உங்கள் Personality தான் உங்களுடைய வாழ்வின் Personal Reality

4306628140be303480fc8f78e644f207


2007 களில திருமணம்.2011களில் என்னுடைய 2வது குழந்தை 3 வயதிலேயே இருதய பாதிப்புனால் இராமசந்திரா மருத்துவமனையில் எங்களின் பல கள மற்றும் மன போராட்டத்திற்கு பிறகு இறந்துவிட,என் வீட்டம்மா அழுது கொண்டே இருக்கிறாள் எனக்கு பெரிய அளவில் அழுகை வரவில்லை ஆனால் டாக்டர்கள் பேசிக்கொண்டது தான் மண்டையில் சுழன்றது.

குழந்தைக்கு கால்சியம் இல்லை!விட்டமின் D இல்லை ரிக்கடஸ் ன்னு எலும்பு உடையும் நோய் இருக்கு ஒமேகா-3 இல்லை அதனால இருதய பிரச்சினை நோய் எதிர்ப்பு திறன் இல்லை என்று சொன்னதும் அதன்பிறகு ஒராண்டாக சப்ளிமெண்டுகள் வாங்கி வாங்கி என் குழந்தைக்கு கொடுத்தும் அது சம்மந்தமாக படித்து படித்து அதன்படி நடந்தும் என்னால் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லையே!! தீராத யோசனை.

பலர் நான் செய்த பாவம் ! கர்ம வினை என்று என்னென்னமோ சொன்னார்கள். ஆரம்ப காலங்களில் இருந்தே என் உள்ளுனர்வு சொல்வதை தான் கேட்பேன். அடுத்தவர் கருத்துக்கள் எப்பொழுதும் நான் கருத்தில் கொள்வது இரண்டாம்பட்சம்தான்.அதனால் Nutrition குறைபாடுகள் தான் என் குழந்தை இறந்தது என்று நம்பினேன். அதன் பிறகு பல்வேறு விதமான உணவு முறைகள் நான் தொழிலோடு தொழிலாக நான் தேட ஆரம்புத்தேன் அதன்படி வாழ ஆரம்பித்தேன்.

வீகன்,வெஜ்(லாக்டோஸ்).வெஜ்(எக்).வெஜ்(நோ ஆனியன் நோ காரலிக்),புருட்டேரியன்,சிறுதானியம்,நான் வெஜ், நட்ஸ் மட்டும் ,கீடோ,பேலியோ சரிவிகித உணவு என்று பல டயட்டுகள் கடந்த ஆறு வருடமாக இருக்கிறேன். ஒவ்வொரு டயட் எடுக்கும் போதும் அதனை முழுமையாக எந்த ஆட்சேபனையும் இல்லாமல் அதிகபட்ச கீழ்படிதலோடு ஏற்றுக்கொண்டு குறைந்தது 6 லிருந்து 9 மாதங்கள் வரை கடைபிடித்து முழுமையான பாடி செக் அப் செய்து பார்ப்பேன். அதற்கேற்றவாறு அடுத்த டயட்டுக்கு மாறுவேன்.இப்படியான உணவுமுறை பயணத்தில் என் உடம்பிற்கும் என் சூழலுக்கு ஏற்ற உணவை நானே வடிவமைத்து கொண்டேன். அதன் பிறகு என் அன்புக்குறியவர்களுக்கு எல்லாம் நல்ல உணவுகளை பரிந்துரைப்பேன்.

ஒவ்வொருவரின் சூழலுக்கும் உடலுக்கும் ஏற்ப அவரகளுக்கு ஏற்ற ஒரு உணவு முறை சிறந்ததாக இருக்கும்.இந்த உலகில் அனைவருமே ஒரே உணவு முறை பின்பற்றினால் அந்த ஒரு உணவுக்கு டிமாண்ட் ஏற்படும்.பலவிதமான உணவுமுறைகளால் தான் அனைவருக்கும் இங்கு உணவு பாதுகாப்பு நிலவுகிறது என்று நம்புகிறேன்.

ஆனமீக,மத,சாதிய,சமூக காரணங்களாலும் சுகாதாரம் கலப்படம் போலி கெமிக்கல் என்று பல காரணங்களால் சத்தான உணவுகள் ஒதுக்கபடும்போது அது அந்த சத்து இல்லாத குழந்தைகளுக்கு போய்சேரவேண்டும் என்று நினைத்து கொள்வேன்.சத்தான உணவுகளை எடுப்பதில் யாராவது கவனகுறைவாக இருந்து அங்கு நான் இருந்தால் சாம பேத தான தண்ட முறைகளை பயன்படுத்தி எப்படியாவது சாப்பிட வைத்துவிடுவேன்.
அப்பொழுதெல்லாம் சத்து குறைபாட்டால் இறந்த என் குழந்தை நினைவு என்னுள் இருக்கும்.விட்டமின் குறைபாட்டால என் மகனுக்கு வந்த ரிக்கர்டஸ்ஸால் அவன் எலும்புகள் உடைந்து போனதை நினைத்து நான் சந்திக்கிற குழந்தைகளின் தாய்தந்தையரகளுக்கு எல்லாம் விட்டமின்கள் பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் சொல்லுவேன்

