#Meetoo தேவதைகள்

       
  இணையதளம் முழுவதும் சமூக ஊடகங்கள் முழுவதும் இந்த #Meetooஇயக்கத்தை பற்றி பேசுகின்றனர். ஒரு பக்கம் சிலர் விமர்சிக்கின்றனர். ஒரு பக்கம் சிலர் ஆதரவு அளிக்கின்றனர். ஒரு சிலர் அமைதியாகவே இருக்கின்றனர். கடந்த இருபது நாட்களாக #Meetoo சமூக ஊடகங்ளில் பட்டைய கிளப்பிகொண்டு இருக்கின்றது.

சரி நாமும் நம் அனுபவங்கள் வாயிலாக நமக்கு கிடைத்த புரிதல்களை எழுதலாம் என்று நினைத்து கொண்டே இருந்தேன்.

பெரும்பாலும் என் எழுத்துகள் ஒன்று என் செயல்கள் வேறொன்று இருந்தால் அதனை நானே அனுமதிப்பதும் இல்லை! ஏற்றுகொள்வதும் இல்லை.எழுதுவதும் செயல் படுவதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற சிந்னையில் இருப்பதனால் இந்த #Meetoo விஷயத்தில் பரஞ்சோதிபாண்டியன் என்பவனுக்குள் இருக்கின்ற கெட்ட பையன், நீ அமைதியாக வேடிக்கை மட்டும் பார்! இதில் நீ கருத்து சொல்ல சரியான ஆள் இல்லை. அதற்கு பெண்கள் பக்கம் நின்று ஆதரவு அளிக்க யோக்கியவனும் இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தான்.

இருந்தாலும் இப்பொழுது 37வயதாகி ஓரளவு ஊரெல்லாம் சுற்றி பலதரபட்ட மனிதர்களை சந்தித்து பழகி கெட்டு நொந்து கிழிந்து போய் நார்நாராகி பக்குவப்பட்டு இருக்கின்ற நீ…
நேர்மையாக நடுநிலையோடு இந்த #Meetoo இயக்கத்தை பற்றியும் பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் உன் கருத்தை பதிவிட்டு விடு என்றும், Imperfect is the Perfect,Progress is the Key என்ற வாழ்வியல் எதார்த்ததை புரிந்து கொண்டதனால் என் உள்ளுணர்வு நீ Progress இல் தான் இருக்கிறாய் என்று சொல்லிகொள்வதாலாயே இதனை பற்றி எழுதலாம் என்று முடிவெடுத்தேன். இல்லை என்றால் பல ஜென்டில்மேன்கள் போல் கள்ள மவுனத்துடன் தான் இருந்திருப்பேன்.

 இந்த #Meetoo இயக்கத்தை நமக்கும் அதுக்கும் சம்மந்தமில்லை என்று கடந்து போயிருப்பேன்.
சரி! நேரடியாகவே விஷயத்துக்கு வந்துவிடலாம்! மனிதர்கள் அனைவரும் மொத்தம் நான்கு வகையினராக புத்தர் வகைபடுத்துகின்றார். ஒருவர் இருட்டிலிலேயே இருப்பவர்கள், இரண்டாமவர்.ஒளியிலேயே இருப்பவர்கள், மூன்றாமவர் இருட்டில் இருந்து ஒளியை நோக்கி நகர்பவர்கள், நான்காமாவர். ஒளியில் இருந்து இருட்டிற்கு நகர்பவர்கள்.
இந்த நான்கில் நான் யார்?

ஒளியிலேயே இருக்கின்ற வாய்ப்பு நான் பிறந்ததில் இருந்து எனக்கு கிடைக்கவில்லை! 3 வயதிலேயே தாயை இழந்து தந்தை ஒருவராலேயே சென்னை மாநகர் மீனவகுப்பங்களில் வளர்க்கப்பட்டேன். தந்தை வேலைக்கு சென்றபிறகு அவரின் நண்பர்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் பணம் கொடுத்து விருந்தினராக (Paying Guest) 3 வயதில் இருந்தே வளர்க்கப்பட்ட நான்,ஏழு வயது வரை சித்தி என்று இன்னொரு தாய் வரும்வரை நான் பட்ட பாலியல் தொல்லைகள் அப்பப்பா ரொம்ப அதிகம்! முள் மரங்கள் பின்பு குடிசை சந்துகளின் மறைவில் நான் பட்ட பாடுகள் அதிகம் (ஆண் சிறுவனான எனக்கே1980களில் அப்படிபட்ட நிலைமை அப்படியானால் சிறுமிகள் நிலைமையை நினைத்து பாருங்கள்! அதுவும் இப்பொழுது 2018ல் கைபேசிகளில் நீலபடபுரட்சி வந்தபிறகு இப்பொழுது இருக்கும் நிலைமையை யோசித்து பார்க்கிறேன்! எல்லாம் சதைவக்கிரங்கள்தான்)

