மனஅழுத்தம், விரக்தி, சோர்வு, கோபம் இவைகளை கையாளுதல்..
மனஅழுத்தம்:-
1.கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம் கோபத்திற்கு காரணம் மன அழுத்தம்.
2.குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது, மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது.
3. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரப்பரப்பின்றி அமைதியாக அணுகினால் மன அழுத்தம் நெருங்காது.
4. மொத்த வேலைகைளையும் ஒரே நேரத்தில் போட்டு குழுப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லாதவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்துவிட முடியும்.
………………………………………………………………………………………..\
மன அழுத்தத்தை எதிர்கொள்வது எப்படி?
மன அழுத்தத்தின் காரணங்களை நன்கு ஆராய்ந்து அதன் விளைவுகளை புரிந்து கொண்டு, அதற்கான தீர்வுகளை நாம் கண்டறிய வேண்டும். முக்கியமான மற்றும் எளிதான தீர்வுகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
1. நேர்மறையாக இருக்கவும்.
2. உங்களிடம் நீங்கள் நம்பிக்கையாக இருக்கவும்.
3. உறவுகளை உருவாக்கவும்
4. திறனுடன் உரையாற்றவும்.
5. திறம்பட நேரத்தை நிர்வகிக்கவும்.
6. குறிக்கோளுடன் சிந்திக்கவும்.
7. சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ளவும்,
8. எதிர்காலத்தில் வரும் இடையூறுகளை சந்திக்க மனதை தயாராக்கிக் கொள்ள வேண்டும்.
9. உடலை பாராமரித்து சீராக வைத்துக் கொள்ளவும்.
10. பணித்திட்டங்களை பட்டியலாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
11. எவ்வித செயல்களையும் சவாலாக எதிர்கொள்ள வேண்டும்
………………………………………………………………………………………..
பணியிடத்தில் ஏற்படும் விரக்தி மற்றும் சோர்வுகுறைப்பதற்கு என்ன செய்யவேண்டும்:
Business people working in an open plan office1. மற்றவர்களின் சிந்தனைகளுக்கும், எண்ணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் நமது கடமையை தீவிரமாக செய்ய வேண்டும்.
2. தன்னைவிட சிறந்தவர்களின் உதவியையும் ஆதரவையும் நாட வேண்டும்.
3. கோபமாக இருக்கும்பொழுதும் சோகமாக இருக்கும்போது எந்த முடிவும் எடுக்கக்கூடாது.
4. சிக்கல்களுக்கு தீர்வு காண முயல வேண்டும் தவிர மற்றவர்களை குறை சொல்லக்கூடாது.
5. புதிய மாற்றங்களையும் இனக்கத்தோடு ஏற்க வேண்டும்.
6. யுகங்களுக்கும், சாத்தியக்கூறுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது
7. உண்மை தகவல்களுக்கேற்ப கவனம் செலுத்த வேண்டும்.
8. நம்பிக்கையுடன் சாதகமாக முடிவெடுக்க வேண்டும். பாதகமான முடிவுகள் நமது முயற்சியை தோற்கடிக்கும்.
9. சோர்வடைந்து முயற்சியை அடைவதில் சிரமமாக இருப்பின் நன்கு ஒய்வெடுத்து பின்பு மீண்டும் யோசித்து பணி செய்ய வேண்டும்.
………………………………………………………………………………………..
கோபத்தை கட்டுப்படுத்துதல்:
1. பொதுவாக நாம் கோபத்தை எப்பொழுதும் அப்படியே வெளிப்படுத்துகிறோம். ஆனால் கட்டுப்படுத்துவதே மிகச் சிறந்தது.
2. கோபம் ஏன் வருகிறது என்று யோசிப்பதை விட எதனால் வருகிறது என்று உணரவேண்டும். (டென்ஷன், தலைவலி)
3. உண்மையாக நம்மை பாதிப்பது எது என்பதை அறிய வேண்டும்.
4. கோபம் வரும்போது, அதனை குறைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
(அந்த இடத்தை விட்டு வெளியேறுவது அமைதியாக இருப்பது மூச்சை இழுத்து விடுவது அமைதியான இடத்திற்கு செல்வது போன்றவை)
5. கோபப்படும்போது நாம் நடந்து கொள்ளும் முறையை கண்டறிய வேண்டும்.
நம் கோபத்திற்கு நாமே தான் காரணம் என்பதை உணர வேண்டும்.
6. உறுதியாக பேசுவதை பற்றி கற்றுக்கொள்ளவேண்டும். நம் கோபத்துக்கு காரணமானவரிடம் பேசி புரியவைக்க வேண்டும்.
7. அவர் கோபப்படும் போது நடந்து கொள்ளும் முறை உங்களை எப்படி பாதிக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
8. நம்முடைய எண்ணங்களை வெளிப்படையாகவும், தெளிவாகவும் சொல்ல வேண்டும்
………………………………………………………………………………………..