.அவர்கள் அப்போதைய மனநிலைக்கு ஏற்றவாறு அதனை எடுத்து கொள்வார்கள்.பள்ளிகூடத்தில் படித்தது போல இருக்கிறது என்று சிலர கிண்டல் செய்வார்கள் அதை எல்லாம் நான் கருத்துல கொள்ளாமல் என் மகனுக்காக சொல்வது என் கடமை என்று நான் இன்றுவரை பேசி கொண்டு இருக்கிறேன்.மேலும இதுவரை என் மகனின் நினைவாக ரூபாய் 300 மதிப்புள்ள ஒமேகா 3 மாத்திரை பாட்டில்களை இதுவரை 1000 மேல் வாங்கி பலருக்கு அன்பளிப்பாக கொடுத்து இருக்கிறேன்.இன்றும் அந்த பழக்கத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்
சரி Nutrition குறைபாடு மட்டும் உடல் ஆரோக்கிய குறைவிற்கு காரணமில்லை மன அழுத்தமும் காரணம் என்பதை உணர்ந்து அவற்றையும் படிக்க ஆரம்பித்து மூன்றுவகையாக மன அழுத்தம் இருப்பதை உண்ரந்தேன்

அவை:

 1)உடல்நோய்கள் குறைபாடுகள் காரணமாக மன அழுத்தம், 2)உணர்வு ரீதியான துரோகங்கள்,தோலவிகளால் மன அழுத்தம்,

3)பயம்,பாதுகாப்பின்மை,அதிகாரதிமிர்,போட்டி, பொறாமை,ஆதிக்கம் செலுத்துதல் போன்ற எதிர்மறை உணர்வுகளால் மன அழுத்தம்
ஆக இந்த மூன்று வகையிலும் எனக்கு மன அழுத்தங்கள் இருந்தது
மேலும் இருக்கின்ற மன அழுத்தங்களிலேயே perfectionist ஆக இருக்க வேண்டும் என்று நினைத்து செயல்படுவதால் ஏற்படும் Stress மிக அதிகமாக எனக்கு இருந்தது. தேக்கு மர சேர்கள் கம்யூட்டர்கள் காமிராக்கள் என பலவற்றை தூக்கி போட்டு உடைத்து இருக்கிறேன். என் கீழ் பணியாற்றுபவர்களை காட்டு காட்டு என்று காட்டி இருக்கிறேன்.

வீட்டம்மாவ்வை பாடாய் படுத்தி இருக்கிறேன் .பிறகு வேலையும் நடக்காமல் பொருள் நஷடம் ஆவதை எண்ணி.ஏன் இப்படி சைக்கியாக இருக்கேன் என்று வருத்தப்பட்டு புத்தரின் போதனைகள் கற்க தொடங்கினேன்.ஓரு வழியாக imperfection தான் வாழ்க்கையே வெற்றிகள் எல்லாம் Shabby தான் என்று உணர்ந்து மனதை நீயுட்ரலுக்கு கொண்டு வந்து மன அழுத்தம் இல்லா நிலைக்கு வந்து இருக்கிறேன்.அப்பொ அப்போ மனிதர்களால் மனசோர்வு வரும் அன்றைய Tea Meditation இல் Brain ஐ க்ளீன் செய்துவிடுவேன். இப்போ வெளிசூழல்கள் என் அனுமதி இல்லாமல் என் மனதிற்குள் வருவது இல்லை.

 Life நம்ம சாய்ஸ்
என்னுடைய 27 வயதிலேயே அதிக பட்ச தைராய்டு,அதன் மூலமாக இருதய சிக்கல்கள்,பின்பு தூசி பட்டாலே அலர்ஜி!டிசம்பர் மாதங்களில் ஆஸ்த்துமா இழுப்பு, இப்படி அடிக்கடி எனக்கு பிரச்சினை!!

தாய்,தந்தை என்ற குடும்ப அமைப்பு இல்லாத அரை அனாதை நிலைமை!நண்பர்கள் வீடுகளிலும் பக்கத்து வீடுகளில இருப்பவர்களின் முதலுதவிகள்,சின்ன சிகிச்சைகள் என்று என் காலம் கடந்தது.
அந்த காலகட்டங்களில் பல வீடுகள் எனக்கு உதவி இருக்கின்றன.இன்னும் அந்த நன்றியுணர்வோடு அவர்களை எல்லாம் நெஞ்சில் வைத்து வாழ்கிறேன்.

