேரத்தில் வழிகாட்டி மதிப்பு குறைவாக இருந்தால் நிலத்தை இழக்கின்ற சாமானியர்களுக்கு நஷ்டஈடு குறைவாக கிடைக்கும்,அதுவே நிலம் கையகபடுத்துகின்ற நேரம் சந்தை மதிப்பு வழிகாட்டி நியாயமாக இருந்தால் நிலத்தை இழக்கும் சாமானியனுக்கு நஷ்டஈடு நியாயமாக கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.தமிழ்நாட்டில் நில ஆர்ஜிதம் செய்யும்பொழுது நில ஆர்ஜிதம் செய்யும் துறையானது ஒரு பெரும் நஷ்ட ஈட்டு தொகையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிடும், அந்த தொகையை நிலத்தை இழக்கும் சாமானியர்களுக்கு நஷ்ட ஈடாக பிரித்து கொடுக்கும்,இந்த வேலையை செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் நில எடுக்கும் பகுதியில் ஒரு நில எடுப்பு தாசில்தாரரை (Land accusation thasildhar) நியமிப்பார்கள்.இந்த நில எடுப்பு தாசில்தார் நியமிக்கிறார்கள் என்று பத்திரிக்கையில் காசு விளம்பரமாக பிரசுரிக்கும்.அந்த நேரத்தில்தான் ஒவ்வொரு சாமானியனும் சந்தை மதிப்பு வழிகாட்டியை கவனமாக கண்கொத்தி போல கவனிக்க வேண்டும்.ஏனென்றால்“சந்தை மதிப்பு வழிகாட்டி”மாநில மாவட்ட வழிகாட்டி குழு நிர்ணயித்து அதுதான் அச்சடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு பதிவேட்டில் இருக்கும். அதனை பார்த்துதான் சார்பதிவாளர் யார்? கேட்டாலும் சந்தை மதிப்பு வழிகாட்டியை பார்த்து சொல்வார்கள்.

அந்த MVG புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு இருக்கும் அதனை பார்த்துதான் சார்பதிவாளர் MVG யை என்னவென்று பார்த்து சொல்வார்கள். சில நேரங்களில் அச்சடிக்கப்பட்ட மதிப்பு இருக்கும் இடத்தில் பக்கத்தில் சார்பதிவாளர்கள் மதிப்பை மாற்றி பென்சிலில் எழுதி வைத்து இருப்பார்கள்! 

தொடரும்...



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…