மேற்படி எனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வக்கிரங்களுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவும் இல்லை, அழவும் இல்லை, வெளியில் சொல்லவும் இல்லை அதனை நான் சிறுவனாக இருக்கும் போதே ஏற்று கொண்டு இருந்து இருக்கிறேன். எனென்றால் வக்கிரம் செய்பவர்களே எனக்கு பாதுகாவலராக உணவு கொடுப்பவர்களாக பராமரிப்பவர்களாக இருந்து கொண்டு இருந்ததால் எந்த வித எதிர் பிரச்சனையும் செய்யாமல் இருந்தேன். ஆனால் அவர்களுடனே வாழ்ந்ததால் பழகியதால் நானும் வக்கிரங்களை செயல்படுத்தும் சிறுவனாகவே ஆகிவிட்டேன்.(ஆறு வயதிற்குள் விழுகின்ற விதை மரமாக முளைத்துவிடும் என்று இன்றளவும் மக்களை பார்த்து உணர்ந்து கொண்டு இருக்கிறேன்)

என் தந்தை என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகத்தான நல்ல காரியம் ஒன்று செய்தார் என்று இன்று வரை நான் நினைப்பது சென்னை மைலாப்பூர் சாந்தோம் தேவாலயத்திற்குள் இருந்த கதீட்ரல் இலவச ஆரம்ப பள்ளியில் என்னை சேர்த்தது தான். இல்லையென்றால் அப்பொழுதே சென்னை புரசைவாக்கத்தில் இருக்கின்ற சிறுவர் சீர்திருத்த சிறையில் இளம் குற்றவாளியாக இருந்து இருப்பேன்.

பள்ளியில் சேர்ந்த முதல் நாளே! அந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக & துணை தலைமை ஆசிரியராக இருந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் நாங்கள் அப்பொழுது அவர்களை பெரிய சிஸ்டர் சின்ன சிஸ்டர் என்று தான் அழைப்போம். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்களும், என்னுடைய துடுக்குதனத்தையும் பார்த்து ஒரு சாக்லேட்டை கொடுத்து என் நெற்றி உச்சியில் குனிந்து ஒரு ஆசிரவாத முத்தம் கொடுத்தார்கள். வக்கிர புத்தி கொண்ட கறேலென்று இருக்கும் 5 வயது குட்டிசாத்தானை அதுவரை தாயன்பு தெரியாத சிறுவனை பாராட்டி கொடுத்த அந்த அன்பு முத்ததிற்கு பிறகு அவர்கள் அருகிலேயே இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றிற்று.(இன்றளவும் கன்னியாஸ்திரிகளை பார்த்தாலே கைகூப்பி கும்பிடும் பவ்ய நிலைக்கு வந்துவிடுவேன்)

பிறகு தினமும் 8.30 மணி ஆரம்பிக்கும் பள்ளி கூடத்திற்கு ஏழு மணிக்கே வந்து பெரிய சிஸ்டர் சின்ன சிஸ்டர் கண்களில் படும்படியே சுற்றி கொண்டு இருப்பேன். பள்ளி முடிந்த பிறகும் அவர்கள் பள்ளியை விட்டு கிளம்பும்வரை அவர்களுடனேயே இருப்பேன். அவர்கள் என் பெயரை கூப்பிடனும் என்னை பாராட்டனும் என்ற ஒரே சிந்னைதான்.அதனால் குப்பத்தில் இருக்கின்ற முடைநாற்ற மனிதர்களிடம் என் கவனம் போகவில்லை. முழுவதும் பள்ளிகூடமே என் வாழ்க்கையாக இருந்தது.