இன்றும் Love and Care இல்லாமல் தனிமையில் மன & உடல் வியாதிகளில் அவதி படுபவர்களை கண்டால் அவர்கள் கொஞ்சம் பழகி இருந்தாலும் உடனடியாக உறுதுணை ஆயிடுவேன்.அதுவும் சின்ன குழந்தைகள் என்றால் நான் நிலை குலைந்து போய்விடுவேன்அவரகளை வாரி அனைத்து கொள்வேன். ஆக நோய் வந்தால் யாரும் பார்க்க ஆள் இல்லையே என்ற எண்ணமே நோயை அதிகரிக்கும்.அடிக்கடி வீட்டில் இல்லாமல் வெளியில் சுற்றி கொண்டே இருப்பதால் love and care நமக்கு கொஞ்சம் குறைபாடாக இருக்கும் அப்பொழுதெல்லாம் கைவசம் வைத்து இருக்கிற டானிக் Self love, Self Care, Self Trust

அரியானா ஹபிங்டன் என்ற மேடம் (Huffington Post ) நீண்டநேரம் தூக்கம்,இடைஇடையே குட்டிதூக்கம் பற்றி அவர்களுடைய பேச்சுக்கள் எழுத்துக்கள் என்னுடைய தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே என்ற என்னுடைய பழைய ஆழ்மன சிந்தனையை மாற்றிவிட்டதுஅதன்பிறகு தினமும் 9 மணி நேரம்

(தியானம்)தூக்கம்தான்.ஒரேஅடியாக தூங்க முடியவில்லை என்றாலும் களப்பணிகளில வாய்ப்பு கிடைக்கின்ற இடங்களில் ஆள் இல்லாத பைபாஸ் பஸ் ஸ்டாண்டுகள்,ஆள் இல்லாத கோயில்கள், நிழலுள்ள மரத்தடிகள் குட்டி தூக்கங்கள் போட்டு கொண்டிருக்கிறேன்

அதோடு மிதமான உடற்பயிற்சி,வாரத்திற்கு ஒரு முறை 8 கிமீ நடை பயிற்சியை பழக்கமாக்கி கொண்டேன்

சரி இதெல்லாம் செய்தால் ஆரோக்கயாமாக நீண்ட ஆயுள் ஓடு இருக்கலாமா என்றால் அது மட்டும் போதாது.சிந்தனைகளிலேயே நோய் பற்றிய எண்ணம் இருக்ககூடாது என்று ஒரு பெரிய மனுஷன் சொல்ல சிந்தனைகளில் கவனம் செலுத்தினேன்.

சிந்தனைகள் உற்பத்தி ஆகிற இடம் ஆழ் மனசு அதுக்குள்ளேயும் போய் தோண்டி துழாவி பார்த்தால் அங்கேயும் அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாசொல் எல்லா குப்பையைம் ஆழ்மனசில இருக்கு வெளியில முகமூடி போட்டு அலைஞ்சி இருக்கேன்.சரி அதை வெளியே தூக்கி போடுவோம் ன்னு போடுவேன் மறுபடியும் முளைச்சுடும் இல்லன்னா மீண்டும் வந்துடும். இந்த வெகுளி(கோபம்) குப்பை மட்டும் மைல்டா ஊற்று எடுத்துகிட்டு இருக்கும்.அந்த ஊற்றுக்கு காரணம் என்னென்னு கிளர அட அது நம்ம ஈகோ அதை எடுக்க முடியல ன்னு தைவான் புத்த துறவிகிட்டே டிப்ஸ் கேட்டேன்.

அதை அன்பு என்ற மயக்க மருந்தால அதை மயங்க வைச்சிருன்னு சொன்னார்.அப்போதான் புரியுது அன்புதான் ஞானம் ன்னு..ஏன்னா ஈகோ வ கட்டுபாட்டுக்கு கொண்டுவந்தாலே ஞானம்
யாரால ஈகோ வருதோ அவங்க மேல அன்பை try செஞ்சி பார்த்தா அவங்க முன்னைவிட முன்னெச்சரிக்கையாகி எதிரமாறாக உணர்ந்து மோசமான விளைவாகுது. நான் நல்லா வாழனும்னு வந்தா இந்த கோளாறுங்க செய்யுறதை தாங்கி கொள்கிற Uncondition Love வேண்டும் ன்னு சொல்றே ன்னு புத்தரை கன்னாபின்னான்னு திட்டி இருக்கேன்.