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
1.காந்தி்ஜியின் சீடரும் மிகச்சிறந்த காந்திய தலைவரும் ஆன திரு.ஆச்சார்ய வினோபாவே என்ற உயர்ந்த மனிதனின் சிந்தனையில் அனைவருக்கும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் நோக்கத்தில் தோன்றிய இயக்கம்தான் பூமிதான இயக்கம்.. 2.நிலமற்றவர்களுக்கு நிலமுள்ள பண்ணையார்கள்,ஜமீன்கள்,நிலகிழார்கள் நிலத்தை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள்.அல்லது பூமிதான இயக்கத்தினர் கேட்டு பெறுவார்கள். 3.அந்த நிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் &கூலிகளுக்கு பிரித்து கொடுப்பார்கள் பூமி தான இயக்கத்தினர். 4.அதன்படி தமிழகத்தில் திரு.வினோபாவே அவர்கள் 1956 களில் ஓராண்டுக்கு தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து பூமி தானங்களை நிலகிழார்களிடம் இருந்து பெற்றார். அப்படி பெற்ற நிலங்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிர கணக்கான ஏக்கர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டு இருக்கிறது. 5.கொஞ்ச நிலங்கள் பகிர்தளிக்க படாமல் பூமி தான போர்டு கிட்டயே உள்ளது.கொஞ்ச நிலங்கள் அந்தந்த பகுதியில் சட்ட சிக்கல்கள் சட்ட குழப்பங்களால் பூமி தான இயக்கத்தாலேயே இன்னும் கையகப்படுத்த படாமல் இருக்கிறது. 6.பூமி தான நிலங்களை அந்த அந்த பகுதிகளில் தீர...
1)அழகான பெயரகள் நிலவியல் சாலை அல்லது நிலவியல் ஓடை நிலவியல் கால்பாதை, நிலவியல் வண்டி பாட்டை, போன்ற பெயரகள் எல்லாம் கிராம அ-பதிவேட்டில் பார்க்கலாம். இதனை அந்த கால செட்டில்மெண்ட் கணக்கில் பூஸ்துதி ரோடு, பூஸ்துதி பாட்டை,பூஸ்துதிஓடை என்றும் குறிப்பிடபட்டு இருக்கும் 2) சில ஊரில் பேச்சு வழக்கில் பூஸ்டர் ஓடை பூஸ்டர் ரோடு என்றும் சொல்லிகொண்டு இருப்பார்கள். இப்படிபட்ட வார்த்தைகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்றால் பட்டா நிலத்திதல் இருக்கிற ஓடை,பட்டா நிலத்தில் இருக்கிற சாலை என்று அர்த்தம் 3) பட்டா ஓடை, பட்டா சாலை இரண்டுக்கும் தனி சர்வே எண் உட்பிரிவ கொடுத்து புலப்படத்தில் கூர் செய்து (தனியாக பிரித்து காட்டி இருப்பார்கள்) அபதிவேட்டிலும் நிலவியல் பாதை என்று குறிப்பிட்டு இருப்பார்கள் 4) போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலங்களில் நிலவு வெளிச்சத்தில் அந்த நடைபாதை வண்டி பாதை ஓடைஒரமாக நடத்து முக்கிய சாலையை அடைவார்கள் அதனை நிலவியல் சாலை என்பார்கள் 5) இயற்கையாகவே தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உருவாகி ஓடும் ஓடைகள் ,நீர்வழிபாதைகள், மக்கள் நடைபாதைகளை அவர்கள் வசதிக்கு ஏற்ப பட்டா நிலங்களில் நடந்து ப...
நிலத்திற்கு “பட்டா” என்ற வருவாய் துறை ஆவணம் தவிர அதனுடன் கீழ்க்கண்ட நான்கு ஆவணங்கள் மிக முக்கியமானவை . அவை பட்டாவை உறுதி செய்யவும், வேறு ஏதாவது வில்லங்கங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்து நிலங்களை வாங்குவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும், மேற்படி நான்கு ஆவணங்களை பற்றியும் சரியான புரிதல் இன்று வரை பொதுமக்களுக்கு இல்லை, என்பதே உண்மை! அதனை இந்த கட்டுரை தீர்க்கும் என நினைக்கிறன். 1. சிட்டா: “சிட்டா” என்பது கிராம நிர்வாக கணக்கு புத்தகங்களில் ஒரு பதிவேடு (கணக்கு எண் 10 ) இதில் யார் யாருக்கு எல்லாம் “பட்டா” கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதனுடைய விவரங்கள் தொகுக்கப்பட்டு இருக்கிற பதிவேடு ஆகும் . உதாரணமாக பள்ளிகூட ரேங்க் கார்டு மாணவர்களுக்கு கொடுக்கபட்டு இருக்கும், அது வெளியே சுற்றி வரும் ஆவணம் அதுபோல் பட்டாவை வைத்து கொள்ளுங்கள். பள்ளிகூட லெட்ஜெரில் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்கள் தொகுத்து ஒரு பேரேடு இருக்கும் அது போல தான் இந்த சிட்டா பதிவேடு! பட்டா வெளியில் சுற்றி வருவதால் போலி அச்சடிப்பு , நகல், கலர் ஜெராக்ஸ், மூலம் பட்டாக்களில் அளவுகள் மாற்றங்கள், பட்டாதாரர் பெயர், தந்தை பெயர் மாற்றங்கள் ...
Comments
Post a Comment