அப்படியே அங்கு 5 வரை படித்தேன் அதன்பிறகு 6 வது வகுப்பு சாந்தோம் மேல்நிலைபள்ளியில் சேரவேண்டும் என்னுடைய சிஸ்டர்கள் எனக்கு சொல்லி கொண்டே இருந்தனர்.அங்கு சேர்ந்தால் குறைவான கட்டணம் மேலும் உன்னை நல்லா கொண்டு வந்துறுவாங்க ன்னு ஊக்கப்படுத்திகொண்டே இருந்தார்கள் அந்த சிஸ்டர்கள்.
என் கனவு பள்ளியில் ஆறாவது வகுப்பிற்கு நுழைவு தேர்வு எழுதி வெற்றி பெற்று சிஸ்டர்களால் கூடர்தீட்டபட்டு சாந்தோம் மேல்நிலை பள்ளிக்கு வந்து விழுந்தேன்.

வகுப்பில் முன்வரிசை கூட்டம் என்று ஒன்று இருக்கும்.கடைசி வரிசை கூட்டம் என்று ஒன்று இருக்கும். இரு கூட்டமும் தனிதனி குழுவாகவே இயங்குவார்கள் முன் வரிசையில் இருப்பவர்கள் புத்திசாலிகள் படிப்பாளிகள் ஆனால் தோல்விகளுக்கு பயந்தவர்கள் பள்ளிகூடத்தின் எல்லா விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்கள்.

ஆனால் பின்வரிசையில் இருப்பவர்கள் தோல்விகளுக்கு அஞ்சாதவர்கள வெளிஉலக அறிவு பெற்றவர்கள்,பள்ளி பாட அறிவில் மந்தமானவர்கள் ,பள்ளி கூடத்தின் விதிகளுக்கு கட்டுபடதவர்கள்.

நான் வகுப்பிற்குள் பாடம் படிக்கும்போது முன்வரிசை மாணவர்களுடன் அமர்ந்து இருப்பேன்.இடைவேளை,மாலை நேரங்கள்,பள்ளியில்லாத விடுமுறை நாட்களில் போதும் கடைசி வரிசை மாணவர்களுடனதான் நட்பு பழக்கம் எல்லாம்! ஆம் நான் இரண்டும் சேர்ந்த கலவையாகதான் வளர்ந்தேன்.
17 வயதில் தந்தை பேச்சையும் சித்தி பேச்சையும் கேட்காத மாணவணாக வீட்டிற்கே வராமல்,அவர்களை குறைசொல்லிகொண்டு நண்பர்ளுடன் கொட்டம் அடித்து கொண்டு திரிந்து கொண்டு இருந்தேன்.

வெளியில் சுற்றுவதும் படம் பார்ப்பது தெருவில் சண்டையிடுவது் குடித்துவிட்டு கடற்கரைக்கும் கோயில்களுக்கும் வரும் பெண்களை கிண்டல் செய்வது பெண்களை தகாத இடங்களில் தொடுவதும் பல்லவன் பஸ்ஸில் உழப்பு(சென்னை விடலைளுக்கு மட்டும் புரியும் வார்த்தை) எடுப்பதும் போலீஸில் உதை வாங்குவதும் காதல் சண்டைகளுக்காக பள்ளிகூட மாணவனாக இருந்துகொண்டு கல்லூரி மாணவர்களை அடிப்பதும் என்று கட்டுபடாமல் சுற்றி வருவதும் ஆசிரியர்,பிரின்சிபல் பார்த்தால் ஒன்றும் தெரியாத பூனை போல் அமைதியாக நடிப்பதும் கைவந்த கலையானது. இப்படி செய்வது எல்லாம் சாகசம் என்று வாழ்ந்த காலம்.

அப்பொழுது கானிடிவோட்டா என்ற பணி ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஆசிரியை மீண்டும் எனக்கு பெரிய சிஸ்டர் சின்ன சிஸ்டர் போல் தாயாக ஆனார்கள்.ஆம் !நல்லதுணி கொடுத்து நல்ல உணவுகொடுத்து செலவுக்கு பணமுமம் கல்வி கட்டணமும் கொடுத்து இயேசு படத்திற்கு முன் என்னை நிறுத்தி எனக்காக மட்டுமே ஜபித்து விட்டு என் ஆசிர்வாத முத்தம் நெற்றி உச்சியில் கொடுக்கும் போது தீயில் உருகும் நெய் போல என்னுடைய அழுக்கு எண்ணங்கள் உருகி விழுந்தன.

