MANUPULATION தலைவர்கள் என்ற குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இன்றைய அடிதட்டு சிறு மற்றும் குறு தொழில் முனைவர்கள்!!!


சிறு மற்றும் குறு தொழில் முனைவர்கள் அதுவும் முதல் தலைமுறையினரை சார்ந்த தொழில் முனைவர்களின் குடும்பத்திலோ, குடும்ப பாரம்பரியத்திலோ அவர்களை சுற்றியுள்ள வாழிடங்களிலோ தொழில் முனைவு தன்மை (Entrepreneurship)சிறிதும் இல்லாத வேலைக்கு போகும் (worker mentality)மக்களே அதிகமாக இருப்பார்கள்.

அவர்கள் தொழில் செய்பவர்களை அட்வைஸ் செய்தும் பரிகாசம் செய்தும் தோற்றவர்களை எடுத்து சொல்லியும் தொழில்முனைவு தன்மைக்கு எதிரான சிந்தனைகளையே விதைப்பார்கள் அப்படிபட்டவர்களின் புறச்சூழல் எதிர்மறை செல்வாக்கினை எல்லாம் தாண்டி ஒரு சிறு தொழிலை உருவாக்கி விஸ்தரிக்க அதிக அளவு நெஞ்சில் திராணியும் கடும் உழைப்பும் தேவைபடுகிறது.

அப்படி உழைத்து ஒரு தொழில் முன்னேறி வரும்போது அரசோ,அரசு இயந்திரமோ,வங்கியோ, கல்வி முறையோ என்று எதுவுமே பெரிதளவில் எங்களுக்கு துணையாக இருந்ததில்லை. மேலும் தொழில் சூழல் 20 ஆண்டுகள் முன்னோக்கி முன்னேறி சென்றால் அரசு எந்திரம் அதனில் Upate ஆகாமல் 20 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கிறது. மேலும் காலவதி ஆன சிலபஸை அடிதட்டு மக்களிடையே இன்றுவரை விற்று கொண்டு இருக்கிறது SSI போன்ற அரசு எந்திரம்.இந்த தலைமுறை அடிதட்டு தொழில் முனைவரகளும் அதனை நம்பி படித்து பணத்தையும் நேரத்தையும் வீண்டிக்கின்றனர்.

எங்களுக்கு முன் கடந்த 50ஆண்டுகளாக தொழில் செய்த தொழில் முனைவர்கள் எல்லாம் அரசின் LICENCE சாம்ராஜ்ஜியத்தை ஊழல் முடை நாற்றமெடுத்த அரசியல் அதிகாரிகளின் மத்தியில் எங்கெல்லாம் வியாபார வாய்ப்புகள் கிடைகின்றதோ அதனையெல்லாம் பயன்படுத்துவதற்கு தங்களை முழு முதலாக அர்ப்பணித்து தொழிலை வளர்த்துள்ளனர். இன்றைய தலைமுறையினர் மேற்படி வெற்றிபெற்ற தொழில் முனைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை கற்று, உணர்ந்து அவர்களைப்போல உருவாக வேண்டுமென்று PASSION உடன் இன்றைய முதல் தலைமுறை தொழில் முனைவர்கள் பணியாற்றுகிறார்கள்.

அவர்கள் தங்களுடைய குடும்பம், சின்ன சின்ன மகிழ்ச்சிகள் அனைத்தையும் மறந்து பசியடக்கி, காமம் அடக்கி, ஆசை அடைக்கி சகித்துக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் தங்கள் வீட்டிற்கு சம்மபளம் போகவில்லையென்றாலும் தங்களுக்கு கீழே பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கு சம்பளம் போட்டுவிடுகின்றனர்.வாடிக்கையாளர்களுக்கு பேரார்வத்துடன் சேவைகளை அளிக்கிறார்கள். இப்படி தலைமை பண்புள்ள தொழில் முனைவர்கள் பலர் இந்நாட்டில் இருக்கிறார்கள்.

