கிரைய பத்திரத்தில் சொத்து விவரம் எழுதும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் !

2. கிராம எண்ணும் இருக்கும், சர்வே எண்ணும் இருக்கும், இரண்டும் பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.

3. பட்டா எண் , பட்டா படி உட்பிரிவு ஆகி இருந்தால் புதிய சர்வே எண் ஆகியவை குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

6addc5274d8a83d040248f850cf01cc4

4. சொத்து கூட்டு பட்டாவில் இருந்தால், சர்வே எண்ணின் ஒட்டுமொத்த விஸ்தீரணத்தை குறிப்பிட்டு அதில், வடக்கு ஓரம் இருந்து ஆரம்பித்தால் , வட பாகம் என்றும், தெற்கு , கிழக்கு, மேற்கில் இருந்து ஆரம்பித்தால் தென்பாகம், கீழ்பாகம், மேல்பாகம், என்று குறிப்பிட வேண்டும்.

5. அப்படி வடபாகம், தென்பாகம், கீழ்பாகம், மேல்பாகம், என்று பிரித்தும் அதில் உள்ளே இடம் வாங்க போகிறீர்கள் என்றால் (எ.கா) வடபாகத்தில் கீழ மேலாக , தென்வடலாக, இத்தனை அடிநீளம், அகலம், என்று தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

6. பெரும்பாலும் கூட்டு பட்டாவில் இருந்தால் கட்டாயம் சொத்தின் நீள அளவுகளை அடியாலும், மீட்டரிலும், தெளிவாக குறிப்பிடுவது நல்லது. பழைய பத்திரங்களில் நீள அகலம் குறிப்பிட்டு இருந்தால் ஜதியடி ,முழம்,கெஜம் என்று சொல்லி இருப்பார்கள், அதனை தற்போதைய நீள அகலத்திற்கு அடி கணக்கிட்டு சரியாக மாற்ற வேண்டும் , அதே போல் பரப்பும் குழி , மா, டிசிமல் ,வேலியில் குறிப்பிட்டு இருந்தால் தற்போதைய சதுரஅடி , சதுர மீட்டருக்கு மாற்ற வேண்டும்.

7. நான்கு எல்லைகள் விவரம் குறிப்பிடும் போது முன் பத்திரத்தில் முனுசாமி மனைக்கு தெற்கில் என்று இருக்கும், அப்படி என்றால் முனுசாமி மனையில் இருந்து நின்று பார்த்தால் நாம் வாங்க போகும் மனை தெற்கில் இருக்கிறது என்று பொருள் , இதே போல் வடக்கில் மேற்கில் கிழக்கில் என்று குறிப்பிட்டு இருப்பார்கள்.

8. இதனையே தற்கால வழக்கில் எளிமையாக புரியும்படி மாற்ற கிரயம் வாங்கும் மனைக்கு வடக்கில் முனுசாமி மனை என்று குறிப்பிடணும், முறையே தெற்கில் , கிழக்கில், மேற்கில் என்று குறிப்பிட வேண்டும். இதில் நிறைய பேர் கவன குறைவாக எழுதி விடுவார்கள் , இதனால் அதிக அளவு சிக்கல்கள் வருகிறது. பிழைதிருத்தல் பத்திரம் போடுகின்றனர்.

9. கட்டிடம் இருந்தால் , கட்டிடம் காட்ட வேண்டும், கிணறு இருந்தால்,பொது வழி இருந்தால், பொது சுவர் இருந்தால், பொது தண்ணீர் பாத்தியம் எல்லாம் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். EB இருந்தால் EB சர்வீஸ் என குறிப்பிட வேண்டும். இவையெல்லாம் தெளிவாக கவனிக்காதவர்கள் அடிக்கடி பிழை திருத்தல் பத்திரம் போட்டுகொண்டு சார்பதிவகத்திற்கு அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்