என் தந்தை நீ கெட்டவன்,திருடன்,கேடி என்று சண்டையிட்டு குற்றம் சொல்லி திருத்த முயன்ற போது அவரை வீரியமாக எதிர்த்து அதனையே அதிகமாக செய்து கொண்டு இருந்த நான் என்னுடைய ஆசிரியை நீ நல்லவன்,திறமையானவன், சாதிப்பவன் என்று அவர்கள் சொன்ன வார்த்தைகள் தான் என் நகர்வை மாற்றியது.ஆம் நாம் ஏன் இவ்வளவு திறமையை வைத்து கொண்டு வாழ்க்கையை வீணடிக்கனும் சாதிக்கலாமே என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக வக்கிர சகவாசங்களை விட்டு வெளியேறினேன்.

18 வயதுகளில் எனக்கு இருந்த புத்தக வாசிப்பு பழக்கத்தினால் அறிவாசன் தந்தை பெரியார் மனதிற்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க ஆரம்பித்து இருந்தார்.பெரியாரின் பெண்ணியத்தை தவிர மீதி கொள்கைகள் எல்லாம் அனைத்தும் புரிதலுடன் முழுமையாக ஏற்று கொண்டேன்.ஆனால் அவரின் பெண்ணிய சிந்தனைகள் மண்டைக்கு ஏறவில்லை.முழுமையான புரிதலும் உடனே ஏற்படவில்லை.

 ஆனால் நான் அறிவாளி என்று தம்பட்டம் அடிப்பதற்கும் தற் பெருமை தேடுவதற்கும் பெரியாரின் பெண்ணுரிமையை பேசி கொண்டு இருந்தேன். பெண்கள் உடைமை போகபொருள் கற்பித்தல்களில் இருந்து என்னால் மீளமுடியவில்லை.லா வோட்சு என்ற சீன அறிஞர் சொல்லியிருப்பார் எல்லாம் தெரிந்வர்கள் அமைதியாய் இருப்பார்கள் அரைகுறையாய் தெரிந்தவர்கள் மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டு இருப்பார்கள் என்று அதே கதைதான் எனக்கும், அப்படி பெண்களை போகபொருளாக பார்ப்பதில் எனக்கு ஒரு COMFORT ZONE இருந்து. இந்த கிழவன் மட்டும் எப்படி இதெல்லாம் யோசிக்கிறான் என்று உள்ளுக்குள் கேள்வி கேட்டு கொண்டே இருந்தேன்

.நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம் இன்று மட்டும் ஊத்திக்கிறேன் என்று ஒரு பாடல் வருமே அது போல் இந்த பெண்கள் போகப்பொருள் என்ற சிந்தனையும் செயலும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

ஏறக்குறைய 17 வயதில் இருந்து 25 வயது வரை நான் செய்து இருக்கிற பொருந்தா காதல், பொருந்தா காமம், போன்ற செய்கைககளுக்கு நான் நடத்திய திட்டமிடுதல்கள் காய் நகர்த்தலுக்கு #Meetoo போட்டால் ஒரு அரைமூட்டை #Meetoo வரும்.

தொடர் அவமானங்கள்,கெட்டபெயர்கள்,தூற்றுதல்கள் எல்லாம் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது இந்த #Meetoo களால்.ஆனால் இதனை சரி செய்து கொள்ள நல்ல ஆசான் இல்லை,ஆசான் என்று நம்பி போனால் அங்கு நம்மைவிட மோசமாக இருக்கிறார்கள்.புரிந்து கொண்டு அதனை வெல்ல வழி தெரியவில்லை.