அனால் சமீபகாலமாக மேற்படி சிறு மற்றும் குறு தொழில் முனைவர்கள் நாடியை சற்றும் உணராத அதுவும் அடித்தட்டு மக்களிடம் இருந்து வளர்ந்துவரும் தொழில் முனைவரின் நெஞ்சம் அறியாத மேற்தட்டு எதேச்ச அதிகார போக்குடைய அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து முன்னேற்றி கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லாத PERFECTIONIST நோயாளிகள் அரசு இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு போடுகின்ற புதிய புதிய சட்டங்கள், சீர்திருத்தங்கள் மூலம் மேற்படி சிறு மற்றும் குறு தொழில் முனைவர்களின் ஈரல் கொலையை அறுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஒழுங்கு படுத்துகிறோம், தரப்படுதுகிறோம், சீர்படுத்துகிறோம் மக்களுக்கு நன்மை செய்கிறோம் என்ற போர்வையிலே ஆதிக்க மனப்பான்மை உள்ள பெரும் தொழில் அதிபர்களுக்கு, பெரும் நிறுவனங்களுக்கு கங்காணி வேலையும், தரகு வேலையும் பர்த்துகொண்டிருக்கிறது இந்த அரசு.

தம்பி முகேஷ் அம்பானி அவரின் அம்மா பங்கு பிரித்து கொடுத்த பல கம்பெனிகளை தோற்றுவிட்டு நடுத்தெருவில் நிற்கிறார் அவருக்கு வங்கியில் பல கோடிக்கணக்கான கடனையும் கொடுத்து AIROPLANE செய்ய ORDER ம் கொடுக்கிறார்கள். ஒன்றுக்கும் விளங்காத அதானி-க்கு திருவனத்தபுரம் AIRPORT-ஐ பராமரிக்க கொடுக்கிறார்கள். எங்களை போன்ற சிறு மற்றும் குறு தொழில் முனைவர்களுக்கு தொழில் கடன் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஆட்டோ(AUTO) ஓட்டுவது, வேன்(VAN) ஓட்டுவது, XEROX கடை வைப்பது COMPUTER CENTER வைப்பது போன்ற நாலாந்தர தொழிலகளையே செய்ய இந்த அரசு இயந்திரம் ஊக்குவித்துகொண்டிருக்கிறது.

நாட்டை தனியார் நிறுவனங்களுக்கு விற்பது என்று முடிவெடுத்துவிட்டால் எங்களை போன்ற சிறு மற்றும் குறு தொழில் முனைவர்களுக்கு விற்று விடுங்கள். நாட்டை விட்டு ஓடிப்போகின்ற தொழில் அதிபர்களுக்கு கோடி கணக்கில் கடன் கொடுப்பதற்கு பதில் எங்களுக்கு கோடி கணக்கில் கடன் கொடுத்து அதானி-க்கு AIRPORT நிர்வாகத்தை கொடுத்தது போல எங்களுக்கும் கொடுங்கள். இல்லை உங்களை போன்ற தொழில்முனைவர்களுக்கு நாங்கள் அரசு இயந்திரத்தை நடத்தவில்லை என்று சொன்னால் எங்களுடைய கோபத் தீ, எங்களுடைய வலிகளின் வேதனை உங்களை நிம்மதியாக தூங்க விடாது.
ஒரு காலத்தில் அரசியல் தலைவர்கள் தங்களையே அர்ப்பணித்து தியாகத்தையே வாழ்க்கையாக கொண்டு அனைத்து மக்களுக்கும் INSPIRATION-ஆக விளங்கி மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் தேவைக்காக பாடுபடுவார்கள்.

BUSINESS தலைவர்கள் மக்களின் ஆசையை தூண்டி, மக்களை ஒருங்கிணைத்து தங்களுடைய வியாபார இலட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள MANIPULATION MODEL-ஐ பயன்படுத்துவார்கள்.

இப்போது என்னடா என்றால் அரசியல் தலைவர்களும் வியாபார தலைவர்கள் போல 15 இலட்சம் தருகிறேன், வீட்டுக்கு 2000 ACCOUNT-ல் போடுகிறேன் என்று ஆசையை தூண்டுகின்ற MANIPULATION MODEL இல் இறங்கிவிட்டு மக்கள் தலைவர்கள் என்று ஊர் ஊராக சுற்றிகொண்டிருக்கிறார்கள். அரசியலையே COMPANY ஆக நடத்திக்கொண்டிருகிறார்கள். இந்த அரசியல் COMPANY களை ஒப்பந்தத்திற்கு பெரிய கார்ப்ரேட் COMPANY கள் எடுத்துக்கொண்டு எங்களை போன்ற சிறு மற்றும் குறு தொழில் முனைவர்கள் நடுத்தெருவில் நிற்க வைதுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் எங்களை போன்ற தொழில் முனைவர்கள் தங்களையே அர்ப்பணித்து மக்களை ஒருங்கிணைத்து INSPRATION MODEL -இல் வியாபாரத்தை கட்டினால் நிச்சயம் நீங்கள் (Manipulation Model அரசியல் தலைவர்கள் )தோலுரிக்கப்படுவீர்கள்.

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்