வருவாய் துறையில் ஆவணங்கள் பெறுவது நமது சட்டபூர்வமான உரிமை!!!

b7f419ee7f7fc33e3a9eb0bcda032e09

  கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் , வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநில நில நிர்வாகம் என்று எல்லா அலுவலகங்களிலும் உங்களுடைய நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், புலபடம், போட்டோ ஸ்கெட்ச், கிராம வரைபடம், SLR நகல், பழைய சிட்டா, பழைய புலபடம், பழைய ஒப்படை பட்டாக்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்களின் உத்தரவுகளின் நகல்களை மனு செய்து நகல்களை பெற முடியும்.

மேற்படி அலுவலகங்களில் கேட்டால் தரமறுக்கிறார்கள் என்றே என்னிடம் பலர் கேட்டால் தரமறுக்கிறார்கள் என்றே சொல்கின்றனர்.ஆமாம் கேட்டால் தரமாட்டேன் என்று தான் சொல்லுவார்கள். அதனால் எழுதி கேளுங்கள், எழுதி கேட்டாலும் தரவில்லை என்றால் பதிவு தபாலில் எழுதி அனுப்புங்கள், நிச்சயம் கேட்ட ஆவணங்களை தருவார்கள்,
வாயால் கேட்பதை விட எழுதி கேட்டு பழகி கொள்ளுங்கள். கேட்கும் ஆவணங்கள் உங்களுக்கு தொடர்புடையதாக மட்டும் இருக்க வேண்டும். அல்லது உங்களுக்கு நீதிமன்ற வழக்குகளுக்கு தேவைபடுவதாக இருக்க வேண்டும். ரகசிய ஆவணங்களை தவிர மீதி ஆவணங்களை நிச்சயம் கொடுப்பார்கள்.

சில ஆவணங்களை தேடி எடுத்து தர வேண்டிய நிலை இருந்தால் , தேடி கூலி கொடுத்து எடுப்பதற்கு தயாராய் இருக்க வேண்டும். பணத்தை அரசு கருவூலம், பாரத ஸ்டேட் வங்கியிலும் கட்டலாம் . பணம் கட்டும் செல்லானில் அலுவலகத்தோட முத்திரையும், கணக்கு என்றும் பெற்று கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் கடிதத்தில் கேட்கும் போது வருவாய் நிலை ஆணைப்படி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.
உங்களுக்கு தொடர்பில்லாத ஆவணங்கள் , ஆனால் உங்களுக்கு நீதிமன்ற வழக்குகளுக்கு தேவைபடுகிறது என்றால் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி ரூ. 5 நீதிமன்ற விலையை ஒட்டி மனு எழுதி இறுதியில் சாட்சிய சட்டத்தின் கீழ் ஆவணங்களின் நகலை தருமாறு வேண்டுகிறேன் என்று எழுதப்பட வேண்டும்.

அடுத்ததாக தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழும் மனு செய்து ஆவணங்களின் நகல்களை பெறலாம். மூன்று சட்டங்களின் வழியாகவே ஆனால் எதில் வேண்டுமானாலும் நாம் ஆவணத்தின் நகல்களை பெற்றுகொள்ள முடியும். ஆவணத்தின் நகல்கள் பெறுவது நமது சட்டபூர்வமான உரிமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சட்டபூர்வமான உரிமை என்று அரசு எந்திரத்துடன் சண்டையிட்டு கொண்டு நிற்க கூடாது.நல்ல ஆளுமையும் மரியாதையாக பேசும் முறையும்தான் உங்களுக்கான ஆவணங்களை பெறுவதற்கு துணையாக இருக்கும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்