Gym க்கு போனால் உடனே உடம்பு ஏறாது.அது போல டெய்லி போனாலதான் என்னுக்காவது ஒரு நாள் ஏறும் ஆனால கண்டிப்பா உடம்பு ஏறும்.அதுபோல அன்பால என்னிக்காவது ஒருநாள் கண்டிப்பா ஈகோ மயக்கமடையும்.அதுவரை அன்பை கொடுன்னார்.அதனால போற இடமெல்லாம் அன்பை விதைக்க ஆரம்புத்தேன்.
நான் சொல்ற அன்பு புத்தர் வார்த்தையில் Compassion .

இது மூளையில் Oxytocin என்னும் Bio Chemical ஆக சுரந்து இருதயத்திற்கு பத்துணர்வு கொடுத்து இரத்தம் மூலம் உடம்பெல்லாம் வியாபிக்கும் உணர்வு!நம்ம சினிமாவிலும் இங்கு உலாவி கொண்டு இருக்ககும் அன்பு என்ற கற்பிதம் பெண்களுக்கு Estrogen ஆண்களுக்கு Testosterone என்ற Biochemical ஆலால் சுரந்து உடம்பின் கீழ பகுதியில் சுரந்து உடம்பை விட்டு வெளியேறும் பரவசம்.

அதனை Desire ன்னு சொல்லலாம். குதம்பை சித்தர் Oxytocine ஐ மாங்காய்பால் எனவும் TestoEstoregne ஐ தேங்காய்பால் என்றும் சொலறார்.விடலை வயசுல இருந்து கிழவன் வரை அன்பு என்றால் கரெக்டா புரியாமல் Oxiytocin Defficicency ல் தான் EGO வை வளர்த்து stress உருவாக்கி மூளைக்கு எதிரமறை சிக்னல்களைஅனுப்பி அதன்மூலம் உடம்பில் எல்லா பாகத்திற்கும் எதிர்மறை உணர்வுகளை அனுப்பி உடம்பின் எல்லா செல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனபடுத்தி எதிரப்புசக்திகளை இழந்து பல்வேறு நோய்களுக்கு உடம்பு ஆளாகிறது.இதை உணர்ந்த பிறகு Oxytocine. Deficiency இல்லாம என்னை பார்த்து கொள்ள ஆரம்பித்தேன்.

நீண்டநாள் ஆரொக்கியமாக வாழ மேலே சொன்னதோடு இன்னொன்னு முக்கியமாக வேண்டும்.அதுதான் ஏன் வாழ்றோம்,எதுக்காக வாழ்றோம் .யாருக்காக வாழ்றோம் என்ற Purpose.(என் Purose பெரிய கதை அதை இன்னொரு தனிபதிவில் எழுதுகிறேன்).

இப்படி வாழ்ந்தாதான் அகவிழிப்புணர்வோடு வாழுறோம் ன்னு அரத்தம். ஆனல் நம்மை சுற்றி பாதி பேர் அகம் மூடிய நிலையிலேயே ஓடிகொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் நாம் அகவிழிப்போடு வாழுவோம் என்று முடிவெடுத்து 3 வருஷம் ஆயிற்று
இப்பொழுது என் வாழ்க்கையில் எல்லாமே மாறிற்று என் ஆஸ்த்துமா இல்லை, என் தைராய்டு இல்லை சர்க்கரை இல்லை அதனால் இருந்த இதய பாதிப்புகள இல்லை உடல் எடை குறைந்து கணிசமாக குறைந்து இருக்கிறது, தமிழநாடு முழுதும் பைக்குல சுற்றிவர கூடிய அளவுக்கு ஆற்றல்.
என் வியாபாரம் தலைகீழாக மறுமலர்ச்சி அடைந்து இருக்கிறது.

Affulance ஆக பிஸினஸ் மாற ஆரம்பித்துவிட்டது.நண்பர்கள் உறவுகள் மலர ஆரம்பித்துவிட்டன.மனகாயங்கள் வலிகள் மறைய ஆரம்பித்துவிட்டன.நம்முடைய அக உலக மாற்றமே புற உலக மாற்றமாகும்.உங்கள் Personality தான் உங்கள் Personal Reality

ஆரோக்கியமாக வாழ என்னுடைய டிப்ஸ்கள்
உள்புற பயிற்சிகள்
1. Purpose of life
2. No EGO only Love
3. Self love, Care others
4. Clean Conscious
வெளிப்புற பயிற்சிகள்
1)Sleep
2)Tea Meditation
3)Walking and gentle exercises
4)Proper Nutrition

(குறுப்பு:பயணபடுவதுதானே வாழ்க்கை அதனால் மீண்டும் 20 வயதிற்கு எப்படி போகலாம் ஆராய ஆரம்பித்து BioHacking Age Hacking பண்டைய முறையும் நவீன அறிவியலும் சேர்த்து படித்து கொண்டு இருக்கிறேன் இப்பொழுது என் Brain ய நானே Cheat செய்யும் பயிற்சி பழகி கொண்டு இருக்கிறேன்)

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்