அறிவு என்பது கீழதட்டு்மக்களில் இருந்து மேல் நோக்கி செல்வது மேலிருந்து கீழ்நோக்கி வந்தால் அது கற்பிதம்.அவ்வாறு கற்பிதம் செய்து உன் சிந்தனையை Hypnosis செய்கின்றார்கள்.அதனால் அறிவை நீ களத்தில் தேடு எல்லா வித மறைநூல்கள் ஞானிகள் தலைவர்கள் சொன்ன நம்பாதே!அறிஞர்கள்,அறீவுஜீவிகள் சொன்னதை நம்பாதே! நீ களத்தில் உண்மையை தேடி உணரந்து கொள்ளல் வேண்டும் என்று உணர்ந்த போது
அறிவைதேடி பயணபட ஆரம்பித்தேன் இன்றுவரை 10 ஆண்டுகளாயிற்று அறிவே தேடி களத்தில் சுற்றி கொண்டு இருக்கிறேன்.

விந்தை கட்டலாம் என்று மனதை சூன்யமாக்கலாம் என்றும் பற்றை துறக்கலாம் என்றும் தமிழகம் முழுவதும்எல்லா School Teaching. களையும் கற்கவும் உணரவும் இன்றுவரை பயணப்பட்டு சிற்சிலவற்றை உணர்ந்து இருக்கிகிறேன்.

கல்கத்தாகாளி,காஷ்மீர் வைஷ்ணவி,பஞ்சாப் அமிர்த்சரஸ்,ஷீரடி,நாசிக்,வாரணாசி,நேபாள்-லும்பினி கேரளா மலப்புரம், கேரளா-சாலக்குடி என்று எல்லா ஆன்மீக பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக பயணபட்டு அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதிக்கரையில் காமாக்கியாவில் பெண்களை பற்றிய ஓர் உண்மையை உணர்ந்தேன்.

தோரா,பைபிள்,அதிக்ர் ( குரான்),போன்ற ஆபிரகாம் வழி தத்துவங்கள் இந்திய சைவ, வைணவ, புத்த, ஜைன ஆன்மிக பள்ளிகள சீனாவின் கன்பூசியஸ், தாவோ எல்லாம் ஆணிலிருந்து பெண் தோன்றியதாக தான் கற்பிக்கின்றது. அதாவது ஆண்விலா எறும்பில் இருந்து பிரம்மனில் இருந்து ஆதிநாதரில் ஆதிபகவான் என்று ஆணிலிருந்து பெண்களை வருவதாக கற்பிக்கப்படுகிறது. ஆண்கள் முதன்மைபடுத்தபடுகிறார்கள்.

தேடி ஆராய்வதை சொல்லி கொடுத்த அறிவாசான் தந்தை பெரியார் கூட ஆண் பெண் சமம் என்பது வரை சொல்கின்றார் என்பதே என்புரிதல்.
வள்ளுவர் உட்பட அனைத்து ஞானிகளும் அவர்களின் பூசாரிகளும் உருவாக்கி வைத்து இருக்கும் கற்பிதங்கள் அனைத்தையும் நீக்கி பூர்வ குடிகளின் ஆன்மீக பாடங்களை பார்த்தால் பெண்ணில் இருந்துதான ஆண் என்ற செய்தி ஒளிந்து இருக்கிறது.

ஆம்!முதல் ஒரு செல் உயிரி அமீபா பெண்,ஈஸ்ட்ரோஜென்னில் இருந்துதான்டெஸ்டோரஜன்.பெண்ணுக்குள் இருந்துதான் ஆண் பிரித்தெடுக்கப்படுகிறான். ஆணும் பெண்ணும் சமமானவள் என்பதும் அல்ல அவள் மேலானவள் என்று நான் என் 35 வயதில் புரிந்து கொண்டு இருக்கிறேன்.
உலக மற்றும் இந்திய ஆன்மிக பள்ளிகள் அனைத்தும் அதனை மறைப்பதும் அல்லது உள்வாங்குவதாகவே உள்ளது என நான் நம்புகிறேன்.ஆண் முதல் என்ற சிந்தனைதான் கொஞ்சம் கொஞ்மாக பெருக்கெடுத்து புனிதர்களால் பிரச்சாரபடுத்தி கலாச்சாரத்தால் கட்டிவைத்து ஆணின் உடைமை பெண் என்று ஆண்களையும் ஏன் பெண்களையும் Hypnosis செய்து வைத்து இருக்கிறார்கள்.

மேற்படி Hypnosis செய்யபட்ட மக்களின் எண்ணங்களை வியாபாரத்திற்கும்,அரசியலுக்கும் இலாபத்திற்கும் ஏன் உலகில் உள்ள எல்லா வளங்களையும் கட்டுக்குள் வைக்க புத்தரின் மொழியில் ஒளியில் இருந்து இருளை நோக்கி வருபவர்கள் நபியின் மொழியில் முனாஃபிக்குககள் பயன்படுத்துகின்றனர் என்பதே என் புரிதல்.

பெண்கள் எப்பொழுது நாம் ஆண்களை விட மேலனாவர்கள் என்று உணரும்போதும் தற்போது உலத்தை சுற்றி பிரச்சாரமாகி கொண்டு இருக்கும் அனைத்து School Teaching களின் Hypnosis இல் இருந்து வெளிவரும்போது
என்னைபோல் இருளில் இருந்து வெளிச்சத்தை நோக்கி வருபவர்களுக்கும் இருட்டில் இருப்பவர்களுக்கும் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கும் உங்கள் அன்பின் சக்திக்கு (என்னுடைய பெரியசிஸ்டர்,சின்னசிஸ்டர்,கானி டிவோட்டாஆசிரியைகளின் ஆசிர்வாத முத்தங்களுக்கு) கட்டுபட்டு உங்களுக்கு (பெண்களுக்கு)அரணாக நிற்பார்கள்.

ஆனால் இந்த வெளிச்சத்தில் இருந்துவிட்டு இருட்டுக்கு வருகின்ற(மூனாஃபிக்குகள்) மேதாவிகள், ஞானிகள், அறிவு ஜீவிகள்,உலகின் வளங்ளை கட்டுக்குள் வைத்து இருப்பவர்கள், அரசர்கள் என அனைரும் மேலிருந்து கீழ்நோக்கி கவர்ச்சியான நம்பகமான பிரச்சாரங்களால் மக்களின் சிந்தனைகளை Hypnosis செயல்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அதனை வெல்ல பெண்கள் போர் செய்தல் போர்செய்தல் வேண்டும்.

ஆனால் இந்த #Meetoo சிறிய சீண்டல்தான்.அது சிறிய இடர்பாடுதான்.அதனை வெளிச்சத்தில் இருந்து இருட்டை நோக்கி வரும் ஞானிகள் வெற்றி பெற்றுவிடுவார்கள். ஏனென்றால் இது ஒட்டுமொத்தமான ஆண்பால் பெண்பால் சண்டையாக Polarized வியாபாரிகளால் செய்யபடுகிறது.
பெண்கள் மற்ற 3 வகை ஆண்களை ஒருங்கிணைத்து தலைமையேற்று ஒளியில் இருந்து வெளிச்சத்திற்கு ஆண்களை(இதில்பெண்களும் இருப்பார்கள்) வெற்றி பெறவேண்டும்.

மக்களை பிரச்சினைகளிலேயே வைத்து இருந்தால் தான் முனாபிக்குகள்(ஒ.இ.நோ.வ)குளிர்காய்ந்து கொண்டே இருக்கமுடியும்.இவர்களின் பெண் போகபொருள் என்ற தொடர் பிரச்சாரங்களில் ஆன்மீக, அரசியல்,இலக்கிய,தொழில்,என்று கடைநிலையில் இருந்து முன்னேறிய பெரிய மனிதர்கள் விழுந்து விடுகின்றனர்.

சரி!இவ்வளவு பெரிய Hypnosis பிரசாரங்களில் மாட்டாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும். தன்னை வெற்றி அடைந்து விட்டோம் என்ற எண்ணம் வராத இலக்கை நோக்கி பயணிப்பதும் அதற்கேற்றவாறு தன்னை Self Hypnosis செய்து கொள்வதுதான் வழி.அது நல்ல தலைவர்களால்தான் முடியும்.அப்படி வெற்றி அடைய முடியாத பெரிய மனிதர்களை (ஒ.இ.நோ.வ)முனாஃபிக்குகளின் இரைக்கு(Distractions) பலியாகிவிட்டவக்கள்தான்.

நானும் என்னுடைய பயணத்தில் இந்த #Meetoo வை இந்த பார்வையிலேயே பார்த்துவிட்டு கடந்து செல்ல விருக்கிறேன்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்